வியாழன், 20 டிசம்பர், 2012

Samudaya seidigal

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் டிசம்பர் 21ம் தததி உலகம் அழியாது என்று மக்களுக்கு விழிப்புணர்வு செய்து தாவா செய்யப்பட்டது. விளக்க நேட்டீஸ் விணியோகிக்க பட்டது. அதைப்படித்த மக்கள் நமது நோட்டீசை படித்து நிம்மதி அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

Ahmedibrahim

செவ்வாய், 20 நவம்பர், 2012

சமுதாய செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம் கிளையில், 18/11/12 அன்று 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற தலைப்பில் பெண்கள் பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் . இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Ahmedibrahim

வெள்ளி, 9 நவம்பர், 2012

Samudaya seidigal

சத்தியமங்களம்: தாளவாடி தாலுக்கா பணஹல்லி கிராமத்தில் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரியும் கிரிஸ்டோபர் என்பவர் நபிகல் நாயகத்தைப்பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் தாம் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக மாநிலத்தலைமைக்கு கடிதம் மூலம் தெறிவித்திருந்தார்.இவருக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள்ம் கிளையில் இருந்து திருக்குராண் பிறதியும் ,மாமணிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம்.ஆகியவை 4/11/12 அன்று அவரிடம் நேரில் செண்று கொடுத்து அவருக்கு இஸ்லாத்த பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அல்லாஹு அக்பர்.

Ahmedibrahim

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

Qurbani

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 27/10/2012 சனிக்கிழமை அன்று பெருநாள் தொழுகைக்குப்பின் கூட்டுக்குர்பானியின் மூலமாக ஒரு மாடும் மானிலத்தலமையின் மூலமாக ஒரு மாடும் குர்பானி கொடுக்கப்பட்டது. இந்த கர்பானி இறைச்சி விணியோகத்தில் சுமார் 150 குடும்பங்கள் பயண்அடைந்தன.அல்லாஹு அக்பர்.

Ahmedibrahim

Hajju perunal

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில், 27/10/2012 சனிக்கிழமை அன்று .ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Ahmedibrahim

வியாழன், 11 அக்டோபர், 2012

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல்
நிலை குறித்து உங்களுக்கு இருக்கும்
அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய
வேண்டி வந்தாலும் என்
சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய
இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான்
செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள்
மூலமோ எனது சிகிச்சைக்காக
செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக்
கொள்ள மாட்டேன். எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற
முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத்
தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு. ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத
அளவுக்கு பெரும் செலவு ஏற்படும்
நிலை வந்தால் நான் அழகிய
பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய
உதவியையும் நான்
பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட
வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான்
முடிவு செய்யும் வகையில்
என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்
கொள்கிறேன். என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த
ஆலோசனையும் செய்ய வேண்டாம்
என்று கண்டிப்புடன் தெரிவித்துக்
கொள்கிறேன். மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள்
வைத்துக் கொள்ள வேண்டும்
என்று முடிவு செய்திருப்பதாகக்
கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள்
என்று நீங்கள் நினைப்பது முற்றிலும்
தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க
அடிபடையில் பதில் இருக்கும்
போது பித்னாக்களுக்குப்
பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது. மனிதனுக்கு நோய்
வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும்
இல்லாமல்
எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய்
வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல்
நோயை நீங்கள் மறைப்பதாக நான்
கருதுகிறேன். புற்றுநோய் என்பது ஆபத்தான நோய்
என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும்
பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக
வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும்
முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால்
பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை. அன்புடன் பி.ஜைனுல் ஆபிதீன் 10.10.2012

Ahmedibrahim

திங்கள், 3 செப்டம்பர், 2012

நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 2/9/12 ஞாயிறு அன்று மாவட்டதலைவர் சிக்கந்தர்அலி தலைமையில்,
கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவராக சர்புதீன் 9003340774,
துணைத்தலைவர் ஷாஜகான்9842720113,
செயளாளர் இக்பால்9865336260,
துணைச்செயளாளர் முகம்மது அலி,
பொருளாளர் அகமது இப்ராஹிம்9524442220,
மருத்துவர் அணி ஜபருல்லா பைஜி9150240708,
மாணவர் அணி jamaludeen 9578750796,
தொண்டர் அணி ansar 8883725377,
வர்த்தகர் அணி அப்துல் மஜீத்9360712402.
ஆகியோர் நிர்வாகிளாக தேர்ந்தெடுக்கப்பட்டணர்.

Ahmedibrahim

தர்பிய

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 2/9/12 ஞாயிறு அன்று நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்(தர்பியா) மாவட்டதலைவர் சிக்கந்தர்அலி தலைமையில்,ரஃபீக்அலி,அப்துல்காலிக் முன்னிலையில் காணத்துர் பஷீர்௦,தமீம்,கோபி சாதிக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள. கிளை துணைத்தலைவர் ஜமாலுத்தீன் ன்றியுையாற்றினார் . இம்முகாமில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயன் பெற்றணர். அல்லாஹு அக்பர்.

Ahmedibrahim

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

Perunal tholugai

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் த த ஜ கிளையில் 20.08.12 திங்கள் அன்று நோன்புப்பெருநாள் தொழுகை பெரியபள்ளிவாசல் வீதியில் திடலில் டைபெற்றது. இதில் ஆண்களும்,பெண்களும்,சிுவர்களும் கலந்துகொண்டு தொழுகையை சிறப்பித்தனர். அல்லாஹூக்பர்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

Fithra viniyogam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள்ம் த த ஜ கிளையின் சார்பாக ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. சுமார 130.ஏழைக்குடும்பங்கள் பயன்பெற்றண. அல்லாஹு அகபர்.

வியாழன், 19 ஜூலை, 2012

2012 ramalan time
pudukkottai dt.

Fri 1 20/7 4:46 6:01 12:22 3:44 6:41 7:57 Sat 2 21/7 4:46 6:01 12:22 3:44 6:41 7:57 Sun 3 22/7 4:47 6:01 12:22 3:44 6:41 7:57 Mon 4 23/7 4:47 6:02 12:22 3:43 6:41 7:56 Tue 5 24/7 4:47 6:02 12:22 3:43 6:41 7:56 Wed 6 25/7 4:48 6:02 12:22 3:43 6:40 7:56 Thu 7 26/7 4:48 6:02 12:22 3:43 6:40 7:56 Fri 8 27/7 4:48 6:02 12:22 3:42 6:40 7:55 Sat 9 28/7 4:49 6:03 12:22 3:41 6:40 7:55 Sun 10 29/7 4:49 6:03 12:22 3:41 6:40 7:54 Mon 11 30/7 4:49 6:03 12:22 3:41 6:39 7:54 Tue 12 31/7 4:50 6:03 12:22 3:40 6:39 7:54 Wed 13 1/8 4:50 6:03 12:21 3:40 6:39 7:53 Thu 14 2/8 4:50 6:03 12:21 3:39 6:38 7:53 Fri 15 3/8 4:50 6:03 12:21 3:38 6:38 7:52 Sat 16 4/8 4:51 6:04 12:21 3:38 6:38 7:52 Sun 17 5/8 4:51 6:04 12:21 3:37 6:37 7:51 Mon 18 6/8 4:51 6:04 12:21 3:37 6:37 7:51 Tue 19 7/8 4:51 6:04 12:21 3:36 6:37 7:50 Wed 20 8/8 4:52 6:04 12:21 3:35 6:36 7:50 Thu 21 9/8 4:52 6:04 12:21 3:35 6:36 7:50 Fri 22 10/8 4:52 6:04 12:21 3:35 6:36 7:49 Sat 23 11/8 4:52 6:04 12:20 3:33 6:35 7:48 Sun 24 12/8 4:52 6:04 12:20 3:32 6:35 7:48 Mon 25 13/8 4:53 6:04 12:20 3:32 6:34 7:47 Tue 26 14/8 4:53 6:05 12:20 3:31 6:34 7:47 Wed 27 15/8 4:53 6:05 12:20 3:30 6:34 7:46 Thu 28 16/8 4:53 6:05 12:19 3:29 6:33 7:46 Fri 29 17/8 4:53 6:05 12:19 3:28 6:33 7:45 Sat 30 18/8 4:54 6:05 12:19 3:27 6:32 7:44

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் "ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956) "ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்
வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்
வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள்
திறக்கப்படுகின்றன,
ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்
காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம்
வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர்
சுவர்க்கவாதியா? அல்லது ரமலான்
மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச்
செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற
சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின்
கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து,
ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச்
செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால்
கிடைக்கும் நன்மைகளை விட
பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில்
கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக
சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது)
அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால்
ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன"
என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது.
மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக்
கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது. "ஷைத்தான்கள் விலங்கிடப்
படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள்
வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய
முடியாது, ஷைத்தான்களின்
செயல்களை முறியடிக்கக்கூடிய
வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள்
அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல!
ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான்
மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க
வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்
காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான
நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர்
பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ
அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில்
ஷைத்தானின் வேலைகளும் இருக்க
வாய்ப்பு உண்டு என்பதைத்
தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்)
அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக்
கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936)
இக்கருத்தை உறுதி செய்கிறது. கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக்
கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.
இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.
"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும்
பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி
வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது.
எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்:
முஸ்லிம் (2119) கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின்
காரணத்தால் நாம் செய்த முந்தைய
சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ்
மன்னிக்கின்றான். யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும்
வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்
படுகின்றது. யார் ரமாலனில்
நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புகாரீ (1901), முஸ்லிம் (1393) உம்ரா செய்தால் ஹஜ் நன்மை ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த
நன்மையை பெற்றுத் தரும். "ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ்
(செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரீ (1782) முஸ்லிம் (2408) சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல்
மூலம்
அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும்
நுழைய முடியாது. "சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும்
ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில்
அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்.
அவர்களைத் தவிர வேறு எவரும் அதன்
வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள்
எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும்
அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள்
நுழைந்ததும் அவ்வாசல்கள்
அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக
வேறு எவரும் நுழைய மாட்டார்கள்"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ
(1896), முஸ்லிம் (2121) அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் "நோன்பு நரகத்திலிருந்து காக்கும்
கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம்
அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச்
சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1894) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்
போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்
போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1904) இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள்
மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள்
மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன்
நடத்துவான் என்பது பொருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும்
இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம்
மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச்
சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர்
ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள்
தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள்
தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள்
கிடைக்கும். மகத்துவமிக்க இரவில் இதை நாம்
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம்
சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி,
நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ்
நமக்கு அருள்புரிவானாக!Tntj.net

Ahmedibrahim

பெருநாள் தொழுகை

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்
ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத்
தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில்
தொழுமாறு நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள்
தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். "மற்ற பள்ளிகளில் தொழுவதை விட
மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000
மடங்கு நன்மை அதிகம்" (புகாரீ 1190)
என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள்
தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல்
திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத்
தெளிவு படுத்தியுள்ளார்கள்.
எனவே இரு பெருநாள் தொழுகைகளையும்
திடலில் தான் தொழ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும்,
ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச்
செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச்
செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612 பெருநாள் தொழுகையில் பெண்கள் பெருநாள் தொழுகையில் பெண்கள்
கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும்
திடலுக்கு வர வேண்டும். அவர்கள்
தொழுகையைத் தவிர மற்ற நல்ல
காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும். இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப்
பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப்
பெண்களையும் (தொழும் திடலுக்கு)
அனுப்புமாறும், அப்பெண்கள்
வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள்
தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில்
கலந்து கொள்ளுமாறும்,
தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள்
ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள்
கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர்,
"அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும்
அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்
என்ன செய்வது?" என்றார். அதற்கு,
"அவளுடைய தோழி தனது (உபரியான)
மேலாடையை இவளுக்கு அணியக்
கொடுக்கட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616 ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல் பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச்
செல்லும் போது ஒரு வழியில்
சென்று வேறு வழியாகத்
திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள்
(போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ
986 தொழுகைக்கு முன் சாப்பிடுதல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர்
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச்
செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப்
பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்)
அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953 நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்)
அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட
மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில்
(குர்பானி பிராணியை) அறுக்கும்
வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426 முன் பின் சுன்னத்துகள் இல்லை இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின்
சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள்
இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும்,
பின்னரும் எந்தத் தொழுகையையும்
தொழுததில்லை. நபி (ஸல்) அவர்கள்
பெருநாளன்று (திடலுக்குச்)
சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர்.
அதற்கு முன்னும், பின்னும் எதையும்
தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616 பாங்கு இகாமத் இல்லை இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு,
இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும்
இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல;
இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்)
அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி),
நூல்: முஸ்லிம் 1610 மிம்பர் இல்லை வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம்
மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல்
பெருநாள் தொழுகைக்கு மிம்பரில்
நின்று உரையாற்றக் கூடாது. தரையில்
நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும்.
இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான்
பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன்
செய்தபோது.
"மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம்
செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர்.
இதற்கு முன்னர்
இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…"
என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265,
அஹ்மத் 10651 நபி (ஸல்) அவர்கள்
பெருநாளன்று ஒரேயொரு உரையை
நிகழ்த்தினார்கள்
என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்
உள்ளன. இரண்டு குத்பாக்கள்
நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்
அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள்
அன்று (திடலுக்குச் செல்வதற்காக)
வெளியேறினார்கள்.
மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில்
நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)
னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும் இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப்
பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம்
தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில்
இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல
இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும்.
திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும்
மகத்துவமும் உள்ளது. பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு)
புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள
கன்னிப் பெண்களையும் மாதவிடாய்
ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய
வேண்டும் எனவும்
கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.
ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர்
கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன்
அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின்
பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள்
எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615 அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர்
ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்)
அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத்
தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச்
செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில்
கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல
வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான
செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில்
தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும்
நினைப்பீராக! கவனமற்றவராக
ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)Tntj.net

Ahmedibrahim

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்க இரவில் இதை நாம்
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல்
கத்ரு இரவில்
நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்:
புகாரி (35) லைலத்துல் கத்ரு எந்த நாள்? லைலதுல் கத்ரு இரவில்
இவ்வளவு சிறப்பை இறைவன்
வைத்திருந்தாலும் அது எந்த
இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட
யாருக்கும் தெரியாது. நபி (ஸல்)
அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக
மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள்
லைலதுல் கத்ரு இரவைப்
பற்றி அறிவிப்பதற்காக
தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.
அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.
"லைலதுல் கத்ரு இரவு பற்றி நான்
உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன்.
அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள்
சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.
உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும்
உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான்
மாதத்தின் இருபத்து ஏழு,
இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய
இரவுகளில் அதனைப் பெற
முயற்சி செய்யுங்கள்" என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615) நபி (ஸல்)
அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ்
தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட
இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த
மனிதனும் கூற முடியாது. எனினும்
லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய
ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள
ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்:
புகாரி 2017, முஸ்லிம் 1997 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச்
சொல்லும் போது, "அது ரமலான் மாதத்தில்
தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில்
கடைசிப் பத்தில் தேடுங்கள்.
அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று
அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி
ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29)
இருக்கும்" என்று சொல்லி விட்டு, "யார்
அதில் ஈமானோடும்
நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும்"
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700) மேற்கூறிய ஹதீஸ்கள்
ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர்,
ரமலான் மாதத்தில் கடைசிப்
பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான்
இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப்
பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்
தான் இருக்கும்
என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம்
பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத
பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான்
என்று முடிவு செய்து பெரிய விழாவாகக்
கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில்
ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது,
இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்:
அபூதாவூத் (1178) இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக
வைத்து சிலர் லைலத்துல் கத்ர்
இரவு 27வது இரவு தான்
என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம்
27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால்
இதற்கு மாற்றமாக நாம் முன்னர்
குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர்
இரவு என்பது நபி (ஸல்)
அவர்களுக்கே மறக்கடிக்கப்
பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின்
ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள்
என்று நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27
என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும்
வந்துள்ளது. அவற்றை பாருங்கள். ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான
லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள்
நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) , நூல்: அஹ்மத் (15466) இதைப் போன்று 21, 23, 25
என்று மூன்று இரவுகளை மட்டும்
குறிப்பிட்டும் வந்துள்ளது.
"ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்
லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல்
கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில்,
இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2021 இதைப் போன்று 23, 29
இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும்
குறிப்பிட்டும் வந்துள்ளது.
"லைலதுல் கத்ரு இரவு கடைசிப்
பத்து நாட்களில் உள்ளது.
அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2022 இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன்
சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம்
ஷாஃபீ அவர்கள் தெளிவான
விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள்
கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், "நபியவர்கள் கேட்கப்படும்
கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம்
உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல்
கத்ரைத் தேடலாமா?' என்று கேட்கும்
போது அந்த இரவில் தேடுங்கள்.
என்று பதிலளித்திருப்பார்கள்" என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722) அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில்
லைலத்துல் கத்ரை தேடலாமா?
என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்)
அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்'
என்று கூறியிருப்பார்கள்.
இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம்,
23வது இரவில் தேடுங்கள்'
என்று கூறியிருப்பார்கள்.
இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப்
பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்திருப்பார்கள்.
எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள்
பற்றியும் ஹதீஸ்களில் இடம்
பெற்று இருக்கிறது. இந்தக்
கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.Tntg.net

Ahmedibrahim

இரவில் தொழும் தொழுகை.

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும்
சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத்
தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும்
தொழுகையாகும். "ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த
நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம்
மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும்.
கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த
தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157 இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல
பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல்
லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல்
(இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத்
தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்
தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத்
தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ்
என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர்
நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. இரவுத்
தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ
வேண்டும். ஒருவர் இரவுத்
தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால்
ஒற்றைப்
படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத்
தொழுகையைப் பற்றிக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத்
தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ
வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத்
தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்)
தொழுதவற்றை அது ஒற்றையாக
ஆக்கி விடும்" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்:
புகாரீ 990 இரவுத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர்
நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும்
தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத்
தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர்
தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள்
தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்
1340 ரக்அத்களின் எண்ணிக்கை 8+3 ரக்அத்கள் "ரமலானில் நபி (ஸல்) அவர்களின்
தொழுகை எவ்வாறு இருந்தது?"
என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன்.
அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள்
ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும்
பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும்
நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும்
கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள்
தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வித்ருத்
தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?"
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் "ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம்
உறங்குவதில்லை" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ
1147, முஸ்லிம் 1344 12+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்:
புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402, 10+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில்
ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள்.
தொழுது முடித்த பின்
(தம்மை அழைப்பதற்காக)
தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம்
சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்)
வந்ததும் (எழுந்து) சுருக்கமாக
இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்)
தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள்
தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள்
வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த
ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர
வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341 4+5 ரக்அத்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் : எனது சிறிய
தாயாரும் நபி (ஸல்) அவர்களின்
மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ்
(ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள்
தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள்
(பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப்
பின்னர்
தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள்
தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர்
எழுந்து "சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?" அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச்
சொல்லி விசாரித்து விட்டு மீண்டும்
தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும்
(அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப்
போய் நின்று கொண்டேன்.
உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்)
ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின்
முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும்
தொழுது விட்டு அவர்களின்
குறட்டை ஒலியை நான்
கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள் . பிறது (சுபுஹத்)
தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் :
புகாரி (117) 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத்
தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில்
கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும்
உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341) 9 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத்
இரண்டு ரக்அத்கள் தவிர
பதினொரு ரக்அத்கள், (சில சமயம்)
ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 7 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத்
இரண்டு ரக்அத்கள் தவிர
பதினொரு ரக்அத்கள், (சில சமயம்)
ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
5,3, 1 ரக்அத்கள் "வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார்
நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர்
தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர்
மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார்
நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்:
நஸயீ 1692, அபூதாவூத் 1212,
இப்னுமாஜா 1180
tntj.net
Ahmedibrahim

இஃதிகாப

இஃதிகாப் என்ற
அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற
பொருளாகும். இஸ்லாமிய வழக்கில்
பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத்
தங்குவதற்கு இஃதிகாஃப்
என்று சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின்
கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப்
இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும்
இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக
இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில்
அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும்,
வேறு எண்ணங்களுக்கு இடம்
கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக்
கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும்
நபித் தோழர்களும் இஃதிகாப்
இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின்
813 செய்தி ஆதாரமாக உள்ளது. இஃதிகாபின் ஆரம்பம் இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள்
காலை சுப்ஹுத்
தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும்
இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க
நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு
இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச்
செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007) ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத்
தேடுமாறு நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.
எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப்
இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம்
நாள் பஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த
இரவு அவர்களுக்குத் தவறிப்
போயிருக்கும். 20 ஆம் நாள்
தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள்
என்று விளங்குவதே பொருத்தமாக
இருக்கும். இஃதிகாபின் முடிவு நேரம் இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல்
முடிந்தால் அன்றைய மஃக்ரிபில்
(அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்)
இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால்
அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம். அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் ரமலான் மாதத்தின்
நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில்
இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம்
இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம்
இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்:
புகாரி 2018) நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப்
இருக்கும் போது இருபதாம்
இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம்
இரவு துவங்கியதும் போவார்கள் என்ற
செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில்
இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30
இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம்
துவங்கும் இரவில் வீடு திரும்பலாம்
என்பதை அறியலாம். பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான்
வீடு திரும்ப வேண்டுமென சிலர்
கூறினாலும் அதற்கு நபிமொழிகளில்
ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா? நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப்
பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான்
அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன்
என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
(சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால்
வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும்
போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும்
குறிப்பானது என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க
நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும்
இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின்
கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின்
கூடாரம் எனப் பல கூடாரங்களைக்
கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?"
என்று கேட்டு விட்டு இஃதிகாஃப்
இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால்
மாதம் பத்து நாட்கள் இஃதிகாப்
இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ (2034) "நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற
கேள்வியும், நபி (ஸல்) அவர்கள்
தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை
விட்டதும் இவ்வாறு கூடாரங்கள்
அமைப்பதில் அவர்களுக்கு இருந்த
அதிருப்தியைக் காட்டுகின்றது. மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும்
மற்றவர்கள் கூடாரம் அமைக்கக்
கூடாது என்பதை விளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத்
தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய
போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள்.
அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது…
(புகாரீ 2041) நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும்
இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில்
வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள்.
காலைத்
தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்)
அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்)
அவர்களுக்குரியது,
இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி)
அவர்களுக்குரியது.
மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி)
அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி)
அவர்களுக்குரியது. இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள்
அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும்
கூடராங்களை அமைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும்
மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க
வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே!
எனவே நபித்தோழர்கள்
கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும்
நபி (ஸல்) அவர்கள்
நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை
என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள்
தேவையில்லை. இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள் பள்ளிவாசலில் இருக்கும்
போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்
கூடாது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்
போது மனைவியருடன் கூடாதீர்கள்!
இது அல்லாஹ்வின் வரம்புகள்.
எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை)
அஞ்சுவதற்காக அல்லாஹ்
தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187) தேவையில்லாமல்
பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்
போது தமது தலையை வீட்டிலிருக்கும் என்
பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால்
தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்:
புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில்
செல்லக் கூடாது என்பதையும் அவசியத்
தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப்
இருக்கலாம் என்பதற்குப் பின்வரும்
செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்
போது அவர்களின் மனைவியரில் ஒருவரும்
இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ
(309) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின்
மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும்
இஃதிகாஃப் இருந்ததாக நாம்
அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை. நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப்
இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக
பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க
வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள்
இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான்
அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப்
இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக
அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில்
மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
Tntj.net
Ahmedibrahim

ஃபித்ர

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற
வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள்,
பெண்கள், அடிமைகள், சிறுவர்கள்
மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண்,
பெண், பெரியவர் மற்றும் சிறுவர்
மீது நோன்புப் பெருநாள் தர்மமாக
ஒரு ஸாவு கோதுமை,
அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்:
புகாரி 1503 ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள
அனைவருக்காகவும் இந்தத்
தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக்
கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள்
இருந்தால் தலைக்கு இரண்டரைக்
கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக்
கிலோ அரிசியை வழங்க வேண்டும்.
இதுவே ஃபித்ரா எனப்படுகிறது. ஃபித்ராவின் நோக்கம் இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும்
இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான
காரியங்களை விட்டும் நோன் பாளியைத்
தூய்மைப்படுத்தவும்,
ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் :
அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட
தவறுகளுக்குப் பரிகாரமாக
இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த
நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத
சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின்
சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த
நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம் மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச்
செல்வதற்கு முன்னால்
ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள்
தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள்
தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க
வேண்டும் என்று சில சகோதரர்கள்
கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள்
தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும்
என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள
இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால்
கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும்
கொடுக்கலாம் எனவும் இந்த
ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம். பெருநாள் தொழுகைக்கு முன்
என்பதை இரண்டு விதமாகவும்
புரிந்து கொள்ள இடமிருந்தாலும்
வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது,
"பெருநாள் தொழுகைக்குப் பின்னர்
கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில
நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்" என்ற
கருத்தே சரியானது என்பது
உறுதியாகிறது. ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும்
பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
என்னை நியமித்திருந்தார்கள்.
அப்போது ஷைத்தான்
வந்து அதிலிருந்து எடுக்கலானான்.
உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்" என்று நான்
கூறினேன். அதற்கு அவன் "எனக்குக்
குடும்பம் உள்ளது. எனக்குக் கடும்
தேவை உள்ளது" எனக் கூறினான். அவனை நான்
விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?"
என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே!
அவன் வறுமையை முறையிட்டதால்
இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்"
என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம்
வருவான்" என்று கூறினார்கள். நான்
அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும்
வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப்
பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம்
கொண்டு போகப் போகி றேன்" என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது.
இனி வர மாட்டேன்" என்று அவன் கூறினான்.
அவனை நான் விட்டு விட்டேன். காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்
சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?"
என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான்.
இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக்
கூறினேன். "அவன் உன்னிடம் பொய்
சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ்
புகாரியில் வகாலத் என்ற பாடத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய
எண்களில் கூறப்பட்டுள்ளது. "இந்த ஹதீஸில்
ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான்
ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது.
இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத்
திரட்டுவதையே குறிக்கிறது.
ஃபித்ராவை குறிக்கவில்லை" என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில்
மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல.
அன்றாடம் திரட்டப்பட்டுக்
கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்'
என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும். இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும்
ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன்,
ஆண், பெண் அனைவர் மீதும்
ஒரு ஸாவு பேரிச்சம் பழம்
அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற
ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒவ்வொருவருக்கும்
ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்
தினார்கள்" என்பது ஃபித்ராவைத் தான்
குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத்
என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத்
வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட
ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது. எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம்
திரட்டப்பட்டது என்பதற்கும்
இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.
திரட்டும்
பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு
முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது. ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட
பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில்
இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான்
(அல்லது கெட்ட மனிதன்)
வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில
நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத்
திரட்டலாம் என்பது தெரிகிறது. நபித் தோழர்கள் நோன்புப்
பெரு நாளைக்கு ஒருநாள்
அல்லது இரண்டு நாட்களுக்கு முன்
ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர்
என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்
போதே நடந்ததை இது குறிக்கும் என்றால்
இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப்
பின்னர் நபித் தோழர்கள்
இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி)
அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக
இது அமையும். எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில
நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத்
திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன்
கடைசி நேரம் உள்ளது
tntj.net
Ahmedibrahim

வெள்ளி, 15 ஜூன், 2012

பாங்கை பதிவு செய்து பாங்காகப் பயன்பட?

இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது வணக்க வழிபாடு தொடர்புடைய விஷயமாகும். பாங்கு சொல்வது சிறந்த நல்லறமாக மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. 609 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ َﻝﺎَﻗ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ِﻦْﺑ ﻲِﺑَﺃ َﺔَﻌَﺼْﻌَﺻ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َّﻢُﺛ ِّﻲِﻧِﺯﺎَﻤْﻟﺍ ْﻦَﻋ ِﻪﻴِﺑَﺃ ُﻪَّﻧَﺃ ُﻩَﺮَﺒْﺧَﺃ َّﻥَﺃ ﺎَﺑَﺃ ٍﺪﻴِﻌَﺳ َّﻱِﺭْﺪُﺨْﻟﺍ ُّﺐِﺤُﺗ َﻙﺍَﺭَﺃ ﻲِّﻧِﺇ ُﻪَﻟ َﻝﺎَﻗ ﻲِﻓ َﺖْﻨُﻛ ﺍَﺫِﺈَﻓ َﺔَﻳِﺩﺎَﺒْﻟﺍَﻭ َﻢَﻨَﻐْﻟﺍ َﻚِﻤَﻨَﻏ ْﻭَﺃ َﺖْﻧَّﺫَﺄَﻓ َﻚِﺘَﻳِﺩﺎَﺑ ْﻊَﻓْﺭﺎَﻓ ِﺓﺎَﻠَّﺼﻟﺎِﺑ ِﺀﺍَﺪِّﻨﻟﺎِﺑ َﻚَﺗْﻮَﺻ ﺎَﻟ ُﻪَّﻧِﺈَﻓ ُﻊَﻤْﺴَﻳ ﻯَﺪَﻣ ِﺕْﻮَﺻ ِﻥِّﺫَﺆُﻤْﻟﺍ ﺎَﻟَﻭ ٌّﻦِﺟ ٌﺲْﻧِﺇ ﺎَﻟَﻭ ٌﺀْﻲَﺷ َﺪِﻬَﺷ ﺎَّﻟِﺇ ُﻪَﻟ َﻡْﻮَﻳ ِﺔَﻣﺎَﻴِﻘْﻟﺍ َﻝﺎَﻗ ﻮُﺑَﺃ ٍﺪﻴِﻌَﺳ ُﻪُﺘْﻌِﻤَﺳ ْﻦِﻣ ِﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻱﺭﺎﺨﺒﻟﺍ ﻩﺍﻭﺭ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "ஆட்டையும் பாலை வனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் "ஆட்டை மேய்த்துக் கொண்டோ' அல்லது "பாலைவனத்திலோ' இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலி க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன'' என்று கூறிவிட்டு , "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி (819) 615 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ َﻝﺎَﻗ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ٍّﻲَﻤُﺳ ﻰَﻟْﻮَﻣ ﻲِﺑَﺃ ٍﺮْﻜَﺑ ْﻦَﻋ ﻲِﺑَﺃ ٍﺢِﻟﺎَﺻ ْﻦَﻋ ﻲِﺑَﺃ َﺓَﺮْﻳَﺮُﻫ َّﻥَﺃ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ْﻮَﻟ ُﻢَﻠْﻌَﻳ ُﺱﺎَّﻨﻟﺍ ﺎَﻣ ﻲِﻓ ِﺀﺍَﺪِّﻨﻟﺍ ِّﻒَّﺼﻟﺍَﻭ ِﻝَّﻭَﺄْﻟﺍ َّﻢُﺛ ْﻢَﻟ ﺍﻭُﺪِﺠَﻳ ﺎَّﻟِﺇ ْﻥَﺃ ﺍﻮُﻤِﻬَﺘْﺴَﻳ ِﻪْﻴَﻠَﻋ ﺍﻮُﻤَﻬَﺘْﺳﺎَﻟ ْﻮَﻟَﻭ َﻥﻮُﻤَﻠْﻌَﻳ ﺎَﻣ ﻲِﻓ ِﺮﻴِﺠْﻬَّﺘﻟﺍ ﺍﻮُﻘَﺒَﺘْﺳﺎَﻟ ِﻪْﻴَﻟِﺇ ْﻮَﻟَﻭ َﻥﻮُﻤَﻠْﻌَﻳ ﺎَﻣ ﻲِﻓ ِﺔَﻤَﺘَﻌْﻟﺍ ِﺢْﺒُّﺼﻟﺍَﻭ ﺎَﻤُﻫْﻮَﺗَﺄَﻟ ْﻮَﻟَﻭ ﺍًﻮْﺒَﺣ ﻩﺍﻭﺭ ﻱﺭﺎﺨﺒﻟﺍ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின்
அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து) விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (615) 580 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ ٍﺮْﻴَﻤُﻧ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺓَﺪْﺒَﻋ ْﻦَﻋ َﺔَﺤْﻠَﻃ ِﻦْﺑ ﻰَﻴْﺤَﻳ ْﻦَﻋ ِﻪِّﻤَﻋ َﻝﺎَﻗ ُﺖْﻨُﻛ َﺪْﻨِﻋ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ ِﻦْﺑ ﻲِﺑَﺃ َﻥﺎَﻴْﻔُﺳ ُﻩَﺀﺎَﺠَﻓ ُﻥِّﺫَﺆُﻤْﻟﺍ ُﻩﻮُﻋْﺪَﻳ ﻰَﻟِﺇ ِﺓﺎَﻠَّﺼﻟﺍ َﻝﺎَﻘَﻓ ُﺔَﻳِﻭﺎَﻌُﻣ َﻥﻮُﻧِّﺫَﺆُﻤْﻟﺍ ُﻝﻮُﻘَﻳ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ َﻝﻮُﺳَﺭ ُﺖْﻌِﻤَﺳ ُﻝَﻮْﻃَﺃ ِﺱﺎَّﻨﻟﺍ ﺎًﻗﺎَﻨْﻋَﺃ َﻡْﻮَﻳ ِﺔَﻣﺎَﻴِﻘْﻟﺍ ﻭ ِﻪﻴِﻨَﺛَّﺪَﺣ ُﻖَﺤْﺳِﺇ ُﻦْﺑ ٍﺭﻮُﺼْﻨَﻣ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٍﺮِﻣﺎَﻋ ﻮُﺑَﺃ ُﻥﺎَﻴْﻔُﺳ ﺎَﻨَﺛَّﺪَﺣ َﺔَﺤْﻠَﻃ ْﻦَﻋ ﻰَﻴْﺤَﻳ ِﻦْﺑ ْﻦَﻋ ﻰَﺴﻴِﻋ ِﻦْﺑ َﺔَﺤْﻠَﻃ َﻝﺎَﻗ ُﺖْﻌِﻤَﺳ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ ُﻝﻮُﻘَﻳ َﻝﺎَﻗ ﻢﻠﺴﻣ ﻩﺍﻭﺭ ِﻪِﻠْﺜِﻤِﺑ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ُﻝﻮُﺳَﺭ ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் கூறுகிறார் : (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம் (631) நல்லறங்களைப் பொறுத்தவரை மனிதன் அவற்றை ச் செய்தால் தான் அதன் நன்மைகளை அடைய முடியும். நவீன கருவிகளைப் பயன்படுத்தி பாங்கு சப்தத்தை ஒளிரவிட்டால் நாம் பாங்கு சொன்னவராக முடியாது. இவ்வாறு செய்யும் போது பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்புகளை நம்மால் அடைய முடியாது. எனவே நாம் பாங்கு சொன்னால் தான் பாங்கிற்குரிய சிறப்புகள் நமக்கு கிடைக்கும். இந்த நல்லறத்தை மனிதர்களில் ஒருவரே செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லிருந்து விளங்கிக்கொள்ள முடியும். 819 ﺎَﻨَﺛَّﺪَﺣ ﻮُﺑَﺃ ِﻥﺎَﻤْﻌُّﻨﻟﺍ َﻝﺎَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺩﺎَّﻤَﺣ ُﻦْﺑ ٍﺪْﻳَﺯ ْﻦَﻋ َﺏﻮُّﻳَﺃ ْﻦَﻋ ْﻢُﻜُﺌِّﺒَﻧُﺃ ﺎَﻟَﺃ ِﻪِﺑﺎَﺤْﺻَﺄِﻟ َﻝﺎَﻗ ِﺙِﺮْﻳَﻮُﺤْﻟﺍ َﻦْﺑ َﻚِﻟﺎَﻣ َّﻥَﺃ َﺔَﺑﺎَﻠِﻗ ﻲِﺑَﺃ َﺓﺎَﻠَﺻ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ِﻝﻮُﺳَﺭ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ِﺮْﻴَﻏ ﻲِﻓ َﻙﺍَﺫَﻭ َﻝﺎَﻗ ِﻦﻴِﺣ َﻡﺎَﻘَﻓ ٍﺓﺎَﻠَﺻ َﺮَّﺒَﻜَﻓ َﻊَﻛَﺭ َّﻢُﺛ ُﻪَﺳْﺃَﺭ َﻊَﻓَﺭ َّﻢُﺛ َّﻢُﺛ ًﺔَّﻴَﻨُﻫ َﻡﺎَﻘَﻓ َﺪَﺠَﺳ َّﻢُﺛ َﻊَﻓَﺭ ُﻪَﺳْﺃَﺭ ًﺔَّﻴَﻨُﻫ ﻰَّﻠَﺼَﻓ َﺓﺎَﻠَﺻ ﻭِﺮْﻤَﻋ ِﻦْﺑ َﺔَﻤِﻠَﺳ ﺎَﻨِﺨْﻴَﺷ ﺍَﺬَﻫ َﻝﺎَﻗ ُﺏﻮُّﻳَﺃ َﻥﺎَﻛ ُﻞَﻌْﻔَﻳ ﺎًﺌْﻴَﺷ ْﻢَﻟ ْﻢُﻫَﺭَﺃ ُﻪَﻧﻮُﻠَﻌْﻔَﻳ َﻥﺎَﻛ ُﺪُﻌْﻘَﻳ ﻲِﻓ ِﺔَﺜِﻟﺎَّﺜﻟﺍ ِﺔَﻌِﺑﺍَّﺮﻟﺍَﻭ َﻝﺎَﻗ ﺎَﻨْﻴَﺗَﺄَﻓ َّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﺎَﻨْﻤَﻗَﺄَﻓ ُﻩَﺪْﻨِﻋ َﻝﺎَﻘَﻓ ْﻮَﻟ ْﻢُﺘْﻌَﺟَﺭ ﻰَﻟِﺇ ْﻢُﻜﻴِﻠْﻫَﺃ ﺍﻮُّﻠَﺻ َﺓﺎَﻠَﺻ ﻲِﻓ ﺍَﺬَﻛ ﺍَﺬَﻛ ِﻦﻴِﺣ َﺓﺎَﻠَﺻ ﺍﻮُّﻠَﺻ ﻲِﻓ ﺍَﺬَﻛ ﺍَﺬَﻛ ِﻦﻴِﺣ ﺍَﺫِﺈَﻓ ْﻥِّﺫَﺆُﻴْﻠَﻓ ُﺓﺎَﻠَّﺼﻟﺍ ْﺕَﺮَﻀَﺣ ﻩﺍﻭﺭ ْﻢُﻛُﺮَﺒْﻛَﺃ ْﻢُﻜَّﻣُﺆَﻴْﻟَﻭ ْﻢُﻛُﺪَﺣَﺃ ﻱﺭﺎﺨﺒﻟﺍ மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : (இளைஞர்களான) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார்கள். நூல் : புகாரி (819) எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆடியோவை பாடவிடுவதின் மூலம் பாங்கு சொல்வது கூடாது. மனிதர்களில்
யாராவது ஒருவரே பாங்கு சொல்ல வேண்டும். மேலும் விபரத்துக்கு பார்க்க பதிவு செய்யப்பட்ட பாங்கு பாங்காக ஆகுமா 09.05.2012. 12:23
Online pj
Ahmedibrahim

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

பாங்கில் இரண்டு வகை உள்ளது. மக்களை பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காக சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை. தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் ஆண்களுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம். மற்றவர்களை அழைப்பதற்காக பாங்கு சொல்வது ஆண்களை முந்துவதில் அடங்கும். எனவே இது போன்ற பாங்குகளை சொல்லக் கூடாது. ஒரு பள்ளியில் சொல்லப்பட்ட பாங்கு கேட்காத போதும் மக்கள் வசிக்காத பகுதியில் தொழும் போதும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த வகையான பாங்கை அதாவது தனக்காக சொல்லிக் கொள்ளும் பாங்கை பெண்கள் சொல்ல்லாம். சொல்ல வேண்டும். நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரி (2848) யாரையும் அழைக்கும் நோக்கம் இல்லாமல் பயணத்தில் இருக்கும் போதும் பாங்கு சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ﻭِﺮْﻤَﻋ ْﻦَﻋ ٍﺐْﻫَﻭ ُﻦْﺑﺍ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٍﻑﻭُﺮْﻌَﻣ ُﻦْﺑ ُﻥﻭُﺭﺎَﻫ ﺎَﻨَﺛَّﺪَﺣ1017 ِﻦْﺑ ِﺙِﺭﺎَﺤْﻟﺍ َّﻥَﺃ ﺎَﺑَﺃ َﺔَﻧﺎَّﺸُﻋ َّﻱِﺮِﻓﺎَﻌَﻤْﻟﺍ ُﻪَﺛَّﺪَﺣ ْﻦَﻋ َﺔَﺒْﻘُﻋ ِﻦْﺑ ٍﺮِﻣﺎَﻋ َﻝﻮُﺳَﺭ ُﺖْﻌِﻤَﺳ َﻝﺎَﻗ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ُﻝﻮُﻘَﻳ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﺐَﺠْﻌَﻳ ْﻢُﻜُّﺑَﺭ ْﻦِﻣ ﻲِﻋﺍَﺭ ٍﻢَﻨَﻏ ﻲِﻓ ِﺱْﺃَﺭ ٍﺔَّﻴِﻈَﺷ ٍﻞَﺒَﺠِﺑ ُﻥِّﺫَﺆُﻳ ِﺓﺎَﻠَّﺼﻟﺎِﺑ ﻲِّﻠَﺼُﻳَﻭ ُﻝﻮُﻘَﻴَﻓ ُﻪَّﻠﻟﺍ َّﺰَﻋ َّﻞَﺟَﻭ ﺍﻭُﺮُﻈْﻧﺍ ﻰَﻟِﺇ ﻱِﺪْﺒَﻋ ﺍَﺬَﻫ ُﻥِّﺫَﺆُﻳ ُﻢﻴِﻘُﻳَﻭ َﺓﺎَﻠَّﺼﻟﺍ ُﻑﺎَﺨَﻳ ﻲِّﻨِﻣ ْﺪَﻗ ُﺕْﺮَﻔَﻏ ﻱِﺪْﺒَﻌِﻟ ﺩﻭﺍﺩ ﻮﺑﺃ ﻩﺍﻭﺭ َﺔَّﻨَﺠْﻟﺍ ُﻪُﺘْﻠَﺧْﺩَﺃَﻭ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். "பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான். அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் : அபூதாவூத் (1017) தன்னந்தனியாக இருப்பவன் கூட பாங்கு சொன்னால் அதை இறைவன் விரும்புகிறான் என்பதால் நாம் தனியாக தொழுதாலும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த நன்மையை ஆண்களும் அடைந்து கொள்ளலாம். பெண்களும் அடைந்து கொள்ளலாம் பெண்கள் தனித்து தொழும் போதும் அல்லது பெண்களுக்கு பெண்கள் ஜமாஅத் நடத்தும் போதும் தமக்காக பாங்கு சொல்லலாம். மேலும் விபரத்துக்கு பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/
thaniyaka_thozuthal_bangu_avasiyama/

Online pj
Ahmedibrahim

இறைவணைக் காண முடியுமா?

மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று (மூஸாவை நோக்கி) நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழுப்பினோம். (அல்குர்ஆன் 2:55, 56) மூஸா (அலை) அவர்களது காலத்து இஸ்ரவேலர்களின் விபரீதமான கோரிக்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு இறைவன் இங்கே நினைவுபடுத்துகின்றான். இதை 4:153 வசனத்திலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான். நபி (ஸல்) காலத்து இஸ்ரவேலர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக இவ்வசனங்கள் அருளப்பட்டிருந்தாலும்
இதனுள்ளே அடங்கி இருக்கின்ற மற்றொரு பிரச்சனையைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. ''இறைவனைக் காண முடியுமா?'' என்பதே அந்தப் பிரச்சனையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேரடியாகப் பார்த்தார்கள் என்றும் சில பெரியார்கள், மகான்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்றும் பலர் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது. திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் ஆராயும் போது இம்மையில் எவருமே இறைவனைக் கண்டதில்லை, காணவும் முடியாது. மறுமையில் நல்லடியார்கள் மட்டும் இறைவனைக் காண்பார்கள் என்ற முடிவுக்கே நாம் வர முடிகின்றது. அதற்குரிய சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் திகழ்கிறது. ''இறைவனைக் காண முடியாது'' என்பதை இவ்வசனங்கள் நேரடியாகக் கூறவில்லை என்று சில பேர் வாதம் புரியக்கூடும். குறிப்பிட்ட சிலர் காண முடியாமல் இருந்துள்ளனர் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் கேட்ட விதம் சரியில்லாமலிருந்தால் கூட அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் வாதிடக் கூடும். இந்த
வசனங்களிலிருந்து இவ்வாறு கருதுவதற்கு
இடம் இருந்தாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை வேறு பல வசனங்கள் அறிவிக்கின்றன. நாம் குறித்த காலத்தில் மூஸா (அலை) அவர்கள் வந்த போது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூஸா, 'இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன் 'மூஸாவே! நீர் ஒருக்காலும் என்னைப் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரு. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம்.' என்று கூறினான். அவருடைய இறைவன் (மூஸாவுக்கு தெரியாமல்) மலைக்குத் தன்னைக் காட்டிய போது அதை நொருக்கி துாளாக்கி விட்டான். (இதைக் கண்ட அதிர்ச்சியில்) மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் 'நீ பரிசுத்தமானவன்' உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் விசுவாசம் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார். (அல்குர்ஆன் 7:143) இறைவனை எவரும் காண முடியாது என்பதை இந்த வசனம் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கிறது. மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்கள் இறைவனின் பேச்சைத் தம் காதுகளால் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியவில்லை என்றால் பெரியார்கள், மகான்கள் பார்த்திருக்கிறார்கள்
என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணரலாம். பார்க்க முடியாமல் போவதன் காரணமும் இங்கே இறைவனால் கூறப்படுகின்றது. இறைவனைக் காணுகின்ற வல்லமை, அவனது காட்சியைத் தாங்கும் வலிமை எவருக்கும் இல்லை என்பதே அந்தக் காரணம். உறுதி மிக்க மலைக்கு தன்னை இறைவன் காண்பித்து, அவனது காட்சி மலையில் பட்டதும் துாள்துாளாக நொறுங்கியதையும் காண்பித்து இதனையே இறைவன் விளக்குகின்றான். இறைவனது எந்தப் படைப்பும் அவனது காட்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது. பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான். (அல்குர்ஆன் 6:103) அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதிபெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய)
துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை. (அல்குர்ஆன் 42:51) இந்த வசனங்களும் எவருமே இறைவனை நேரில் கண்டது கிடையாது. காணவும் முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவித்து விடுகின்றன. நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட
செய்தியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதை கூறுகின்றன. ஆனால் மிஃராஜில் நடந்தது என்னவென்பதை தவறாகவே பலரும் விளங்கியுள்ளனர். அங்கே இறைவனுடன் உரையாடல் மட்டும் தான் நடந்தது. நபி (ஸல்) இறைவனைக் கண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ''உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்?'' என விடையளித்தார்கள் என்று அபுதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) இறைவனைக் கண்டதில்லை என்பதையும், அவர்கள் இறைவனைக் கண்டார்கள் என்ற கருத்துடையோரின் ஆதாரங்கள் தவறானவை என்பதையும் பின்வரும் ஹதீஸும் விளக்குகிறது. நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அருகே சாய்ந்தவனாக அதமர்ந்திருந்தேன். அவர்கள் ''அபூ ஆயிஷாவே! மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோஅவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார்' என்றார்கள். 'அவை யாவை?'' என்று நான் கேட்டேன். 'முஹம்மது (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்கள் என யார் கூறிகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்று (முதல் விசயத்தைக்) கூறினார்கள். சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து கொண்டு (மூமின்களின் அன்னையே!
அவசரப்படாதீர்கள்! நிதானமாகக் கூறுங்கள்!
தெளிவான அடிவானத்தில் நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அவனைக் கண்டார். (81:23) என்றும் மற்றுமொரு தடவையும் அவனை அவர் கண்டார் (53:13) என்றும் அல்லாஹ் கூறவில்லையா?'' எனக் கேட்டேன். அதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ''இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் முதல் முதலில் கேட்டவள் நான் தான்'' அப்படிக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள்'' அது ஜிப்ரீல்
(அலை) அவர்களைப் பற்றியதாகும். அவர்கள் எந்த வடிவில் படைக்கப்பட்டார்களோ அதே வடிவில் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடங்களை நிரப்பியவராக அந்த இரண்டு தடவைகள் தான் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன்! என்று கூறினார்கள். மேலும் தொடர்ந்து ''பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனே பார்வைகளை அடைகிறான். (6:103) என்று இறைவன் கூறுவதையும் அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான்
விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களான) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை (42:51) என்று இறைவன் கூறுவதையும் நீ கேள்விப்பட்டதில்லையா? எனவும் ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று எவராவது கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவராவார். 'துாதரே! உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக! நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது துாதை எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! (5:67) என்று அல்லாஹ் கூறுகிறான். என்றார்கள். நாளை நடப்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவிப்பார்கள் என்று எவரேனும் கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவராவார். அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள் (27.65) என்று அல்லாஹ் கூறுகிறான். என்று மூன்று விசயங்களையும் விளக்கினார்கள். (முஸ்லிம்) இந்த ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் இறைவனை நேருக்கு நேர் கண்டதில்லை என்பதையும் எவராலும் காணமுடியாது என்பதையும் அறியலாம். 'நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு தடவை பார்த்துள்ளார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக திர்மிதீயில் இடம் பெறும் செய்தியினடிப்படையில் அவர்கள் இறைவனைப் பார்த்ததாகச் சிலர் கூறுவர். பல காரணங்களால் இது ஏற்கமுடியாத வாதமாகும். இறைவனை எவரும் காண முடியாது என்று வந்துள்ள வசனங்களுக்கும், நபியவர்களே தான் இறைவனைப் பார்த்தது கிடையாது என்று கூறுவதற்கும் இது முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தச் செய்தி ஏற்க முடியாததாகும். இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெறும் போது 'இறைவனை உள்ளத்தால் (கண்களால் அல்ல) இரண்டு தடவை பார்த்தார்கள்.' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக இடம் பெற்றுள்ளது. இதையே முதல் ஹதீஸுக்கும் விளக்கமாக நாம் கொள்ள வேண்டும், இவ்வாறு பொருள் கொள்ளும் போது மேற்கண்ட வசனங்களுக்கு முரண்படாத வகையில் அமைந்து விடுகின்றது. இறைவனை எவரும் பார்த்ததில்லை. பார்க்க முடியாது. அந்த வல்லமை எந்தப் பார்வைக்கும் கிடையாது என்றாலும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவனது காட்சியைத் தாங்கும் வல்லமையை இறைவன் அப்போது அளிப்பான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது. அன்றைய தினத்தில் (மறுமையில்) சில முகங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். தம் இறைவனைப் பார்த்து கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:23) ''முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனை நீங்கள் மறுமையில் காண்பீர்கள்'' என்று நபி (ஸல்) கூறியதாக ஏராளமான ஹதீஸ்கள் முஸ்லிம், திர்மிதீ மற்றும் பல நுால்களில் இடம் பெற்றுள்ளன. மறுமையில் மாத்திரம் இறைவனைக் காணமுடியும் என்பதற்கு இவை சான்றுகளாக
உள்ளன. இந்த மறுமைத் தரிசனம் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இறைவனை மறுமையில் கூட சந்திக்கின்ற பாக்கியத்தை அடைய மாட்டார்கள். நல்லடியார்கள் மட்டுமே இந்தப் பேரின்பத்தை அடைவார்கள். அந்நாளில் அவர்கள் (இறை வசனங்களைப் பொய்யென மறுத்தவர்கள்) தம் இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15) யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணத்தையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமைநாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (அல்குர்ஆன் 3:77) இது போன்றவர்களைத் தவிர மற்ற நல்லடியார்கள் மறுமையில் இறைவனைக் காணுகின்ற பெரும் பேற்றினை அடைவார்கள். இறைவனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக நம்மவர்களை இறைவன் ஆக்கியருளட்டும்.
Online pj
Ahmedibrahim

கண்கெட்ட பின்பு

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள். பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும் போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும். "(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித் தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர். (திருக்குர்ஆன்2:165-167) இந்த மூன்று வசனங்களும் விளக்கம் தேவைப்படாத அளவுக்கு மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில்அமைந்துள்ளன. முஃமின்களின் உள்ளங்கள் நடுங்கும் அளவுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் இவ்வசனத்தில்அடங்கியுள்ளன. தமிழக முஸ்லிம்களின் பெரும்பாலான நடவடிக்கைகளை நாம் கவனித்தால் இந்த வசனங்கள் குர்ஆனில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா ? அல்லது தெரிந்தே அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கிறார்களா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது! எனவே இவ்வசனங்கள் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர் என்று அல்லாஹ் கூறுவதை நம்மவர்களின் நடைமுறையோடு பொருத்திப் பார்ப்போம். நம்மவர்களில் எவரும் அல்லாஹ்வுக்குச் சமமாக அவ்லியாக்களை நேசிப்பதாகக் கூற மாட்டார்கள். வாயளவில் அவர்கள் இவ்வாறு கூறாவிட்டாலும் அவர்களின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வை விடஅதிகமான நேசம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை அறிய முடியும். அவர்களின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். பள்ளிவாசலில் ஒரு இமாம் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருப்பார். அதைச் சில நூறுபேர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தச் சொற்பொழிவின் போது அல்லாஹ் என்ற திருநாமத்தைப் பல தடவை அவர் குறிப்படுவார். கேட்பவர்களிடம் அந்தத் திருநாமம் எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை
. சொல்பவரிடம் கூட எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சில நேரங்களில் அப்துல்காதிர் ஜீலானி என்ற பெயரை அந்த இமாம் குறிப்பிடுவார். இந்தப் பெயரைக் கேட்பவரின் உள்ளங்கள் பூரிப்படைகின்றன. அவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அவர்களை அறியாமலே 'கத்தஸல்லாஹுஸிர்ரஹு' என்ற வார்த்தை அவர்களின் வாயிலிருந்து புறப்படுகின்றது. கேட்பவர்கள் மட்டுமின்றி சொல்லக்கூடிய இமாமும் அல்லாஹ் என்ற திருநாமத்துக்குக் கொடுக்காத அழுத்தத்தை அப்துல்காதிர் என்ற பெயருக்குக் கொடுப்பார். சர்வசாதாரணமாக இந்தச் சமுதாயத்தில் இதை நாம் காண முடிகின்றது. 'அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமை யை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.'
திருக்குர்ஆன்39:45 இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது போன்று இவர்கள் நடந்து கொள்ளக் காரணம் இவர்களின் உள்ளம் அல்லாஹ்வைவிட மற்றவர்களை அதிகம் மதிக்கிறது. அதிகம் நேசிக்கிறது என்பதுதான். அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கி இருக்கிறான் என்பதும், தினமும்
ஐந்துமுறை பள்ளிவாசலிலிருந்து அழைப்பு
விடப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அழைக்கப்பட்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருதைத் தவிர்க்கக்கூடியவன்
அழைக்கப்படாமலே தர்காவுக்கு ஓடுகிறான். தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு இவனது உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு வழங்கிய இடத்தைவிட அதிக இடம் இருக்கிறது என்பதைத் தவிர இதற்கு வேறுகாரணம் இருக்க முடியாது. துன்பங்கள்
ஏற்படும்போது அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டவர்கள் 'யாமுஹ்யித்தீனே!' என்று அழைப்பதும் இதே காரணத்தினால்தான். இறைவனை விட மற்றவர்கள் மீது அதிகநேசம் கொண்ட இத்தகையவர்கள் படுபயங்கரமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையும் இந்த வசனங்களில் இறைவன் பட்டியலிடுகிறான். 1) அவர்கள் அக்கிரமக்காரர்களாக இறைவனால் கருதப்படுவர்கள். 2) நன்மை பெறுவோம் என்ற நம்பிக்கையில் மண்விழுந்து அல்லாஹ்வின் வேதனையை அதுவும் கடுமையான வேதனையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 3) அன்றைய தினத்தில் எவரும் எதிர்க்கேள்வி கேட்க இயலாமல் நிற்பார்கள். எல்லா வல்லமையும் அவனுக்கு மட்டுமே அன்றைய தினம் இருக்கப் போவதையும் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்கள். 4) இதைவிட முக்கியமான அம்சம், இவர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்த இந்த நல்லடியார்கள் இவர்களைக் கைகழுவி விடுவார்கள். காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கிடையே யாதொரு உறவும் அன்றைய தினம் இருக்காது. 5) அவர்கள் செய்து வந்த ஏனைய நல்லறங்கள் யாவும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்க மாட்டா. அவை அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக ஆகிவிடும். 6) இதனால் நரகத்தில் நுழைந்த அவர்கள் என்றென்றும் அதிலேயே தங்கி விடுவார்கள். ஒரு போதும் நரகிலிருந்து வெளியேற இயலாது. இப்படி ஆறுவகையான இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. மறுமையை நம்பக்கூடிய மக்களுக்கு இது கடுமையான எச்சரிக்கையாகும். இதில் கடைசி மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டும். எந்தப் பெரியார்களை இவர்கள் பெரிதும் நம்பி இந்த அக்கிரமம் புரிந்தார்களோ அந்தப் பெரியார்களே கைகழுவி விடுவார்கள் என்பதைப் பல இடங்களில் இறைவன் விரிவாகவும் விளக்குகின்றான். 'மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!| என நீர்தான் மக்களுக்குக் கூறினீரா?' என்றுஅல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீதூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர் பதிலளிப்பார். 'நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!| என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீகைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.' திருக்குர்ஆன்5:116,117 ஈஸா நபியவர்களைப் பெரிதும் நம்பியிருந்தவர்கள் மறுமையில் ஈஸா நபியால் கை விடப்படுவார்கள் என்று இங்கே இறைவன்கூறுகிறான். கிரித்தவர்கள் அடையும் இதேநிலையைத் தான்
இறைவனைவிட மற்றவர்களை நேசிப்பவர்கள் அடைவார்கள் என்றால் அது எவ்வளவு கடுமையான குற்றம் என்பது விளங்கவரும். 'நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். திருக்குர்ஆன்35:14 'உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம்படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பிரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்)
முறிந்து விட்டன' (என்று கூறப்படும்) திருக்குர்ஆன்6:94 10:28வசனத்திலும் இந்தக் கருத்தைக் காணலாம். ஈஸா நபி போன்ற மிகப் பெரிய நல்லடியார்களேயானாலும்
இத்தகையவர்களைக் கைவிட்டு விடுவார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசித்தவர்கள் எவ்வளவுதான் நல்லாறங்களை நிறைவேற்றினாலும் அந்த நல்லறங்களில் எதையுமே இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவற்றுக்கு எந்தக்கூலியும் அவனால் வழங்கப்பட மாட்டாது எனவும் இறைவன் கூறுகிறான். 'நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர்.' திருக்குர்ஆன்39:65 'அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.' திருக்குர்ஆன்6:88 இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசிப்பதும் பச்சையான இணைவைத்தல் தான் என்பதும் இணைவைப்பதால் ஏற்படும் விளைவுகள் இதனாலும் ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. இவ்வாறு நடந்து கொண்டவர்கள் நரகிற்குச் சென்று விட்டு ஏதோ ஒரு சமயத்தில் சுவர்க்கத்தை அடைய முடியுமாஎன்றால் நிச்சயமாக முடியாது. அவர்கள் நரகைவிட்டு வெளியேற மாட்டார்கள் என்று தெளிவாக இங்கே குறிப்பிடுகிறான் இறைவன். 'அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ்கூறினார். திருக்குர்ஆன்5:72 'தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.' திருக்குர்ஆன் 4:48 இறைவனின் மன்னிப்பை அறவே பெறமுடியாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் திகழ்வார்கள் என்று இந்த வசனங்களும் தெளிவாக விளக்குகின்றன. மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் இந்த அக்கிரமத்திலிருந்து நாம் விடுபடுவோமாக!
Online pj
Ahmedibrahim

கணவனின் சொத்தில் மனைவிக்கு எவ்வளவ?

கணவன் மரணிக்கும் போது அந்தக் கணவனுக்கு பிள்ளை இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு கிடைக்கும். அந்தக் கணவனுக்கு பிள்ளை இல்லாவிட்டால் கணவனின் சொத்தில் நான்கில் ஒன்று கிடைக்கும். யார் சொத்துக்கு உரியவர்ரோ அவருக்கு பிள்ளை இருப்பதைப் பொருத்து தான் பாகங்கள் வித்தியாசப்படும்.
சொத்துக்கு உரிமையாளராக இல்லாத அவரது மனைவிக்கு வேறு கணவன் மூலம் பிள்ளை இருந்தாலோ இல்லாவிட்டாலோ அதனால்
எந்த மாற்றமும் ஏற்படாது. உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். திருக்குர் ஆன் 4:12
Online pj
Ahmedibrahim

ராசியில்லாத வீடுகள் உண்டா?

இஸ்லாத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னின்ன நாட்களில் இன்னின்னது நடக்கும் என்று தீர்மானம் செய்துள்ளான். ஒவ்வொரு நபருக்கும் இறைவன் விதித்திருக்கும் இந்த விதியை நாள் பார்ப்பதன் மூலமும் மாற்ற முடியாது. வேறு வீடு மாறுவதன் மூலமும் விதியில் எந்த மாறுதலும் ஏற்படாது. இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. திருக்குர்ஆன் 57 : :22 இவளைத் திருமணம் செய்தது முதல் இந்த வீட்டை வாங்கியது முதல் எனக்கு தரித்திரம் பிடித்து ஆட்டுகிறது; ஒரே கஷ்டமாக உள்ளது என்று புலம்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதனால் தான் இது வந்தது என்று கூறுவதானால் ஒன்று அதற்கு அறிவுப் பூர்வமான காரணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அல்லாஹ்வோ அவனது தூதரோ அப்படிச் சொல்லி இருக்க வேண்டும். இவ்விரு காரணங்கள் இல்லாமல் ஒரு விளைவை ஒரு காரணத்துடன் தொடர்பு படுத்தினால் மறைவான ஞானத்துக்கு நாம் உரிமை கொண்டாடியவர்களாக ஆவோம். ஒருவன் விஷம் குடித்து இறந்து விட்டால் அவன் விஷம் குடித்த்தால் இறந்தான் என்று சொல்ல முடியும். ஏனெனில் விஷத்தில் உயிரைப்பறிக்கும்
தன்மை உள்ளது என்பதை நாம் நிரூபிக்க முடியும். ஆனால் பூணை குறுக்கே போனதால் நான் போன காரியம் நடக்கவில்லை என்று கூறுவதாக இருந்தால் அதை லாஜிக்காகவோ அறிவியல் பூர்வமாகவோ நிரூபிக்க வேண்டும். அல்லது அனைத்தையும் படைத்த அல்லாஹ் அதைச் சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் காரணம் கற்பித்தால் அது பொய்யாகவும் மூட நம்பிக்கையாகவும் அமைந்து விடும். இந்த அடிப்படையில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டு வந்ததால் ஒருவனுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறுவதானால் அதற்கு அறிவியல் நிரூபணம் இருக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு மாறிய பின்னர் நமக்கு துன்பம் வந்தால் கூட அத்துன்பத்துக்கு வீடுதான் காரணம் என்று கூறுவதாக இருந்தாலும் அதற்கு நிரூபணம் இருக்க வேண்டும். இதற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்க்கும் போது சில ஹதீஸ்கள் கிடைக்கின்றன. ﺎﻨﺛﺪﺣ ﻮﺑﺃ ﻥﺎﻤﻴﻟﺍ ﺎﻧﺮﺒﺧﺃ ﺐﻴﻌﺷ ﻦﻋ ﻱﺮﻫﺰﻟﺍ ﻝﺎﻗ ﻲﻧﺮﺒﺧﺃ ﻢﻟﺎﺳ ﻦﺑ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻥﺃ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻦﺑ ﺮﻤﻋ ﻲﺿﺭ ﻪﻠﻟﺍ ﺎﻤﻬﻨﻋ ﻡﺆﺸﻟﺍ ﺎﻤﻧﺇ ﻝﻮﻘﻳ ﻢﻠﺳﻭ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻲﺒﻨﻟﺍ ﺖﻌﻤﺳ ﻝﺎﻗ ﺭﺍﺪﻟﺍﻭ ﺓﺃﺮﻤﻟﺍﻭ ﺱﺮﻔﻟﺍ ﻲﻓ ﺔﺛﻼﺛ ﻲﻓ குதிரை, பெண், வீடு ஆகியவற்றில் பீடை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 2858, 5093 புகாரி 5094, 5753 ஆகிய ஹதீஸ்களிலும் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று விஷயங்களில் மட்டும் பீடை சகுனம் உண்டு என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இம்மூன்று மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு பெறுகின்றது என்று
சில அறிஞர்கள் கூறி இதை நியாயப்படுத்தியும் எழுதி உள்ளனர். ஆனால் இது குறித்த ஹதீஸ்களை ஆய்வு செய்த ஹதீஸ் துறை அறிஞர்கள் இந்தச் செய்தி ஏற்கத்தக்கதல்ல என்று தக்க காரணங்களுடன் விளக்கியுள்ளனர். இந்த ஹதீஸ் வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு அதே புகாரியில் அதே இப்னு உமர் (ரலி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ﺎﻨﺛﺪﺣ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻝﺎﻬﻨﻣ ﺎﻨﺛﺪﺣ ﺪﻳﺰﻳ ﻦﺑ ﻊﻳﺭﺯ ﺎﻨﺛﺪﺣ ﺮﻤﻋ ﻦﺑ ﺪﻤﺤﻣ ﻲﻧﻼﻘﺴﻌﻟﺍ ﻦﻋ ﻪﻴﺑﺃ ﻦﻋ ﻦﺑﺍ ﺮﻤﻋ ﻝﺎﻗ ﺍﻭﺮﻛﺫ ﻡﺆﺸﻟﺍ ﺪﻨﻋ ﻲﺒﻨﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻝﺎﻘﻓ ﻰﻠﺻ ﻲﺒﻨﻟﺍ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻥﺇ ﻥﺎﻛ ﻡﺆﺸﻟﺍ ﻲﻓ ﺀﻲﺷ ﻲﻔﻓ ﺭﺍﺪﻟﺍ
ﺱﺮﻔﻟﺍﻭ ﺓﺃﺮﻤﻟﺍﻭ சகுனம் என்று ஒன்று இருக்குமானால் அது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் தான் இருக்க முடியும் என்று நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 5094 சகுனம் என ஒன்று இருக்குமானால் இந்த மூன்றில் தான் இருக்க முடியும் என்ற வாசகம் சகுனம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளை இடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். இதன் கருத்து யாரும் யாருக்கும் சஜ்தா செய்யக் கூடாது என்பது தான். அது போல் உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3469, 3689 இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். அது போல் சகுனம் என்று இருக்குமானால் மேற்கண்ட மூன்றில் தான் இருக்க முடியும் என்பது சகுனம் இல்லை என்ற கருத்தை தருகிறது. ஆனால் முதலில் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் மேற்கண்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாக சொல்கிறது. இரண்டுமே ஒரே அற்விப்பாளரைக் கொண்டு அறிவிக்கப்படுவதால் குர்ஆனின் கருத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டாம் அறிவிப்பை ஏற்று முதலாம் அறிவிப்பை நபிகள் சொன்னது அல்ல எனக் கூறி நிராகரித்து விடலாம். அல்லது இரண்டும் முரண்படுவதால் இரண்டையும் நாம் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். வேறு ஆதாரங்கள் மூலம் எதிலும் சகுனம் இல்லை என்று பொதுவாக கூறும் ஹதீஸ்கள் அடிப்படையில் இம்மூன்றிலும் சகுனம் இல்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும். முரண்பட்ட இரண்டையும் நாம் தள்ளி விட்டாலும் குர்அனுக்கு நெருக்கமான அறிவிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டாலும் இம்முன்றிலும் சகுனம் இல்லை என்ற கருத்து நிரூபணமாகி விடும். இது குறித்து ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த விளக்கத்தையும் நாம் கூடுதல் தகவலாக அறிந்து கொள்ளலாம். இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்
) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண்
கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்) நூல் : அஹ்மத் (24894) மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும் http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/
islathil_jathakam_parkalama/

online pj
Ahmedibrahim

ஞாயிறு, 27 மே, 2012

FW: Samudaya seidigal

Ahmedibrahim
-----Original Message-----
From: Ahmedibrahim
Sent: 28/05/2012 10:17:58 am
Subject: Samudaya seidigal

ஈரோடு மாவட்டம் த த ஜ சத்தியமங்களம் கிளையில் 27/05/12 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் சிக்கந்தர்அலி தலைமையி நடைபெற்றது. Tntj அறும்பணிகள் என்ற தலைப்பில் கோபி சாதிக் அவர்களும், இறைஅச்சம் என்ற தலைப்பில் m.i. சுலைமான் அவர்களும் சிறப்புரை ஆற்றிார்கள்.ஏராளமான மார்க்க சகோதரர்கள் குடும்பத்துடன்ளகலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.அல்லாஹூ அக்பர்.

FW: Samudaya seidigal

Ahmedibrahim
-----Original Message-----
From: Ahmedibrahim
Sent: 27/05/2012 11:16:19 am
Subject: Samudaya seidigal

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் த த ஐ கிளையில் 10/05/12 முதல் 20/05/12 வரை நடைபெற்ற koடைகால பயிற்ச்சி முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டு பயண் பெற்றணர். இம்முகாம் sirappaha நடைபெற்றது. அல்லாஹூ அக்பர்.

FW: Samudaya seidigal

Ahmedibrahim
-----Original Message-----
From: Ahmedibrahim
Sent: 27/05/2012 1:27:32 pm
Subject: Samudaya seidigal

ஈரோடு மாவட்டம் த த ஜ சத்தியமங்களம் கிளையில் 24/05/12 அன்று தாவா பணியின் போது ஒரு மாணவனின் கழுத்திலிருந்த தாயத்து அவரது பற்றோரின் சம்மத்துடன் கழற்றப்பட்டது.

சனி, 31 மார்ச், 2012

குர்ஆன்
மொழிபெயர்ப்பு படிப்பதற்கு நன்மை உண்டா கேள்வி : என்னுடைய நண்பர் ஒருவருக்கு குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாது. தமிழில்தான் படித்து வருகிறார். குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பைப்
படிப்பதற்கு நன்மை உண்டா? முஹம்மத் பதில் : திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த
நன்மையை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது. ﺎَﻨَﺛَّﺪَﺣ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٍﺭﺎَّﺸَﺑ ُﻦْﺑ ُﺪَّﻤَﺤُﻣ ُﻙﺎَّﺤَّﻀﻟﺍ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُّﻲِﻔَﻨَﺤْﻟﺍ ٍﺮْﻜَﺑ ﻮُﺑَﺃ ُﻦْﺑ َﻥﺎَﻤْﺜُﻋ ْﻦَﻋ َﺏﻮُّﻳَﺃ ِﻦْﺑ ﻰَﺳﻮُﻣ ﻝﺎَﻗ ُﺖْﻌِﻤَﺳ َﺪَّﻤَﺤُﻣ َﻦْﺑ ٍﺐْﻌَﻛ َّﻲِﻇَﺮُﻘْﻟﺍ ﻝﺎَﻗ ُﺖْﻌِﻤَﺳ َﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ َﻦْﺑ ٍﺩﻮُﻌْﺴَﻣ ُﻝﻮُﻘَﻳ َﻝﺎَﻗ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ْﻦَﻣ َﺃَﺮَﻗ ﺎًﻓْﺮَﺣ ْﻦِﻣ ِﺏﺎَﺘِﻛ ِﻪِﺑ ُﻪَﻠَﻓ ِﻪَّﻠﻟﺍ ِﺮْﺸَﻌِﺑ ُﺔَﻨَﺴَﺤْﻟﺍَﻭ ٌﺔَﻨَﺴَﺣ ﻢﻟﺍ ُﻝﻮُﻗَﺃ ﺎَﻟ ﺎَﻬِﻟﺎَﺜْﻣَﺃ ٌﻑْﺮَﺣ ٌﻢﻴِﻣَﻭ ٌﻑْﺮَﺣ ٌﻡﺎَﻟَﻭ ٌﻑْﺮَﺣ ٌﻒِﻟَﺃ ْﻦِﻜَﻟَﻭ ٌﻑْﺮَﺣ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பதை அதைப் போன்று பத்து மடங்காகும். "அலி்ஃப்,லாம், மீம்" ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல் : திர்மிதி (2835) அல்லாஹ் எந்த ஓசையில் குர்ஆனை இறக்கியருளினானோ அதே ஓசையில்
நாம் குர்ஆனைப் படிப்பதற்கு நன்மையிருக்கிறது. இது மொழியின் அடிப்படையில் அமைந்ததல்ல. குர்ஆனை அல்லாஹ் இறக்கியருளிய வார்த்தைகளில் படித்து செயல்படும் இறைநம்பிக்யாளரை நபியவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள் ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﻦْﺑ ُﺔَﺑْﺪُﻫ ٍﺪِﻟﺎَﺧ ﻮُﺑَﺃ ٍﺪِﻟﺎَﺧ ٌﻡﺎَّﻤَﻫ ﺎَﻨَﺛَّﺪَﺣ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺓَﺩﺎَﺘَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺲَﻧَﺃ ُﻦْﺑ ٍﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ﻲِﺑَﺃ ﻰَﺳﻮُﻣ ِّﻱِﺮَﻌْﺷَﺄْﻟﺍ ْﻦَﻋ ِّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ُﻞَﺜَﻣ ﻱِﺬَّﻟﺍ ُﺃَﺮْﻘَﻳ َﻥﺁْﺮُﻘْﻟﺍ ِﺔَّﺟُﺮْﺗُﺄْﻟﺎَﻛ ﺎَﻬُﻤْﻌَﻃ ٌﺐِّﻴَﻃ ﺎَﻬُﺤﻳِﺭَﻭ ٌﺐِّﻴَﻃ ﻱِﺬَّﻟﺍَﻭ ﺎَﻟ ُﺃَﺮْﻘَﻳ َﻥﺁْﺮُﻘْﻟﺍ ِﺓَﺮْﻤَّﺘﻟﺎَﻛ ﺎَﻬُﻤْﻌَﻃ ٌﺐِّﻴَﻃ ﺎَﻟَﻭ َﺢﻳِﺭ ﺎَﻬَﻟ ُﻞَﺜَﻣَﻭ ِﺮِﺟﺎَﻔْﻟﺍ ﻱِﺬَّﻟﺍ ُﺃَﺮْﻘَﻳ َﻥﺁْﺮُﻘْﻟﺍ ِﻞَﺜَﻤَﻛ ﻱِﺬَّﻟﺍ ِﺮِﺟﺎَﻔْﻟﺍ ُﻞَﺜَﻣَﻭ ٌّﺮُﻣ ﺎَﻬُﻤْﻌَﻃَﻭ ٌﺐِّﻴَﻃ ﺎَﻬُﺤﻳِﺭ ِﺔَﻧﺎَﺤْﻳَّﺮﻟﺍ ﺎَﻬَﻟ َﺢﻳِﺭ ﺎَﻟَﻭ ٌّﺮُﻣ ﺎَﻬُﻤْﻌَﻃ ِﺔَﻠَﻈْﻨَﺤْﻟﺍ ِﻞَﺜَﻤَﻛ َﻥﺁْﺮُﻘْﻟﺍ ُﺃَﺮْﻘَﻳ ﺎَﻟ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்து கொண்டு, குர்ஆனையும் ஓதிவருகின்றவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக் கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. தீமையும் செய்து கொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின்
நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது. அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) நூல் : புகாரி (5020) அல்லாஹ்
திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் தான் அல்லாஹ் அருளினான். விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அரபு மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்புகளை வாசிப்பதன் மூலம் தான் இது சாத்தியமாகும். மொழி பெயர்ப்பை வாசித்து அதைப் புரிந்து கொண்டு சிந்தித்தால் குர்ஆனை விளங்கிய நன்மையும் சிந்திக்கும்
நன்மையும் கிடைக்கும். குர்ஆனைச்
சிந்திப்பது மட்டுமின்றி அதன்படி அமல் செய்தால் அதற்கான நன்மையைப் பெற முடியும். ஒருவர்
மூலத்தை வாசித்து மொழி பெயர்ப்பைப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அவர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஒருவர் அர்த்தத்தை விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டு வந்தால் அந்த நன்மை மட்டும் தான் அவருக்குக் கிடைக்கும். மற்றொருவர் மூலத்தை ஓதத் தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்கும். இதையும் பார்க்கOnlinepj

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று
நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம். இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணம் கூறி இந்த நபிவழியை அவர்கள் மறுத்து வந்தனர். அது கருத்தில் கொள்ளத் தகுதியில்லாத வாதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த வாதம் மக்களிடம் எடுபடாமல் போன பின், விரல் அசைத்தல் தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று கூறி புதுப்புது காரணங்களைக் கூறலானார்கள். அதற்கேற்ப சில ஆதாரங்களையும் முன் வைத்தனர். இது பரிசீலிப்பதற்குத் தகுதியுடைய வாதம் என்பதால் இவ்வாறு கூறுவோரின் அனைத்து வாதங்களையும் திரட்டி மறு ஆய்வு செய்தோம். அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் மறு ஆய்வு செய்தோம். ஆனால் இந்த நபிவழியைப் பலவீனப்படுத்துவதற்குக் கூறப்படும் வாதங்கள் தான் பலவீனமானவையாக உள்ளன என்பது நமது மறு ஆய்விலும் நிரூபணமானது. எனவே அதுபற்றி முழு விபரத்தைக் காண்போம். விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ...நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகின்றார்கள். மேற்கண்ட கருத்தில் அமைந்த செய்தி ﻦﻋ ﻙﺭﺎﺒﻤﻟﺍ ﻦﺑ ﻪﻠﻟﺍ ﺪﺒﻋ ﺎﻧﺄﺒﻧﺃ ﻝﺎﻗ ﺮﺼﻧ ﻦﺑ ﺪﻳﻮﺳ ﺎﻧﺮﺒﺧﺃ ﻞﺋﺍﻭ ﻥﺃ ﻲﺑﺃ ﻲﻨﺛﺪﺣ ﻝﺎﻗ ﺐﻴﻠﻛ ﻦﺑ ﻢﺻﺎﻋ ﺎﻨﺛﺪﺣ ﻝﺎﻗ ﺓﺪﺋﺍﺯ ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﺓﻼﺻ ﻰﻟﺇ ﻥﺮﻈﻧﻷ ﺖﻠﻗ ﻝﺎﻗ ﻩﺮﺒﺧﺃ ﺮﺠﺣ ﻦﺑ ﺮﺒﻜﻓ ﻡﺎﻘﻓ ﻪﻴﻟﺇ ﺕﺮﻈﻨﻓ ﻲﻠﺼﻳ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻔﻛ ﻰﻠﻋ ﻰﻨﻤﻴﻟﺍ ﻩﺪﻳ ﻊﺿﻭ ﻢﺛ ﻪﻴﻧﺫﺄﺑ ﺎﺗﺫﺎﺣ ﻰﺘﺣ ﻪﻳﺪﻳ ﻊﻓﺭﻭ ﻪﻳﺪﻳ ﻊﻓﺭ ﻊﻛﺮﻳ ﻥﺃ ﺩﺍﺭﺃ ﺎﻤﻠﻓ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﻎﺳﺮﻟﺍﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﻓﺭ ﻪﺳﺃﺭ ﻊﻓﺭ ﺎﻤﻟ ﻢﺛ ﻪﻴﺘﺒﻛﺭ ﻰﻠﻋ ﻪﻳﺪﻳ ﻊﺿﻭﻭ ﻝﺎﻗ ﺎﻬﻠﺜﻣ ﺪﻌﻗ ﻢﺛ ﻪﻴﻧﺫﺃ ﺀﺍﺬﺤﺑ ﻪﻴﻔﻛ ﻞﻌﺠﻓ ﺪﺠﺳ ﻢﺛ ﺎﻬﻠﺜﻣ ﻪﻳﺪﻳ ﻩﺬﺨﻓ ﻰﻠﻋ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻔﻛ ﻊﺿﻭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻠﺟﺭ ﺵﺮﺘﻓﺍﻭ ﻩﺬﺨﻓ ﻰﻠﻋ ﻦﻤﻳﻷﺍ ﻪﻘﻓﺮﻣ ﺪﺣ ﻞﻌﺟﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﺘﺒﻛﺭﻭ ﻊﻓﺭ ﻢﺛ ﺔﻘﻠﺣ ﻖﻠﺣﻭ ﻪﻌﺑﺎﺻﺃ ﻦﻣ ﻦﻴﺘﻨﺛﺍ ﺾﺒﻗ ﻢﺛ ﻰﻨﻤﻴﻟﺍ ﺎﻬﺑ ﻮﻋﺪﻳ ﺎﻬﻛﺮﺤﻳ ﻪﺘﻳﺃﺮﻓ ﻪﻌﺒﺻﺇ – 879 ﻲﺋﺎﺴﻨﻟﺍ ﻦﻨﺳ ﻦﻋ ﻙﺭﺎﺒﻤﻟﺍ ﻦﺑ ﻪﻠﻟﺍ ﺪﺒﻋ ﺎﻧﺄﺒﻧﺃ ﻝﺎﻗ ﺮﺼﻧ ﻦﺑ ﺪﻳﻮﺳ ﺎﻧﺮﺒﺧﺃ ﻞﺋﺍﻭ ﻥﺃ ﻲﺑﺃ ﻲﻨﺛﺪﺣ ﻝﺎﻗ ﺐﻴﻠﻛ ﻦﺑ ﻢﺻﺎﻋ ﺎﻨﺛﺪﺣ ﻝﺎﻗ ﺓﺪﺋﺍﺯ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﺓﻼﺻ ﻰﻟﺇ ﻥﺮﻈﻧﻷ ﺖﻠﻗ ﻝﺎﻗ ﺮﺠﺣ ﻦﺑ ﺪﻌﻗ ﻢﺛ ﻝﺎﻗ ﻒﺻﻮﻓ ﻪﻴﻟﺇ ﺕﺮﻈﻨﻓ ﻲﻠﺼﻳ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﻪﻴﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻠﻋ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻔﻛ ﻊﺿﻭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻠﺟﺭ ﺵﺮﺘﻓﺍﻭ ﻩﺬﺨﻓ ﻰﻠﻋ ﻦﻤﻳﻷﺍ ﻪﻘﻓﺮﻣ ﺪﺣ ﻞﻌﺟﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﺘﺒﻛﺭﻭ ﻊﻓﺭ ﻢﺛ ﺔﻘﻠﺣ ﻖﻠﺣﻭ ﻪﻌﺑﺎﺻﺃ ﻦﻣ ﻦﻴﺘﻨﺛﺍ ﺾﺒﻗ ﻢﺛ ﻰﻨﻤﻴﻟﺍ ﺎﻬﺑ ﻮﻋﺪﻳ ﺎﻬﻛﺮﺤﻳ ﻪﺘﻳﺃﺮﻓ ﻪﻌﺒﺻﺃ ﻲﺋﺎﺴﻨﻟﺍ ﻦﻨﺳ – ﺮﺼﺘﺨﻣ 879 ﺎﻨﺛﺪﺣ ﺪﺒﻋ ﺪﻤﺼﻟﺍ ﺎﻨﺛﺪﺣ ﺓﺪﺋﺍﺯ ﺎﻨﺛﺪﺣ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻲﻧﺮﺒﺧﺃ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻲﻣﺮﻀﺤﻟﺍ ﻩﺮﺒﺧﺃ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﻰﻟﺇ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻲﻠﺼﻳ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﻝﺎﻗ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻡﺎﻗ ﺮﺒﻜﻓ ﻊﻓﺭﻭ ﻪﻳﺪﻳ ﻰﺘﺣ ﺎﺗﺫﺎﺣ ﻪﻴﻧﺫﺃ ﻢﺛ ﻊﺿﻭ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﻎﺳﺮﻟﺍﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻔﻛ ﺮﻬﻇ ﻰﻠﻋ ﻰﻨﻤﻴﻟﺍ ﻩﺪﻳ ﻢﺛ ﻝﺎﻗ ﺎﻤﻟ ﺩﺍﺭﺃ ﻥﺃ ﻊﻛﺮﻳ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻊﺿﻭﻭ ﻪﻳﺪﻳ ﻰﻠﻋ ﻪﻴﻔﻛ ﻞﻌﺠﻓ ﺪﺠﺳ ﻢﺛ ﺎﻬﻠﺜﻣ ﻪﻳﺪﻳ ﻊﻓﺮﻓ ﻪﺳﺃﺭ ﻊﻓﺭ ﻢﺛ ﻪﻴﺘﺒﻛﺭ ﺀﺍﺬﺤﺑ ﻪﻴﻧﺫﺃ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺎﻓ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻮﻓ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻪﺘﺒﻛﺭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻞﻌﺟﻭ ﺪﺣ ﻪﻘﻓﺮﻣ ﻦﻤﻳﻷﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﻢﺛ ﺾﺒﻗ ﻦﻴﺑ ﻪﻌﺑﺎﺻﺃ ﻖﻠﺤﻓ ﺔﻘﻠﺣ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺇ ﺎﻬﻛﺮﺤﻳ ﻪﺘﻳﺃﺮﻓ ﻮﻋﺪﻳ ﺎﻬﺑ ﻢﺛ ﺪﻌﺑ ﺖﺌﺟ ﻚﻟﺫ ﻲﻓ ﻥﺎﻣﺯ ﻪﻴﻓ ﺩﺮﺑ ﺖﻳﺃﺮﻓ ﺱﺎﻨﻟﺍ ﻢﻬﻴﻠﻋ ﺏﺎﻴﺜﻟﺍ ﻙﺮﺤﺗ ﺩﺮﺒﻟﺍ ﻦﻣ ﺏﺎﻴﺜﻟﺍ ﺖﺤﺗ ﻦﻣ ﻢﻬﻳﺪﻳﺃ – 18115 ﺪﻤﺣﺃ ﺪﻨﺴﻣ ﺎﻨﺛﺪﺣ ﺔﻳﻭﺎﻌﻣ ﻭﺮﻤﻋ ﻦﺑ ﺎﻨﺛﺪﺣ ﻦﺑ ﺓﺪﺋﺍﺯ ﺔﻣﺍﺪﻗ ﻢﺻﺎﻋ ﺎﻨﺛﺪﺣ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻲﻧﺮﺒﺧﺃ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻩﺮﺒﺧﺃ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻰﻟﺇ ﺓﻼﺻ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﻲﻠﺼﻳ ﺮﺒﻜﻓ ﻡﺎﻘﻓ ﻪﻴﻟﺇ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻧﺫﺄﺑ ﺎﺗﺫﺎﺣ ﻰﺘﺣ ﻪﻳﺪﻳ ﻊﻓﺮﻓ ﻊﺿﻭﻭ ﻰﻠﻋ ﻰﻨﻤﻴﻟﺍ ﻩﺪﻳ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻔﻛ ﺮﻬﻇ ﺩﺍﺭﺃ ﺎﻤﻟ ﻢﺛ ﻝﺎﻗ ﻥﺃ ﻊﻛﺮﻳ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻊﺿﻭﻭ ﻪﻳﺪﻳ ﻰﻠﻋ ﻪﻴﺘﺒﻛﺭ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﺳﺃﺭ ﻊﻓﺮﻓ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻢﺛ ﺪﺠﺳ ﻞﻌﺠﻓ ﻪﻴﻔﻛ ﺀﺍﺬﺤﺑ ﻪﻴﻧﺫﺃ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺎﻓ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻪﺘﺒﻛﺭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻞﻌﺟﻭ ﻪﻘﻓﺮﻣ ﻦﻤﻳﻷﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﻢﺛ ﻦﻴﺘﻨﺛ ﺾﺒﻗ ﻖﻠﺤﻓ ﻢﺛ ﺔﻘﻠﺣ ﻊﻓﺭ ﻪﺘﻳﺃﺮﻓ ﻪﻌﺒﺻﺃ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﺎﻬﺑ ﻝﺎﻗ ﻢﺛ ﺖﺌﺟ ﺪﻌﺑ ﻚﻟﺫ ﻲﻓ ﻥﺎﻣﺯ ﻪﻴﻓ ﺩﺮﺑ ﺖﻳﺃﺮﻓ ﻰﻠﻋ ﺱﺎﻨﻟﺍ ﻞﺟ ﺏﺎﻴﺜﻟﺍ ﻥﻮﻛﺮﺤﻳ ﻢﻬﻳﺪﻳﺃ ﻦﻣ ﺖﺤﺗ ﺏﺎﻴﺜﻟﺍ – 1323 ﻲﻣﺭﺍﺪﻟﺍ ﻦﻨﺳ 208 ﺎﻨﺛﺪﺣ ﻕﺎﺤﺳﺇ ﻦﺑ ﺭﻮﺼﻨﻣ ﻝﺎﻗ ﺎﻨﺛ ﺪﺒﻋ ﻦﻤﺣﺮﻟﺍ ﻲﻨﻌﻳ ﻦﺑ ﻱﺪﻬﻣ ﻦﻋ ﺓﺪﺋﺍﺯ ﻦﺑ ﺔﻣﺍﺪﻗ ﻦﻋ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻝﺎﻗ ﻲﻧﺮﺒﺧﺃ ﻲﺑﺃ ﻥﺃ ﻦﺑ ﻞﺋﺍﻭ ﺮﺠﺣ ﻲﺿﺭ ﻪﻨﻋ ﻪﻠﻟﺍ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻢﺛ ﻥﺮﻈﻧﻷ ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﻰﻟﺇ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻲﻠﺼﻳ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻡﺎﻗ ﺮﺒﻜﻓ ﻊﻓﺭﻭ ﻪﻳﺪﻳ ﻰﺘﺣ ﺎﺗﺫﺎﺣ ﻪﻴﻧﺫﺄﺑ ﻢﺛ ﻊﺿﻭ ﻪﻔﻛ ﻰﻨﻤﻴﻟﺍ ﻰﻠﻋ ﺮﻬﻇ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻎﺳﺮﻟﺍﻭ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﻢﺛ ﻊﻛﺭ ﻊﻓﺮﻓ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻢﺛ ﺪﺠﺳ ﻞﻌﺠﻓ ﻪﻴﻔﻛ ﺀﺍﺬﺤﺑ ﻯﺮﺴﻴﻟﺍ ﻢﺛ ﺲﻠﺟ ﺵﺮﺘﻓﺎﻓ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻪﺘﺒﻛﺭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﺪﺣ ﻪﻘﻓﺮﻣ ﻰﻨﻤﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﻢﺛ ﺾﺒﻗ ﻦﻴﺘﻨﺛ ﻦﻣ ﻪﻌﺑﺎﺻﺃ ﻖﻠﺣﻭ ﺔﻘﻠﺣ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺇ ﻪﺘﻳﺃﺮﻓ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﻢﺛ ﺖﺌﺟ ﺪﻌﺑ ﻚﻟﺫ ﻲﻓ ﻦﻣﺯ ﻪﻴﻓ ﺩﺮﺑ ﺖﻳﺃﺮﻓ ﺱﺎﻨﻟﺍ ﻢﻬﻴﻠﻋﻭ ﻞﺟ ﺏﺎﻴﺜﻟﺍ ﻙﺮﺤﺗ ﻢﻬﻳﺪﻳﺃ ﻦﻣ ﺖﺤﺗ ﺏﺎﻴﺜﻟﺍ - ﻰﻘﺘﻨﻤﻟﺍ ﻦﺑﻻ 62 :ﺹ 1 :ﺝ ﺩﻭﺭﺎﺠﻟﺍ 714 ﺎﻧﺃ ﻮﺑﺃ ﺮﻫﺎﻃ ﺎﻧ ﻮﺑﺃ ﺮﻜﺑ ﺎﻧ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻰﻴﺤﻳ ﺎﻧ ﺔﻳﻭﺎﻌﻣ ﻦﺑ ﻭﺮﻤﻋ ﺎﻨﺛﺪﺣ ﺓﺪﺋﺍﺯ ﺎﻧ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻲﻣﺮﺠﻟﺍ ﻲﻧﺮﺒﺧﺃ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻩﺮﺒﺧﺃ ﻝﺎﻗ ﻢﺛ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻰﻟﺇ ﺓﻼﺻ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻒﻴﻛ ﻲﻠﺼﻳ ﻝﺎﻗ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻲﻠﺼﻳ ﺮﺒﻜﻓ ﺮﻛﺬﻓ ﺾﻌﺑ ﺚﻳﺪﺤﻟﺍ ﻝﺎﻗﻭ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺎﻓ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻪﺘﺒﻛﺭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻞﻌﺟﻭ ﺪﺣ ﻪﻘﻓﺮﻣ ﻦﻤﻳﻷﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﻢﺛ ﺾﺒﻗ ﻦﻴﺘﻨﺛ ﻦﻣ ﻪﻌﺑﺎﺻﺃ ﻖﻠﺣﻭ ﺔﻘﻠﺣ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺇ ﻪﺘﻳﺃﺮﻓ ﺎﻬﻛﺮﺤﻳ ﺎﻬﺑ ﻮﻋﺪﻳ ﻝﺎﻗ ﻮﺑﺃ ﺮﻜﺑ ﻲﻓ ﺲﻴﻟ ﺀﻲﺷ ﻦﻣ ﺭﺎﺒﺧﻷﺍ ﺎﻬﻛﺮﺤﻳ ﻻﺇ ﻲﻓ ﺍﺬﻫ ﺮﺒﺨﻟﺍ ﺪﺋﺍﺯ ﻩﺮﻛﺫ - ﺢﻴﺤﺻ 354 :ﺹ 1 :ﺝ ﺔﻤﻳﺰﺧ ﻦﺑﺍ 1860 ﺎﻧﺮﺒﺧﺃ ﻞﻀﻔﻟﺍ ﻦﺑ ﺏﺎﺒﺤﻟﺍ ﻝﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﻮﺑﺃ ﺪﻴﻟﻮﻟﺍ ﻲﺴﻟﺎﻴﻄﻟﺍ ﻝﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﺓﺪﺋﺍﺯ ﻦﺑ ﺔﻣﺍﺪﻗ ﻝﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻝﺎﻗ ﻲﻨﺛﺪﺣ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻩﺮﺒﺧﺃ ﻲﻣﺮﻀﺤﻟﺍ ﻝﺎﻗ ﻢﻠﺳﻭ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﻰﻟﺇ ﻥﺮﻈﻧﻷ ﺖﻠﻗ ﻢﺛ ﻒﻴﻛ ﻲﻠﺼﻳ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻦﻴﺣ ﻡﺎﻗ ﺮﺒﻜﻓ ﻊﻓﺭﻭ ﻪﻳﺪﻳ ﻰﺘﺣ ﺎﺗﺫﺎﺣ ﻩﺪﻳ ﻊﺿﻭ ﻢﺛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻔﻛ ﺮﻬﻇ ﻰﻠﻋ ﻰﻨﻤﻴﻟﺍ ﻎﺳﺮﻟﺍﻭ ﺎﻤﻟ ﻢﺛ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﻪﻳﺪﻳ ﻊﻓﺭ ﺩﺍﺭﺃ ﻊﺿﻮﻓ ﻊﻛﺭ ﻢﺛ ﺎﻬﻠﺜﻣ ﻪﻳﺪﻳ ﻰﻠﻋ ﻪﻴﺘﺒﻛﺭ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﺳﺃﺭ ﻊﻓﺮﻓ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻢﺛ ﺪﺠﺳ ﻞﻌﺠﻓ ﻢﺛ ﻪﻴﻧﺫﺍ ﺀﺍﺬﺤﺑ ﻪﻴﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻩﺬﺨﻓ ﺵﺮﺘﻓﺎﻓ ﺲﻠﺟ ﻞﻌﺟﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻩﺪﻳ ﻪﺘﺒﻛﺭﻭ ﻩﺬﺨﻓ ﻰﻠﻋ ﺪﺣ ﻞﻌﺟﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻘﻓﺮﻣ ﻰﻠﻋ ﻦﻤﻳﻷﺍ ﺪﻘﻋﻭ ﻰﻨﻤﻴﻟﺍ ﻩﺬﺨﻓ ﻪﻌﺑﺎﺻﺃ ﻦﻣ ﻦﻴﺘﻨﺛ ﻖﻠﺣﻭ ﺔﻘﻠﺣ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺇ ﻪﺘﻳﺃﺮﻓ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﺎﻬﺑ ﻢﺛ ﺖﺌﺟ ﺪﻌﺑ ﻚﻟﺫ ﻲﻓ ﻥﺎﻣﺯ ﻪﻴﻓ ﺩﺮﺑ ﺖﻳﺃﺮﻓ ﺱﺎﻨﻟﺍ ﻢﻬﻴﻠﻋ ﻞﺟ ﺏﺎﻴﺜﻟﺍ ﻙﺮﺤﺘﺗ ﻢﻬﻳﺪﻳﺃ ﺖﺤﺗ ﺏﺎﻴﺜﻟﺍ - ﺢﻴﺤﺻ ﻦﺑﺍ ﻥﺎﺒﺣ :ﺝ 5 170 :ﺹ 82 ﺎﻨﺛﺪﺣ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﺮﻀﻨﻟﺍ ﻱﺩﺯﻷﺍ ﺎﻨﺛ ﺔﻳﻭﺎﻌﻣ ﻦﺑ ﻭﺮﻤﻋ ﺡ ﺎﻨﺛﺪﺣﻭ ﺪﻴﻟﻮﻟﺍ ﻮﺑﺃ ﺎﻨﺛ ﺔﻔﻴﻠﺧ ﻮﺑﺃ ﻦﻋ ﺓﺪﺋﺍﺯ ﺎﻨﺛ ﻻﺎﻗ ﻲﺴﻟﺎﻴﻄﻟﺍ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻦﻋ ﻪﻴﺑﺃ ﻦﻋ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻝﺎﻗ ﻢﺛ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﻰﻟﺇ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻲﻠﺼﻳ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﻩﺪﻳ ﻊﺿﻭ ﻢﺛ ﻪﻴﻧﺫﺄﺑ ﺎﺗﺫﺎﺣ ﻰﺘﺣ ﻪﻳﺪﻳ ﻊﻓﺭﻭ ﺮﺒﻜﻓ ﻪﻴﻟﺇ ﺕﺮﻈﻨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﺎﻤﻟ ﻢﺛ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﻎﺳﺮﻟﺍ ﻦﻴﺑ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﻔﻛ ﺮﻬﻇ ﻰﻠﻋ ﺩﺍﺭﺃ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻊﺿﻭﻭ ﻪﻳﺪﻳ ﻰﻠﻋ ﻪﻴﺘﺒﻛﺭ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﺳﺃﺭ ﻊﻓﺮﻓ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻢﺛ ﺪﺠﺳ ﻞﻌﺠﻓ ﻪﻴﻔﻛ ﺀﺍﺬﺣ ﻯﺮﺴﻴﻟﺍ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺍﻭ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻞﻌﺟﻭ ﺪﺣ ﻪﻘﻓﺮﻣ ﻦﻤﻳﻷﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﻢﺛ ﺾﺒﻗ ﻦﻴﺘﻨﺛ ﻦﻣ ﻪﻌﺑﺎﺻﺃ ﻖﻠﺣﻭ ﺔﻘﻠﺣ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺃ ﻪﺘﻳﺃﺭﻭ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﻢﻬﻴﻠﻋ ﺱﺎﻨﻟﺍ ﺖﻳﺃﺮﻓ ﺩﺮﺑ ﻪﻴﻓ ﻥﺎﻣﺯ ﻲﻓ ﻚﻟﺫ ﺪﻌﺑ ﺖﺌﺟ ﻢﺛ ﺎﻬﺑ ﻞﺟ ﺏﺎﻴﺜﻟﺍ ﻙﺮﺤﻳ ﻢﻬﻳﺪﻳﺃ ﻦﻣ ﺖﺤﺗ ﺏﺎﻴﺜﻟﺍ ﻆﻔﻠﻟﺍﻭ ﺚﻳﺪﺤﻟ - ﻭﺮﻤﻋ ﻦﺑ ﺔﻳﻭﺎﻌﻣ 35 :ﺹ 22 :ﺝ ﺮﻴﺒﻜﻟﺍ ﻢﺠﻌﻤﻟﺍ 963 ﻦﺑ ﺪﻳﻮﺳ ﺎﻧﺮﺒﺧﺃ ﺪﺒﻋ ﺎﻧﺃ ﻝﺎﻗ ﺮﺼﻧ ﻦﻋ ﻙﺭﺎﺒﻤﻟﺍ ﻦﺑ ﻪﻠﻟﺍ ﺓﺪﺋﺍﺯ ﻝﺎﻗ ﺎﻧ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻝﺎﻗ ﻲﻨﺛﺪﺣ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻩﺮﺒﺧﺃ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻰﻟﺇ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﺕﺮﻈﻨﻓ ﻲﻠﺼﻳ ﻒﻴﻛ ﻢﻠﺳﻭ ﻪﻳﺪﻳ ﻊﻓﺭﻭ ﺮﺒﻜﻓ ﻡﺎﻘﻓ ﻪﻴﻟﺇ ﻰﺘﺣ ﺎﺗﺫﺎﺣ ﻪﻴﻧﺫﺄﺑ ﻢﺛ ﻊﺿﻭ ﻩﺪﻳ ﻰﻨﻤﻴﻟﺍ ﻰﻠﻋ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻎﺳﺮﻟﺍﻭ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﻢﺛ ﺎﻤﻟ ﺩﺍﺭﺃ ﻥﺃ ﻊﻛﺮﻳ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻝﺎﻗ ﻊﺿﻭﻭ ﻪﻳﺪﻳ ﻰﻠﻋ ﻪﻴﺘﺒﻛﺭ ﻢﺛ ﺎﻤﻟ ﻊﻓﺭ ﻪﺳﺃﺭ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻢﺛ ﺪﺠﺳ ﻞﻌﺠﻓ ﻪﻴﻔﻛ ﺀﺍﺬﺤﺑ ﻪﻴﻧﺫﺃ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺍﻭ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻪﺘﺒﻛﺭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻞﻌﺟﻭ ﺪﺣ ﻪﻘﻓﺮﻣ ﻦﻤﻳﻷﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﻢﺛ ﺾﺒﻗ ﻦﻴﺘﻨﺛﺍ ﻦﻣ ﻪﻌﺑﺎﺻﺃ ﻖﻠﺣﻭ ﺔﻘﻠﺣ ﻢﺛ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺃ ﻪﺘﻳﺃﺮﻓ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﺎﻬﺑ ﻲﻬﻨﻟﺍ ﻦﻋ ﺮﺼﺨﺘﻟﺍ ﻲﻓ ﺓﻼﺼﻟﺍ - ﻦﻨﺴﻟﺍ 310 :ﺹ 1 :ﺝ ﻯﺮﺒﻜﻟﺍ 1191 ﺎﻧﺮﺒﺧﺃ ﺪﻳﻮﺳ ﻦﺑ ﺮﺼﻧ ﻝﺎﻗ ﺎﻧﺃ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻲﻨﻌﻳ ﻦﺑ ﻙﺭﺎﺒﻤﻟﺍ ﻦﻋ ﺓﺪﺋﺍﺯ ﻝﺎﻗ ﺎﻧ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻝﺎﻗ ﻲﺑﺃ ﻲﻨﺛﺪﺣ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻰﻟﺇ ﺓﻼﺻ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻒﻴﻛ ﻲﻠﺼﻳ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻒﺻﻮﻓ ﻝﺎﻗ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺍﻭ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻰﻠﻋ ﻦﻤﻳﻷﺍ ﻪﻘﻓﺮﻣ ﺪﺣ ﻞﻌﺟﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﺘﺒﻛﺭﻭ ﻩﺬﺨﻓ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﺾﺒﻗ ﻢﺛ ﻦﻣ ﻦﻴﺘﻨﺛﺍ ﻖﻠﺣﻭ ﻪﻌﺑﺎﺻﺃ ﻢﺛ ﺔﻘﻠﺧ ﻊﻓﺭ ﻪﺘﻳﺃﺮﻓ ﻪﻌﺒﺻﺃ ﺎﻬﺑ ﻮﻋﺪﻳ ﺎﻬﻛﺮﺤﻳ ﻯﺮﺴﻴﻟﺍ ﻂﺴﺑ ﺮﺼﺘﺨﻣ - ﺔﺒﻛﺮﻟﺍ ﻰﻠﻋ 376 :ﺹ 1 :ﺝ ﻯﺮﺒﻜﻟﺍ ﻦﻨﺴﻟﺍ 889 ﺎﻧﺮﺒﺧﺃ ﺪﻳﻮﺳ ﻦﺑ ﺮﺼﻧ ﻝﺎﻗ ﺎﻧﺄﺒﻧﺃ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻦﺑ ﻙﺭﺎﺒﻤﻟﺍ ﻦﻋ ﺓﺪﺋﺍﺯ ﻝﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻝﺎﻗ ﻲﻨﺛﺪﺣ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻩﺮﺒﺧﺃ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻰﻟﺇ ﺓﻼﺻ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻒﻴﻛ ﻲﻠﺼﻳ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻡﺎﻘﻓ ﺮﺒﻜﻓ ﻊﻓﺭﻭ ﻪﻳﺪﻳ ﻰﺘﺣ ﺎﺗﺫﺎﺣ ﻪﻴﻧﺫﺄﺑ ﻢﺛ ﻊﺿﻭ ﻩﺪﻳ ﻰﻨﻤﻴﻟﺍ ﻰﻠﻋ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻎﺳﺮﻟﺍﻭ ﺪﻋﺎﺴﻟﺍﻭ ﺎﻤﻠﻓ ﺩﺍﺭﺃ ﻥﺃ ﻊﻛﺮﻳ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﺎﻬﻠﺜﻣ ﻝﺎﻗ ﻊﺿﻭﻭ ﻪﻳﺪﻳ ﻰﻠﻋ ﻪﻴﺘﺒﻛﺭ ﻢﺛ ﺎﻤﻟ ﻊﻓﺭ ﻪﺳﺃﺭ ﻊﻓﺭ ﻪﻳﺪﻳ ﻢﺛ ﺎﻬﻠﺜﻣ ﺪﺠﺳ ﻪﻴﻔﻛ ﻞﻌﺠﻓ ﺀﺍﺬﺤﺑ ﻢﺛ ﻪﻴﻧﺫﺃ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺍﻭ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻪﺘﺒﻛﺭﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻞﻌﺟﻭ ﺪﺣ ﻪﻘﻓﺮﻣ ﻦﻤﻳﻷﺍ ﻰﻠﻋ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﺾﺒﻗ ﻢﺛ ﻦﻣ ﻦﻴﺘﻨﺛﺍ ﻖﻠﺣﻭ ﻪﻌﺑﺎﺻﺃ ﻢﺛ ﺔﻘﻠﺣ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺇ ﻪﺘﻳﺃﺮﻓ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﺎﻬﺑ - ﻦﻨﺳ ﻲﺋﺎﺴﻨﻟﺍ 126 :ﺹ 2 :ﺝ (ﻰﺒﺘﺠﻤﻟﺍ) 1268 ﺎﻧﺮﺒﺧﺃ ﻦﺑ ﺪﻳﻮﺳ ﻝﺎﻗ ﺮﺼﻧ ﺎﻧﺄﺒﻧﺃ ﻪﻠﻟﺍ ﺪﺒﻋ ﻙﺭﺎﺒﻤﻟﺍ ﻦﺑ ﻦﻋ ﺓﺪﺋﺍﺯ ﻝﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﻢﺻﺎﻋ ﻦﺑ ﺐﻴﻠﻛ ﻝﺎﻗ ﻲﻨﺛﺪﺣ ﻲﺑﺃ ﻥﺃ ﻞﺋﺍﻭ ﻦﺑ ﺮﺠﺣ ﻝﺎﻗ ﺖﻠﻗ ﻥﺮﻈﻧﻷ ﻰﻟﺇ ﺓﻼﺻ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻒﻴﻛ ﻲﻠﺼﻳ ﺕﺮﻈﻨﻓ ﻪﻴﻟﺇ ﻒﺻﻮﻓ ﻝﺎﻗ ﻢﺛ ﺪﻌﻗ ﺵﺮﺘﻓﺍﻭ ﻪﻠﺟﺭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻊﺿﻭﻭ ﻪﻔﻛ ﻯﺮﺴﻴﻟﺍ ﻰﻠﻋ ﻰﻠﻋ ﻦﻤﻳﻷﺍ ﻪﻘﻓﺮﻣ ﺪﺣ ﻞﻌﺟﻭ ﻯﺮﺴﻴﻟﺍ ﻪﺘﺒﻛﺭﻭ ﻩﺬﺨﻓ ﻩﺬﺨﻓ ﻰﻨﻤﻴﻟﺍ ﺾﺒﻗ ﻢﺛ ﻦﻣ ﻦﻴﺘﻨﺛﺍ ﻖﻠﺣﻭ ﻪﻌﺑﺎﺻﺃ ﻢﺛ ﻪﻘﻠﺣ ﻊﻓﺭ ﻪﻌﺒﺻﺃ ﻪﺘﻳﺃﺮﻓ ﺎﻬﻛﺮﺤﻳ ﻮﻋﺪﻳ ﺎﻬﺑ ﻦﻨﺳ ﻲﺋﺎﺴﻨﻟﺍ 37 :ﺹ 3 :ﺝ (ﻰﺒﺘﺠﻤﻟﺍ) 1. நஸயீ 879 2. தாரமீ 1323 3. அஹ்மத் 18115 4. இப்னு ஹுஸைமா, பாகம்1; பக்கம் 354 5. இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170 6. தப்ரானீ கபீர், பாகம் 22; பக்கம் 35 7. பைஹகீ பாகம் 1; பக்கம்310 8. ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376 9. அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் வாயில்

Onlinepj

நாற்காலியில் அமர்ந்து தொழுவது

உண்டா? َﻝﺎَﻗ َﻥﺎَﻤْﻬَﻃ ِﻦْﺑ َﻢﻴِﻫﺍَﺮْﺑِﺇ ْﻦَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﺪْﺒَﻋ ْﻦَﻋ ُﻥﺍَﺪْﺒَﻋ ﺎَﻨَﺛَّﺪَﺣ ِﻦْﺑ َﻥﺍَﺮْﻤِﻋ ْﻦَﻋ َﺓَﺪْﻳَﺮُﺑ ِﻦْﺑﺍ ْﻦَﻋ ُﺐِﺘْﻜُﻤْﻟﺍ ُﻦْﻴَﺴُﺤْﻟﺍ ﻲِﻨَﺛَّﺪَﺣ َّﻲِﺒَّﻨﻟﺍ ُﺖْﻟَﺄَﺴَﻓ ُﺮﻴِﺳﺍَﻮَﺑ ﻲِﺑ ْﺖَﻧﺎَﻛ َﻝﺎَﻗ ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ ٍﻦْﻴَﺼُﺣ
ْﻢَﻟ ْﻥِﺈَﻓ ﺎًﻤِﺋﺎَﻗ ِّﻞَﺻ َﻝﺎَﻘَﻓ ِﺓﺎَﻠَّﺼﻟﺍ ْﻦَﻋ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ٍﺐْﻨَﺟ ﻰَﻠَﻌَﻓ ْﻊِﻄَﺘْﺴَﺗ ْﻢَﻟ ْﻥِﺈَﻓ ﺍًﺪِﻋﺎَﻘَﻓ ْﻊِﻄَﺘْﺴَﺗ எனக்கு மூல நோய் இருந்தது. 'எவ்வாறு தொழுவது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரீ 1117 ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ُﺪﻳِﺰَﻳ ُﻦْﺑ َﻥﻭُﺭﺎَﻫ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﻥﺎَﻴْﻔُﺳ ُﻦْﺑ ٍﻦْﻴَﺴُﺣ ْﻦَﻋ ِّﻱِﺮْﻫُّﺰﻟﺍ ْﻦَﻋ ِﻦْﺑ ِﺀﺎَﻄَﻋ ِّﻲِﺜْﻴَّﻠﻟﺍ َﺪﻳِﺰَﻳ ﻲِﺑَﺃ ْﻦَﻋ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َﺏﻮُّﻳَﺃ َﻝﺎَﻗ َﻝﺎَﻗ ﻲِﻟ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ْﺮِﺗْﻭَﺃ ٍﺲْﻤَﺨِﺑ ْﻥِﺈَﻓ ْﻢَﻟ ْﻊِﻄَﺘْﺴَﺗ ٍﺙﺎَﻠَﺜِﺒَﻓ ْﻥِﺈَﻓ ْﻢَﻟ ْﻊِﻄَﺘْﺴَﺗ ٍﺓَﺪِﺣﺍَﻮِﺒَﻓ ْﻥِﺈَﻓ ْﻢَﻟ ْﻊِﻄَﺘْﺴَﺗ ِﻡْﻭَﺄَﻓ ًﺀﺎَﻤﻳِﺇ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ ْﻦَﻋ ِّﻲِﻋﺍَﺯْﻭَﺄْﻟﺍ ْﻦَﻋ ِّﻱِﺮْﻫُّﺰﻟﺍ ْﻦَﻋ ِﺀﺎَﻄَﻋ ِﻦْﺑ َﺪﻳِﺰَﻳ ِّﻲِﺜْﻴَّﻠﻟﺍ ْﻦَﻋ ﻲِﺑَﺃ
ُﻩَﻮْﺤَﻧ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِّﻲِﺒَّﻨﻟﺍ ْﻦَﻋ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َﺏﻮُّﻳَﺃ 'நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) நூல்: தாரமீ 1536 'உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழு, அதற்கும் முடியாவிட்டால் சைகை மூலம் தொழு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். முடியாத பட்சத்தில் சைகை செய்து கூட தொழலாம் எனும் போது, தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதில் தவறில்லை என்பதை விளங்கலாம். எவரையும்
அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப் படுத்த மாட்டான். (அல்குர்ஆன் 2:286
Onlinepj