இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது வணக்க வழிபாடு தொடர்புடைய விஷயமாகும். பாங்கு சொல்வது சிறந்த நல்லறமாக மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. 609 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ َﻝﺎَﻗ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ِﻦْﺑ ﻲِﺑَﺃ َﺔَﻌَﺼْﻌَﺻ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َّﻢُﺛ ِّﻲِﻧِﺯﺎَﻤْﻟﺍ ْﻦَﻋ ِﻪﻴِﺑَﺃ ُﻪَّﻧَﺃ ُﻩَﺮَﺒْﺧَﺃ َّﻥَﺃ ﺎَﺑَﺃ ٍﺪﻴِﻌَﺳ َّﻱِﺭْﺪُﺨْﻟﺍ ُّﺐِﺤُﺗ َﻙﺍَﺭَﺃ ﻲِّﻧِﺇ ُﻪَﻟ َﻝﺎَﻗ ﻲِﻓ َﺖْﻨُﻛ ﺍَﺫِﺈَﻓ َﺔَﻳِﺩﺎَﺒْﻟﺍَﻭ َﻢَﻨَﻐْﻟﺍ َﻚِﻤَﻨَﻏ ْﻭَﺃ َﺖْﻧَّﺫَﺄَﻓ َﻚِﺘَﻳِﺩﺎَﺑ ْﻊَﻓْﺭﺎَﻓ ِﺓﺎَﻠَّﺼﻟﺎِﺑ ِﺀﺍَﺪِّﻨﻟﺎِﺑ َﻚَﺗْﻮَﺻ ﺎَﻟ ُﻪَّﻧِﺈَﻓ ُﻊَﻤْﺴَﻳ ﻯَﺪَﻣ ِﺕْﻮَﺻ ِﻥِّﺫَﺆُﻤْﻟﺍ ﺎَﻟَﻭ ٌّﻦِﺟ ٌﺲْﻧِﺇ ﺎَﻟَﻭ ٌﺀْﻲَﺷ َﺪِﻬَﺷ ﺎَّﻟِﺇ ُﻪَﻟ َﻡْﻮَﻳ ِﺔَﻣﺎَﻴِﻘْﻟﺍ َﻝﺎَﻗ ﻮُﺑَﺃ ٍﺪﻴِﻌَﺳ ُﻪُﺘْﻌِﻤَﺳ ْﻦِﻣ ِﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻱﺭﺎﺨﺒﻟﺍ ﻩﺍﻭﺭ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "ஆட்டையும் பாலை வனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் "ஆட்டை மேய்த்துக் கொண்டோ' அல்லது "பாலைவனத்திலோ' இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலி க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன'' என்று கூறிவிட்டு , "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி (819) 615 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ َﻝﺎَﻗ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ٍّﻲَﻤُﺳ ﻰَﻟْﻮَﻣ ﻲِﺑَﺃ ٍﺮْﻜَﺑ ْﻦَﻋ ﻲِﺑَﺃ ٍﺢِﻟﺎَﺻ ْﻦَﻋ ﻲِﺑَﺃ َﺓَﺮْﻳَﺮُﻫ َّﻥَﺃ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ْﻮَﻟ ُﻢَﻠْﻌَﻳ ُﺱﺎَّﻨﻟﺍ ﺎَﻣ ﻲِﻓ ِﺀﺍَﺪِّﻨﻟﺍ ِّﻒَّﺼﻟﺍَﻭ ِﻝَّﻭَﺄْﻟﺍ َّﻢُﺛ ْﻢَﻟ ﺍﻭُﺪِﺠَﻳ ﺎَّﻟِﺇ ْﻥَﺃ ﺍﻮُﻤِﻬَﺘْﺴَﻳ ِﻪْﻴَﻠَﻋ ﺍﻮُﻤَﻬَﺘْﺳﺎَﻟ ْﻮَﻟَﻭ َﻥﻮُﻤَﻠْﻌَﻳ ﺎَﻣ ﻲِﻓ ِﺮﻴِﺠْﻬَّﺘﻟﺍ ﺍﻮُﻘَﺒَﺘْﺳﺎَﻟ ِﻪْﻴَﻟِﺇ ْﻮَﻟَﻭ َﻥﻮُﻤَﻠْﻌَﻳ ﺎَﻣ ﻲِﻓ ِﺔَﻤَﺘَﻌْﻟﺍ ِﺢْﺒُّﺼﻟﺍَﻭ ﺎَﻤُﻫْﻮَﺗَﺄَﻟ ْﻮَﻟَﻭ ﺍًﻮْﺒَﺣ ﻩﺍﻭﺭ ﻱﺭﺎﺨﺒﻟﺍ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின்
அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து) விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (615) 580 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ ٍﺮْﻴَﻤُﻧ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺓَﺪْﺒَﻋ ْﻦَﻋ َﺔَﺤْﻠَﻃ ِﻦْﺑ ﻰَﻴْﺤَﻳ ْﻦَﻋ ِﻪِّﻤَﻋ َﻝﺎَﻗ ُﺖْﻨُﻛ َﺪْﻨِﻋ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ ِﻦْﺑ ﻲِﺑَﺃ َﻥﺎَﻴْﻔُﺳ ُﻩَﺀﺎَﺠَﻓ ُﻥِّﺫَﺆُﻤْﻟﺍ ُﻩﻮُﻋْﺪَﻳ ﻰَﻟِﺇ ِﺓﺎَﻠَّﺼﻟﺍ َﻝﺎَﻘَﻓ ُﺔَﻳِﻭﺎَﻌُﻣ َﻥﻮُﻧِّﺫَﺆُﻤْﻟﺍ ُﻝﻮُﻘَﻳ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ َﻝﻮُﺳَﺭ ُﺖْﻌِﻤَﺳ ُﻝَﻮْﻃَﺃ ِﺱﺎَّﻨﻟﺍ ﺎًﻗﺎَﻨْﻋَﺃ َﻡْﻮَﻳ ِﺔَﻣﺎَﻴِﻘْﻟﺍ ﻭ ِﻪﻴِﻨَﺛَّﺪَﺣ ُﻖَﺤْﺳِﺇ ُﻦْﺑ ٍﺭﻮُﺼْﻨَﻣ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٍﺮِﻣﺎَﻋ ﻮُﺑَﺃ ُﻥﺎَﻴْﻔُﺳ ﺎَﻨَﺛَّﺪَﺣ َﺔَﺤْﻠَﻃ ْﻦَﻋ ﻰَﻴْﺤَﻳ ِﻦْﺑ ْﻦَﻋ ﻰَﺴﻴِﻋ ِﻦْﺑ َﺔَﺤْﻠَﻃ َﻝﺎَﻗ ُﺖْﻌِﻤَﺳ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ ُﻝﻮُﻘَﻳ َﻝﺎَﻗ ﻢﻠﺴﻣ ﻩﺍﻭﺭ ِﻪِﻠْﺜِﻤِﺑ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ُﻝﻮُﺳَﺭ ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் கூறுகிறார் : (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம் (631) நல்லறங்களைப் பொறுத்தவரை மனிதன் அவற்றை ச் செய்தால் தான் அதன் நன்மைகளை அடைய முடியும். நவீன கருவிகளைப் பயன்படுத்தி பாங்கு சப்தத்தை ஒளிரவிட்டால் நாம் பாங்கு சொன்னவராக முடியாது. இவ்வாறு செய்யும் போது பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்புகளை நம்மால் அடைய முடியாது. எனவே நாம் பாங்கு சொன்னால் தான் பாங்கிற்குரிய சிறப்புகள் நமக்கு கிடைக்கும். இந்த நல்லறத்தை மனிதர்களில் ஒருவரே செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லிருந்து விளங்கிக்கொள்ள முடியும். 819 ﺎَﻨَﺛَّﺪَﺣ ﻮُﺑَﺃ ِﻥﺎَﻤْﻌُّﻨﻟﺍ َﻝﺎَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺩﺎَّﻤَﺣ ُﻦْﺑ ٍﺪْﻳَﺯ ْﻦَﻋ َﺏﻮُّﻳَﺃ ْﻦَﻋ ْﻢُﻜُﺌِّﺒَﻧُﺃ ﺎَﻟَﺃ ِﻪِﺑﺎَﺤْﺻَﺄِﻟ َﻝﺎَﻗ ِﺙِﺮْﻳَﻮُﺤْﻟﺍ َﻦْﺑ َﻚِﻟﺎَﻣ َّﻥَﺃ َﺔَﺑﺎَﻠِﻗ ﻲِﺑَﺃ َﺓﺎَﻠَﺻ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ِﻝﻮُﺳَﺭ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ِﺮْﻴَﻏ ﻲِﻓ َﻙﺍَﺫَﻭ َﻝﺎَﻗ ِﻦﻴِﺣ َﻡﺎَﻘَﻓ ٍﺓﺎَﻠَﺻ َﺮَّﺒَﻜَﻓ َﻊَﻛَﺭ َّﻢُﺛ ُﻪَﺳْﺃَﺭ َﻊَﻓَﺭ َّﻢُﺛ َّﻢُﺛ ًﺔَّﻴَﻨُﻫ َﻡﺎَﻘَﻓ َﺪَﺠَﺳ َّﻢُﺛ َﻊَﻓَﺭ ُﻪَﺳْﺃَﺭ ًﺔَّﻴَﻨُﻫ ﻰَّﻠَﺼَﻓ َﺓﺎَﻠَﺻ ﻭِﺮْﻤَﻋ ِﻦْﺑ َﺔَﻤِﻠَﺳ ﺎَﻨِﺨْﻴَﺷ ﺍَﺬَﻫ َﻝﺎَﻗ ُﺏﻮُّﻳَﺃ َﻥﺎَﻛ ُﻞَﻌْﻔَﻳ ﺎًﺌْﻴَﺷ ْﻢَﻟ ْﻢُﻫَﺭَﺃ ُﻪَﻧﻮُﻠَﻌْﻔَﻳ َﻥﺎَﻛ ُﺪُﻌْﻘَﻳ ﻲِﻓ ِﺔَﺜِﻟﺎَّﺜﻟﺍ ِﺔَﻌِﺑﺍَّﺮﻟﺍَﻭ َﻝﺎَﻗ ﺎَﻨْﻴَﺗَﺄَﻓ َّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﺎَﻨْﻤَﻗَﺄَﻓ ُﻩَﺪْﻨِﻋ َﻝﺎَﻘَﻓ ْﻮَﻟ ْﻢُﺘْﻌَﺟَﺭ ﻰَﻟِﺇ ْﻢُﻜﻴِﻠْﻫَﺃ ﺍﻮُّﻠَﺻ َﺓﺎَﻠَﺻ ﻲِﻓ ﺍَﺬَﻛ ﺍَﺬَﻛ ِﻦﻴِﺣ َﺓﺎَﻠَﺻ ﺍﻮُّﻠَﺻ ﻲِﻓ ﺍَﺬَﻛ ﺍَﺬَﻛ ِﻦﻴِﺣ ﺍَﺫِﺈَﻓ ْﻥِّﺫَﺆُﻴْﻠَﻓ ُﺓﺎَﻠَّﺼﻟﺍ ْﺕَﺮَﻀَﺣ ﻩﺍﻭﺭ ْﻢُﻛُﺮَﺒْﻛَﺃ ْﻢُﻜَّﻣُﺆَﻴْﻟَﻭ ْﻢُﻛُﺪَﺣَﺃ ﻱﺭﺎﺨﺒﻟﺍ மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : (இளைஞர்களான) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார்கள். நூல் : புகாரி (819) எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆடியோவை பாடவிடுவதின் மூலம் பாங்கு சொல்வது கூடாது. மனிதர்களில்
யாராவது ஒருவரே பாங்கு சொல்ல வேண்டும். மேலும் விபரத்துக்கு பார்க்க பதிவு செய்யப்பட்ட பாங்கு பாங்காக ஆகுமா 09.05.2012. 12:23
Online pj
Ahmedibrahim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக