அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் "ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956) "ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்
வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்
வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள்
திறக்கப்படுகின்றன,
ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்
காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம்
வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர்
சுவர்க்கவாதியா? அல்லது ரமலான்
மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச்
செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற
சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின்
கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து,
ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச்
செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால்
கிடைக்கும் நன்மைகளை விட
பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில்
கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக
சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது)
அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால்
ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன"
என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது.
மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக்
கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது. "ஷைத்தான்கள் விலங்கிடப்
படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள்
வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய
முடியாது, ஷைத்தான்களின்
செயல்களை முறியடிக்கக்கூடிய
வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள்
அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல!
ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான்
மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க
வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்
காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான
நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர்
பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ
அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில்
ஷைத்தானின் வேலைகளும் இருக்க
வாய்ப்பு உண்டு என்பதைத்
தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்)
அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக்
கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936)
இக்கருத்தை உறுதி செய்கிறது. கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக்
கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.
இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.
"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும்
பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி
வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது.
எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்:
முஸ்லிம் (2119) கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின்
காரணத்தால் நாம் செய்த முந்தைய
சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ்
மன்னிக்கின்றான். யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும்
வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்
படுகின்றது. யார் ரமாலனில்
நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புகாரீ (1901), முஸ்லிம் (1393) உம்ரா செய்தால் ஹஜ் நன்மை ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த
நன்மையை பெற்றுத் தரும். "ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ்
(செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரீ (1782) முஸ்லிம் (2408) சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல்
மூலம்
அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும்
நுழைய முடியாது. "சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும்
ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில்
அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்.
அவர்களைத் தவிர வேறு எவரும் அதன்
வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள்
எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும்
அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள்
நுழைந்ததும் அவ்வாசல்கள்
அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக
வேறு எவரும் நுழைய மாட்டார்கள்"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ
(1896), முஸ்லிம் (2121) அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் "நோன்பு நரகத்திலிருந்து காக்கும்
கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம்
அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச்
சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1894) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்
போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்
போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1904) இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள்
மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள்
மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன்
நடத்துவான் என்பது பொருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும்
இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம்
மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச்
சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர்
ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள்
தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள்
தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள்
கிடைக்கும். மகத்துவமிக்க இரவில் இதை நாம்
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம்
சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி,
நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ்
நமக்கு அருள்புரிவானாக!Tntj.net
Ahmedibrahim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக