புதன், 29 ஜூன், 2011

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா? நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரீ (2697) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது(அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் (3243) இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒருகேள்வியைக் கேட்கின்றான் உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16) அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்றுநினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்குச் சமமாக ஆகி விடும். லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும்.இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லதுநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும். இவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா? யாரைப்பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான். இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதைவிட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ்கடுமையாகத் தண்டிப்பவன். (59:7) நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்தஅறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தைநாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகிவிடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான். “நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களைவிரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ்(தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! (3:31, 32) எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின்தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும்சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறுஎன்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205) உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55) ஆனால்இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ருசெய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ருசெய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டுசெல்லக் கூடிய காரியங்களாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில்மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில்மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாகஉருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொருவழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560) எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப்புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றிசுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!
மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள் மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக்கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. 1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, “சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்” என்றுஅல்லாஹ் கூறினானாம். 2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்தஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். “என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?” என்றுநபிகளார் கேட்ட போது, “இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனேநான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால்நீங்கள் மட்டும் செல்லுங்கள்” என்றுஜிப்ரீல் கூறினாராம். 3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, “முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்” என்றுஅபூபக்ர் (ர)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்றுநபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளேபோய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ்இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, “நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது” என்று அல்லாஹ் கூறினானாம். “அபூபக்ரின் குரல் கேட்டதே” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, “நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்றுஒரு மலக்கைப் பேச வைத்தேன்” என்று அல்லாஹ் கூறினானாம். 4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டுரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்றுஜிப்ரீல் நினைத்தவுடன் நபி(ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்றுஅல்லாஹ்வும் நினைத்தானாம். உடனேநபி (ஸல்) அவர்கள் கையைஉயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம். 5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ்என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக