வியாழன், 2 ஜூன், 2011

பெண் சல்மான் ருஷ்���ியா? ஓர் உலகளாவிய சதி. 2nd part of early issue.

மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்தநஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை- இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக்(?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல்தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்? இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை. ஒரு வேளை காளிதாசனுக்கும் ஞானசம்பந்தனுக்கும் ஞானம் (?) பொங்கியது போல் தஸ்லீமா நஸ் ரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்! இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும் பொய்யிலேயே ஊறிப் போனவள் என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவையில்லை. ஆண் பெண் உடலுறவுப் பற்றிப் பச்சையா எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவுபாராட்டினாலும் தகும் என்று இப்பத்திரிகைகள் போற்றியதில்லை. ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர்எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பேஇதைப் படம் பிடித்துக்காட்டும் என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது. ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள்.இவள் புரட்சிகர எழுத்தாளராம்! இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது. இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப் போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது. உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமான வேலையைச் செய்து வருகின்றனர். தகாத உறவுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புனர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர். இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ஆண்களே! நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள் என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத - புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காம வெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள். ஒருதரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படிபெண்களைத் தூண்டினார் என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது. துகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதிவந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள். இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சோரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்! இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சிஎன்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும் இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா ?குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா ?இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்வாங்குகிறீர்கள்? பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா ?ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா ? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில்உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும். இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்புஎன்று நீங்கள் கருதினால் இவளைஆதரிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள்வெட்கப்பட வேண்டாமா ? இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது. பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். மனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்துபார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது. ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவi முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக் கொண்டால்நாகரீத்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம். நான் ஆவேசமும் நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள் என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது. இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடிதன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர் தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல் வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்றுவிமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்? மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காம வெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளைநீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்குநன்றாகத் தெரியும். அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக் காரியானாலும் அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும் வெறிபிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது. மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக