ரஜப் மாதத்தை விஷேச நோன்பு, தொழுகை, உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்: 'நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக