வியாழன், 2 ஜூன், 2011

பெண் சல்மான் ருஷ்���ியா? ஓர் உலகளாவிய சதி.

அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது! இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும் நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன. எப்படியாவது, இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம் என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும் உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமியச் சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது! அமேரிக்க அதிபர் கிளின்டன், சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளரைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதைஇதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் மூக்கைநுழைக்க வேண்டிய பிஸி யான பதவி அது! அயல் நாட்டு மன்னர்களும் அதிபர்களும் அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமெரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது. இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா? எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளர்! அவ்வளவு தான். எழுத்தாளர் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத்தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்தஎழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வுகூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சியமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்! இழிந்த நடையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! இதைத் தவிர எழுத்துலகில் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத் தான் அமேரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்த செய்தியைத் தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின. (இவனது சாத்தானிய வசனங்கள்என்ற நூலுக்கு வேதம் ஓதும் சாத்தான்கள் என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்களை அடையாளம் காட்டியுள்ளோம்.) குறைந்த பட்ச தகுதி கூட இல்லாத இவனை அமெரிக்க அதிபரும் பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதைத்தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது. மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை. இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூ னிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்துள்ளனர். அறிவுப்பூ ர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாள்கள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை. முற்போக்கும் புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம்என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்தமேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா ? பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்! தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான்பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான்ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது. இந்தயப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பவர் தஸ்லிமா நஸ்ரீன். பெண்களும் புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிஅசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும்என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே ,.ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன. இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களைநாம் அடையாளம் காண முடியும். பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனி மேல் வெளியே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார். (இந்தியாடுடே - 93, டிசம்பர் 6 - 20) இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டுவெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்! - மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்தநஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை- இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக