வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும் தனியாகத் தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும். நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி,( நூல் : புகாரி (2848( கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன. 1017ﺣَﺪَّﺛَﻨَﺎﻫَﺎﺭُﻭﻥُﺑْﻦُﻣَﻌْﺮُﻭﻑٍﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﺑْﻦُ ﻭَﻫْﺐٍﻋَﻦْﻋَﻤْﺮِﻭﺑْﻦِﺍﻟْﺤَﺎﺭِﺙِﺃَﻥَّﺃَﺑَﺎ ﻋُﺸَّﺎﻧَﺔَ ﺍﻟْﻤَﻌَﺎﻓِﺮِﻱَّﺣَﺪَّﺛَﻪُﻋَﻦْﻋُﻘْﺒَﺔَﺑْﻦِﻋَﺎﻣِﺮٍﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُﺭَﺳُﻮﻝَﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُﻳَﻌْﺠَﺐُ ﺭَﺑُّﻜُﻢْ ﻣِﻦْ ﺭَﺍﻋِﻲ ﻏَﻨَﻢٍ ﻓِﻲ ﺭَﺃْﺱِ ﺷَﻈِﻴَّﺔٍﺑِﺠَﺒَﻞٍﻳُﺆَﺫِّﻥُﺑِﺎﻟﺼَّﻠَﺎﺓِﻭَﻳُﺼَﻠِّﻲﻓَﻴَﻘُﻮﻝُ ﺍﻟﻠَّﻪُﻋَﺰَّﻭَﺟَﻞَّﺍﻧْﻈُﺮُﻭﺍﺇِﻟَﻰﻋَﺒْﺪِﻱﻫَﺬَﺍﻳُﺆَﺫِّﻥُ ﻭَﻳُﻘِﻴﻢُ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻳَﺨَﺎﻑُ ﻣِﻨِّﻲ ﻗَﺪْ ﻏَﻔَﺮْﺕُ ﻟِﻌَﺒْﺪِﻱ ﻭَﺃَﺩْﺧَﻠْﺘُﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகைஅழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான். அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி( நூல் : அபூதாவூத் (1017( 3667ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﺑِﺸْﺮٍﺣَﺪَّﺛَﻨَﺎﺳَﻌِﻴﺪٌ ﺣَﺪَّﺛَﻨَﺎﻗَﺘَﺎﺩَﺓُﻭَﻋَﺒْﺪُﺍﻟْﻮَﻫَّﺎﺏِﻋَﻦِﺍﺑْﻦِﺃَﺑِﻲ ﻋَﺮُﻭﺑَﺔَﻋَﻦْﻗَﺘَﺎﺩَﺓَﻋَﻦْﺃَﺑِﻲﺍﻟْﺄَﺣْﻮَﺹِﻋَﻦْ ﻋَﺒْﺪِﺍﻟﻠَّﻪِﺑْﻦِﻣَﺴْﻌُﻮﺩٍﻗَﺎﻝَﺑَﻴْﻨَﻤَﺎﻧَﺤْﻦُﻣَﻊَ ﺭَﺳُﻮﻝِﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَﻓِﻲ ﺑَﻌْﺾِ ﺃَﺳْﻔَﺎﺭِﻩِﺳَﻤِﻌْﻨَﺎﻣُﻨَﺎﺩِﻳًﺎﻳُﻨَﺎﺩِﻱﺍﻟﻠَّﻪُﺃَﻛْﺒَﺮُﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُﻓَﻘَﺎﻝَﻧَﺒِﻲُّﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﻋَﻠَﻰﺍﻟْﻔِﻄْﺮَﺓِﻓَﻘَﺎﻝَﺃَﺷْﻬَﺪُﺃَﻥْﻟَﺎﺇِﻟَﻪَﺇِﻟَّﺎﺍﻟﻠَّﻪُ ﻓَﻘَﺎﻝَﻧَﺒِﻲُّﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﺧَﺮَﺝَ ﻣِﻦْﺍﻟﻨَّﺎﺭِﻗَﺎﻝَﻓَﺎﺑْﺘَﺪَﺭْﻧَﺎﻩُﻓَﺈِﺫَﺍﻫُﻮَﺻَﺎﺣِﺐُ ﻣَﺎﺷِﻴَﺔٍﺃَﺩْﺭَﻛَﺘْﻪُﺍﻟﺼَّﻠَﺎﺓُﻓَﻨَﺎﺩَﻯﺑِﻬَﺎﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி( நூல் : அஹ்மது (3667( 19.03.2011
thanks; onlinepj.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக