கணவன் மனைவிக்குப் பொறுப்பாளன் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே மனைவியை நல்வழிப்படுத்துவதும் அவள்தவறு செய்தால் அவளைக் கண்டிப்பதும் கணவனின் கடமை. இதைப் பின்வரும் குர்ஆன் வசனம் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். ﺍﻟﺮِّﺟَﺎﻝُﻗَﻮَّﺍﻣُﻮﻥَﻋَﻠَﻰﺍﻟﻨِّﺴَﺎﺀِﺑِﻤَﺎﻓَﻀَّﻞَﺍﻟﻠَّﻪُ ﺑَﻌْﻀَﻬُﻢْﻋَﻠَﻰﺑَﻌْﺾٍ ﻭَﺑِﻤَﺎﺃَﻧﻔَﻘُﻮﺍﻣِﻦْ ﺃَﻣْﻮَﺍﻟِﻬِﻢْ 4(34) சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள்தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். அல்குர்ஆன் (4 : 43) 2554ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺴَﺪَّﺩٌﺣَﺪَّﺛَﻨَﺎﻳَﺤْﻴَﻰﻋَﻦْ ﻋُﺒَﻴْﺪِ ﺍﻟﻠَّﻪِﻗَﺎﻝَﺣَﺪَّﺛَﻨِﻲﻧَﺎﻓِﻊٌﻋَﻦْﻋَﺒْﺪِﺍﻟﻠَّﻪِﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُﻋَﻨْﻪُﺃَﻥَّﺭَﺳُﻮﻝَﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَﻗَﺎﻝَﻛُﻠُّﻜُﻢْﺭَﺍﻉٍﻓَﻤَﺴْﺌُﻮﻝٌﻋَﻦْﺭَﻋِﻴَّﺘِﻪِ ﻓَﺎﻟْﺄَﻣِﻴﺮُﺍﻟَّﺬِﻱﻋَﻠَﻰﺍﻟﻨَّﺎﺱِﺭَﺍﻉٍﻭَﻫُﻮَﻣَﺴْﺌُﻮﻝٌ ﻋَﻨْﻬُﻢْﻭَﺍﻟﺮَّﺟُﻞُﺭَﺍﻉٍﻋَﻠَﻰﺃَﻫْﻞِﺑَﻴْﺘِﻪِﻭَﻫُﻮَ ﻣَﺴْﺌُﻮﻝٌﻋَﻨْﻬُﻢْﻭَﺍﻟْﻤَﺮْﺃَﺓُﺭَﺍﻋِﻴَﺔٌﻋَﻠَﻰﺑَﻴْﺖِ ﺑَﻌْﻠِﻬَﺎﻭَﻭَﻟَﺪِﻩِ ﻭَﻫِﻲَ ﻣَﺴْﺌُﻮﻟَﺔٌﻋَﻨْﻬُﻢْ ﻭَﺍﻟْﻌَﺒْﺪُ ﺭَﺍﻉٍ ﻋَﻠَﻰﻣَﺎﻝِ ﺳَﻴِّﺪِﻩِﻭَﻫُﻮَ ﻣَﺴْﺌُﻮﻝٌﻋَﻨْﻪُ ﺃَﻟَﺎ ﻓَﻜُﻠُّﻜُﻢْ ﺭَﺍﻉٍ ﻭَﻛُﻠُّﻜُﻢْ ﻣَﺴْﺌُﻮﻝٌ ﻋَﻦْ ﺭَﻋِﻴَّﺘِﻪِ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றிநீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீதுஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை(ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களைகுறித்து அவன் விசாரிக்கப்படுவான். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (2554) பெண்கள் தங்களுடைய கணவன்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது. மனைவிதவறு செய்யும் போது ஆண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தஅதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தனதுகுடும்பத்தினர் தவறு செய்யும் போது அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடவில்லை. மாறாக தமது கோபத்தை வெளிப்படுத்தி அவர்களைக் கண்டித்துள்ளனர். 6109ﺣَﺪَّﺛَﻨَﺎﻳَﺴَﺮَﺓُﺑْﻦُﺻَﻔْﻮَﺍﻥَﺣَﺪَّﺛَﻨَﺎ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُﻋَﻦْﺍﻟﺰُّﻫْﺮِﻱِّ ﻋَﻦْﺍﻟْﻘَﺎﺳِﻢِﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺭَﺿِﻲَﺍﻟﻠَّﻪُﻋَﻨْﻬَﺎﻗَﺎﻟَﺖْﺩَﺧَﻞَﻋَﻠَﻲَّﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﻭَﻓِﻲﺍﻟْﺒَﻴْﺖِﻗِﺮَﺍﻡٌ ﻓِﻴﻪِ ﺻُﻮَﺭٌﻓَﺘَﻠَﻮَّﻥَﻭَﺟْﻬُﻪُﺛُﻢَّﺗَﻨَﺎﻭَﻝَﺍﻟﺴِّﺘْﺮَﻓَﻬَﺘَﻜَﻪُ ﻭَﻗَﺎﻟَﺖْﻗَﺎﻝَﺍﻟﻨَّﺒِﻲُّﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﺇِﻥَّ ﻣِﻦْﺃَﺷَﺪِّﺍﻟﻨَّﺎﺱِﻋَﺬَﺍﺑًﺎﻳَﻮْﻡَﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺼَﻮِّﺭُﻭﻥَ ﻫَﺬِﻩِ ﺍﻟﺼُّﻮَﺭَ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒருபயணத்தை முடித்துக் கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் உள்ள திரைச் சீலைஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறம் மாறி விட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்து விட்டார்கள். மேலும் அவர்கள், "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்தஉருவப் படங்களை வரைகின்றவர்களும் அடங்குவர்'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி (6109) 4886ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﻳُﻮﺳُﻒَﺣَﺪَّﺛَﻨَﺎ ﺳُﻔْﻴَﺎﻥُﻋَﻦْﻣَﻨْﺼُﻮﺭٍﻋَﻦْﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَﻋَﻦْﻋَﻠْﻘَﻤَﺔَ ﻋَﻦْﻋَﺒْﺪِﺍﻟﻠَّﻪِﻗَﺎﻝَﻟَﻌَﻦَﺍﻟﻠَّﻪُﺍﻟْﻮَﺍﺷِﻤَﺎﺕِ ﻭَﺍﻟْﻤُﻮﺗَﺸِﻤَﺎﺕِﻭَﺍﻟْﻤُﺘَﻨَﻤِّﺼَﺎﺕِﻭَﺍﻟْﻤُﺘَﻔَﻠِّﺠَﺎﺕِ ﻟِﻠْﺤُﺴْﻦِﺍﻟْﻤُﻐَﻴِّﺮَﺍﺕِﺧَﻠْﻖَﺍﻟﻠَّﻪِﻓَﺒَﻠَﻎَﺫَﻟِﻚَ ﺍﻣْﺮَﺃَﺓًﻣِﻦْﺑَﻨِﻲﺃَﺳَﺪٍﻳُﻘَﺎﻝُﻟَﻬَﺎﺃُﻡُّﻳَﻌْﻘُﻮﺏَ ﻓَﺠَﺎﺀَﺕْﻓَﻘَﺎﻟَﺖْ ﺇِﻧَّﻪُ ﺑَﻠَﻐَﻨِﻲﻋَﻨْﻚَ ﺃَﻧَّﻚَ ﻟَﻌَﻨْﺖَ ﻛَﻴْﺖَﻭَﻛَﻴْﺖَﻓَﻘَﺎﻝَﻭَﻣَﺎﻟِﻲﺃَﻟْﻌَﻦُﻣَﻦْﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﻭَﻣَﻦْﻫُﻮَ ﻓِﻲﻛِﺘَﺎﺏِﺍﻟﻠَّﻪِﻓَﻘَﺎﻟَﺖْﻟَﻘَﺪْﻗَﺮَﺃْﺕُﻣَﺎﺑَﻴْﻦَ ﺍﻟﻠَّﻮْﺣَﻴْﻦِﻓَﻤَﺎﻭَﺟَﺪْﺕُﻓِﻴﻪِﻣَﺎﺗَﻘُﻮﻝُﻗَﺎﻝَ ﻟَﺌِﻦْ ﻛُﻨْﺖِﻗَﺮَﺃْﺗِﻴﻪِﻟَﻘَﺪْﻭَﺟَﺪْﺗِﻴﻪِﺃَﻣَﺎﻗَﺮَﺃْﺕِﻭَﻣَﺎ ﺁﺗَﺎﻛُﻢْﺍﻟﺮَّﺳُﻮﻝُﻓَﺨُﺬُﻭﻩُﻭَﻣَﺎﻧَﻬَﺎﻛُﻢْﻋَﻨْﻪُ ﻓَﺎﻧْﺘَﻬُﻮﺍﻗَﺎﻟَﺖْﺑَﻠَﻰﻗَﺎﻝَﻓَﺈِﻧَّﻪُﻗَﺪْﻧَﻬَﻰﻋَﻨْﻪُ ﻗَﺎﻟَﺖْﻓَﺈِﻧِّﻲﺃَﺭَﻯﺃَﻫْﻠَﻚَﻳَﻔْﻌَﻠُﻮﻧَﻪُﻗَﺎﻝَ ﻓَﺎﺫْﻫَﺒِﻲﻓَﺎﻧْﻈُﺮِﻱﻓَﺬَﻫَﺒَﺖْﻓَﻨَﻈَﺮَﺕْﻓَﻠَﻢْﺗَﺮَ ﻣِﻦْﺣَﺎﺟَﺘِﻬَﺎﺷَﻴْﺌًﺎ ﻓَﻘَﺎﻝَﻟَﻮْ ﻛَﺎﻧَﺖْﻛَﺬَﻟِﻚَ ﻣَﺎ ﺟَﺎﻣَﻌْﺘُﻬَﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?'' என்றுகூறினார்கள். இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, "உம்மு யஅகூப்' எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "இப்படிப் பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும் ,அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், "(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும்நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லை
Onlinepj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக