புதன், 3 ஆகஸ்ட், 2011
நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்புதுறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺴَﺪَّﺩٌ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻫُﺸَﻴْﻢٌ ﻋَﻦْ ﺣُﺼَﻴْﻦٍ ﻋَﻦْ ﻣُﻌَﺎﺫِ ﺑْﻦِ ﺯُﻫْﺮَﺓَﺃَﻧَّﻪُ ﺑَﻠَﻐَﻪُ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﺇِﺫَﺍ ﺃَﻓْﻄَﺮَ ﻗَﺎﻝَ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻟَﻚَ ﺻُﻤْﺖُ ﻭَﻋَﻠَﻰ ﺭِﺯْﻗِﻚَ ﺃَﻓْﻄَﺮْﺕُ அபூதாவூத் (2011), முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3747), அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426), அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்- இப்னுல் முபாரக் (1388,1390), அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102), பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141), அல்மராஸில்-அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமேஅது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாத ஒருவர் அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும். மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னுஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது இப்னு ஹிப்பான் அவர்கள்வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலைஅறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது. அபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ-ﻛﺘﺎﺏ ﺍﻟﺼﻴﺎﻡ ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻓﻀﻴﻞ،ﻋﻦ ﺣﺼﻴﻦ، ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ،ﻗﺎﻝ:ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫﺍ ﺻﺎﻡ ﺛﻢ ﺃﻓﻄﺮ،ﻗﺎﻝ: ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ முதல் அறிவிப்பாளராக முஹம்மத் பின் ஃபுலைல் என்பாரும் இரண்டாவது அறிவிப்பாளராக ஹுசைன்என்பாரும் மூன்றாவது அறிவிப்பாளராக அபூஹுரைரா (ரலி) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முதல்அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஃபுலைல் இரண்டாம் அறிவிப்பாளரான ஹுசைன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். இவர் ஹிஜ்ரி 295 ஆம் ஆண்டு மரணித்தார். ஹுசைன் ஹிஜ்ரி 136ல் மரணித்தார். இருவரது மரணத்துக்கும் இடையே 159 ஆண்டுகள் இடைவெளி உள்ளன. எனவே இருவரும் சம காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது. எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும். லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம் ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ-ﻣﻦ ﺍﺳﻤﻪ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﻀﺮﻣﻲ،ﺛﻨﺎ ﻳﻮﺳﻒ ﺑﻦ ﻗﻴﺲ ﺍﻟﺒﻐﺪﺍﺩﻱ،ﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﻤﻠﻚ ﺑﻦ ﻫﺎﺭﻭﻥ ﺑﻦ ﻋﻨﺘﺮﺓ،ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﺟﺪﻩ،ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ:ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:ﺇﺫﺍ ﺃﻓﻄﺮ ﻗﺎﻝ:ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ ﻓﺘﻘﺒﻞ ﻣﻨﻲ ﺇﻧﻚ ﺃﻧﺖ ﺍﻟﺴﻤﻴﻊ ﺍﻟﻌﻠﻴﻢ * இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இவரும் இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்றுஇப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய லிஸானுல்மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது. ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻷﻭﺳﻂ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ-ﺑﺎﺏ ﺍﻟﻌﻴﻦ ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ،ﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺍﻟﺒﺠﻠﻲ،ﻧﺎ ﺩﺍﻭﺩ ﺑﻦ ﺍﻟﺰﺑﺮﻗﺎﻥ، ﻧﺎ ﺷﻌﺒﺔ،ﻋﻦ ﺛﺎﺑﺖ ﺍﻟﺒﻨﺎﻧﻲ،ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻗﺎﻝ:ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫﺍ ﺃﻓﻄﺮ ﻗﺎﻝ:ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ،ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ ﻟﻢ ﻳﺮﻭ ﻫﺬﺍ ﺍﻟﺤﺪﻳﺚ ﻋﻦ ﺷﻌﺒﺔ ﺇﻻ ﺩﺍﻭﺩ ﺑﻦ ﺍﻟﺰﺑﺮﻗﺎﻥ، ﺗﻔﺮﺩ ﺑﻪ:ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﻋﻤﺮﻭ * பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல்அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும், அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும், கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும் அபூநுஐம் அவர்களுக்குரிய அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர்என்று அபூதாவூத் அவர்களும்மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்) எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து ﺍﻟﻤﻄﺎﻟﺐ ﺍﻟﻌﺎﻟﻴﺔ ﻟﻠﺤﺎﻓﻆ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻌﺴﻘﻼﻧﻲ-ﻛﺘﺎﺏ ﺍﻟﺴﺤﻮﺭ ﺑﺎﺏ ﺇﺟﺎﺑﺔ ﺍﻟﺪﻋﺎﺀ ﻋﻨﺪ ﺍﻟﻔﻄﺮ-ﺣﺪﻳﺚ: 8191;1121 ﻭﻗﺎﻝ ﺍﻟﺤﺎﺭﺙ،ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻴﻢ ﺑﻦ ﻭﺍﻗﺪ،ﺛﻨﺎ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﻋﻤﺮﻭ،ﻋﻦ ﺍﻟﺴﺮﻱ ﺑﻦ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﺷﺪﺍﺩ،ﻋﻦ ﺟﻌﻔﺮ ﺑﻦ ﻣﺤﻤﺪ،ﻋﻦ ﺃﺑﻴﻪ،ﻋﻦ ﺟﺪﻩ،ﻋﻦ ﻋﻠﻲ،ﻗﺎﻝ:ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:ﻳﺎ ﻋﻠﻲ،ﺇﺫﺍ ﻛﻨﺖ ﺻﺎﺋﻤﺎ ﻓﻲ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﻓﻘﻞ ﺑﻌﺪ ﺇﻓﻄﺎﺭﻙ:ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻴﻚ ﺗﻮﻛﻠﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ،ﻳﻜﺘﺐ ﻟﻚ ﻣﺜﻞ ﻣﻦ ﻛﺎﻥ ﺻﺎﺋﻤﺎ ﻣﻦ ﻏﻴﺮ ﺃﻥ ﻳﻨﻘﺺ ﻣﻦ ﺃﺟﻮﺭﻫﻢ ﺷﻴﺌﺎ இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யாபாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக