சனி, 6 ஆகஸ்ட், 2011
தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களைச் சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களைத் தொழுகைக்கு அழைப்பது அதிகமான வணக்கங்கள்புரிவது பாவம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது சில மார்க்கவிஷயங்களைப் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பதுஇது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியைபலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான்அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் தீயவர்களிடம்கூட சில நன்மையான காரியங்களைப் பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறி விடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம். இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இவர்களிடம்பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளது. இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும்ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது . குர்ஆன் நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளைத் செய்யக் கூடாது எனத் தடுக்கவும் செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள். இப்படிப்பட்ட ஒருமுக்கியமான பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாக சென்று விடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர். இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம். தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை விட்டதன் மூலம்இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியை புறக்கணித்து விட்டனர். நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலைதூக்குகின்றன. இந்தச் சிரமங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கி விட்டால் அது வேறு விஷயம். ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாமல் அதைமறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி உள்ளது. தமிழகத்தில் தவ்ஹீதுவருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர்.இவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால்சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை, மூட நம்பிக்கைகள் மற்றும் எல்லா அநாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணைவைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியும்இருந்தனர். வட்டி வரதட்சணை போன்ற பாவங்களைச் சர்வ சாதாரணமாக செய்துகொண்டிருந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர்.தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதேஇந்த மோசமான நிலைக்குக் காரணம். இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டு தீமைகளுக்கு எதிராகக் குரல்ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன. சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்ததவறான கொள்கையும் ஒரு காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது. தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை. தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவேதான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாக கலந்துகொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் இவற்றைச் செய்து விடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியைப் புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வரவும் முடியாது. அடிப்படையில் கோளாறு குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக்கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸை என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும்ஹதீஸ்களுடன் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.இந்த சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள் தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையைத் தளர்த்திக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது.இவர்களின் கொள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக