திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நெருப்பால் தண்டனைகூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை. மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம். ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺑﻜﻴﺮ ﺣﺪﺛﻨﺎ ﺍﻟﻠﻴﺚ ﻋﻦ ﻳﻮﻧﺲ ﻋﻦ ﺍﺑﻦ ﺷﻬﺎﺏ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺍﻟﻤﺴﻴﺐ ﻭﺃﺑﻲ ﺳﻠﻤﺔ ﺃﻥ ﺃﺑﺎ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ ﻗﺮﺻﺖ ﻧﻤﻠﺔ ﻧﺒﻴﺎ ﻣﻦ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﻓﺄﻣﺮ ﺑﻘﺮﻳﺔ ﺍﻟﻨﻤﻞ ﻓﺄﺣﺮﻗﺖ ﻓﺄﻭﺣﻰ ﺍﻟﻠﻪ ﺇﻟﻴﻪ ﺃﻥ ﻗﺮﺻﺘﻚ ﻧﻤﻠﺔ ﺃﺣﺮﻗﺖ ﺃﻣﺔ ﻣﻦ ﺍﻷﻣﻢ ﺗﺴﺒﺢ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: இறைத் தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையேநீங்கள் எரித்து விட்டீர்களே என்று ( அவரைக்கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 3019 ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺃﺑﻲ ﺃﻭﻳﺲ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﻲ ﻣﺎﻟﻚ ﻋﻦ ﺃﺑﻲ ﺍﻟﺰﻧﺎﺩ ﻋﻦ ﺍﻷﻋﺮﺝ ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻧﺰﻝ ﻧﺒﻲ ﻣﻦ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﺗﺤﺖ ﺷﺠﺮﺓ ﻓﻠﺪﻏﺘﻪ ﻧﻤﻠﺔ ﻓﺄﻣﺮ ﺑﺠﻬﺎﺯﻩ ﻓﺄﺧﺮﺝ ﻣﻦ ﺗﺤﺘﻬﺎ ﺛﻢ ﺃﻣﺮ ﺑﺒﻴﺘﻬﺎ ﻓﺄﺣﺮﻕ ﺑﺎﻟﻨﺎﺭ ﻓﺄﻭﺣﻰ ﺍﻟﻠﻪ ﺇﻟﻴﻪ ﻓﻬﻼ ﻧﻤﻠﺔ ﻭﺍﺣﺪﺓ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறேஅவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறேஅது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போதுஅல்லாஹ் அவருக்கு , உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்றுஅறிவித்(து அவரைக் கண்டித்)தான். புஹாரி 3319 இந்த ஹதீஸ்களீல் எறும்பை எரித்ததை அல்லாஹ் கண்டிக்கவில்லை. கடித்த ஒரு எறும்பை எரித்திருக்கலாமே? எல்லாஎறும்புகளையும் ஏன் எரிக்க வெண்டும் என்று தான் கண்டிக்கிறான். நெருப்பில் எரிக்காமல் வேறு வகையில் அழித்திருக்கலாமே என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம். சில சகோதரர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி கொசு பேட் பயன்படுத்தக் கூடாதுஎன்று நமக்கு சுட்டிக் காட்டியுள்ளனர். ﺣﺪﺛﻨﺎﺃﺑﻮﺻﺎﻟﺢﻣﺤﺒﻮﺏﺑﻦﻣﻮﺳﻰ ﺃﺧﺒﺮﻧﺎﺃﺑﻮ ﺇﺳﺤﻖ ﺍﻟﻔﺰﺍﺭﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺇﺳﺤﻖ ﺍﻟﺸﻴﺒﺎﻧﻲﻋﻦ ﺍﺑﻦ ﺳﻌﺪ ﻗﺎﻝ ﻏﻴﺮ ﺃﺑﻲ ﺻﺎﻟﺢ ﻋﻦﺍﻟﺤﺴﻦﺑﻦﺳﻌﺪﻋﻦﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦﺑﻦ ﻋﺒﺪﺍﻟﻠﻪﻋﻦﺃﺑﻴﻪ-ﻛﺎﻥﺛﻘﺔﻗﻠﻴﻞ ﺍﻟﺤﺪﻳﺚ،ﻭﻗﺪ ﺗﻜﻠﻤﻮﺍ ﻓﻲ ﺭﻭﺍﻳﺘﻪ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻭﻛﺎﻥﺻﻐﻴﺮًﺍ-.ﻗﺎﻝﻛﻨﺎﻣﻊﺭﺳﻮﻝﺍﻟﻠﻪ ﺻﻠﻰﺍﻟﻠﻪﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻓﻲﺳﻔﺮﻓﺎﻧﻄﻠﻖ ﻟﺤﺎﺟﺘﻪﻓﺮﺃﻳﻨﺎﺣﻤﺮﺓ ﻣﻌﻬﺎﻓﺮﺧﺎﻥ ﻓﺄﺧﺬﻧﺎ ﻓﺮﺧﻴﻬﺎﻓﺠﺎﺀﺕﺍﻟﺤﻤﺮﺓﻓﺠﻌﻠﺖﺗﻔﺮﺵ ﻓﺠﺎﺀﺍﻟﻨﺒﻲﺻﻠﻰﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻓﻘﺎﻝ ﻣﻦ ﻓﺠﻊﻫﺬﻩﺑﻮﻟﺪﻫﺎﺭﺩﻭﺍﻭﻟﺪﻫﺎﺇﻟﻴﻬﺎﻭﺭﺃﻯ ﻗﺮﻳﺔﻧﻤﻞﻗﺪﺣﺮﻗﻨﺎﻫﺎ ﻓﻘﺎﻝﻣﻦﺣﺮﻕ ﻫﺬﻩ ﻗﻠﻨﺎﻧﺤﻦﻗﺎﻝﺇﻧﻪﻻﻳﻨﺒﻐﻲﺃﻥﻳﻌﺬﺏ ﺑﺎﻟﻨﺎﺭ ﺇﻻ ﺭﺏ ﺍﻟﻨﺎﺭ நாங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள்கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : அபூதாவூத் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தால் இதில் இருந்து கொசு பேட் பயன்படுத்தக் கூடாதுஎன்று முடிவு செய்வது சரியானது தான். ஆனால் இது பலவீனமான ஹதீஸாகும். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கும் எதிரானதாகும். இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன்அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. இதற்கான ஆதாரம் வருமாறு (79)ﺧﺖ4ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﺑﻦ ﻋﺒﺪﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩﺛﻘﺔﻗﺎﻝﺑﻦﻣﻌﻴﻦﻟﻢﻳﺴﻤﻊﻣﻦ ﺃﺑﻴﻪﻭﻗﺎﻝ ﺑﻦﺍﻟﻤﺪﻳﻨﻲ ﻟﻘﻲﺃﺑﺎﻩ ﻭﺳﻤﻊ ﻣﻨﻪ ﺣﺪﻳﺜﻴﻦﺣﺪﻳﺚﺍﻟﻀﺐﻭﺣﺪﻳﺚﺗﺄﺧﻴﺮ ﺍﻟﺼﻼﺓﻭﻗﺎﻝﺍﻟﻌﺠﻠﻲﻳﻘﺎﻝﺃﻧﻪﻟﻢﻳﺴﻤﻊ ﻣﻦﺃﺑﻴﻪﺍﻻﺣﺮﻓﺎﻭﺍﺣﺪﺍﻣﺤﺮﻡﺍﻟﺤﺮﺍﻡ ﻭﺫﻛﺮﺍﻟﺒﺨﺎﺭﻱﻓﻲﺍﻟﺘﺎﺭﻳﺦﺍﻻﻭﺳﻂﻣﻦ ﻃﺮﻳﻖﺑﻦﺧﺜﻴﻢﻋﻦﺍﻟﻘﺎﺳﻢﺑﻦﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﻋﻦﺃﺑﻴﻪﻗﺎﻝﺍﻧﻲﻣﻊﺃﺑﻲﻓﺬﻛﺮ ﺍﻟﺤﺪﻳﺚﻓﻲﺗﺄﺧﻴﺮﺍﻟﺼﻼﺓﻗﺎﻝﺍﻟﺒﺨﺎﺭﻱ ﺳﻤﻌﺘﻪﻳﻘﻮﻝﻟﻢﻳﺴﻤﻊﻣﻦﺃﺑﻴﻪﻭﺣﺪﻳﺚ ﺑﻦﺧﺜﻴﻢﻋﻨﺪﻱﻭﻗﺎﻝﺃﺣﻤﺪﻛﺎﻥﻟﻪﻋﻨﺪ ﻣﻮﺕﺃﺑﻴﻪﺳﺖﺳﻨﻴﻦﻭﺍﻟﺜﻮﺭﻱﻭﺷﺮﻳﻚ ﻳﻘﻮﻻﻥﺳﻤﻊﻭﺇﺳﺮﺍﺋﻴﻞﻳﻘﻮﻝﻓﻲﺣﺪﻳﺚ ﺍﻟﻀﺐﻋﻨﻪﺳﻤﻌﺖﻭﺃﺧﺮﺝﺍﻟﺒﺨﺎﺭﻱﻓﻲ ﺍﻟﺘﺎﺭﻳﺦﺍﻟﺼﻐﻴﺮﻃﺮﻳﻖﺍﻟﻘﺎﺳﻢﺑﻦﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﻋﻦﺃﺑﻴﻪﻟﻤﺎﺣﻀﺮﺕﻋﺒﺪﺍﻟﻠﻪ ﺍﻟﻮﻓﺎﺓﻗﻠﺖﻟﻪﺃﻭﺻﻨﻲﻗﺎﻝﺃﺑﻚﻣﻦ ﺧﻄﻴﺘﻚﻭﺳﻨﺪﻩﻻﺑﺄﺱﺑﻪﻗﻠﺖﻓﻌﻠﻰ ﻫﺬﺍ ﻳﻜﻮﻥﺍﻟﺬﻱﺻﺮﺡﻓﻴﻪﺑﺎﻟﺴﻤﺎﻉﻣﻦﺃﺑﻴﻪ ﺃﺭﺑﻌﺔﺃﺣﺪﻫﺎﻣﻮﻗﻮﻑﻭﺣﺪﻳﺜﻪﻋﻨﻪﻛﺜﻴﺮ ﻓﻔﻲ ﺍﻟﺴﻨﻦ ﺧﻤﺴﺔ ﻋﺸﺮ ﻭﻓﻲ ﺍﻟﻤﺴﻨﺪ ﺯﻳﺎﺩﺓ ﻋﻠﻰ ﺫﻟﻚ ﺳﺒﻌﺔ ﺃﺣﺎﺩﻳﺚ ﻣﻌﻈﻤﻬﺎ ﺑﺎﻟﻌﻨﻌﻨﺔ ﻭﻫﺬﺍﻫﻮ ﺍﻟﺘﺪﻟﻴﺲ ﻭﺍﻟﻠﻪﺃﻋﻠﻢ-ﺗﻌﺮﻳﻒ ﺍﻫﻞ ﺍﻟﺘﻘﺪﻳﺲﺑﻤﺮﺍﺗﺐﺍﻟﻤﻮﺻﻮﻓﻴﻦﺑﺎﻟﺘﺪﻟﻴﺲﺑﻦ ﺣﺠﺮ]ﺹ[40 437-ﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦﺑﻦﻋﺒﺪﺍﻟﻠﻪﺑﻦ ﻣﺴﻌﻮﺩﻗﺎﻝﻳﺤﻴﻰﺑﻦﺳﻌﻴﺪﺍﻟﻘﻄﺎﻥﻣﺎﺕ ﺃﺑﻮﻩﻭﻟﻪﻧﺤﻮﺳﺖﺳﻨﻴﻦﻭﻗﺎﻝﺑﻦﻣﻌﻴﻦ ﻓﻲﺭﻭﺍﻳﺔﻟﻢﻳﺴﻤﻊﻣﻦﺃﺑﻴﻪﻭﺭﻭﻯﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦﺻﺎﻟﺢﻋﻦﺑﻦﻣﻌﻴﻦﺃﻧﻪﺳﻤﻊﻣﻦﺃﺑﻴﻪ ﻭﻣﻦﻋﻠﻲﺭﺿﻲﺍﻟﻠﻪﻋﻨﻪﻭﺳﺌﻞﺃﺣﻤﺪﺑﻦ ﺣﻨﺒﻞﻫﻞﺳﻤﻊﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦﻣﻦﺃﺑﻴﻪ ﻓﻘﺎﻝﺃﻣﺎﺍﻟﺜﻮﺭﻱﻭﺷﺮﻳﻚﻓﻴﻘﻮﻻﻥﺳﻤﻊ ﻭﻛﺬﻟﻚﺃﺛﺒﺖﻟﻪﺑﻦﺍﻟﻤﺪﻳﻨﻲﺍﻟﺴﻤﺎﻉﻣﻦ ﺃﺑﻴﻪ ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ ﺟﺎﻣﻊﺍﻟﺘﺤﺼﻴﻞﻓﻲ ﺃﺣﻜﺎﻡﺍﻟﻤﺮﺍﺳﻴﻞ]ﺹ [223 onlinepj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக