ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில்கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமானமக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசைமார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை. மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள். இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள். எனவேஇவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவுசரியானதா என ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டது. இசை தொடர்பாக மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்என்பதற்காக டிசம்பர் 29ம் தேதி சென்னையில் ஆய்வுக் கூட்டம் இருப்பதாகவும், எனவே விரிவாக ஆய்வு செய்து விட்டு குறிப்பிட்ட தேதியில்வருமாறு தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மாநிலப் பேச்சாளர்களுக்கு, தலைமையிலிருந்து அறிவிப்புச் செய்யப்பட்டது. திட்டமிட்டவாறுடிசம்பர் 29ம் தேதி அன்று ஆய்வுக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. அங்கு வந்த ஒவ்வொருவரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியாக ஆதாரங்களைவைத்துப் பார்க்கும் போதுஇசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற கருத்துத் தான் சரியானது என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தோம். இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையானஆதாரமாகக் கொள்கிறார்கள். ஆதாரம்: 1 அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய)மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590 'விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப் பட்டிருப்பதாலும், 'இவற்றை ஆகுமாக்குவார்கள்' என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என விளங்கிக்கொள்ளலாம்' என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம்பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால்ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத் தன்மை மட்டும் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்துவிளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமானநினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள். ஒருவர் நல்ல மனனத் தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பி விட்டால், அவர்நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டு விட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது. மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா ? அல்லது பின்பு அறிவித்ததா ?என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவுகிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல்நிறுத்தி வைக்க வேண்டும். மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக்காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்குஎடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாத்தம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும்மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம்அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போதுஅதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார். நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 30, பக்கம்: 242 இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா ? அல்லது பின்பு அறிவித்தாரா ?என்ற தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை, இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது. இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியைஇமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள். நூல்: அஸ்ஸனனுல் குப்ரா பாகம்: 3, பக்கம்: 272 இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு இமாம் பைஹகீஅவர்கள் பதிவு செய்த ஹதீஸ் போதிய ஆதாரமாக உள்ளது. பைஹகீயில் உள்ள இந்தச் சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்திஉள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது. ஆதாரம்: 2 நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக