சனி, 6 ஆகஸ்ட், 2011

இறைவன் மனித குலத்துக்கு நன்மை தருகின்ற சட்ட திட்டங்களையே வழங்கியுள்ளான். மக்களுக்குத் தீங்குதரக்கூடிய காரியங்களை இறைவன் தடை செய்துள்ளான். இஸ்லாம் இசையைத் தடை செய்ததும் இந்த அடிப்படையில் தான். இன்றைக்கு இசையால் மனிதர்களுக்குப் பாதிப்புஏற்படுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இசை கேட்பவர்களின் மூளையில் ஒரு விதமான இரசாயன மாற்றம் நிகழ்வதாகவும் இதனால் போதையில் உள்ளவர்களைப் போன்று அவர்கள் மாறுவதாகவும் இதுமனிதனின் உடல் நலத்துக்கும் சிந்தனைத் திறனுக்கும் ஆபத்தானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்குமுன்னால் உணர்வில் கூட இது பற்றி விளக்கப்பட்டது . இந்தப் பாதிப்பு பலருக்கு ஏற்படுவதை நடைமுறையிலும் பார்க்கமுடிகின்றது. கேட்பதற்கு காது கூசும் அளவுக்கு ஆபாச வாசகங்களும் அபத்தமான கருத்துக்களும் அடங்கிய பாடல்களை இசையுடன் சேர்த்து படிக்கும் போது மக்கள் ரசிக்கின்றனர். அதே நேரத்தில் இசையில்லாமல் ராகம் இல்லாமல் இதனைக் கூறினால் இதை வெறுக்கின்றனர். ஆக இசை மக்களைச் சிந்திக்க விடாமல் அவர்களின் மூளைக்கு திரையிடும் வேலையைச் செய்கின்றது. மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவினால் தான் மற்ற உயிரினங்களை விட உயர்வானவனாகக் கருதப்படுகின்றான். அந்த அறிவை மழுங்கச் செய்கின்ற இந்த இசையை நாம் புறக்கணிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரத்துக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக