வியாழன், 18 ஆகஸ்ட், 2011
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிஜ்ரத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பன்னிரண்டுபேர் கொண்ட குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். நீங்கள் மதீனா வந்தால் எங்கள் மனைவி மக்களைக் காப்பது போல் உங்களைக் காப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தனர். இந்தப் பன்னிரண்டு பேர் தான் மதீனாவாசிகளில் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர்களாவர். அவர்கள் விபரம் வருமாறு: அஸ் அத் பின் சுராரா (ரலி) உசைத் பின் ஹுலைர் (ரலி) அபுல் ஹைஸன் (ரலி) சஅது பின் கைஸமா (ரலி) சஅது பின் அர்ரபீவு (ரலி) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஹராம் (ரலி) சஅது பின் உபாதா (ரலி) முந்திர் பின் அம்ரு (ரலி) பரா பின் மஃரூர் (ரலி) உபாதா பின் சாமித் (ரலி) ராஃபிவு பின் மாலிக் (ரலி) onlinepj
எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது. ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறு ரூபாய்ப் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார். அது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆக குறைந்து விட்டால் விவ்சாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும் வியாபாரிக்கு தண்டமாக நூறு ரூபாய் வீணாகிறது. இது தங்கம் டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது . இது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்தவறுமை காரணமாக செல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்கள். பின்வரும் புகாரி ஹதீஸ்களைப் பார்க்க 35-ஸலம் (முன்பணம் பெறுதல்) (பொருளைப் பிறகு பெற்றுக் கொள்வதாகக் கூறி விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுவது.) பாடம் : 1 ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கூற வேண்டும். 2239 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள். ஒரு வருடம், இரண்டு வருடங்களில் என்றோ, இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களில் என்றோ தமக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர்இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) (ஐயப்பாட்டுடன்) அவிக்கிறார்கள். பாடம் : 2 ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும். 2240 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக்கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்துவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக(மட்டுமே) கொடுக்கட்டும்! என்றார்கள். 2241 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்த போது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்), அளவும்எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் அது அனுமதிக்கப்படும்! என்றார்கள். 2242 & 2243 இப்னு அபில் முஜாலித் (ரலி) கூறியதாவது: அப்துல்லாஹ் பின் த்தா (ரலி ) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் ஸலம் வியத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம்சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர்(ரலி) ஆகியோரின் காலத்திலும் கோதுமை, வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம் ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள். பாடம் : 3 தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல். 2244 & 2245 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் த்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா? என்றுகேள்! என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது ) அப்துல்லாஹ் பின் அபீ அஃவ்பா (ரலி) அவர்கள், கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான நபீத் எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார். தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நாங்கள் அது பற்றி விசாரிக்க மாட்டோம்! என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்ட போது, நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கின்றதா என்று நாங்கள் கேட்க மாட்டோம்! என்று கூறினார்கள். 2246 அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், (மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர் எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்! என்றார்.
onlinepj
onlinepj
திங்கள், 15 ஆகஸ்ட், 2011
வலி,ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படு��ிறது?
பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் (ரலி)என்று எழுதும் வழக்கம் நமது சமுதாயத்தில் உள்ளது. ரலிஎன்பது பட்டமல்ல. இது பிரார்த்தனை வாக்கியத்தின் சுருக்கமாகும். ரளியல்லாஹு அன்ஹு (அல்லாஹ் அவரைப்பொருந்திக் கொள்வானாக) என்பது இதன் விரிவாக்கம். நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதுஅவர்களின் பெயருக்குப் பின்னால் ரலி என்று எழுதப்படுகின்றது. இவ்வாறுஎழுதப்பட்டால் கூறப்படும் நபர் நபித்தோழர் என்று புரிந்து கொள்ளலாம். நபித்தோழர் அல்லாதவர்களை க் குறிப்பிடும் போது அவர்களின் பெயருக்குப் பின்னால் (ரஹ்) என்று எழுதப்படும். ரஹ்மதுல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள்அவருக்குஹ் கிடைக்கட்டும்) என்பதுஇதன் விரிவாக்கம். இவ்வாறு எழுதப்பட்டால் குறிப்பிடப்படும் நபர் நபித்தோழர் இல்லை என்பதை அறியலாம். எனவே ரலி என்பதும் ரஹ் என்பதும் ஒருவர் நபித்தோழரா? இல்லையா? என்பதை உணர்த்துவதற்காகவே எழுதப்படுகின்றது. நபித்தோழர்களுக்குப் பின்னால் இவ்வாறுகுறிப்பிட வேண்டும் என்றோநபித்தோழர்களுக்கு ப் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தையை மற்றவர்களுக்கு ப்பயன்படுத்தக் கூடாது என்றோ மார்க்கம் கட்டளையிடவில்லை. இதுநாமாக ஏற்படுத்திக் கொண்ட மொழி வழக்காககும். எனவே (ரலி) என்று குறிப்பிடாமல் நபித்தோழர்களின் பெயரைக் கூறினால் அது தவறல்ல. இதை நபித்தோழர்கள் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால் அதிலும் தவறில்லை. ஆனால் வலீ என்பது இதைப் போன்றதல்ல. இறைநேசன் என்பது இதன் பொருள். ஒருவருக்கு இறைநேசன் என்ற இந்தப் பட்டத்தைச் சூட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவரை இறைவன் நேசிக்கின்றானா? இல்லையாஎன்பதை இறைவன் மட்டுமே அறிந்தவன். மனிதர்கள் யாரும் இதைச் சுயமாக அறிந்துகொள்ள முடியாத போதுஒருவரை இறைநேசன் என்று கூறுவது அதிகபிரசங்கித் தனமாகும்.இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும். அல்லாஹ்வும் அவனதுதூதரும் இறை நேசர் என்று அறிவிப்பு செய்தவர்களைத் தவிர வேறுயாரைப்பறியும் இறை நேசர் எனக் கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை. சில போலி ஆண்மீகவாதிகள் தங்களுக்கு இந்தப் பட்டத்தை சூட்டிக்கொண்டு சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தக் கீழ்த்தரமான காரியத்தைச் செய்ததன் மூலம் இவர்கள் கண்டிப்பாக வலீயாக இருக்கவே முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டனர். சமுதாயம்இந்த பித்தலாட்டக்காரர்கள் நம்பிஏமாந்துவிடக் கூடாது. இறை நேசரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பதை அறிய இதில் உள்ள முதல் மூன்று பாகத்தை கேட்கவும்
http://onlinepj.com/bayan-video/ thotar_uraikal/ ரலி பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட நூலில் 59 ஆம் கேள்வியை பார்க்கவும்
http://onlinepj.com/books/ arthamulla_kelvikal/
Onlinepj
http://onlinepj.com/bayan-video/ thotar_uraikal/ ரலி பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட நூலில் 59 ஆம் கேள்வியை பார்க்கவும்
http://onlinepj.com/books/ arthamulla_kelvikal/
Onlinepj
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
ஏன் தத்து எடுக்கக��� கூடாது?
குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்களின் குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இவ்வாறு எடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளைப் பெற மாட்டார்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மண முடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பைஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும். வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும்கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். ஒருவனை நாம் எடுத்து வளர்க்கிறோம். நம் வீட்டில் நமது உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். இவர்களுக்கும் வளர்க்கப்பட்டவனுக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது. எனவே அன்னிய ஆண்களுடன் நடந்து கொள்ள வேண்டிய வகையில் தான் அவனுடன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இரத்தம் சம்பந்தம் இல்லாததால் தந்தையின் சகோதரிகள் என்று அவர்களை அவன் கருத மாட்டான். இதனால் விபரீதங்கள் ஏற்படலாம். வளர்க்கப்பட்டவனிடம் 'நீ என் மகன் தான்' என்று கூறி ஏமாற்றுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஒவ்வொருவரையும் அவரது தந்தையின் பெயரிலேயே அழைக்க வேண்டும். எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை . அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். வர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாகநீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 33:4,5 'நீ இன்னாரின் மகன் தான்; எனக்குக் குழந்தையில்லாததால் உன்னைஎடுத்து வளர்க்கிறேன்' என்று தான் அவனிடம் கூற வேண்டும். உலகத்துக்கும் இப்படித் தான் கூற வேண்டும். இன்னொருவருக்குப் பிறந்தவனைதனக்குப் பிறந்தவன் எனச் சொந்தம் கொண்டாடுவதை இஸ்லாம் தடுக்கிறது. குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்எனும் நூலில் இருந்து
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக்கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. இது பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. http://onlinepj.com/kelvi_pathil/ ithara_sattangal/ jazakala_kuruthal/ ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற கருத்து தவறானது. ஏனென்றால் இவ்வாறு கூற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை.
Onlinepj.
Onlinepj.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சமுதாயத்துக்கு தூதராக அனுப்பப்பட்டார்களோ அவர்களுக்கு எந்த வழிகாட்டியும் அனுப்பப்படவில்லை. இப்ராஹீம்நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் வழித்தோன்றல்களாக இவர்கள் இருந்த போதும் பல்லாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டதால் இப்ராஹீம் நபியின் வழிமுறை எதுவும் அவர்களிடம் மீதமாக இருக்கவில்லை. இப்ராஹீம் நபி மார்க்கத்தில் இருந்த பத்துக் காரியங்கள் மட்டுமே அவர்களிடம் மீதம் இருந்தன. இதைப் பின்வரும் நபிமொழியில் இருந்து அறியலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்)தண்ணீரால் துப்புரவு செய்வது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், "பத்தாவது விஷயத்தை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம்'' என்று கூறினார்கள். நூல் முஸ்லிம் 436 இப்ராஹீம் நபியின் அனைத்து வழிமுறைகளையும் குழிதோண்டிப்புதைத்த அந்தச் சமுதாயத்தால் மேற்கண்ட பத்துக் காரியங்களையும் விட்டுவிடமுடியாததால் இவை இயற்கையான வழிமுறைகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட இப்ராஹீம் நபி அவர்கள் இநதச் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட தூதராக இருக்க முடியாது. ஆனாலும் இவர்கள் ஸாபியின்கள் எனும் கூட்டத்தில் சேர்ந்திருந்தால் அவர்கள் காபிராக கருதப்பட்டிருக்க மாட்டார்கள். இது குறித்து முழுமையாக அறிய
http://onlinepj.com/kelvi-pathil- wmv-mp3-3gp/Thuthar- Anuppappadatha-NabiSal- Petror-Kafira/
http://onlinepj.com/kelvi_pathil/ nambikai_thotarbutaiyavai/ nabiyin_petror_entha_markathi_irukavendum/
onlinepj.
http://onlinepj.com/kelvi-pathil- wmv-mp3-3gp/Thuthar- Anuppappadatha-NabiSal- Petror-Kafira/
http://onlinepj.com/kelvi_pathil/ nambikai_thotarbutaiyavai/ nabiyin_petror_entha_markathi_irukavendum/
onlinepj.
கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத்தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது. 1160ﻭﺣَﺪَّﺛَﻨَﺎﺃَﺣْﻤَﺪُﺑْﻦُﺣَﻨْﺒَﻞٍﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﺟَﻌْﻔَﺮٍﺣَﺪَّﺛَﻨَﺎﺷُﻌْﺒَﺔُﻋَﻦْﻭَﺭْﻗَﺎﺀَ ﻋَﻦْﻋَﻤْﺮِﻭﺑْﻦِ ﺩِﻳﻨَﺎﺭٍﻋَﻦْﻋَﻄَﺎﺀِ ﺑْﻦِﻳَﺴَﺎﺭٍ ﻋَﻦْ ﺃَﺑِﻲﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦْﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَﺇِﺫَﺍﺃُﻗِﻴﻤَﺖْﺍﻟﺼَّﻠَﺎﺓُﻓَﻠَﺎﺻَﻠَﺎﺓَﺇِﻟَّﺎ ﺍﻟْﻤَﻜْﺘُﻮﺑَﺔُ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (1281) சிலர் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் முன் சுன்னத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கையில் இகாமத் சொல்லப்பட்டால் உடனே அவர் தொழுகையை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை. இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையில்லாத வேறு எந்தத் தொழுகையையும் துவங்கக் கூடாது என்பதே இந்தச் செய்தியின் பொருளாகும். இகாமத் என்பது கடமையான தொழுகைக்குரிய அழைப்பாகும். இந்த அழைப்பு விடப்பட்டால் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதே முறையான செயல்.இந்த அழைப்புக்குப் பிறகு உபரியான வணக்கத்தில் ஈடுபட்டால் கடமையான தொழுகையை அலட்சியம் செய்யும் நிலை ஏற்படுகிறது. நாம் பள்ளிக்கு வரும் போது இகாமத் சொல்லப்பட்டால் முன் சுன்னத் தஹிய்யதுல் மஸ்ஜித் உள்ளிட்ட எந்தத் தொழுகையிலும் ஈடுபடாமல்ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருளாகும். இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும். ﺣﺪﺛﻨﺎﻗﺘﻴﺒﺔﻭﻫﻨﺎﺩ ﻭﻣﺤﻤﻮﺩﺑﻦﻏﻴﻼﻥ ﻗﺎﻟﻮﺍﺣﺪﺛﻨﺎﻭﻛﻴﻊ ﻋﻦﺳﻔﻴﺎﻥﺡﻭ ﺣﺪﺛﻨﺎﻣﺤﻤﺪﺑﻦ ﺑﺸﺎﺭﺣﺪﺛﻨﺎﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﺑﻦﻣﻬﺪﻱ ﺣﺪﺛﻨﺎﺳﻔﻴﺎﻥﻋﻦ ﻋﺒﺪﺍﻟﻠﻪﺑﻦﻣﺤﻤﺪ ﺑﻦﻋﻘﻴﻞﻋﻦﻣﺤﻤﺪ ﺑﻦﺍﻟﺤﻨﻔﻴﺔﻋﻦﻋﻠﻲ ﻋﻦﺍﻟﻨﺒﻲﺻﻠﻰﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻗﺎﻝ ﻣﻔﺘﺎﺡﺍﻟﺼﻼﺓ ﺍﻟﻄﻬﻮﺭﻭﺗﺤﺮﻳﻤﻬﺎ ﺍﻟﺘﻜﺒﻴﺮﻭﺗﺤﻠﻴﻠﻬﺎ ﺍﻟﺘﺴﻠﻴﻢﻗﺎﻝﺃﺑﻮ ﻋﻴﺴﻰﻫﺬﺍﺍﻟﺤﺪﻳﺚ ﺃﺻﺢﺷﻲﺀﻓﻲﻫﺬﺍ ﺍﻟﺒﺎﺏﻭﺃﺣﺴﻦﻭﻋﺒﺪ ﺍﻟﻠﻪﺑﻦﻣﺤﻤﺪﺑﻦ ﻋﻘﻴﻞﻫﻮﺻﺪﻭﻕﻭﻗﺪ ﺗﻜﻠﻢﻓﻴﻪﺑﻌﺾﺃﻫﻞ ﺍﻟﻌﻠﻢﻣﻦﻗﺒﻞﺣﻔﻈﻪ ﻗﺎﻝﺃﺑﻮﻋﻴﺴﻰﻭ ﺳﻤﻌﺖﻣﺤﻤﺪﺑﻦ ﺇﺳﻤﻌﻴﻞﻳﻘﻮﻝﻛﺎﻥ ﺃﺣﻤﺪﺑﻦﺣﻨﺒﻞ ﻭﺇﺳﺤﻖﺑﻦﺇﺑﺮﺍﻫﻴﻢ ﻭﺍﻟﺤﻤﻴﺪﻱﻳﺤﺘﺠﻮﻥ ﺑﺤﺪﻳﺚﻋﺒﺪﺍﻟﻠﻪﺑﻦ ﻣﺤﻤﺪﺑﻦﻋﻘﻴﻞﻗﺎﻝ ﻣﺤﻤﺪﻭﻫﻮﻣﻘﺎﺭﺏ ﺍﻟﺤﺪﻳﺚﻗﺎﻝﺃﺑﻮ ﻋﻴﺴﻰﻭﻓﻲﺍﻟﺒﺎﺏﻋﻦ ﺟﺎﺑﺮﻭﺃﺑﻲﺳﻌﻴﺪ திர்மிதி 3 ஒரு தொழுகையை துவக்கி விட்டால் அதை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்துத்தான் முடிக்க வேண்டும். இடையில் முடிக்கக் கூடாது.
ஒருவர் தான் செய்தது பாவம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகிவிட்டால் அப்பாவத்தை அவர் செய்யாதவரைப் போன்று ஆகிவிடுகிறார். இவர் திருந்தி விட்டதால் இதற்கு முன் இவர் செய்த பாவங்களை இறைவன் தள்ளுபடி செய்துவிடுகிறான். 4240 ﺣَﺪَّﺛَﻨَﺎﺃَﺣْﻤَﺪُﺑْﻦُ ﺳَﻌِﻴﺪٍﺍﻟﺪَّﺍﺭِﻣِﻲُّ ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﻗَﺎﺷِﻲُّ ﺣَﺪَّﺛَﻨَﺎﻭُﻫَﻴْﺐُﺑْﻦُ ﺧَﺎﻟِﺪٍﺣَﺪَّﺛَﻨَﺎﻣَﻌْﻤَﺮٌ ﻋَﻦْﻋَﺒْﺪِﺍﻟْﻜَﺮِﻳﻢِﻋَﻦْ ﺃَﺑِﻲﻋُﺒَﻴْﺪَﺓَﺑْﻦِﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِﻋَﻦْﺃَﺑِﻴﻪِﻗَﺎﻝَ ﻗَﺎﻝَﺭَﺳُﻮﻝُﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﺘَّﺎﺋِﺐُﻣِﻦْﺍﻟﺬَّﻧْﺐِ ﻛَﻤَﻦْﻟَﺎﺫَﻧْﺐَﻟَﻪُ ﺭﻭﺍﻩﺇﺑﻦﻣﺎﺟﻪ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாவத்திலிருந்து மன்னிப்புக்கோரியவர் பாவமே செய்யாதவனைப் போன்றவர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : இப்னு மாஜா (4240) உங்கள் தந்தை மரணிப்பதற்கு முன்பு தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களில் ஈடுபட மாட்டேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதன் பிறகு அவர் கூறியது போல் எந்த இணைவைப்புக் காரியங்களிலும் ஈடுபடாமல்அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தால் அவருக்காக பாவமன்னிப்புத்தேடுவது தவறல்ல.
Onlinepj
Onlinepj
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
வலது கையால் சாப்ப���டும் போது இடது கை���ால் தண்ணீர் அருந��தலாமா?
சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் (4108) 3764 ﻋَﻦْﺟَﺪِّﻩِﺍﺑْﻦِﻋُﻤَﺮَﺃَﻥَّﺭَﺳُﻮﻝَﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﻗَﺎﻝَﺇِﺫَﺍﺃَﻛَﻞَﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓَﻠْﻴَﺄْﻛُﻞْﺑِﻴَﻤِﻴﻨِﻪِﻭَﺇِﺫَﺍﺷَﺮِﺏَﻓَﻠْﻴَﺸْﺮَﺏْﺑِﻴَﻤِﻴﻨِﻪِ ﻓَﺈِﻥَّ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻳَﺄْﻛُﻞُ ﺑِﺸِﻤَﺎﻟِﻪِ ﻭَﻳَﺸْﺮَﺏُ ﺑِﺸِﻤَﺎﻟِﻪِ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் (3764) வலது கையின் உட்புறத்தில் உணவு ஓட்டியிருக்கும் போது தண்ணீர் பாத்திரத்தை வலக் கையால் எடுத்தால் கையில் உள்ள உணவு தண்ணீர் பாத்திரத்தின் மீது படும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து வலது கையின் மேற்புறத்தின் மீது அதை வைத்துப் பருகிக் கொள்ளலாம். பருகிய பிறகு இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்து விடலாம். இவ்வாறு செய்வது மேற்கண்ட நபிமொழிக்கு மாற்றமாகாது. ஒரு பாத்திரத்தை இரண்டு கைகளால் பிடித்தால் தான் சுலபமாகப் பருக முடியும் என்றால் இந்நேரத்தில் வலது கையைப் பிரதானக் கருவியாகவும் இடது கையை துணைக் கருவியாகவும் கருதி இரண்டையும் பயன்படுத்தலாம். இதில் தவறேதுமில்லை.
Onlinepj
Onlinepj
வங்கி நிறுவனத்து��்கு சாஃப்ட்வேர் செய்து கொடுக்கலாம��?
வட்டி தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் (3258) நீங்கள் தாயரிக்கும் மென்பொருள் வட்டித் தொலிலுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தால்அதை நீங்கள் செய்துகொடுப்பது கூடாது .உங்கள் மென்பொருள் மார்க்கம் அனுமதித்த இன்னும் பல விஷயங்களுக்கும் பயன்படக்கூடியதாக
Onlinepj
Onlinepj
ரெஸ்லின் (wristling) பார��க்கலாமா
எந்த ஒரு செயல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்கின்றதோஅச்செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஒருகாரியம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதாக இருந்தால் அதைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும். இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப்பொறுத்தே இதைப் பார்ப்பது கூடுமா? அல்லது கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும். ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக போட்டிவைப்பது தவறல்ல. ஆனால் இஸ்லாம் தடை செய்த விஷயங்களில் போட்டி வைப்பது கூடாது. போரில் எதிரிகளை வீழ்த்தும் கட்டத்தில் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வைதையும் பிறரைத் துன்புறுத்துவதையும் இஸ்லாம்தடைசெய்துள்ளது. ரெஸ்லிங் விளையாட்டுப் போட்டியில் இஸ்லாம் தடை செய்த இந்த இரு அம்சங்களும் அடங்கியுள்ளன. போட்டியிடும் இருவரில் ஒருவர் மற்றவரின் முகத்தில் குத்துவது முதுகை முறிப்பது போன்ற கடுமையான தாக்குதல்களில் ஈடுபடுவர். சில நேரங்களில் பார்வையாளர் பகுதியில் இருக்கும் நாற்காலிகள் அல்லது கையில் கிடைக்கின்ற பொருட்களால் சரமாரியாக தாக்குவார். இறுதியில் யார் தனது போட்டியாளரை எழ முடியாமல் செயலிழக்கச் செய்கின்றாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் அரங்கேற்றப்படும் கொடூரத் தாக்குதல்களை ஆயிரக்கணக்கான மக்கள் ரசித்து ருசித்து பார்ப்பது தான் கொடுமையிலும் கொடுமை. மனிதாபிமானமும் இரக்கமும்வெளிப்பட வேண்டிய சூழ்நிலையில் சந்தோஷமும் ஆரவாரமும் ஏற்படுகின்றது என்றால் இந்த விளையாட்டு மக்களை இரக்கமற்ற கள்நெஞ்சக்காரர்களாக மாற்றுகின்றதுஎன்பதே உண்மை. ரெஸ்லிங் என்பது பொய்யான நாடகம் என்று ஒரு கருத்து உள்ளது .யார் ஜெயிக்க வேண்டும்? யார் தோற்க வேண்டும்? என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்படும். ஒருவர் கடுமையாகத் தாக்குவது போல் பாவனை செய்ய மற்றவர் வலி ஏற்படுவது போல் நடிப்பார். மொத்தத்தில் இந்த விளையாட்டு பொய்யானது என்று கூறப்படுகின்றது. இஸ்லாம் தடைசெய்துள்ள ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டுநடிப்பதும் தவறாகும். மேலும் இந்த விளையாட்டைக் காணும் போது மார்க்கம் தடைசெய்துள்ள காட்சிகளைக் காணும் நிலை ஏற்படுகின்றது. போட்டியிடுபவர்கள் மறைவிடங்களை வெளிப்படுத்திக்காட்டும் ஜட்டியுடன் மக்களுக்குக் காட்சி தருகின்றனர். இவ்வாறு ஆடை அணிவது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். சில நேரங்களில் பெண்கள் ஆபாச ஆடைகளுடன் மேடைக்கு வந்து அலங்கோலமாக காட்சி தருகின்ற நிலையும் இந்த விளையாட்டில் உள்ளது. இஸ்லாம் தடைசெய்துள்ள மேற்கண்ட அம்சங்கள் இந்த விளையாட்டில் உள்ளதால் இந்த விளையாட்டை நாம் பார்ப்பது கூடாது. இப்படிப்பட்ட போலியான விளையாட்டை கண்டு நமது பொன்னான நேரங்களை வீணடித்துவிடக் கூடாது. "(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோகண்டால் நின்ற நிலையில் உம்மைவிட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்'' என கூறுவீராக! (அல் குர்ஆன் 63:11) காலத்தின் மீதுசத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன் 104 வது அத்தியாயம்) காலத்தை வீணாக கழித்தால் மறுமையில் அதுகுறித்து இறைவன் கேள்வி கேட்பான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே வீணான இது போன்ற விளையாட்டுகளை காண நமது நேரத்தை விரயம் செய்யக்கூடாது.
Onlinepj
Onlinepj
மனைவி ஹிஜாப் அணிய மறுத்தால்
கணவன் மனைவிக்குப் பொறுப்பாளன் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே மனைவியை நல்வழிப்படுத்துவதும் அவள்தவறு செய்தால் அவளைக் கண்டிப்பதும் கணவனின் கடமை. இதைப் பின்வரும் குர்ஆன் வசனம் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். ﺍﻟﺮِّﺟَﺎﻝُﻗَﻮَّﺍﻣُﻮﻥَﻋَﻠَﻰﺍﻟﻨِّﺴَﺎﺀِﺑِﻤَﺎﻓَﻀَّﻞَﺍﻟﻠَّﻪُ ﺑَﻌْﻀَﻬُﻢْﻋَﻠَﻰﺑَﻌْﺾٍ ﻭَﺑِﻤَﺎﺃَﻧﻔَﻘُﻮﺍﻣِﻦْ ﺃَﻣْﻮَﺍﻟِﻬِﻢْ 4(34) சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள்தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். அல்குர்ஆன் (4 : 43) 2554ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺴَﺪَّﺩٌﺣَﺪَّﺛَﻨَﺎﻳَﺤْﻴَﻰﻋَﻦْ ﻋُﺒَﻴْﺪِ ﺍﻟﻠَّﻪِﻗَﺎﻝَﺣَﺪَّﺛَﻨِﻲﻧَﺎﻓِﻊٌﻋَﻦْﻋَﺒْﺪِﺍﻟﻠَّﻪِﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُﻋَﻨْﻪُﺃَﻥَّﺭَﺳُﻮﻝَﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَﻗَﺎﻝَﻛُﻠُّﻜُﻢْﺭَﺍﻉٍﻓَﻤَﺴْﺌُﻮﻝٌﻋَﻦْﺭَﻋِﻴَّﺘِﻪِ ﻓَﺎﻟْﺄَﻣِﻴﺮُﺍﻟَّﺬِﻱﻋَﻠَﻰﺍﻟﻨَّﺎﺱِﺭَﺍﻉٍﻭَﻫُﻮَﻣَﺴْﺌُﻮﻝٌ ﻋَﻨْﻬُﻢْﻭَﺍﻟﺮَّﺟُﻞُﺭَﺍﻉٍﻋَﻠَﻰﺃَﻫْﻞِﺑَﻴْﺘِﻪِﻭَﻫُﻮَ ﻣَﺴْﺌُﻮﻝٌﻋَﻨْﻬُﻢْﻭَﺍﻟْﻤَﺮْﺃَﺓُﺭَﺍﻋِﻴَﺔٌﻋَﻠَﻰﺑَﻴْﺖِ ﺑَﻌْﻠِﻬَﺎﻭَﻭَﻟَﺪِﻩِ ﻭَﻫِﻲَ ﻣَﺴْﺌُﻮﻟَﺔٌﻋَﻨْﻬُﻢْ ﻭَﺍﻟْﻌَﺒْﺪُ ﺭَﺍﻉٍ ﻋَﻠَﻰﻣَﺎﻝِ ﺳَﻴِّﺪِﻩِﻭَﻫُﻮَ ﻣَﺴْﺌُﻮﻝٌﻋَﻨْﻪُ ﺃَﻟَﺎ ﻓَﻜُﻠُّﻜُﻢْ ﺭَﺍﻉٍ ﻭَﻛُﻠُّﻜُﻢْ ﻣَﺴْﺌُﻮﻝٌ ﻋَﻦْ ﺭَﻋِﻴَّﺘِﻪِ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றிநீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீதுஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை(ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களைகுறித்து அவன் விசாரிக்கப்படுவான். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (2554) பெண்கள் தங்களுடைய கணவன்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது. மனைவிதவறு செய்யும் போது ஆண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தஅதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தனதுகுடும்பத்தினர் தவறு செய்யும் போது அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடவில்லை. மாறாக தமது கோபத்தை வெளிப்படுத்தி அவர்களைக் கண்டித்துள்ளனர். 6109ﺣَﺪَّﺛَﻨَﺎﻳَﺴَﺮَﺓُﺑْﻦُﺻَﻔْﻮَﺍﻥَﺣَﺪَّﺛَﻨَﺎ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُﻋَﻦْﺍﻟﺰُّﻫْﺮِﻱِّ ﻋَﻦْﺍﻟْﻘَﺎﺳِﻢِﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺭَﺿِﻲَﺍﻟﻠَّﻪُﻋَﻨْﻬَﺎﻗَﺎﻟَﺖْﺩَﺧَﻞَﻋَﻠَﻲَّﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﻭَﻓِﻲﺍﻟْﺒَﻴْﺖِﻗِﺮَﺍﻡٌ ﻓِﻴﻪِ ﺻُﻮَﺭٌﻓَﺘَﻠَﻮَّﻥَﻭَﺟْﻬُﻪُﺛُﻢَّﺗَﻨَﺎﻭَﻝَﺍﻟﺴِّﺘْﺮَﻓَﻬَﺘَﻜَﻪُ ﻭَﻗَﺎﻟَﺖْﻗَﺎﻝَﺍﻟﻨَّﺒِﻲُّﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﺇِﻥَّ ﻣِﻦْﺃَﺷَﺪِّﺍﻟﻨَّﺎﺱِﻋَﺬَﺍﺑًﺎﻳَﻮْﻡَﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺼَﻮِّﺭُﻭﻥَ ﻫَﺬِﻩِ ﺍﻟﺼُّﻮَﺭَ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒருபயணத்தை முடித்துக் கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் உள்ள திரைச் சீலைஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறம் மாறி விட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்து விட்டார்கள். மேலும் அவர்கள், "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்தஉருவப் படங்களை வரைகின்றவர்களும் அடங்குவர்'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி (6109) 4886ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﻳُﻮﺳُﻒَﺣَﺪَّﺛَﻨَﺎ ﺳُﻔْﻴَﺎﻥُﻋَﻦْﻣَﻨْﺼُﻮﺭٍﻋَﻦْﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَﻋَﻦْﻋَﻠْﻘَﻤَﺔَ ﻋَﻦْﻋَﺒْﺪِﺍﻟﻠَّﻪِﻗَﺎﻝَﻟَﻌَﻦَﺍﻟﻠَّﻪُﺍﻟْﻮَﺍﺷِﻤَﺎﺕِ ﻭَﺍﻟْﻤُﻮﺗَﺸِﻤَﺎﺕِﻭَﺍﻟْﻤُﺘَﻨَﻤِّﺼَﺎﺕِﻭَﺍﻟْﻤُﺘَﻔَﻠِّﺠَﺎﺕِ ﻟِﻠْﺤُﺴْﻦِﺍﻟْﻤُﻐَﻴِّﺮَﺍﺕِﺧَﻠْﻖَﺍﻟﻠَّﻪِﻓَﺒَﻠَﻎَﺫَﻟِﻚَ ﺍﻣْﺮَﺃَﺓًﻣِﻦْﺑَﻨِﻲﺃَﺳَﺪٍﻳُﻘَﺎﻝُﻟَﻬَﺎﺃُﻡُّﻳَﻌْﻘُﻮﺏَ ﻓَﺠَﺎﺀَﺕْﻓَﻘَﺎﻟَﺖْ ﺇِﻧَّﻪُ ﺑَﻠَﻐَﻨِﻲﻋَﻨْﻚَ ﺃَﻧَّﻚَ ﻟَﻌَﻨْﺖَ ﻛَﻴْﺖَﻭَﻛَﻴْﺖَﻓَﻘَﺎﻝَﻭَﻣَﺎﻟِﻲﺃَﻟْﻌَﻦُﻣَﻦْﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﻭَﻣَﻦْﻫُﻮَ ﻓِﻲﻛِﺘَﺎﺏِﺍﻟﻠَّﻪِﻓَﻘَﺎﻟَﺖْﻟَﻘَﺪْﻗَﺮَﺃْﺕُﻣَﺎﺑَﻴْﻦَ ﺍﻟﻠَّﻮْﺣَﻴْﻦِﻓَﻤَﺎﻭَﺟَﺪْﺕُﻓِﻴﻪِﻣَﺎﺗَﻘُﻮﻝُﻗَﺎﻝَ ﻟَﺌِﻦْ ﻛُﻨْﺖِﻗَﺮَﺃْﺗِﻴﻪِﻟَﻘَﺪْﻭَﺟَﺪْﺗِﻴﻪِﺃَﻣَﺎﻗَﺮَﺃْﺕِﻭَﻣَﺎ ﺁﺗَﺎﻛُﻢْﺍﻟﺮَّﺳُﻮﻝُﻓَﺨُﺬُﻭﻩُﻭَﻣَﺎﻧَﻬَﺎﻛُﻢْﻋَﻨْﻪُ ﻓَﺎﻧْﺘَﻬُﻮﺍﻗَﺎﻟَﺖْﺑَﻠَﻰﻗَﺎﻝَﻓَﺈِﻧَّﻪُﻗَﺪْﻧَﻬَﻰﻋَﻨْﻪُ ﻗَﺎﻟَﺖْﻓَﺈِﻧِّﻲﺃَﺭَﻯﺃَﻫْﻠَﻚَﻳَﻔْﻌَﻠُﻮﻧَﻪُﻗَﺎﻝَ ﻓَﺎﺫْﻫَﺒِﻲﻓَﺎﻧْﻈُﺮِﻱﻓَﺬَﻫَﺒَﺖْﻓَﻨَﻈَﺮَﺕْﻓَﻠَﻢْﺗَﺮَ ﻣِﻦْﺣَﺎﺟَﺘِﻬَﺎﺷَﻴْﺌًﺎ ﻓَﻘَﺎﻝَﻟَﻮْ ﻛَﺎﻧَﺖْﻛَﺬَﻟِﻚَ ﻣَﺎ ﺟَﺎﻣَﻌْﺘُﻬَﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?'' என்றுகூறினார்கள். இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, "உம்மு யஅகூப்' எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "இப்படிப் பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும் ,அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், "(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும்நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லை
Onlinepj
Onlinepj
பெண்கள் புருவமுட��யை நீக்கலாமா
புருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. இக்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறு தான். பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (5931)
Onlinepj
Onlinepj
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால்மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்நாம் இவர்களைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களைஉற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். அல்குர்ஆன் (7 : 27) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிய போது குர்ஆனைக் கேட்பதற்காக அவர்களைச் சுற்றி ஜின்கள் அமர்ந்திருந்தனர். இதைநபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக அறிந்து கொள்ள முடியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வஹியின் மூலம் இதை அறிவித்துக் கொடுத்த பின்பே இதை நபியவர்கள் அறிந்து கொண்டார்கள். ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என(முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் (72 : 1) இறைவனுடைய உதவியின்றி சுயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது என்றால் வேறு எவராலும் நிச்சயமாக ஜின்களைப் பார்க்கவே முடியாது. இதை நாம் விளங்கிக் கொண்டால் ஜின்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களில் நாம் விழுந்து விட மாட்டோம்.
onlinepj
onlinepj
ஜின்களுக்கு என்று தனியொரு உலகம் இருப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிந்தித்தால்இது தவறான கருத்து என்பதை அறியலாம். ஜின்கள் மனிதர்கள் வாழும் பூமியில் தான் வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக் கணவாய்களில் தங்கி இருக்கின்றன. மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். அல்குர்ஆன் (55 : 33) பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள் என ஜின்களைப் பார்த்துக் கூறுவதாக இருந்தால் ஜின்கள் இந்தப் பூமியில் வசித்தாலே இவ்வாறு கூற முடியும். மேலும் பின்வரும் செய்திகளும் ஜின்கள் பூமியில் இருக்கின்றன என்று கூறுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3860) அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கிய போது நபியவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள் ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விரைந்தன. நூல் : அஹ்மத் (14914)
onlinepj
onlinepj
ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைபிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள முடியும். குர்ஆன் அரபு மொழியில் அமைந்துள்ளது. அரபுவார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கு அம்மொழியில் விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமுறையைப் பேணி குர்ஆனை ஓதுவது அவசியம். இல்லையென்றால் நாம் பிழையாக ஓத நேரிடும். குர்ஆனை பிழையின்றி திருத்தமாக ஓத வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். ﺃَﻭْ ﺯِﺩْ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺭَﺗِّﻞْ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﺗَﺮْﺗِﻴﻠًﺎ73(4) குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! அல்குர்ஆன் (73 : 4) அரபு எழுத்துக்களை உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்துவிட்டால் இறைவன்இட்ட இந்தக் கட்டளையை நாம் நிறைவேற்றியவர்களாகி விடுவொம். ஆனால் நடைமுறையில் தஜ்வீத் என்றொரு கலை இருக்கின்றது. தஜ்வீத் என்றால் சிறப்பாக ஓதுதல் என்பது பொருள். இதன் மூலம் அழகுற ராகத்துடன் ஓதுவதற்குப் பயிற்சியளிக்கப்படும். இதைஅறிந்துகொள்வது கட்டாயம் இல்லை என்றாலும் அறிந்து கொள்வது சிறந்தது. வசன நடைக்கு இலக்கணம் இருப்பது போல் கவிதை நடைக்கும் எல்லா ம்ழிகளிலும் இலக்கணம் உண்டு. இராகம் போட்டு ஓதும் போது இந்த விதியைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.ஆனால் தஜ்வீத் என்ற பெயரில் குர்ஆனுடன் விளையாடும் மடமைகளும் சொல்லித் தரப்படுகின்றன. அவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். உதாரணமாக இந்த இடத்தில் நிறுத்த வேண்டும்; இந்த இடத்தில் நிறுத்தக் கூடாது என்பது போலி தஜ்வீதாகும். ஒரு வாசகத்தை முழுமைப்படுத்தும் வகையில்நிறுத்தலாம். அப்படி மூச்சு இழுக்க முடியாவிட்டால் நமது மூச்சின் சக்திக்கு தக்கவாறு நிறுத்திக் கொள்ளலாம். இது மனிதனின் சக்திக்கு உட்பட்டு செய்ய வேண்டிய ஒன்றாகும். இதை விதியின் கீழ் அடைக்க முடியாது. மேலும் ஒரு வசனத்தின் இடையில் நிறுத்தினால் விட்ட இடத்தில் இருந்து ஓதாமல் அதற்கு முன்னால் ஓரிரு வார்த்தைகளை சேர்த்து ஓத வேண்டும் என்ற விதி தஜ்வீதில் உள்ளது. இது குர்ஆனுடன் விளையாடுவதாகும். உதாரணமாக சிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலல்லாலீன் இந்த வசனத்தில் சிராதல்லதீன அன் அம்த அலைஹிம் என்பது வரை தான் நமக்கு மூச்சு இழுக்க முடிந்தால் அட்துடன் நிறுத்தி விட்டு அடுத்த வாசகத்தில் இருந்து ஓத வேண்டும் என்பது தான் சரியானது. ஆனால் தஜ்வீத் என்ன சொல்கிறது என்றால் அலைஹிம் என்ற இடத்தில் நிறுத்தியதால் அலைஹிம் என்பதை மீண்டும் சொல்லி அதில் இருந்து தான் ஓத வேண்டுமாம். சிராதல்லதீன அன்அம்த அலைஹிம் அலைஹிம் கைரில் மக்லூபி அதாவது குர்ஆனில் ஒரு அலைஹிம் இருக்க இவர்கள் இரண்டு அலைஹிம் ஆக்கி விடுகிறார்கள். குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் சேர்க்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார் என்று தெரியவில்லை. இது போன்ற மடமைகளும் தஜ்வீதில் உள்ளதால் சரியானதை ஏற்று தவறானதை விட்டு விலகிக் கொள்ள வேண்டும். onlinepj
நெருப்பால் தண்டனைகூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை. மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம். ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺑﻜﻴﺮ ﺣﺪﺛﻨﺎ ﺍﻟﻠﻴﺚ ﻋﻦ ﻳﻮﻧﺲ ﻋﻦ ﺍﺑﻦ ﺷﻬﺎﺏ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺍﻟﻤﺴﻴﺐ ﻭﺃﺑﻲ ﺳﻠﻤﺔ ﺃﻥ ﺃﺑﺎ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ ﻗﺮﺻﺖ ﻧﻤﻠﺔ ﻧﺒﻴﺎ ﻣﻦ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﻓﺄﻣﺮ ﺑﻘﺮﻳﺔ ﺍﻟﻨﻤﻞ ﻓﺄﺣﺮﻗﺖ ﻓﺄﻭﺣﻰ ﺍﻟﻠﻪ ﺇﻟﻴﻪ ﺃﻥ ﻗﺮﺻﺘﻚ ﻧﻤﻠﺔ ﺃﺣﺮﻗﺖ ﺃﻣﺔ ﻣﻦ ﺍﻷﻣﻢ ﺗﺴﺒﺢ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: இறைத் தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையேநீங்கள் எரித்து விட்டீர்களே என்று ( அவரைக்கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 3019 ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺃﺑﻲ ﺃﻭﻳﺲ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﻲ ﻣﺎﻟﻚ ﻋﻦ ﺃﺑﻲ ﺍﻟﺰﻧﺎﺩ ﻋﻦ ﺍﻷﻋﺮﺝ ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻧﺰﻝ ﻧﺒﻲ ﻣﻦ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﺗﺤﺖ ﺷﺠﺮﺓ ﻓﻠﺪﻏﺘﻪ ﻧﻤﻠﺔ ﻓﺄﻣﺮ ﺑﺠﻬﺎﺯﻩ ﻓﺄﺧﺮﺝ ﻣﻦ ﺗﺤﺘﻬﺎ ﺛﻢ ﺃﻣﺮ ﺑﺒﻴﺘﻬﺎ ﻓﺄﺣﺮﻕ ﺑﺎﻟﻨﺎﺭ ﻓﺄﻭﺣﻰ ﺍﻟﻠﻪ ﺇﻟﻴﻪ ﻓﻬﻼ ﻧﻤﻠﺔ ﻭﺍﺣﺪﺓ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறேஅவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறேஅது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போதுஅல்லாஹ் அவருக்கு , உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்றுஅறிவித்(து அவரைக் கண்டித்)தான். புஹாரி 3319 இந்த ஹதீஸ்களீல் எறும்பை எரித்ததை அல்லாஹ் கண்டிக்கவில்லை. கடித்த ஒரு எறும்பை எரித்திருக்கலாமே? எல்லாஎறும்புகளையும் ஏன் எரிக்க வெண்டும் என்று தான் கண்டிக்கிறான். நெருப்பில் எரிக்காமல் வேறு வகையில் அழித்திருக்கலாமே என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம். சில சகோதரர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி கொசு பேட் பயன்படுத்தக் கூடாதுஎன்று நமக்கு சுட்டிக் காட்டியுள்ளனர். ﺣﺪﺛﻨﺎﺃﺑﻮﺻﺎﻟﺢﻣﺤﺒﻮﺏﺑﻦﻣﻮﺳﻰ ﺃﺧﺒﺮﻧﺎﺃﺑﻮ ﺇﺳﺤﻖ ﺍﻟﻔﺰﺍﺭﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺇﺳﺤﻖ ﺍﻟﺸﻴﺒﺎﻧﻲﻋﻦ ﺍﺑﻦ ﺳﻌﺪ ﻗﺎﻝ ﻏﻴﺮ ﺃﺑﻲ ﺻﺎﻟﺢ ﻋﻦﺍﻟﺤﺴﻦﺑﻦﺳﻌﺪﻋﻦﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦﺑﻦ ﻋﺒﺪﺍﻟﻠﻪﻋﻦﺃﺑﻴﻪ-ﻛﺎﻥﺛﻘﺔﻗﻠﻴﻞ ﺍﻟﺤﺪﻳﺚ،ﻭﻗﺪ ﺗﻜﻠﻤﻮﺍ ﻓﻲ ﺭﻭﺍﻳﺘﻪ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻭﻛﺎﻥﺻﻐﻴﺮًﺍ-.ﻗﺎﻝﻛﻨﺎﻣﻊﺭﺳﻮﻝﺍﻟﻠﻪ ﺻﻠﻰﺍﻟﻠﻪﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻓﻲﺳﻔﺮﻓﺎﻧﻄﻠﻖ ﻟﺤﺎﺟﺘﻪﻓﺮﺃﻳﻨﺎﺣﻤﺮﺓ ﻣﻌﻬﺎﻓﺮﺧﺎﻥ ﻓﺄﺧﺬﻧﺎ ﻓﺮﺧﻴﻬﺎﻓﺠﺎﺀﺕﺍﻟﺤﻤﺮﺓﻓﺠﻌﻠﺖﺗﻔﺮﺵ ﻓﺠﺎﺀﺍﻟﻨﺒﻲﺻﻠﻰﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻓﻘﺎﻝ ﻣﻦ ﻓﺠﻊﻫﺬﻩﺑﻮﻟﺪﻫﺎﺭﺩﻭﺍﻭﻟﺪﻫﺎﺇﻟﻴﻬﺎﻭﺭﺃﻯ ﻗﺮﻳﺔﻧﻤﻞﻗﺪﺣﺮﻗﻨﺎﻫﺎ ﻓﻘﺎﻝﻣﻦﺣﺮﻕ ﻫﺬﻩ ﻗﻠﻨﺎﻧﺤﻦﻗﺎﻝﺇﻧﻪﻻﻳﻨﺒﻐﻲﺃﻥﻳﻌﺬﺏ ﺑﺎﻟﻨﺎﺭ ﺇﻻ ﺭﺏ ﺍﻟﻨﺎﺭ நாங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள்கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : அபூதாவூத் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தால் இதில் இருந்து கொசு பேட் பயன்படுத்தக் கூடாதுஎன்று முடிவு செய்வது சரியானது தான். ஆனால் இது பலவீனமான ஹதீஸாகும். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கும் எதிரானதாகும். இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன்அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. இதற்கான ஆதாரம் வருமாறு (79)ﺧﺖ4ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﺑﻦ ﻋﺒﺪﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩﺛﻘﺔﻗﺎﻝﺑﻦﻣﻌﻴﻦﻟﻢﻳﺴﻤﻊﻣﻦ ﺃﺑﻴﻪﻭﻗﺎﻝ ﺑﻦﺍﻟﻤﺪﻳﻨﻲ ﻟﻘﻲﺃﺑﺎﻩ ﻭﺳﻤﻊ ﻣﻨﻪ ﺣﺪﻳﺜﻴﻦﺣﺪﻳﺚﺍﻟﻀﺐﻭﺣﺪﻳﺚﺗﺄﺧﻴﺮ ﺍﻟﺼﻼﺓﻭﻗﺎﻝﺍﻟﻌﺠﻠﻲﻳﻘﺎﻝﺃﻧﻪﻟﻢﻳﺴﻤﻊ ﻣﻦﺃﺑﻴﻪﺍﻻﺣﺮﻓﺎﻭﺍﺣﺪﺍﻣﺤﺮﻡﺍﻟﺤﺮﺍﻡ ﻭﺫﻛﺮﺍﻟﺒﺨﺎﺭﻱﻓﻲﺍﻟﺘﺎﺭﻳﺦﺍﻻﻭﺳﻂﻣﻦ ﻃﺮﻳﻖﺑﻦﺧﺜﻴﻢﻋﻦﺍﻟﻘﺎﺳﻢﺑﻦﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﻋﻦﺃﺑﻴﻪﻗﺎﻝﺍﻧﻲﻣﻊﺃﺑﻲﻓﺬﻛﺮ ﺍﻟﺤﺪﻳﺚﻓﻲﺗﺄﺧﻴﺮﺍﻟﺼﻼﺓﻗﺎﻝﺍﻟﺒﺨﺎﺭﻱ ﺳﻤﻌﺘﻪﻳﻘﻮﻝﻟﻢﻳﺴﻤﻊﻣﻦﺃﺑﻴﻪﻭﺣﺪﻳﺚ ﺑﻦﺧﺜﻴﻢﻋﻨﺪﻱﻭﻗﺎﻝﺃﺣﻤﺪﻛﺎﻥﻟﻪﻋﻨﺪ ﻣﻮﺕﺃﺑﻴﻪﺳﺖﺳﻨﻴﻦﻭﺍﻟﺜﻮﺭﻱﻭﺷﺮﻳﻚ ﻳﻘﻮﻻﻥﺳﻤﻊﻭﺇﺳﺮﺍﺋﻴﻞﻳﻘﻮﻝﻓﻲﺣﺪﻳﺚ ﺍﻟﻀﺐﻋﻨﻪﺳﻤﻌﺖﻭﺃﺧﺮﺝﺍﻟﺒﺨﺎﺭﻱﻓﻲ ﺍﻟﺘﺎﺭﻳﺦﺍﻟﺼﻐﻴﺮﻃﺮﻳﻖﺍﻟﻘﺎﺳﻢﺑﻦﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦﻋﻦﺃﺑﻴﻪﻟﻤﺎﺣﻀﺮﺕﻋﺒﺪﺍﻟﻠﻪ ﺍﻟﻮﻓﺎﺓﻗﻠﺖﻟﻪﺃﻭﺻﻨﻲﻗﺎﻝﺃﺑﻚﻣﻦ ﺧﻄﻴﺘﻚﻭﺳﻨﺪﻩﻻﺑﺄﺱﺑﻪﻗﻠﺖﻓﻌﻠﻰ ﻫﺬﺍ ﻳﻜﻮﻥﺍﻟﺬﻱﺻﺮﺡﻓﻴﻪﺑﺎﻟﺴﻤﺎﻉﻣﻦﺃﺑﻴﻪ ﺃﺭﺑﻌﺔﺃﺣﺪﻫﺎﻣﻮﻗﻮﻑﻭﺣﺪﻳﺜﻪﻋﻨﻪﻛﺜﻴﺮ ﻓﻔﻲ ﺍﻟﺴﻨﻦ ﺧﻤﺴﺔ ﻋﺸﺮ ﻭﻓﻲ ﺍﻟﻤﺴﻨﺪ ﺯﻳﺎﺩﺓ ﻋﻠﻰ ﺫﻟﻚ ﺳﺒﻌﺔ ﺃﺣﺎﺩﻳﺚ ﻣﻌﻈﻤﻬﺎ ﺑﺎﻟﻌﻨﻌﻨﺔ ﻭﻫﺬﺍﻫﻮ ﺍﻟﺘﺪﻟﻴﺲ ﻭﺍﻟﻠﻪﺃﻋﻠﻢ-ﺗﻌﺮﻳﻒ ﺍﻫﻞ ﺍﻟﺘﻘﺪﻳﺲﺑﻤﺮﺍﺗﺐﺍﻟﻤﻮﺻﻮﻓﻴﻦﺑﺎﻟﺘﺪﻟﻴﺲﺑﻦ ﺣﺠﺮ]ﺹ[40 437-ﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦﺑﻦﻋﺒﺪﺍﻟﻠﻪﺑﻦ ﻣﺴﻌﻮﺩﻗﺎﻝﻳﺤﻴﻰﺑﻦﺳﻌﻴﺪﺍﻟﻘﻄﺎﻥﻣﺎﺕ ﺃﺑﻮﻩﻭﻟﻪﻧﺤﻮﺳﺖﺳﻨﻴﻦﻭﻗﺎﻝﺑﻦﻣﻌﻴﻦ ﻓﻲﺭﻭﺍﻳﺔﻟﻢﻳﺴﻤﻊﻣﻦﺃﺑﻴﻪﻭﺭﻭﻯﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦﺻﺎﻟﺢﻋﻦﺑﻦﻣﻌﻴﻦﺃﻧﻪﺳﻤﻊﻣﻦﺃﺑﻴﻪ ﻭﻣﻦﻋﻠﻲﺭﺿﻲﺍﻟﻠﻪﻋﻨﻪﻭﺳﺌﻞﺃﺣﻤﺪﺑﻦ ﺣﻨﺒﻞﻫﻞﺳﻤﻊﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦﻣﻦﺃﺑﻴﻪ ﻓﻘﺎﻝﺃﻣﺎﺍﻟﺜﻮﺭﻱﻭﺷﺮﻳﻚﻓﻴﻘﻮﻻﻥﺳﻤﻊ ﻭﻛﺬﻟﻚﺃﺛﺒﺖﻟﻪﺑﻦﺍﻟﻤﺪﻳﻨﻲﺍﻟﺴﻤﺎﻉﻣﻦ ﺃﺑﻴﻪ ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ ﺟﺎﻣﻊﺍﻟﺘﺤﺼﻴﻞﻓﻲ ﺃﺣﻜﺎﻡﺍﻟﻤﺮﺍﺳﻴﻞ]ﺹ [223 onlinepj
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
அகீகா கொடுப்பது சுன்னத்தா ?கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா ? ﺃﺧﺒﺮﻧﺎﻋﻤﺮﻭﺑﻦﻋﻠﻲﻭﻣﺤﻤﺪﺑﻦﻋﺒﺪ ﺍﻷﻋﻠﻰﻗﺎﻻﺣﺪﺛﻨﺎ ﻳﺰﻳﺪﻭﻫﻮ ﺍﺑﻦﺯﺭﻳﻊ ﻋﻦ ﺳﻌﻴﺪﺃﻧﺒﺄﻧﺎﻗﺘﺎﺩﺓﻋﻦﺍﻟﺤﺴﻦﻋﻦﺳﻤﺮﺓ ﺑﻦﺟﻨﺪﺏﻋﻦﺭﺳﻮﻝﺍﻟﻠﻪﺻﻠﻰﺍﻟﻠﻪﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢﻗﺎﻝﻛﻞﻏﻼﻡﺭﻫﻴﻦﺑﻌﻘﻴﻘﺘﻪﺗﺬﺑﺢ ﻋﻨﻪ ﻳﻮﻡ ﺳﺎﺑﻌﻪ ﻭﻳﺤﻠﻖ ﺭﺃﺳﻪ ﻭﻳﺴﻤﻰ 'ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனதுஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலைமுடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி) நூல்: நஸயீ 4149 இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும். அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது.14, 21 ஆகிய நாட்களில் அகீகாகொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை. குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. அகீகா கட்டாயக் கடமை, கொடுக்கா விட்டால் தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை கற்றுத் தந்தால் அதை இயன்ற வரை நாம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். சக்தி இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றித் தான்ஆக வேண்டும் என்று எந்த வணக்கத்தையும் மார்க்கம் கட்டளையிடவில்லை. ﺣﺪﺛﻨﺎﺇﺳﻤﺎﻋﻴﻞﺣﺪﺛﻨﻲﻣﺎﻟﻚﻋﻦﺃﺑﻲ ﺍﻟﺰﻧﺎﺩﻋﻦﺍﻷﻋﺮﺝﻋﻦﺃﺑﻲﻫﺮﻳﺮﺓﻋﻦ ﺍﻟﻨﺒﻲﺻﻠﻰﺍﻟﻠﻪﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢﻗﺎﻝﺩﻋﻮﻧﻲ ﻣﺎ ﺗﺮﻛﺘﻜﻢﺇﻧﻤﺎﻫﻠﻚﻣﻦﻛﺎﻥﻗﺒﻠﻜﻢﺑﺴﺆﺍﻟﻬﻢ ﻭﺍﺧﺘﻼﻓﻬﻢﻋﻠﻰﺃﻧﺒﻴﺎﺋﻬﻢﻓﺈﺫﺍﻧﻬﻴﺘﻜﻢﻋﻦ ﺷﻲﺀﻓﺎﺟﺘﻨﺒﻮﻩﻭﺇﺫﺍﺃﻣﺮﺗﻜﻢﺑﺄﻣﺮﻓﺄﺗﻮﺍﻣﻨﻪ ﻣﺎ ﺍﺳﺘﻄﻌﺘﻢ 'ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதைஉங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7288 'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ்சிரமப்படுத்த மாட்டான்' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே அகீகாவை நிறைவேற்றுவதற்குத் தேவையானபொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால்நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை . ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டைஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைநிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதைமுதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால்குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்றுநீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மேற்கண்ட புகாரி 7288வது ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 2:286 வசனத்தின் அடிப்படையில் இந்த சுன்னத்தை நிறைவேற்றாமல் இருப்பது குற்றமில்லை.onlinepj
ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7,10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லைஎன்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா? இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை. ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺍﻟْﻌَﻠَﺎﺀِ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﺍﺑْﻦُ ﺇِﺩْﺭِﻳﺲَ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﻋَﺎﺻِﻢُ ﺑْﻦُ ﻛُﻠَﻴْﺐٍ ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ ﻋَﻦْ ﺭَﺟُﻞٍ ﻣِﻦْ ﺍﻟْﺄَﻧْﺼَﺎﺭِ ﻗَﺎﻝَ ﺧَﺮَﺟْﻨَﺎ ﻣَﻊَ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻓِﻲ ﺟَﻨَﺎﺯَﺓٍ ﻓَﺮَﺃَﻳْﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻳُﻮﺻِﻲ ﺍﻟْﺤَﺎﻓِﺮَ ﺃَﻭْﺳِﻊْ ﻣِﻦْ ﻗِﺒَﻞِ ﺭِﺟْﻠَﻴْﻪِ ﺃَﻭْﺳِﻊْ ﻣِﻦْ ﻗِﺒَﻞِ ﺭَﺃْﺳِﻪِ ﻓَﻠَﻤَّﺎ ﺭَﺟَﻊَ ﺍﺳْﺘَﻘْﺒَﻠَﻪُ ﺩَﺍﻋِﻲ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﻓَﺠَﺎﺀَ ﻭَﺟِﻲﺀَ ﺑِﺎﻟﻄَّﻌَﺎﻡِ ﻓَﻮَﺿَﻊَ ﻳَﺪَﻩُ ﺛُﻢَّ ﻭَﺿَﻊَ ﺍﻟْﻘَﻮْﻡُ ﻓَﺄَﻛَﻠُﻮﺍ ﻓَﻨَﻈَﺮَ ﺁﺑَﺎﺅُﻧَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻠُﻮﻙُ ﻟُﻘْﻤَﺔً ﻓِﻲ ﻓَﻤِﻪِ ﺛُﻢَّ ﻗَﺎﻝَ ﺃَﺟِﺪُ ﻟَﺤْﻢَ ﺷَﺎﺓٍ ﺃُﺧِﺬَﺕْ ﺑِﻐَﻴْﺮِ ﺇِﺫْﻥِ ﺃَﻫْﻠِﻬَﺎ ﻓَﺄَﺭْﺳَﻠَﺖْ ﺍﻟْﻤَﺮْﺃَﺓُ ﻗَﺎﻟَﺖْ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧِّﻲ ﺃَﺭْﺳَﻠْﺖُ ﺇِﻟَﻰ ﺍﻟْﺒَﻘِﻴﻊِ ﻳَﺸْﺘَﺮِﻱ ﻟِﻲ ﺷَﺎﺓً ﻓَﻠَﻢْ ﺃَﺟِﺪْ ﻓَﺄَﺭْﺳَﻠْﺖُ ﺇِﻟَﻰ ﺟَﺎﺭٍ ﻟِﻲ ﻗَﺪْ ﺍﺷْﺘَﺮَﻯ ﺷَﺎﺓً ﺃَﻥْ ﺃَﺭْﺳِﻞْ ﺇِﻟَﻲَّ ﺑِﻬَﺎ ﺑِﺜَﻤَﻨِﻬَﺎ ﻓَﻠَﻢْ ﻳُﻮﺟَﺪْ ﻓَﺄَﺭْﺳَﻠْﺖُ ﺇِﻟَﻰ ﺍﻣْﺮَﺃَﺗِﻪِ ﻓَﺄَﺭْﺳَﻠَﺖْ ﺇِﻟَﻲَّ ﺑِﻬَﺎ ﻓَﻘَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺃَﻃْﻌِﻤِﻴﻪِ ﺍﻟْﺄُﺳَﺎﺭَﻯ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒருஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் கப்ருக்கருகில் இருந்துகொண்டு, 'இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்' என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுதுஒரு பெண்ணின் அழைப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியைநான் சாப்பிடுகிறேன்' என்றுகூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்குஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனதுஅண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்' என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அதைக் கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர் நூல்: அபூதாவூத் 2894, பைஹகீ, தாரகுத்னீ. ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்றுஇந்த ஹதீஸில் கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண்,இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மேலும் அந்த ஹதீஸில் அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் அழைத்ததாகவே கூறப்படுகிறது. எனவேஇறந்தவரின் குடும்பத்துப் பெண்ணாக அவர் இருக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகிறது. ﺣﺪﺛﻨﺎ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺇﺳﺤﺎﻕ ﻋﻦ ﺯﺍﺋﺪﺓ ﻋﻦ ﻋﺎﺻﻢ ﺑﻦ ﻛﻠﻴﺐ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﺃﻥ ﺭﺟﻼ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﺃﺧﺒﺮﻩ ﻗﺎﻝ ﺧﺮﺟﻨﺎ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺟﻨﺎﺯﺓ ﻓﻠﻤﺎ ﺭﺟﻌﻨﺎ ﻟﻘﻴﻨﺎ ﺩﺍﻋﻲ ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ ﻗﺮﻳﺶ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺇﻥ ﻓﻼﻧﺔ ﺗﺪﻋﻮﻙ ﻭﻣﻦ ﻣﻌﻚ ﺇﻟﻰ ﻃﻌﺎﻡ ﻓﺎﻧﺼﺮﻑ ﻓﺎﻧﺼﺮﻓﻨﺎ ﻣﻌﻪ ﻓﺠﻠﺴﻨﺎ ﻣﺠﺎﻟﺲ ﺍﻟﻐﻠﻤﺎﻥ ﻣﻦ ﺁﺑﺎﺋﻬﻢ ﺑﻴﻦ ﺃﻳﺪﻳﻬﻢ ﺛﻢ ﺟﻲﺀ ﺑﺎﻟﻄﻌﺎﻡ ﻓﻮﺿﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺪﻩ ﻭﻭﺿﻊ ﺍﻟﻘﻮﻡ ﺃﻳﺪﻳﻬﻢ ﻓﻔﻄﻦ ﻟﻪ ﺍﻟﻘﻮﻡ ﻭﻫﻮ ﻳﻠﻮﻙ ﻟﻘﻤﺘﻪ ﻻ ﻳﺠﻴﺰﻫﺎ ﻓﺮﻓﻌﻮﺍ ﺃﻳﺪﻳﻬﻢ ﻭﻏﻔﻠﻮﺍ ﻋﻨﺎ ﺛﻢ ﺫﻛﺮﻭﺍ ﻓﺄﺧﺬﻭﺍ ﺑﺄﻳﺪﻳﻨﺎ ﻓﺠﻌﻞ ﺍﻟﺮﺟﻞ ﻳﻀﺮﺏ ﺍﻟﻠﻘﻤﺔ ﺑﻴﺪﻩ ﺣﺘﻰ ﺗﺴﻘﻂ ﺛﻢ ﺃﻣﺴﻜﻮﺍ ﺑﺄﻳﺪﻳﻨﺎ ﻳﻨﻈﺮﻭﻥ ﻣﺎ ﻳﺼﻨﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻠﻔﻈﻬﺎ ﻓﺄﻟﻘﺎﻫﺎ ﻓﻘﺎﻝ ﺃﺟﺪ ﻟﺤﻢ ﺷﺎﺓ ﺃﺧﺬﺕ ﺑﻐﻴﺮ ﺇﺫﻥ ﺃﻫﻠﻬﺎ ﻓﻘﺎﻣﺖ ﺍﻟﻤﺮﺃﺓ ﻓﻘﺎﻟﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺇﻧﻪ ﻛﺎﻥ ﻓﻲ ﻧﻔﺴﻲ ﺃﻥ ﺃﺟﻤﻌﻚ ﻭﻣﻦ ﻣﻌﻚ ﻋﻠﻰ ﻃﻌﺎﻡ ﻓﺄﺭﺳﻠﺖ ﺇﻟﻰ ﺍﻟﺒﻘﻴﻊ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﺷﺎﺓ ﺗﺒﺎﻉ ﻭﻛﺎﻥ ﻋﺎﻣﺮ ﺑﻦ ﺃﺑﻲ ﻭﻗﺎﺹ ﺍﺑﺘﺎﻉ ﺷﺎﺓ ﺃﻣﺲ ﻣﻦ ﺍﻟﺒﻘﻴﻊ ﻓﺄﺭﺳﻠﺖ ﺇﻟﻴﻪ ﺃﻥ ﺍﺑﺘﻐﻲ ﻟﻲ ﺷﺎﺓ ﻓﻲ ﺍﻟﺒﻘﻴﻊ ﻓﻠﻢ ﺗﻮﺟﺪ ﻓﺬﻛﺮ ﻟﻲ ﺃﻧﻚ ﺍﺷﺘﺮﻳﺖ ﺷﺎﺓ ﻓﺄﺭﺳﻞ ﺑﻬﺎ ﺇﻟﻲ ﻓﻠﻢ ﻳﺠﺪﻩ ﺍﻟﺮﺳﻮﻝ ﻭﻭﺟﺪ ﺃﻫﻠﻪ ﻓﺪﻓﻌﻮﻫﺎ ﺇﻟﻰ ﺭﺳﻮﻟﻲ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻃﻌﻤﻮﻫﺎ ﺍﻷﺳﺎﺭﻯ அஹ்மத் (21471) நூலின் அறிவிப்பில் நாங்கள் திரும்பிய போது குரைஷ் குலப் பெண்ணின் அழைப்பாளரைச் சந்தித்தோம் என்று கூறப்படுகிறது. ஜனாஸாவில் பங்கெடுத்து விட்டு திரும்பும் போதுதான் குரைஷ் குலப் பெண் விருந்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது., எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும்3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும்என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.
pj
pj
இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமைநாள் வரை உருமாற்றி விடுவான். அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி( நூல் : அஸ்ஸ‚னனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272 புகாரி (5590( விபச்சாரம் மதுபட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகைநாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1619 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இருஅறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது. சைத்தானின் இசைக் கருவிகளா? என்றுஅபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி)அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீசொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்றுநபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்குமட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடைசெய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி( நூல்: அஹ்மத் 2494 ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தன் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்)வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் (என்னிடம் அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை(காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதேப் பாதைக்குவாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்) நூல் : அஹ்மத் (4307( குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
Online pj
Online pj
நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில்கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமானமக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசைமார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை. மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள். இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள். எனவேஇவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவுசரியானதா என ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டது. இசை தொடர்பாக மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்என்பதற்காக டிசம்பர் 29ம் தேதி சென்னையில் ஆய்வுக் கூட்டம் இருப்பதாகவும், எனவே விரிவாக ஆய்வு செய்து விட்டு குறிப்பிட்ட தேதியில்வருமாறு தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மாநிலப் பேச்சாளர்களுக்கு, தலைமையிலிருந்து அறிவிப்புச் செய்யப்பட்டது. திட்டமிட்டவாறுடிசம்பர் 29ம் தேதி அன்று ஆய்வுக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. அங்கு வந்த ஒவ்வொருவரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியாக ஆதாரங்களைவைத்துப் பார்க்கும் போதுஇசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற கருத்துத் தான் சரியானது என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தோம். இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையானஆதாரமாகக் கொள்கிறார்கள். ஆதாரம்: 1 அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய)மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590 'விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப் பட்டிருப்பதாலும், 'இவற்றை ஆகுமாக்குவார்கள்' என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என விளங்கிக்கொள்ளலாம்' என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம்பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால்ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத் தன்மை மட்டும் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்துவிளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமானநினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள். ஒருவர் நல்ல மனனத் தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பி விட்டால், அவர்நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டு விட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது. மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா ? அல்லது பின்பு அறிவித்ததா ?என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவுகிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல்நிறுத்தி வைக்க வேண்டும். மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக்காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்குஎடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாத்தம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும்மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம்அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போதுஅதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார். நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 30, பக்கம்: 242 இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா ? அல்லது பின்பு அறிவித்தாரா ?என்ற தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை, இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது. இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியைஇமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள். நூல்: அஸ்ஸனனுல் குப்ரா பாகம்: 3, பக்கம்: 272 இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு இமாம் பைஹகீஅவர்கள் பதிவு செய்த ஹதீஸ் போதிய ஆதாரமாக உள்ளது. பைஹகீயில் உள்ள இந்தச் சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்திஉள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது. ஆதாரம்: 2 நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரல
தப்லீகின் தஃலீம் ���ொகுப்பு
ஒரு ஹதீதுக் கலை நிபுணர் குர்ஆன் வசனங்களுக்கோ நபிமொழிகளுக்கோ தவறான விளக்கம்கொடுப்பவராக அல்லது கொடுக்கப்பட்ட தவறான விளக்கங்களை பாராட்டுபவராக இருக்கமாட்டார். ஸகரிய்யா சாகிப் தன் தஃலீம் தொகுப்பு நூலில் பல இடங்களில் தவறான விளக்கங்களைக் கொடுத்திருப்பதுடன் வேறுபலர் கொடுத்த தவறான விளங்கங்களைப் பாராட்டவும் செய்கிறார். தெளிவான சான்றுகளையும் சிக்கலானவைகளாக சித்தரிக்கின்றார். தஃலீம் தொகுப்பு திக்ரின் சிறப்புகள் அத்தியாயம் பக்கம் 783 ஐப் புரட்டுங்கள். ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள் என்ற (9:119) இறை வசனத்தை எழுதிவிட்டு அடுத்து தொடர்கிறார். நீங்கள் அல்லாஹ்வுடன் இருங்கள். அது உங்களுக்கு முடியவில்லையானால் அல்லாஹ்வுடன் இருப்பவர்களுடன்இருங்கள் என்று சூஃபியாக்கள் கூறுகின்றனர். இந்த விபரீதமான பொருளை இவர் கொடுக்கும் இவரது அசட்டுத் துணிச்சலை என்னவென்று கூறுவது ?இவர் விளங்கியிருக்கின்ற விளக்கம் தவறானதுமட்டுமல்ல. வழிகேட்டுக்கு நேராக இட்டுச் செல்லும் பொருளாகும் என்பதை இங்கு காண்போம். இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தைப் படியுங்கள். தபூக் யுத்தத்தில் பங்கு கொள்ள நபித் தோழர்கள் திரளாகப் புறப்பட்டார்கள். நயவஞ்சகர்கள்வழமை போல் இந்த யுத்தத்திற்குப் புறப்படவில்லை . திரும்பி வந்த நபி ஸல் அவர்களிடம் நயவஞ்சகர்கள் நல்லவர்களைப் போல் பாசாங்கு செய்து பொய்க் காரணம் கூறி நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்கள்.அந்த யுத்தத்திற்கு மூன்று உண்மைத் தோழர்கள்புறப்படவில்லை. கலந்து கொள்ளாமைக்குத் தகுந்த காரணமும் இல்லை. திரும்பி வந்த நபியவர்களிடம் இம்மூவரும் உண்மையைச் சொல்லி விட்டார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். இம்மூவரும் நபியவர்களால் தண்டிக்கப்பட்டார்கள். ஐம்பதுதினங்களுக்குப் பின்னர் இவர்களை மன்னித்து விட்டதாக இறைவன்(9:118) வசனத்தை இறக்கினான். உண்மையே உரைத்த இத்தோழர்கள் இறை மன்னிப்பை அடைந்தார்கள். பொய்க்காரணம் கூறிய நயவஞ்சகர்கள் இறை மன்னிப்பென்ற பாக்கியத்தை இழந்தார்கள் (இச்சம்பவத்தை விரிவாக புகாரி உள்பட பல்வேறு ஹதீது நூல்களில் காணலாம். ஸகரிய்யா ஸாகிபும் இந்த முழு சம்பவத்தை தனது தஃலீம் தொகுப்பில்ஸஹாபாக்களின் வரலாறுகள் என்ற தலைப்பில் ஒன்பதாவது சம்பவமாக இடம் பெறச் செய்திருக்கிறார்) இம்மூவருக்கும் வழங்கப்பட்ட இறைமன்னிப்பு தொடர்பான வசனத்திற்கு பின்னரே 9:119 வசனம் அமைந்துள்ளது. இதிலிருந்து நாம் விளங்குவது என்ன? இந்த மூவரைப் போல் நாமும் இறைவனை அஞ்ச வேண்டும். அவர்கள் உண்மை பேசி இறையருளுக்குரியவர்களாக திகழ்ந்ததைப்போல் நாமும் வாழ வேண்டும். இதுவே இந்த வசனம் நமக்குத் தரும் போதனையாகும். ஆனால் இந்த வசனத்தின் கருத்தைவேறு எங்கோ இவர் கொண்டு சொல்கிறார் திசை திருப்புகிறார். இறைவனை அஞ்சுங்கள் என்றால் இறைவனுடன் இருங்கள் என்று பொருளாம். உண்மையாளர்களுடன் இருங்கள் என்றால் இறைவனுடன் இருக்க முடியாத நிலையில் இறைவனுடன் இருப்பவர்களுடனாவது இருங்கள் என்று பொருளாம். நபித் தோழரோ, நபித்தோழர்களிடம் பாடம் பெற்ற மேதைகளோ ,நபிமொழித் தொகுப்புகளைத் தந்த மூதறிஞர்களோ இந்த வினோத விளக்கத்தைத் தந்ததாக இவர் குறிப்பிடவும் இல்லை. எந்த நூலையும் இவர் மேற்கோள் காட்டவும் இல்லை. மாறாக சூஃபியாக்கள் என்போர் தாம் இவ்வாறு விளக்கம் சொன்னதாக கூறுகிறார். முறைகேடான விளக்கங்களை சூஃபியாக்கள் என்போர்தலைகளில் கட்டிவிடுவது இவரது வாடிக்கை. அத்தோடு விட்டாரா? 482 ஆம் பக்கத்தில் இதே 9:119 வசனத்தை எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுகிறார். இவ்விடத்தில் உண்மையாளர்கள் என்பதுஞானிகளாகிய சூஃபியாக்களையே குறிக்கின்றது . இவர்களுக்கு ஸஹாபாக்களின் மீது என்ன கோபம்? தாபியீன்கள், தபாஉத்தாபிஈன்கள் மீது என்ன வெறுப்பு? இவர்களையெல்லாம் இந்த வசனத்தின் உண்மையாளர்கள் என்பது குறிக்காதாம். இவர் போற்றும் சூஃபியாக்களைத் தான் குறிக்குமாம். இந்த சூஃபியாக்களின் மாண்புகளை(?) இவர் விவரிக்கும் வாசகங்களைப் படியுங்கள் (பக்கம் 482 கண்ணியம் வாய்ந்தவரென்று நீ கருதும் ஒரு பெரியவரைச் சந்தித்தால் அவருக்கு ஊழியம் செய்வாயாக. அவரிடம் இறந்த மனிதனைப் போன்று ஆகிவிடு. அவர், தான் விரும்பியபடி உன்னைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். உன்னுடைய விருப்பப்படி நீ செயல்படாதே. அவர் இடும் உத்தரவுகளை உடனே நிறைவேற்று . அவர்தடுப்பதை விட்டும் விலகிக் கொள். அவர் தொழில் செய்யும் படி கூறினால் தொழில் செய். அவர் உட்காரும்படிக் கூறினால் உட்காருவாயாக .. இவை இவரது மணிவாசகங்கள் (?) நமக்கென்று சுயவிருப்பம் ஏதும் கூடாதாம். தொழில் செய்யலாகாதாம். அவர் விருப்பத்திற்கு நம்மைப் பயன்படுத்துவாராம். அந்த பெரியாருக்கு இவ்வாறு பணிவதால் தான்.பிணம் போல் ஆவதால் தான் இறைவனது தொடர்பை நாம் அடைய முடியுமாம். இவர் தான் ஞானியாம். பூரண குருவாம். ஆனால் தனக்குப் பிடித்தமில்லாதவருடன் வாழுமாறுநபியவர்கள் ஒரு பெண்ணிடம் கூறிய போது இது உங்கள் கட்டளையா? என்று அப்பெண் மணி நபி ஸல் அவர்களிடம் வினவினார். (இல்லைஅவருக்காக) நான் சிபாரிசு தான் செய்கிறேன் என்று நபி ஸல் கூறவும் அல்லாஹ்வின் தூதரே அவர் எனக்குத் தேவையில்லை என்று அப்பெண் மறுத்து விட்டார். இச்செய்தி புகாரியில் பதிவாகியுள்ளது. இச்செய்திஇவருக்குத் தெரியாதா? நபி ஸல் அவர்களே ஒரு பெண்ணின் சுயவிருப்பத்திற்கு வழிவிட்டிருக்கிறார்கள். நபியவர்களின்கால்தூசிக் கூட தகுதியுற்றவர்களின் சுயவிருப்பத்திற்கு நாம் பலியாக வேண்டும் என்று கூறும் இவரது தப்லீக் எத்திவைப்பது எதனை? நபிவழியையா? மனிதர்களை அடிமைப்படுத்தத் துடிக்கும்கும்பல்களின் தீயவழியையா? இறைவனுடன் நமக்குத் தொடர்பை ஏற்படுத்தும் அதி அற்புத ஞானிகளாம் சூஃபியாக்கள். எந்த சூஃபியாக்கள்? (.1மிம்பரில் ஏறி நிர்வாண கோலத்தில் சொற்பொழிவுவாற்றிய சூபிகளையா .2பலபெரியார்கள் முன்பு காற்று விட்டுவிட்டு இன்னொரு வரைக் ட்டிஇவர்தான் காற்று ட்டார் என்று பழிசொல்லி தலைகுனியச் செய்வார்களேஅந்த சூபியாக்களையா .3பெண்களையும், சிறுவர்களையும் தகாத செயல்களுக்கு அழைத்தார்களே அந்த சூபியாக்களையா .4முக்கடவுள் நம்பிக்
சனி, 6 ஆகஸ்ட், 2011
கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாறத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்குமாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ''அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ்உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்குர்ஆன் (2 : 222) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் அல்லது மனைவியின் பின் துவாரத்தில் புணருபவன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை என்று நம்புபவன் முஹம்மதின்மீது அல்லாஹ் அருளிய (வேதத்)தை மறுத்துவிட்டவனாவான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத் (9779) எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே. பின்வரும்வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது. உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! அல்குர்ஆன் (2 : 223) அதே நேரத்தில் இவ்வாறு செய்வதால் உடல் நலத்திற்கு கேடு என மருத்துவம் கூறினால் இதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடலுக்குத் தீங்கிழைக்கும் காரியங்களை செய்யக்கூடாது என குர்ஆன் கூறுகின்றது. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் (2 : 195) கணவன் மனைவிக்கிடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல்அல்ல. எனவே தான் அல்லாஹ் மனைவியர் விளை நிலங்கள் என்ற அழகான உவமையோடு நிறுத்திக்கொண்டான். இதற்காகத்தான் இல்லறம் பற்றி நீங்கள் கேட்ட கேள்வியை மூடலாக விட்டுள்ளோம்.
மருத்துவக் காப்பீடு கூடாது என்பதற்கு நீங்கள் கூறியகாரணங்கள் ஏற்புடையதாக இல்லை. காய்கள் பழுப்பதற்கு முன்பாக அவை மரத்தில் இருக்கும் நிலையில் அவற்றுக்காக விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். நீங்கள் இதை சுட்டிக்காட்டி மருத்துவ காப்பீடும்இதைப் போன்றது எனக் கூறுகிறீர்கள். காய்கள் கனிந்து பறிக்கப்படுவதற்கு முன்பாக விலைபேசினால் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகக் கனிகளை குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் விற்றவர் நஷ்டப்படுவார். விலை பேசப்பட்ட காய்கள் முறையாகக் கனியாமல் அழிந்து விட்டால் வாங்கியவர் நஷ்டப்படுவார். இந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட கனிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் கொடுக்கல்வாங்கல் நடைபெறுகின்றது. இந்த ஒப்பந்தத்திற்கு மாற்றமாக முடிவு ஏற்பட்டால் விற்பவரோ வாங்குபவரோ ஏமாற்றப்பட்டு விடுகின்றார். செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுஅமையவில்லை. இதில் ஒப்பந்த மீறல் இருக்கின்றது. இதன் காரணத்தால் இதை மார்க்கம் தடை செய்கின்றது. ஆனால் மருத்துவ காப்பீடு என்பது மேற்கண்ட வியாபாரத்தைப் போன்று ஏமாறுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதல்ல.செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக நடக்கும் எந்த அம்சமும் இம்முறையில் இல்லை. இதில் இணையும் அனைவரும் இந்தத் திட்டத்தால் தனக்கு பயன் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம் என்பதை அறிந்து கொண்டு தான் இணைகிறார்கள்.இவர்கள் ஒப்பந்தம் செய்தபடி நோய் ஏற்பட்டவர்கள் பலனடைகிறார்கள். நோய் ஏற்படாதவர்கள் தங்கள் பணத்தை விட்டுத் தருகின்றனர். செய்யப்பட்ட ஒப்பந்தம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனவேஇதை மேற்கண்ட தடை செய்யப்பட்ட வியாபாரத்துடன் ஒப்பிடக் கூடாது. அடுத்து மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் இதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவதாகக் கூறியுள்ளீர்கள். ஒருவியாபாரத்தில் அதிக லாபம் வருவதால் அது கூடாத வியாபாரமாகி விடாது. இஸ்லாம் தடை செய்யாத வியாபாரத்தில் எவ்வளவுஅதிகமாக லாபம் வந்தாலும் அது தவறல்ல. மேலும் இந்த நிறுவனங்கள் வட்டித் தொழிலில் ஈடுபடாமல் இருப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விஷயத்தில்மருத்துவக் காப்பீடு செய்பவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் வட்டி அம்சம் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவர்கள் நம்மிடம் ஒப்பந்தம் செய்யும் போது நோய் ஏற்படாதவர்கள் கொடுத்த பணத்திலிருந்தே நோய் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதாகத் தெரிவிக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் வட்டி இல்லையென்பதால் இது அனுமதிக்கப்பட்ட வியாபாரம். இதன் பிறகு அவர்கள் நமது பணத்தை வாங்கி என்ன செய்தாலும் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். மேலும் இந்த முறை சூதாட்டத்தைப் போன்று உள்ளது என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். மருத்துவ காப்பீடுசெய்வதும் சூதாட்டமும் ஒரேமாதியானதல்ல. இரண்டிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. சூதாட்டத்தில் பங்குகொண்டவர்கள் ஒவ்வொருவரும்., தானே வெற்றி பெற்று அனைவரின் பொருளையும்பெற வேண்டும் என்று பேராசைப்படுவார்கள். தோல்வியுற்றவர்கள் தங்களுடையபொருள் தவறிவிட்டதே என வயிற்றெரிச்சல் படுவார்கள். வெற்றி பெற்றவன் மீது பொறாமைப்படுவார்கள். அடுத்தவன் பொருளை எடுக்க வேண்டும் என்ற பேராசையினாலும் இழந்த தன்னுடைய பொருளை மீட்க வேண்டும் என்ற வெறியினாலும் எதைவேண்டுமானாலும் வைத்து சூதாட முன்வருவா ர்கள். இறுதியில் அனைத்தையும் இழந்து மன உளைச்சலுடனும் ஏமாற்றத்துடனும் வெறுங்கையோடு திரும்புவா ர்கள்.இதனால் தான் சூதாட்டத்தில் பிரச்சனைகளும் சண்டைகளும்எழுகின்றன. இதனால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவக் காப்பீடு என்பது இது போன்றதல்ல. இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள்நோயுற்றால் தான் இதன் மூலம் பலனடைய முடியும். இந்தப் பலனை அடைவதற்காக தான் நோயுற வேண்டும் என யாரும் விரும்ப மாட்டார்கள். நோயுற்றவர் பலனடைந்தால் அவரைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட மாட்டார்கள். மனிதாபிமான அடிப்படையில் அனைவரின் ஒப்புதலுடனும் நோயுற்றவருக்காக மற்றவர்களின் பணம் செலவிடப்படுகின்றது. இதில் போட்டிபொறாமை ஏமாற்றம் வயிற்றெரிச்சல் ஆகிய அம்சங்கள் எதுவுமில்லை. எனவே மருத்துவக் காப்பீடு செய்வது தவறான ஒன்றல்ல.
சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்ததுபோன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து விடவும் செய்யும். இத்தகையவர்கள் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்புகேட்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது நன்றாகக் கனைக்க வேண்டும் என்றும், மண் கட்டியை வைத்துக் கொண்டு நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தான் பள்ளிவாசல் கழிவறைகளில் அதிகமான கனைப்புச் சத்தத்தை நாம் செவியுற முடிகின்றது. இவர் நாற்பதடி தூரம் நடப்பதற்குள் தொழுகை முடிந்து விடும். அப்படி நடந்தாலாவது இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடுமா ? என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பிறகும் சொட்டு வருவது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இங்கு தான் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று இறைவன் திருமறையில் சொல்வதைநாம் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்று நம்மை நாமே சிரமப்படுத்திக் கொண்டபோதும் நமக்கு இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைத்து விடும். எனவே நடுநிலையையே கடைப் பிடியுங்கள்;இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 39 சிறுநீர் அல்லது மலம் கழித்தால் மார்க்கம் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யச் சொல்கிறது. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒருகைத்தடியையும் எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்து விட்டு) தண்ணீரால்அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள். நூல்: புகாரி 152 தண்ணீர் இல்லாவிட்டால் நீரை உறிஞ்சுகின்ற, அசுத்தத்தைத் துடைக்கின்ற கற்கள் அல்லது அது போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களைக்கொண்டு அந்த இடத்திலேயே சுத்தம் செய்து விட்டு நகர்ந்து விட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியேசென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள்அருகில் நான் சென்ற போது, "நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்காகச் சில கற்களை எடுத்து வா! எலும்புகளையோ கெட்டிச் சாணங்களையோ கொண்டு வந்து விடாதே!'' என்றுசொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனதுஆடையின் ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபி கள் நாயகம் (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்து விட்டு அங்கிருந்து திரும்பி விட்டேன். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்து விட்டு) அக்கற்களால் சுத்தம் செய்து கொண்டார்கள். பிறகு அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 155 இன்று சுத்தம் செய்வதற்குரிய பேப்பர்கள் கூட வந்து விட்டன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் மலஜலம் கழித்தால் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை! அவ்வாறுநாம் சுத்தம் செய்த பிறகு ஒரு சொட்டு வெளியானால் அதற்குநாம் பொறுப்பாளியாக மாட்டோம். அதாவது அதற்குப் பின் வெளியாகும் சொட்டுநீருக்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான். இதைத் தான் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ்சிரமப்படுத்த மாட்டான். அல்குர்ஆன் 2:286 இதற்குப் பின்னும் ஒரு மனிதனின் உள்ளத்தில் சொட்டு வந்து கொண்டிருப்பது போன்ற எண்ணம்ஏற்பட்டால் அது ஷைத்தானின் ஊசலாட்டம். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இடம் கொடுத்தால் ஷைத்தான் நம்மை மன நோயாளியாக மாற்றி விடுவான். இந்த ஊசலாட்டத்திற்கு அரபியில் "வஸ்வாஸ்'என்று கூறுவர். இதை நாம் உதாசீனம் செய்து விட வேண்டும். அப்போது தான் ஷைத்தான் நம்மிடம் வாலாட்ட மாட்டான். சொட்டு மூத்திரம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் இதெல்லாம் சரி தான். உதாசீனம் செய்து விடலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு சொட்டு சிறுநீர் வந்தேவிடுகின்றது. ஈரம் தென்படுகின்றது. இப்போதுஎன்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் இதற்கும் நாம் கவலைப்படத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் அதுஒரு நோய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் உள்ளவர்கள் ஒரு தொழுகைக்குச் செய்யும் உளூவைக் கொண்டு அடுத்த தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான் மார்க்கம் வழங்கும் தீர்ப்பாகும். உதாரணமாக மக்ரிப் தொழுகைக்கு உளூச் செய்தால் அதைக் கொண்டு இஷா தொழக் கூடாது. இஷா தொழுகைக்குத் தனியாக உளூச் செய்ய வேண்டும். ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா ?''என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அதுநின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டுத் தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீஉளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 228 இந்த ஹதீஸில் தொடர் உதிரப் போக்குக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தீர்வு சொட்டு மூத்திரத்திற்கும் பொருந்தும்.வழக்கமாகச் சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சிறுநீர் வெளியே வந்தாலும் அது நோய் என்ற அடிப்படையில் ஒவ்வொருதொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டியது தான். எனவே இதற்காகத் தொழுகையைப் பாழாக்கி விடக் கூடாது.
செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்கு பதிலாக வேறு காரியங்களை செய்யலாமா ? யாஸிர் பதில் நாம் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தை கற்றுத் தந்துள்ளது. நேர்ச்சையை நிறைவேற்றாதவர்கள் இதைத்தான் கடைபிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதாக இறைவனிடம் வாக்களித்து விட்டு வேறு காரியத்தை செய்தால் நமது வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக மாட்டோம்.இதுவும் நேர்ச்சையை முறிக்கும் செயலாகும். எனவே இதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். சத்தியத்தை முறித்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறித்தாலும் செய்ய வேண்டும். ﻟَﺎﻳُﺆَﺍﺧِﺬُﻛُﻢُﺍﻟﻠَّﻪُ ﺑِﺎﻟﻠَّﻐْﻮِﻓِﻲﺃَﻳْﻤَﺎﻧِﻜُﻢْ ﻭَﻟَﻜِﻦْﻳُﺆَﺍﺧِﺬُﻛُﻢْﺑِﻤَﺎ ﻋَﻘَّﺪْﺗُﻢُﺍﻟْﺄَﻳْﻤَﺎﻥَ ﻓَﻜَﻔَّﺎﺭَﺗُﻪُﺇِﻃْﻌَﺎﻡُ ﻋَﺸَﺮَﺓِﻣَﺴَﺎﻛِﻴﻦَﻣِﻦْ ﺃَﻭْﺳَﻂِﻣَﺎﺗُﻄْﻌِﻤُﻮﻥَ ﺃَﻫْﻠِﻴﻜُﻢْﺃَﻭْﻛِﺴْﻮَﺗُﻬُﻢْ ﺃَﻭْﺗَﺤْﺮِﻳﺮُﺭَﻗَﺒَﺔٍﻓَﻤَﻦْ ﻟَﻢْﻳَﺠِﺪْﻓَﺼِﻴَﺎﻡُ ﺛَﻠَﺎﺛَﺔِﺃَﻳَّﺎﻡٍﺫَﻟِﻚَ ﻛَﻔَّﺎﺭَﺓُﺃَﻳْﻤَﺎﻧِﻜُﻢْﺇِﺫَﺍ ﺣَﻠَﻔْﺘُﻢْﻭَﺍﺣْﻔَﻈُﻮﺍ ﺃَﻳْﻤَﺎﻧَﻜُﻢْﻛَﺬَﻟِﻚَﻳُﺒَﻴِّﻦُ ﺍﻟﻠَّﻪُﻟَﻜُﻢْﺁﻳَﺎﺗِﻪِ ﻟَﻌَﻠَّﻜُﻢْﺗَﺸْﻜُﺮُﻭﻥَ )89(5 உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாகஅளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது , அல்லது அவர்களுக்கு உடையளிப்பது ,அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில்எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய் (து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம்இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்குர்ஆன் (5 : 89) 3103 ﻭﺣَﺪَّﺛَﻨِﻲﻫَﺎﺭُﻭﻥُ ﺑْﻦُﺳَﻌِﻴﺪٍﺍﻟْﺄَﻳْﻠِﻲُّ ﻭَﻳُﻮﻧُﺲُﺑْﻦُﻋَﺒْﺪِ ﺍﻟْﺄَﻋْﻠَﻰﻭَﺃَﺣْﻤَﺪُﺑْﻦُ ﻋِﻴﺴَﻰﻗَﺎﻝَﻳُﻮﻧُﺲُ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎﻭﻗَﺎﻝَ ﺍﻟْﺂﺧَﺮَﺍﻥِﺣَﺪَّﺛَﻨَﺎﺍﺑْﻦُ ﻭَﻫْﺐٍﺃَﺧْﺒَﺮَﻧِﻲﻋَﻤْﺮُﻭ ﺑْﻦُﺍﻟْﺤَﺎﺭِﺙِﻋَﻦْﻛَﻌْﺐِ ﺑْﻦِﻋَﻠْﻘَﻤَﺔَﻋَﻦْﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺑْﻦِﺷِﻤَﺎﺳَﺔَ ﻋَﻦْﺃَﺑِﻲﺍﻟْﺨَﻴْﺮِﻋَﻦْ ﻋُﻘْﺒَﺔَﺑْﻦِﻋَﺎﻣِﺮٍﻋَﻦْ ﺭَﺳُﻮﻝِﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَﻛَﻔَّﺎﺭَﺓُﺍﻟﻨَّﺬْﺭِ ﻛَﻔَّﺎﺭَﺓُﺍﻟْﻴَﻤِﻴﻦِﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும். இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் (3379) நேர்ச்சையை முறித்தவர்கள் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு உடையளிக்க வேண்டும். இதற்குஇயலாவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாத வேறு நல்ல காரியங்களைச் செய்தால் அது இதற்குரிய பரிகாரமாகாது. செய்த நேர்ச்சையை நிறைவேற்றினாயா ? அல்லது அதை முறித்ததற்குரிய பரிகாரத்தைச்செய்தாயா? என்று தான் அவனுடைய கேள்வி இருக்கும்.
சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்ததுபோன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து விடவும் செய்யும். இத்தகையவர்கள் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்புகேட்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது நன்றாகக் கனைக்க வேண்டும் என்றும், மண் கட்டியை வைத்துக் கொண்டு நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தான் பள்ளிவாசல் கழிவறைகளில் அதிகமான கனைப்புச் சத்தத்தை நாம் செவியுற முடிகின்றது. இவர் நாற்பதடி தூரம் நடப்பதற்குள் தொழுகை முடிந்து விடும். அப்படி நடந்தாலாவது இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடுமா ? என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பிறகும் சொட்டு வருவது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இங்கு தான் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று இறைவன் திருமறையில் சொல்வதைநாம் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்று நம்மை நாமே சிரமப்படுத்திக் கொண்டபோதும் நமக்கு இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைத்து விடும். எனவே நடுநிலையையே கடைப் பிடியுங்கள்;இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 39 சிறுநீர் அல்லது மலம் கழித்தால் மார்க்கம் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யச் சொல்கிறது. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒருகைத்தடியையும் எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்து விட்டு) தண்ணீரால்அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள். நூல்: புகாரி 152 தண்ணீர் இல்லாவிட்டால் நீரை உறிஞ்சுகின்ற, அசுத்தத்தைத் துடைக்கின்ற கற்கள் அல்லது அது போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களைக்கொண்டு அந்த இடத்திலேயே சுத்தம் செய்து விட்டு நகர்ந்து விட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியேசென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள்அருகில் நான் சென்ற போது, "நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்காகச் சில கற்களை எடுத்து வா! எலும்புகளையோ கெட்டிச் சாணங்களையோ கொண்டு வந்து விடாதே!'' என்றுசொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனதுஆடையின் ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபி கள் நாயகம் (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்து விட்டு அங்கிருந்து திரும்பி விட்டேன். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்து விட்டு) அக்கற்களால் சுத்தம் செய்து கொண்டார்கள். பிறகு அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 155 இன்று சுத்தம் செய்வதற்குரிய பேப்பர்கள் கூட வந்து விட்டன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் மலஜலம் கழித்தால் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை! அவ்வாறுநாம் சுத்தம் செய்த பிறகு ஒரு சொட்டு வெளியானால் அதற்குநாம் பொறுப்பாளியாக மாட்டோம். அதாவது அதற்குப் பின் வெளியாகும் சொட்டுநீருக்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான். இதைத் தான் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ்சிரமப்படுத்த மாட்டான். அல்குர்ஆன் 2:286 இதற்குப் பின்னும் ஒரு மனிதனின் உள்ளத்தில் சொட்டு வந்து கொண்டிருப்பது போன்ற எண்ணம்ஏற்பட்டால் அது ஷைத்தானின் ஊசலாட்டம். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இடம் கொடுத்தால் ஷைத்தான் நம்மை மன நோயாளியாக மாற்றி விடுவான். இந்த ஊசலாட்டத்திற்கு அரபியில் "வஸ்வாஸ்'என்று கூறுவர். இதை நாம் உதாசீனம் செய்து விட வேண்டும். அப்போது தான் ஷைத்தான் நம்மிடம் வாலாட்ட மாட்டான். சொட்டு மூத்திரம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் இதெல்லாம் சரி தான். உதாசீனம் செய்து விடலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு சொட்டு சிறுநீர் வந்தேவிடுகின்றது. ஈரம் தென்படுகின்றது. இப்போதுஎன்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் இதற்கும் நாம் கவலைப்படத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் அதுஒரு நோய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் உள்ளவர்கள் ஒரு தொழுகைக்குச் செய்யும் உளூவைக் கொண்டு அடுத்த தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான் மார்க்கம் வழங்கும் தீர்ப்பாகும். உதாரணமாக மக்ரிப் தொழுகைக்கு உளூச் செய்தால் அதைக் கொண்டு இஷா தொழக் கூடாது. இஷா தொழுகைக்குத் தனியாக உளூச் செய்ய வேண்டும். ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா ?''என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அதுநின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டுத் தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீஉளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 228 இந்த ஹதீஸில் தொடர் உதிரப் போக்குக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தீர்வு சொட்டு மூத்திரத்திற்கும் பொருந்தும்.வழக்கமாகச் சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சிறுநீர் வெளியே வந்தாலும் அது நோய் என்ற அடிப்படையில் ஒவ்வொருதொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டியது தான். எனவே இதற்காகத் தொழுகையைப் பாழாக்கி விடக் கூடாது.
தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களைச் சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களைத் தொழுகைக்கு அழைப்பது அதிகமான வணக்கங்கள்புரிவது பாவம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது சில மார்க்கவிஷயங்களைப் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பதுஇது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியைபலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான்அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் தீயவர்களிடம்கூட சில நன்மையான காரியங்களைப் பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறி விடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம். இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இவர்களிடம்பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளது. இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும்ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது . குர்ஆன் நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளைத் செய்யக் கூடாது எனத் தடுக்கவும் செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள். இப்படிப்பட்ட ஒருமுக்கியமான பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாக சென்று விடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர். இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம். தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை விட்டதன் மூலம்இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியை புறக்கணித்து விட்டனர். நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலைதூக்குகின்றன. இந்தச் சிரமங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கி விட்டால் அது வேறு விஷயம். ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாமல் அதைமறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி உள்ளது. தமிழகத்தில் தவ்ஹீதுவருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர்.இவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால்சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை, மூட நம்பிக்கைகள் மற்றும் எல்லா அநாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணைவைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியும்இருந்தனர். வட்டி வரதட்சணை போன்ற பாவங்களைச் சர்வ சாதாரணமாக செய்துகொண்டிருந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர்.தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதேஇந்த மோசமான நிலைக்குக் காரணம். இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டு தீமைகளுக்கு எதிராகக் குரல்ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன. சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்ததவறான கொள்கையும் ஒரு காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது. தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை. தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவேதான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாக கலந்துகொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் இவற்றைச் செய்து விடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியைப் புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வரவும் முடியாது. அடிப்படையில் கோளாறு குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக்கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸை என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும்ஹதீஸ்களுடன் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.இந்த சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள் தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையைத் தளர்த்திக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது.இவர்களின் கொள்
இறைவன் மனித குலத்துக்கு நன்மை தருகின்ற சட்ட திட்டங்களையே வழங்கியுள்ளான். மக்களுக்குத் தீங்குதரக்கூடிய காரியங்களை இறைவன் தடை செய்துள்ளான். இஸ்லாம் இசையைத் தடை செய்ததும் இந்த அடிப்படையில் தான். இன்றைக்கு இசையால் மனிதர்களுக்குப் பாதிப்புஏற்படுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இசை கேட்பவர்களின் மூளையில் ஒரு விதமான இரசாயன மாற்றம் நிகழ்வதாகவும் இதனால் போதையில் உள்ளவர்களைப் போன்று அவர்கள் மாறுவதாகவும் இதுமனிதனின் உடல் நலத்துக்கும் சிந்தனைத் திறனுக்கும் ஆபத்தானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்குமுன்னால் உணர்வில் கூட இது பற்றி விளக்கப்பட்டது . இந்தப் பாதிப்பு பலருக்கு ஏற்படுவதை நடைமுறையிலும் பார்க்கமுடிகின்றது. கேட்பதற்கு காது கூசும் அளவுக்கு ஆபாச வாசகங்களும் அபத்தமான கருத்துக்களும் அடங்கிய பாடல்களை இசையுடன் சேர்த்து படிக்கும் போது மக்கள் ரசிக்கின்றனர். அதே நேரத்தில் இசையில்லாமல் ராகம் இல்லாமல் இதனைக் கூறினால் இதை வெறுக்கின்றனர். ஆக இசை மக்களைச் சிந்திக்க விடாமல் அவர்களின் மூளைக்கு திரையிடும் வேலையைச் செய்கின்றது. மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவினால் தான் மற்ற உயிரினங்களை விட உயர்வானவனாகக் கருதப்படுகின்றான். அந்த அறிவை மழுங்கச் செய்கின்ற இந்த இசையை நாம் புறக்கணிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரத்துக்கு
புதன், 3 ஆகஸ்ட், 2011
நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்புதுறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺴَﺪَّﺩٌ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻫُﺸَﻴْﻢٌ ﻋَﻦْ ﺣُﺼَﻴْﻦٍ ﻋَﻦْ ﻣُﻌَﺎﺫِ ﺑْﻦِ ﺯُﻫْﺮَﺓَﺃَﻧَّﻪُ ﺑَﻠَﻐَﻪُ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﺇِﺫَﺍ ﺃَﻓْﻄَﺮَ ﻗَﺎﻝَ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻟَﻚَ ﺻُﻤْﺖُ ﻭَﻋَﻠَﻰ ﺭِﺯْﻗِﻚَ ﺃَﻓْﻄَﺮْﺕُ அபூதாவூத் (2011), முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3747), அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426), அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்- இப்னுல் முபாரக் (1388,1390), அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102), பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141), அல்மராஸில்-அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமேஅது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாத ஒருவர் அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும். மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னுஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது இப்னு ஹிப்பான் அவர்கள்வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலைஅறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது. அபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ-ﻛﺘﺎﺏ ﺍﻟﺼﻴﺎﻡ ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻓﻀﻴﻞ،ﻋﻦ ﺣﺼﻴﻦ، ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ،ﻗﺎﻝ:ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫﺍ ﺻﺎﻡ ﺛﻢ ﺃﻓﻄﺮ،ﻗﺎﻝ: ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ முதல் அறிவிப்பாளராக முஹம்மத் பின் ஃபுலைல் என்பாரும் இரண்டாவது அறிவிப்பாளராக ஹுசைன்என்பாரும் மூன்றாவது அறிவிப்பாளராக அபூஹுரைரா (ரலி) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முதல்அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஃபுலைல் இரண்டாம் அறிவிப்பாளரான ஹுசைன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். இவர் ஹிஜ்ரி 295 ஆம் ஆண்டு மரணித்தார். ஹுசைன் ஹிஜ்ரி 136ல் மரணித்தார். இருவரது மரணத்துக்கும் இடையே 159 ஆண்டுகள் இடைவெளி உள்ளன. எனவே இருவரும் சம காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது. எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும். லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம் ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ-ﻣﻦ ﺍﺳﻤﻪ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﻀﺮﻣﻲ،ﺛﻨﺎ ﻳﻮﺳﻒ ﺑﻦ ﻗﻴﺲ ﺍﻟﺒﻐﺪﺍﺩﻱ،ﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﻤﻠﻚ ﺑﻦ ﻫﺎﺭﻭﻥ ﺑﻦ ﻋﻨﺘﺮﺓ،ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﺟﺪﻩ،ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ:ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:ﺇﺫﺍ ﺃﻓﻄﺮ ﻗﺎﻝ:ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ ﻓﺘﻘﺒﻞ ﻣﻨﻲ ﺇﻧﻚ ﺃﻧﺖ ﺍﻟﺴﻤﻴﻊ ﺍﻟﻌﻠﻴﻢ * இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இவரும் இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்றுஇப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய லிஸானுல்மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது. ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻷﻭﺳﻂ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ-ﺑﺎﺏ ﺍﻟﻌﻴﻦ ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ،ﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺍﻟﺒﺠﻠﻲ،ﻧﺎ ﺩﺍﻭﺩ ﺑﻦ ﺍﻟﺰﺑﺮﻗﺎﻥ، ﻧﺎ ﺷﻌﺒﺔ،ﻋﻦ ﺛﺎﺑﺖ ﺍﻟﺒﻨﺎﻧﻲ،ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻗﺎﻝ:ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫﺍ ﺃﻓﻄﺮ ﻗﺎﻝ:ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ،ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ ﻟﻢ ﻳﺮﻭ ﻫﺬﺍ ﺍﻟﺤﺪﻳﺚ ﻋﻦ ﺷﻌﺒﺔ ﺇﻻ ﺩﺍﻭﺩ ﺑﻦ ﺍﻟﺰﺑﺮﻗﺎﻥ، ﺗﻔﺮﺩ ﺑﻪ:ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﻋﻤﺮﻭ * பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல்அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும், அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும், கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும் அபூநுஐம் அவர்களுக்குரிய அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர்என்று அபூதாவூத் அவர்களும்மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்) எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து ﺍﻟﻤﻄﺎﻟﺐ ﺍﻟﻌﺎﻟﻴﺔ ﻟﻠﺤﺎﻓﻆ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻌﺴﻘﻼﻧﻲ-ﻛﺘﺎﺏ ﺍﻟﺴﺤﻮﺭ ﺑﺎﺏ ﺇﺟﺎﺑﺔ ﺍﻟﺪﻋﺎﺀ ﻋﻨﺪ ﺍﻟﻔﻄﺮ-ﺣﺪﻳﺚ: 8191;1121 ﻭﻗﺎﻝ ﺍﻟﺤﺎﺭﺙ،ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻴﻢ ﺑﻦ ﻭﺍﻗﺪ،ﺛﻨﺎ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﻋﻤﺮﻭ،ﻋﻦ ﺍﻟﺴﺮﻱ ﺑﻦ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﺷﺪﺍﺩ،ﻋﻦ ﺟﻌﻔﺮ ﺑﻦ ﻣﺤﻤﺪ،ﻋﻦ ﺃﺑﻴﻪ،ﻋﻦ ﺟﺪﻩ،ﻋﻦ ﻋﻠﻲ،ﻗﺎﻝ:ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:ﻳﺎ ﻋﻠﻲ،ﺇﺫﺍ ﻛﻨﺖ ﺻﺎﺋﻤﺎ ﻓﻲ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﻓﻘﻞ ﺑﻌﺪ ﺇﻓﻄﺎﺭﻙ:ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ،ﻭﻋﻠﻴﻚ ﺗﻮﻛﻠﺖ،ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ،ﻳﻜﺘﺐ ﻟﻚ ﻣﺜﻞ ﻣﻦ ﻛﺎﻥ ﺻﺎﺋﻤﺎ ﻣﻦ ﻏﻴﺮ ﺃﻥ ﻳﻨﻘﺺ ﻣﻦ ﺃﺟﻮﺭﻫﻢ ﺷﻴﺌﺎ இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யாபாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)