அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா? நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரீ (2697) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது(அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் (3243) இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒருகேள்வியைக் கேட்கின்றான் உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16) அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்றுநினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்குச் சமமாக ஆகி விடும். லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும்.இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லதுநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும். இவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா? யாரைப்பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான். இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதைவிட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ்கடுமையாகத் தண்டிப்பவன். (59:7) நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்தஅறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தைநாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகிவிடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான். “நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களைவிரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ்(தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! (3:31, 32) எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின்தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும்சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறுஎன்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205) உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55) ஆனால்இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ருசெய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ருசெய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டுசெல்லக் கூடிய காரியங்களாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில்மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில்மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாகஉருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொருவழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560) எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப்புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றிசுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!
மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள் மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக்கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. 1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, “சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்” என்றுஅல்லாஹ் கூறினானாம். 2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்தஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். “என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?” என்றுநபிகளார் கேட்ட போது, “இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனேநான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால்நீங்கள் மட்டும் செல்லுங்கள்” என்றுஜிப்ரீல் கூறினாராம். 3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, “முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்” என்றுஅபூபக்ர் (ர)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்றுநபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளேபோய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ்இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, “நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது” என்று அல்லாஹ் கூறினானாம். “அபூபக்ரின் குரல் கேட்டதே” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, “நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்றுஒரு மலக்கைப் பேச வைத்தேன்” என்று அல்லாஹ் கூறினானாம். 4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டுரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்றுஜிப்ரீல் நினைத்தவுடன் நபி(ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்றுஅல்லாஹ்வும் நினைத்தானாம். உடனேநபி (ஸல்) அவர்கள் கையைஉயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம். 5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ்என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ
புதன், 29 ஜூன், 2011
மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.
(முஹம்மதே) உமக்குநாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60) இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாகஅல்லாஹ் குறிப்பிடுகிறான். நபி(ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள்.அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான். அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்?பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதைஅடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். எனவேநபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்துஅடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ்என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது. மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றிஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தஅற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாகநிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதேஇந்தக் கட்டுரையின் நோக்கம்.
மிஃராஜ் நடந்தது எப்போது? மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச்சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
நபி(ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில்ஆதாரம் இல்லை. எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையைநாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியஅவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்தநாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர்(ஸல்) அவர்களோ கூறிடவில்லை நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாகஎந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போதுஎப்படி நம்மால் கணிக்க முடியும்? மிஃராஜ்இரவின் பெயரால் பித்அத்கள் எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத்எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது. ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக்கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர். “மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கிஇறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீதுஇறையொளியைப் பொழிகின்றனர்” என்று எந்த அடிப்படையும் ஆதாரமும்இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர். இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்புநோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப்மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அந்தஇரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும்வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவதுதவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு. அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில்வேதனைக்குரிய விஷயம். 6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவைஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும். 3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும். இரண்டுரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத்தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர். இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதைமறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
(முஹம்மதே) உமக்குநாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60) இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாகஅல்லாஹ் குறிப்பிடுகிறான். நபி(ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள்.அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான். அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்?பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதைஅடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். எனவேநபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்துஅடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ்என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது. மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றிஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தஅற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாகநிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதேஇந்தக் கட்டுரையின் நோக்கம்.
மிஃராஜ் நடந்தது எப்போது? மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச்சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
நபி(ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில்ஆதாரம் இல்லை. எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையைநாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியஅவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்தநாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர்(ஸல்) அவர்களோ கூறிடவில்லை நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாகஎந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போதுஎப்படி நம்மால் கணிக்க முடியும்? மிஃராஜ்இரவின் பெயரால் பித்அத்கள் எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத்எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது. ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக்கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர். “மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கிஇறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீதுஇறையொளியைப் பொழிகின்றனர்” என்று எந்த அடிப்படையும் ஆதாரமும்இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர். இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்புநோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப்மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அந்தஇரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும்வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவதுதவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு. அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில்வேதனைக்குரிய விஷயம். 6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவைஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும். 3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும். இரண்டுரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத்தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர். இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதைமறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
செவ்வாய், 28 ஜூன், 2011
முஸ்னத் மற்றும் ஏனைய கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபி மொழியில், நபியவர்கள் புனிதமான மாதங்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். புனிதமான மாதங்கள்: ரஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம். எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) 25: 290, 291).
அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்' (அல்முஃனி 3: 167, அஷ்ஷரஹுல் கபீர் 2: 52, மஜ்மூஉல் பதாவா 25: 291).
அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்' (அல்முஃனி 3: 167, அஷ்ஷரஹுல் கபீர் 2: 52, மஜ்மூஉல் பதாவா 25: 291).
ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.
மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர், ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ, அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும்.
'நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26).
மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர், ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ, அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும்.
'நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26).
'ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால், அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21)
ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20)
ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20)
'எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).
ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.' (தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).
'ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.' இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).
ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.' (தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).
'ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.' இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).
ரஜப் மாதத்தை விஷேச நோன்பு, தொழுகை, உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்: 'நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).
ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை' இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.'
Idu balaheenamana hadees aahum.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.'
Idu balaheenamana hadees aahum.
வெள்ளி, 17 ஜூன், 2011
காந்தியவாதி என அறியப்படும் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக தொடங்கிய சத்யாகிரக போராட்டம் ஊடகங்களின் உதவியுடன் ஓரளவு மக்கள் கவனம் பெற்றதும், அதை தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவும் ஊழலுக்கு எதிராக களத்தில் குதித்த போது அனைவரும் முதலில் ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள். அன்னா ஹசாரேயின் போராட்டத்தைத் திசை திருப்ப காங்கிரஸே இறக்கி விட்ட ஆள்தான் ராம்தேவ் என்று கூட தகவல்கள் கசிந்தன. அதற்குக் காரணமில்லாமலும் இல்லை. வட கிழக்கு மாநிலங்களில் அரசு பயங்கரவாதத்திற்காக ஆண்டுகணக்கில்போராடும் ஷர்மிளா சானுவின் போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை மத்திய அரசு இவருக்குக் கொடுத்தது. வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் வரவேற்பதைப் போல் மத்திய அமைச்சர்களை அனுப்பி பாபா ராம்தேவை வரவேற்று ஓவர் பில்டப் செய்தார்கள். ஆனால், தான் சற்றும் எதிர்பார்க்காத மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் அமைச்சர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசுக்குஎதிராக ராம்தேவின் முழக்கம் அதிகமானது. இது மத்திய அரசைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளிவிட்டது. ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்திய மத்திய அரசின் நடவடிக்கை தங்க தட்டில் தாம்பூலத்தை வைத்து கொடுத்ததை போல் ஆகிவிட்டது. பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் மாத்திரமின்றி அவரை விமர்சிப்பவர்கள் கூடமத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்தனர். ஒட்டு மொத்த இந்தியாவே ராம்தேவின் பின்னால் நிற்பதைப் போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் பாபாவின் பின்னால் அணிவகுத்து நின்றன. ஆனால் பி,ஜே.பி ஆளும் மாநிலமான உத்தரகாண்டில் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்திருந்த பாபா, எட்டே நாட்களில் பரிதாபகரமாக தன்னுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாமலேயே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். 18 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாய் ஆரம்பித்த பாபாவின் உண்ணாவிரத போராட்டம், எட்டே நாளில் பாப்பராகிப் பிசுபிசுத்து போனதற்குக் காரணம்அரசுக்கு எதிரான மக்கள் கொந்தளிப்பைத் தனக்கான ஆதரவு என தவறாக விளங்கி கொண்டதும், சங் பரிவாரங்களுடன் தன்னைப் பகிரங்கமாக இணைத்து கொண்டதும், ஊழலுக்கு எதிராக களம் காண புறப்பட்ட பாபாவே சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கான கோடிரூபாய் சொத்தைப் பராமரித்து வந்ததுமே ஆகும். அன்னா ஹசாரே சொன்னது போல் ஒருஇயக்கத்தைக் கட்டமைக்க தேவையான பக்குவம் ராம்தேவுக்கு இல்லை என்பதை அவரின் நடவடிக்கைகளேவெளிச்சம் போட்டு காட்டியது. 11,000 நபர்கள் கொண்ட ஆயுத படையை உருவாக்குவேன் என்றவர், சட்டம் தன்மீது பாயும் அபாயத்தை உணர்ந்தவுடன் தங்களைத் தற்காத்து கொள்ள ஜூடோ, கராத்தே கற்று கொள்வது போன்ற அர்த்தத்தில்தான் சொன்னதாக பின்னர் பல்டியடித்தார். கூடவே, ஊடக நண்பர்கள் தன் கருத்தைத் திசை திருப்ப மாட்டார்கள் என்று நம்புவதாக கெஞ்சினார். ஆனால் அவரின் கூற்றைத் திரும்ப திரும்ப ஊடகங்கள் ஒளிபரப்பின. அவரின் பொருளாதார நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர்களின் கூட்டமைப்பு வர்ணித்ததைப் போல் அவரின் நடவடிக்கைகள் பாலிவுட்டின் ஸ்டண்ட் காட்சியைப் போல் கேலிக்கூத்தாய் மாறிவிட்டன. ஊழலுக்கு எதிராய் போராடுபவர்கள் தங்களைச் சுத்தப்படுத்தி கொள்ளாமல் ஊரைத் திருத்த புறப்பட்டால் பாபாவின் கதிக்குத் தான் தள்ளப்படுவார்கள் என்பதுதான் பாபாவின் நிலைமை அனைவருக்கும் தரும் படிப்பினை. Inneram.com
சென்னை : ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொக்கலிங்கம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாலிப பருவத்தில் உள்ள ஆண், பெண்களை யோகா மற்றும் ஆன்மிக காதலில் பயிற்றுவிக்கும்Movement for Spiritual Integration in Absolute (MISA)மிசா எனும் இவ்வமைப்பு இந்தியா முழுவதும் தன் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. மிசா அமைப்பு டென்மார்கில் நாதா எனும் பெயரிலும் அமெரிக்காவில் தாரா எனும் பெயரிலும் இந்தியாவில் சத்யா எனும் பெயரிலும் பதிவு செய்துள்ளது. இதன் ஆசிரியர்கள் டென்மார்க், ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதோடு இதன் தலைமை பயிற்றுவிப்பாளர்களான மிஹாய் ஸ்டோய்ன் மற்றும் அடினா ஸ்டோய்ன் ஆபாச படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தலைவரான ரோமானியாவை சேர்ந்த கிராகிரயன் பிவோலாரு ஆபாச படங்களில் நடித்ததற்காக பல முறை சிறைக்கு சென்றவர் என்பதோடு ஸ்வீடனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளவர். மிசா அமைப்பினர் நடித்துள்ள ஆபாச வீடியோக்கள் பற்றி கேட்கப்பட்ட போது அதன் தற்காலிக தலைவரான் மிஹாய் மிசா தன் சித்தாந்தத்தை பரப்பும் ஆரம்ப கட்ட பரிசோதனை முயற்சியே என்று பதிலளித்தார். எங்களின் ஆன்மிக தேடலின் உச்சகட்டம் சிவனையும் சக்தியையும் ஒன்று சேர்ப்பதே. அப்போது தான் மனிதன் உச்சபட்ச ஆன்மிக நிலையை அடைய முடியும் என்று கூறிய மிஹாய் இந்தியாவில் அதற்கான தேவை நிறைய இருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமானவர்கள் தம் அமைப்பில் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூர் போலி சாமியார்கள் ஏற்படுத்திய சீரழிவுகளிலிருந்தே தமிழகம் விடுபடாத நிலையில் இவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது தமிழக கலாசாரத்துக்கு நல்லது.
ஞாயிறு, 12 ஜூன், 2011
இன்ஷா அல்லாஹ் வரும் 12-06-2011 ஞாயிறன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டணத்தில்சமூக ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் S.M.பாக்கர் உரையாற்றுகிறார். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கிறது....... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியப்பட்டிணம் கிளை இராமநாதபுரம் மாவட்டம்.
Intjonline.in
(எந்த சமூகத்தை ஒழிக்கப்போராங்கனு தெரியலே பாவம் மக்கள்.)
Intjonline.in
(எந்த சமூகத்தை ஒழிக்கப்போராங்கனு தெரியலே பாவம் மக்கள்.)
வெள்ளி, 10 ஜூன், 2011
அனைத்து மவுத் வாஷ்களிலும் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி கலந்திருந்தால் அதன் மூலம் வாய் கொப்பளிக்க்க் கூடாது . ஆக்கஹால் போன்ற போதை பொருட்களை வெளி உபயோகத்துக்கு பயன்படுத்ததடை இல்லை. பார்க்க http://www.onlinepj.com/ kelvi_pathil/ naveena_pirasanaikal/ alchal_payanpatuthalama/ http://www.onlinepj.com/kelvi- pathil-wmv-mp3-3gp/Sprey- Payanpaduthalama/ ஆனால் உள் உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு பொருளை அதிகமாகச் சாப்பிட்டால் போதை ஏற்படும் என்றால் அதில் குறைவான அளவைச் சாப்பிடுவதும் கூடாது. குறைவான அளவைச் சாப்பிட்டால் போதை ஏற்படாது என்றாலும் அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது. "அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513 ஆல்கஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தக் கூடாது. ஆல்கஹால் கலந்த பானத்தை வாய்கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்கஹால் சிறிதளவேனும் தங்கி இருக்கும். இது எச்சிலின் வழியாகவோ நாம் உண்ணும் உணவின் வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே உண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களைக் கொண்டு வாய்கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.
பாபா ராம்தேவ்க்க�� வெளிநாட்டில் சொந்தமாக சொகுசு தீவு!!
JUNE 6, "இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்" என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…"இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்" என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.. அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்யானந்தாவுக்கு மாதிரி கேமேரா வைத்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த "முற்றும் துறந்த" சாமியார். இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும். பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போத ு சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது. பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள். ஏற்கனவே இவர்களின் 'ராமர் கோயில்+ வெடிகுண்டு' பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது. அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ராம்தேவ் உதவியாள��ிடம் துப்பாக்கிக���்!! அதிர்ச்சி ரிப்போர்ட்!!
JUNE 9, பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா. இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி உள்ளார். மேலும் ஆயுத சட்டத்தை மீறி 2 கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர். இப்போது பாலகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங்க்கும் உத்தரவிட்டுள்ளார். தவிர உத்தரகண்டில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் பாலகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது. இந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆர்,எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மறைமுக தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டுவிதமான முகங்கள் உண்டு. ஒன்று மக்களுக்கு தெரியும் படி வெளிப்படியாக சாகா போன்ற பயிற்ச்சிகளை செய்வார்கள். அதே நேரம் மறைமுகமாக 'துப்பாக்கி சுடும் பயிற்சி', மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு, 'குண்டு தாயாரிக்கும் பயிற்சி' ஆகியவைகளும் உண்டு. மேலும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனவேதான் இந்த இயக்கம் நேரிடையாக தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. ஆர்.எஸ். எஸ். இயக்கம் திரைமறைவாக சில தீவிரவாத இயக்கங்களை நடத்தி வருகிறது. அந்த திரைமறைவு இயக்கத்தினர் நடத்தியதுதான், இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள்'. இந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய 'ஹிந்துத்துவா தலைவர் சுவாமி அசிமானந்தா', 'மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி( நூல் : புகாரி (5892( அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி( நூல் : முஸ்லிம் (435( மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறுசெய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள். ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்பநடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும்சம்பந்தம் இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3512( எனவே தாடி வைப்பது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நபிவழிஎன்று இதன் மூலம் அறிய முடிகிறது .
Onlinepj
Onlinepj
நீங்கள் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் நம்பிக்கை பாழ்பட்டுவிட்டது. உங்கள் சுயமதிப்பு சூறையாடப்பட்டுவிட்டது. நான் வெட்கப்படுகிறேன் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன். தேவாலயங்களின் மரியாதை குலைக்கப்பட்டதற்கான அவமானச் செயல் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய குற்றத்தைப் புரிந்தவர்கள் நிச்சயமாகக் கடவுளின் முன்பு பதில் சொல்லியே தீரவேண்டும். இவர்களின் பாபங்களைப் பற்றி விசாரிக்கும் நியாய விசாரணையின்போது பதிலளித்தே ஆகவேண்டும். இவ்வளவும் எழுதியிருப்பது போப். கத்தோலிக்க மதத்தின் உலகத் தலைவர். ஆம். மன்னிப்பை எழுத்து மூலமாகவே தந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்துள்ளார். என்ன பாதிப்பு? யார் பாதிக்கப்பட்டனர்? அயர்லாந்து நாட்டுக் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அசிங்கமான இந்தச் செயலைச் செய்தவர்கள் யாரோ காலிகளோ, அயோக்கியர்களோஅல்லர். காமாந்தகாரம் பிடித்த காலிகள், அயோக்கியர்கள். வெள்ளை அங்கி அணிந்து கொண்டு தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயலும் கத்தோலிக்க பாதிரிகள்தான் அவர்கள். பெரும் தவறுகள் தேவாலயங்களில் நடந்து விட்டன என்று அந்நாட்டு கத்தோலிக மதத் தலைமை ஒத்துக் கொள்கிறதாம். நடந்த கேவலமான செயல் தவறா? குற்றங்கள் அல்லவா! 30 ஆண்டுகளாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வரும் குற்றங்கள் ஆகும். வெறும் மன்னிப்புத் தாள்கள் போதுமா? இக் குற்றங்களைக் கேடயங்களாக இருந்து மறைத்துக் கொண்டு இருக்கும் மத முகமூடி கிழித்தெறியப்பட வேண்டாமா? போப் சிந்திக்கவேண்டும். அவரது மதத்தவர் சிந்திக்கவேண்டும். பாதிரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி யோசிக்கிறாராம் போப். ஒழுக்கமான, மனிதத் தன்மையுள்ள, அறிவுடன் கூடிய ஆன்மிகப் பள்ளிகள் குறைவாக இருப்பதே, இப்படிப்பட்ட பாதிரிகள் வருவதற்குக் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறாராம். அது சரியல்ல. மாற்று முறை கண்டறியப்படவேண்டும் என்று புலம்புகிறராம் போப். புலம்புவதை விட்டுவிட்டுப் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். முறைகெட்ட பாலியல் புணர்ச்சி முறைகளுக்குக் காரணம்- பெண்ணோடு புணர்வது பாபம் என்று கூறும் மதக் கருத்துகள் அல்லவா? பாதிரிகள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கும் வேறொரு கிறித்துவப் பிரிவில் இம்மாதிரிக் குற்றங்களைக் காணோமே! எனவே சரியான வழியில் போப் சிந்திக்க வேண்டியதும் செயல்படவேண்டியதும் மதமவுடீகக் கொள்கைகளை மாற்றி அமைப்பதும்தான் தேவையே தவிர, மன்னிப்பு அல்ல! மதம் மீதுள்ள அக்கறையல்ல இந்த யோசனைக்குக் காரணம்! மனித மாண்புகள் மதிக்கப்படவேண்டும் என்ற கவலைதான் காரணம்!
Tamilnet.
Tamilnet.
செவ்வாய், 7 ஜூன், 2011
மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர். அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம்14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது. கயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால்14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tntj.net
Tntj.net
ஞாயிறு, 5 ஜூன், 2011
மாபெரும் சட்ட மன்��� முற்றுகை போராட்��ம்.. ஏகத்துவத்தை ஓ���்கச் செய்ய அணிதி��ள்வீர்
( கீழ்கண்ட வாசத்தை பொஸ்டர்கள் அடிக்க பயன் படுத்திக் கொள்ளவும்) சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ்.. நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை10மணிக்கு… உரிமையை நிலைநாட்ட அலைஅலையாய் வா! ஆர்பரித்து வா! அழைக்கிறது.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்புக்கு : 9952056111 9952056555 9940319555
( கீழ்கண்ட
வாசத்தை பொஸ்டர்கள் அடிக்க
பயன் படுத்திக் கொள்ளவும்)
சட்டம்
ஒழுங்கை சீர்குலைக்கும்
விதமாக
உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த
மமக
ரவுடிகளை கண்டித்தும்,
அதற்கு துணைபோகும்
காவல்துறையை கண்டித்தும்
சட்டமன்ற
முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011
வியாழக்கிழமை –
காலை10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555
வாசத்தை பொஸ்டர்கள் அடிக்க
பயன் படுத்திக் கொள்ளவும்)
சட்டம்
ஒழுங்கை சீர்குலைக்கும்
விதமாக
உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த
மமக
ரவுடிகளை கண்டித்தும்,
அதற்கு துணைபோகும்
காவல்துறையை கண்டித்தும்
சட்டமன்ற
முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011
வியாழக்கிழமை –
காலை10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555
வியாழன், 2 ஜூன், 2011
வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும் தனியாகத் தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும். நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி,( நூல் : புகாரி (2848( கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன. 1017ﺣَﺪَّﺛَﻨَﺎﻫَﺎﺭُﻭﻥُﺑْﻦُﻣَﻌْﺮُﻭﻑٍﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﺑْﻦُ ﻭَﻫْﺐٍﻋَﻦْﻋَﻤْﺮِﻭﺑْﻦِﺍﻟْﺤَﺎﺭِﺙِﺃَﻥَّﺃَﺑَﺎ ﻋُﺸَّﺎﻧَﺔَ ﺍﻟْﻤَﻌَﺎﻓِﺮِﻱَّﺣَﺪَّﺛَﻪُﻋَﻦْﻋُﻘْﺒَﺔَﺑْﻦِﻋَﺎﻣِﺮٍﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُﺭَﺳُﻮﻝَﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُﻳَﻌْﺠَﺐُ ﺭَﺑُّﻜُﻢْ ﻣِﻦْ ﺭَﺍﻋِﻲ ﻏَﻨَﻢٍ ﻓِﻲ ﺭَﺃْﺱِ ﺷَﻈِﻴَّﺔٍﺑِﺠَﺒَﻞٍﻳُﺆَﺫِّﻥُﺑِﺎﻟﺼَّﻠَﺎﺓِﻭَﻳُﺼَﻠِّﻲﻓَﻴَﻘُﻮﻝُ ﺍﻟﻠَّﻪُﻋَﺰَّﻭَﺟَﻞَّﺍﻧْﻈُﺮُﻭﺍﺇِﻟَﻰﻋَﺒْﺪِﻱﻫَﺬَﺍﻳُﺆَﺫِّﻥُ ﻭَﻳُﻘِﻴﻢُ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻳَﺨَﺎﻑُ ﻣِﻨِّﻲ ﻗَﺪْ ﻏَﻔَﺮْﺕُ ﻟِﻌَﺒْﺪِﻱ ﻭَﺃَﺩْﺧَﻠْﺘُﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகைஅழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான். அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி( நூல் : அபூதாவூத் (1017( 3667ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﺑِﺸْﺮٍﺣَﺪَّﺛَﻨَﺎﺳَﻌِﻴﺪٌ ﺣَﺪَّﺛَﻨَﺎﻗَﺘَﺎﺩَﺓُﻭَﻋَﺒْﺪُﺍﻟْﻮَﻫَّﺎﺏِﻋَﻦِﺍﺑْﻦِﺃَﺑِﻲ ﻋَﺮُﻭﺑَﺔَﻋَﻦْﻗَﺘَﺎﺩَﺓَﻋَﻦْﺃَﺑِﻲﺍﻟْﺄَﺣْﻮَﺹِﻋَﻦْ ﻋَﺒْﺪِﺍﻟﻠَّﻪِﺑْﻦِﻣَﺴْﻌُﻮﺩٍﻗَﺎﻝَﺑَﻴْﻨَﻤَﺎﻧَﺤْﻦُﻣَﻊَ ﺭَﺳُﻮﻝِﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَﻓِﻲ ﺑَﻌْﺾِ ﺃَﺳْﻔَﺎﺭِﻩِﺳَﻤِﻌْﻨَﺎﻣُﻨَﺎﺩِﻳًﺎﻳُﻨَﺎﺩِﻱﺍﻟﻠَّﻪُﺃَﻛْﺒَﺮُﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُﻓَﻘَﺎﻝَﻧَﺒِﻲُّﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﻋَﻠَﻰﺍﻟْﻔِﻄْﺮَﺓِﻓَﻘَﺎﻝَﺃَﺷْﻬَﺪُﺃَﻥْﻟَﺎﺇِﻟَﻪَﺇِﻟَّﺎﺍﻟﻠَّﻪُ ﻓَﻘَﺎﻝَﻧَﺒِﻲُّﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﺧَﺮَﺝَ ﻣِﻦْﺍﻟﻨَّﺎﺭِﻗَﺎﻝَﻓَﺎﺑْﺘَﺪَﺭْﻧَﺎﻩُﻓَﺈِﺫَﺍﻫُﻮَﺻَﺎﺣِﺐُ ﻣَﺎﺷِﻴَﺔٍﺃَﺩْﺭَﻛَﺘْﻪُﺍﻟﺼَّﻠَﺎﺓُﻓَﻨَﺎﺩَﻯﺑِﻬَﺎﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி( நூல் : அஹ்மது (3667( 19.03.2011
thanks; onlinepj.
thanks; onlinepj.
வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்குமுரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும்என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக்கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தைஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடைஇந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் பெண்வீட்டார் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சுமைகளை தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு பெண் வீட்டினர் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யாவிட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோகருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள். பெண்வீட்டு விருந்து என்பது இந்தச் சுமைகளில் ஒன்றாகும். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை விருந்தளிக்குமாறு நிர்பந்திக்காவிட்டாலும் பெண்வீட்டார்தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது. திருமணத்துக்காக பெண் வீட்டார் செலவு செய்வது நடைமுறையில் கட்டாயமாகிவிட்டதால் தான் இவர்கள் இவ்விருந்தை விரும்பியோ விரும்பாமலோ நடத்துகிறார்கள். பொதுவாக எந்தப் பெண்வீட்டாரும் விரும்பிவிருந்தளிக்க முன்வருவதில்லை. இது போன்று கொடுக்காவிட்டால் தங்களது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் உரிய மரியாதைகிடைக்காமல் போய்விடுமோ என்ற உள்ளச்சமே இவர்களைக் கொடுப்பதற்குத் தூண்டுகின்றது. இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். இது போன்று விதிவிலக்காக ஒருசிலர் விரும்பிக் கொடுப்பது பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்பதாகக் கூறிக் கொண்டு, இது போன்று தானே வரும் பெண்வீட்டு விருந்தை எண்ணத்தில் வைத்து, வசதியான பெண்களை மட்டுமே மணம் முடிக்கும் அவல நிலை உள்ளது. சில ஊர்களில் வீடு, வாகனங்கள் என மறைமுக வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது . வசதி படைத்த பெண் வீட்டார் விரும்பிக் கொடுப்பதாகக் கூறி, டி.வி., பிரிட்ஜ், பைக் திருமண விருந்து என்று அள்ளி வழங்கி விடுகின்றார்கள். இது வசதியில்லாத பெண்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது. உதாரணமாக ஒரே வீட்டில் ஒரு வசதியான பெண்ணும் ஏழைப் பெண்ணும் மணமுடிக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். வசதியான பெண் சீர் வரிசைகளைக் கொடுக்கும் போது ஏழைப்பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது. அவளும் தன் வீட்டாரை நிர்பந்தித்து வட்டிக்கு வாங்கி சீர் வரிசைகளைச் செய்கிறாள். இது ஏதோ கற்பனையாகக் கூறப்பட்டதல்ல. பல இடங்களில் இந்த நிலை இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இது போன்ற பல சங்கடங்கள் ஏற்படுவதால் பெண் வீட்டார் விரும்பி சீர் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பெண்வீட்டு விருந்து என்ற தீய கலாச்சாரம் சமுதாயத்தில் நுழைந்து விட்டதால் இவ்விஷயத்தில் சுயவிருப்பத்தை பார்க்காமல் இந்த அநாச்சாரத்தை ஒழிப்பதற்காக இதைப்பெண்வீட்டார் கைவிட வேண்டும். இதை பொருட்படுத்தாமல் பெண் வீட்டு விருந்தை ஏற்படுத்தினால் சமுதாயத்தில் நுழைந்துவிட்டஇந்த பாவத்துக்கு உடந்தையான குற்றம் ஏற்படும். இதே வாதத்தை வைத்து வரதட்சணையையும் நியாயப்படுத்டமுடியும். மாமனார் விரும்பி தருகிறார் என்ற காரணத்தைக் சொல்லித் தான் வரதட்சனையை இன்றும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி( நூல் : அபூதாவுத் (3512( பெண் வீட்டார் இத்தீமையைச் செய்யும் போது அதைக் கண்டித்து தடுத்து நிறுத்துவது மாப்பிள்ளையின் கடமையாகும். இதை அவர் கண்டிக்கத் தவறினால் அத்தீமையில் அவருக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் அத்திருமணத்தை நாம் புறக்கணித்தே ஆக வேண்டும். "உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி( நூல்: முஸ்லிம் 70 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உம்முஹபீபா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்த போது அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி வலீமா விருந்து அளித்ததாக ஒருசெய்தி சில ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய " இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ 42 ல் மரணிக்கின்றார்கள். எனவே இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இவர் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இவ்விருவருக்கும் இடையேஅறிவிப்பாளர் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்ட அந்த நபர் யார்? அவர் நம்பகமானவரா? என்பது உறுதி செய்யவிடவில்லை . மேலும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஸுஹைர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தால் இந்த செய்தி பலவீனமானதாகும். இத்துடன் பெண்வீட்டு விருந்து கொடுப்பதற்கு இந்த செய்திஎந்த வகையிலும் ஆதாரமாகது நஜ்ஜாஷி மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு நானூறு தீனார்களை மஹராக கொடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்க வேண்டிய வலீமாவை அவர்கள் சார்பில் நஜ்ஜாஷி கொடுத்தார் என்றே இந்த செய்தி கூறுகின்றது. எனவே இந்தச் செய்தியின் மூலம் மணமகன் சார்பில் மணமகனுடைய நண்பர் வலீமா கொடுக்கலாம் என்று தான் கூற முடியும். நஜ்ஜாஷி மன்னருக்கும் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் இடையே எந்த இரத்த பந்த உறவும் கிடையாது. எனவே இதை வைத்து பெண்வீட்டு விருந்து கொடுக்கலாம் என்று வாதிட முடியாது. 24.04.2011
Thanks-Onlinepj.
Thanks-Onlinepj.
பெண் சல்மான் ருஷ்���ியா? ஓர் உலகளாவிய சதி. 2nd part of early issue.
மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்தநஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை- இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக்(?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல்தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்? இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை. ஒரு வேளை காளிதாசனுக்கும் ஞானசம்பந்தனுக்கும் ஞானம் (?) பொங்கியது போல் தஸ்லீமா நஸ் ரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்! இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும் பொய்யிலேயே ஊறிப் போனவள் என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவையில்லை. ஆண் பெண் உடலுறவுப் பற்றிப் பச்சையா எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவுபாராட்டினாலும் தகும் என்று இப்பத்திரிகைகள் போற்றியதில்லை. ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர்எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பேஇதைப் படம் பிடித்துக்காட்டும் என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது. ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள்.இவள் புரட்சிகர எழுத்தாளராம்! இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது. இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப் போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது. உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமான வேலையைச் செய்து வருகின்றனர். தகாத உறவுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புனர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர். இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ஆண்களே! நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள் என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத - புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காம வெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள். ஒருதரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படிபெண்களைத் தூண்டினார் என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது. துகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதிவந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள். இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சோரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்! இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சிஎன்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும் இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா ?குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா ?இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்வாங்குகிறீர்கள்? பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா ?ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா ? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில்உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும். இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்புஎன்று நீங்கள் கருதினால் இவளைஆதரிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள்வெட்கப்பட வேண்டாமா ? இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது. பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். மனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்துபார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது. ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவi முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக் கொண்டால்நாகரீத்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம். நான் ஆவேசமும் நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள் என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது. இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடிதன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர் தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல் வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்றுவிமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்? மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காம வெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளைநீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்குநன்றாகத் தெரியும். அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக் காரியானாலும் அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும் வெறிபிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது. மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்து
பெண் சல்மான் ருஷ்���ியா? ஓர் உலகளாவிய சதி.
அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது! இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும் நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன. எப்படியாவது, இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம் என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும் உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமியச் சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது! அமேரிக்க அதிபர் கிளின்டன், சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளரைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதைஇதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் மூக்கைநுழைக்க வேண்டிய பிஸி யான பதவி அது! அயல் நாட்டு மன்னர்களும் அதிபர்களும் அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமெரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது. இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா? எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளர்! அவ்வளவு தான். எழுத்தாளர் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத்தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்தஎழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வுகூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சியமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்! இழிந்த நடையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! இதைத் தவிர எழுத்துலகில் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத் தான் அமேரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்த செய்தியைத் தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின. (இவனது சாத்தானிய வசனங்கள்என்ற நூலுக்கு வேதம் ஓதும் சாத்தான்கள் என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்களை அடையாளம் காட்டியுள்ளோம்.) குறைந்த பட்ச தகுதி கூட இல்லாத இவனை அமெரிக்க அதிபரும் பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதைத்தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது. மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை. இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூ னிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்துள்ளனர். அறிவுப்பூ ர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாள்கள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை. முற்போக்கும் புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம்என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்தமேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா ? பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்! தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான்பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான்ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது. இந்தயப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பவர் தஸ்லிமா நஸ்ரீன். பெண்களும் புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிஅசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும்என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே ,.ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன. இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களைநாம் அடையாளம் காண முடியும். பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனி மேல் வெளியே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார். (இந்தியாடுடே - 93, டிசம்பர் 6 - 20) இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டுவெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்! - மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்தநஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை- இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்
மஹ்தீ என்பவர் யார���?
எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர். முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும். 4284-ﺣﺪﺛﻨﺎﺃﺣﻤﺪﺑﻦﺇﺑﺮﺍﻫﻴﻢﺛﻨﺎﻋﺒﺪ ﺍﻟﻠﻪﺑﻦﺟﻌﻔﺮ ﺍﻟﺮﻗﻲﺛﻨﺎ ﺃﺑﻮﺍﻟﻤﻠﻴﺢ ﺍﻟﺤﺴﻦ ﺑﻦﻋﻤﺮﻋﻦﺯﻳﺎﺩﺑﻦﺑﻴﺎﻥﻋﻦﻋﻠﻲﺑﻦ ﻧﻔﻴﻞﻋﻦﺳﻌﻴﺪﺑﻦﺍﻟﻤﺴﻴﺐﻋﻦﺃﻡﺳﻠﻤﺔ ﻗﺎﻟﺖ:ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢﻳﻘﻮﻝ"ﺍﻟﻤﻬﺪﻱﻣﻦﻋﺘﺮﺗﻲﻣﻦ ﻭﻟﺪﻓﺎﻃﻤﺔ"ﺕ/6ﻡﻗﺎﻝ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺟﻌﻔﺮﻭﺳﻤﻌﺖﺃﺑﺎﺍﻟﻤﻠﻴﺢﻳﺜﻨﻲﻋﻠﻰﻋﻠﻲ ﺑﻦﻧﻔﻴﻞﻭﻳﺬﻛﺮﻣﻨﻪﺻﻼﺣﺎ.ﻗﺎﻝﺍﻟﺸﻴﺦ ﺍﻷﻟﺒﺎﻧﻲ:ﺻﺤﻴﺢﺳﻨﻦﺃﺑﻲﺩﺍﻭﺩ ]2/509[ மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் நூல் அபூதாவூத் 4282-ﺣﺪﺛﻨﺎﻣﺴﺪﺩﺃﻥﻋﻤﺮﺑﻦﻋﺒﻴﺪ ﺣﺪﺛﻬﻢﺡﻭﺛﻨﺎﻣﺤﻤﺪﺑﻦﺍﻟﻌﻼﺀﺛﻨﺎﺃﺑﻮ ﺑﻜﺮﻳﻌﻨﻲﺍﺑﻦﻋﻴﺎﺵﺡﻭﺛﻨﺎﻣﺴﺪﺩﻗﺎﻝ ﺛﻨﺎﻳﺤﻴﻰﻋﻦﺳﻔﻴﺎﻥﺡﻭﺛﻨﺎﺃﺣﻤﺪﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢﻗﺎﻝﺛﻨﺎﻋﺒﻴﺪﺍﻟﻠﻪﺑﻦﻣﻮﺳﻰ ﺃﺧﺒﺮﻧﺎﺯﺍﺋﺪﺓﺡ ﻭﺛﻨﺎﺃﺣﻤﺪ ﺑﻦﺇﺑﺮﺍﻫﻴﻢ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﻲﻋﺒﻴﺪﺍﻟﻠﻪﺑﻦﻣﻮﺳﻰﻋﻦﻓﻄﺮ ﺍﻟﻤﻌﻨﻰﻭﺍﺣﺪﻛﻠﻬﻢﻋﻦﻋﺎﺻﻢﻋﻦﺯﺭﻋﻦ ﻋﺒﺪﺍﻟﻠﻪ:ﻋﻦﺍﻟﻨﺒﻲﺻﻠﻰﺍﻟﻠﻪﻋﻠﻴﻪﻭ ﺳﻠﻢﻗﺎﻝ"ﻟﻮﻟﻢﻳﺒﻖﻣﻦﺍﻟﺪﻧﻴﺎﺇﻻﻳﻮﻡ" ﻗﺎﻝﺯﺍﺋﺪﺓﻓﻲﺣﺪﻳﺜﻪ"ﻟﻄﻮﻝﺍﻟﻠﻪﺫﻟﻚ ﺍﻟﻴﻮﻡ"ﺛﻢﺍﺗﻔﻘﻮﺍ"ﺣﺘﻰﻳﺒﻌﺚ]ﺍﻟﻠﻪ[ ﻓﻴﻪﺭﺟﻼﻣﻨﻲ"ﺃﻭ"ﻣﻦﺃﻫﻞﺑﻴﺘﻲ ﻳﻮﺍﻃﻰﺀﺍﺳﻤﻪﺍﺳﻤﻲﻭﺍﺳﻢﺃﺑﻴﻪﺍﺳﻢ ﺃﺑﻲ "ﺯﺍﺩﻓﻲﺣﺪﻳﺚﻓﻄﺮ"ﻳﻤﻸﺍﻷﺭﺽ ﻗﺴﻄﺎ ﻭﻋﺪﻻ ﻛﻤﺎ ﻣﻠﺌﺖ ﻇﻠﻤﺎ ﻭﺟﻮﺭﺍ"ﻭﻗﺎﻝ ﻓﻲﺣﺪﻳﺚﺳﻔﻴﺎﻥ"ﻻﺗﺬﻫﺐﺃﻭ ﻻﺗﻨﻘﻀﻲﺍﻟﺪﻧﻴﺎﺣﺘﻰﻳﻤﻠﻚﺍﻟﻌﺮﺏﺭﺟﻞ ﻣﻦﺃﻫﻞﺑﻴﺘﻲﻳﻮﺍﻃﻰﺀﺍﺳﻤﻪﺍﺳﻤﻲ" ﺕ/4ﻡﻗﺎﻝﺃﺑﻮﺩﺍﻭﺩﻟﻔﻆﻋﻤﺮﻭﺃﺑﻲ ﺑﻜﺮﺑﻤﻌﻨﻰﺳﻔﻴﺎﻥ.ﻗﺎﻝﺍﻟﺸﻴﺦﺍﻷﻟﺒﺎﻧﻲ: ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ]2/508[ பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமிமுழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். நூல் அபூதாவூத் 2230-ﺣﺪﺛﻨﺎﻋﺒﻴﺪﺑﻦﺃﺳﺒﺎﻁﺑﻦﻣﺤﻤﺪ ﺍﻟﻘﺮﺷﻲﺍﻟﻜﻮﻓﻲﻗﺎﻝﺣﺪﺛﻨﻲﺃﺑﻲﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥﺍﻟﺜﻮﺭﻱ ﻋﻦ ﻋﺎﺻﻢ ﺑﻦ ﺑﻬﺪﻟﺔ ﻋﻦ ﺯﺭ ﻋﻦﻋﺒﺪﺍﻟﻠﻪﻗﺎﻝ:ﻗﺎﻝﺭﺳﻮﻝﺍﻟﻠﻪﺻﻠﻰ ﺍﻟﻠﻪﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻻﺗﺬﻫﺐﺍﻟﺪﻧﻴﺎﺣﺘﻰ ﻳﻤﻠﻚﺍﻟﻌﺮﺏ ﺭﺟﻞﻣﻦ ﺃﻫﻞﺑﻴﺘﻲ ﻳﻮﺍﻃﺊ ﺍﺳﻤﻪﺍﺳﻤﻲﻗﺎﻝﺃﺑﻮﻋﻴﺴﻰﻭﻓﻲﺍﻟﺒﺎﺏ ﻋﻦﻋﻠﻲﻭﺃﺑﻲﺳﻌﻴﺪﻭﺃﻡﺳﻠﻤﺔﻭﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓﻭﻫﺬﺍﺣﺪﻳﺚﺣﺴﻦﺻﺤﻴﺢﻫﺬﺍ ﺣﺪﻳﺚﺣﺴﻦﺻﺤﻴﺢﻗﺎﻝﺍﻟﺸﻴﺦ ﺍﻷﻟﺒﺎﻧﻲ:ﺣﺴﻦﺻﺤﻴﺢﺳﻨﻦﺍﻟﺘﺮﻣﺬﻱ ]4/505[ அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். நூல் திர்மிதி மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன. இந்த முன்னறிவிப்பில் நாம் செயல்படுத்துவதற்கு ஒரு விஷயமும் இல்லை. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிபு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும். இதைத் தவிர மார்கக் ரீதியாக மஹ்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்ல. மிர்சா குலாம் காதியானி என்பவன் தன்னை மஹ்தீ என்று சொல்லிக் கொண்டான். வாக்களிக்கப்பட்ட மஹ்தீ என்று வாதிட்டான். அவன் பொய்யன் என்பதற்கு மேறகண்ட நபி மொழிகள் போதுமான ஆதாரமாகும். அவனுடைய பெயர் முஹம்மத் அல்ல. அஹ்மதும் அல்ல. அவனுடைய பெயர் குலாம் அஹ்மத் (அதாவது அஹ்மதின் அடிமை.) நபிகள் நாயகத்தின் அடிமைஎன்பது தான் இவனது பெயர் என்பதால் இவன் நிச்சயம் மஹ்தீ அல்ல. மேலும் இவனது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் அல்ல. எனவே இவன் மஹ்தீ கிடையாது என்பது தெளிவாகி விட்டது. மேலும் இவன் அரபு நாட்டை ஆளவும் இல்லை. நீதியால் பூமியை நிரப்பவும் இல்லை. இவன் பாகிஸ்தானில் கூட ஆளவில்லை. முஸ்லிமல்லாத சிறுபான்மை பிரிவாகத் தான் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே இவன் மஹ்தீ அல்ல என்பது நூறு சதவீதம் உண்மை. இது போல் ஷியாக்கள் முஹம்மத் பின் அல்ஹசன் அலஸ்கரீ என்பவர் தான் மஹ்தீ என்று கூறுகின்றனர். இவர் அல்காயின் எனவும் குறிப்பிடப்படுவார். இவரது பெயர் நபிகள் நாய்கத்தின் பெயராக இருந்தாலும் இவரதுதந்தை பெயர் ஹசன் என்பதாகும். அப்துல்லாஹ் அல்ல. எனவே இவர் மஹ்தீ அல்ல என்பது உறுதி. மேலும் அவர் பூமியை ஆளவுமில்லை; நீதியால் நிரப்பவுமில்லை. இது போல் நம் தமிழகத்தில் கூட கிருஷ்னகிரி மாவட்டம் பாலக்கோட்டிலும் ஈரோட்டிலும்மஹ்தியாக்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். யாரோ ஒருவர் ஒரு காலத்தில் தன்னை மஹ்தீ எனக் கூற அதை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதுவும் கட்டுக்கதையாகும் இவர் ஃபாத்திமாவின் வழித்தோன்றல் என்பதற்குஆதாரம் இல்லை. இவரும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது அல்ல. மேலும் இவர் பாலக்கோட்டைக் கூட ஆட்சி செய்யவில்லை. மஹ்தீ என்பவர் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு மன்னரே தவிர முரீது கொடுத்து மக்களை வழி கெடுப்பவர் அல்ல. இந்த உண்மை விளங்காத மக்களிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் தான் மஹ்தீ என்று வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 06.11.2010 THANKS-ONLINEPJ.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)