திங்கள், 30 மே, 2011

கிடைக்குமா நியாய��்தீர்ப்பு?..

பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்?.- இது தொடர்பான வழக்கில் 2010செப்டம்பரில், தொல்பொருள் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியின்முடிவுகளை,அடிப்படையாக கொண்டு. .சர்ச்சைக்குறிய நிலத்தை மூன்றாகப்பிரித்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர் நீதிமன்றம்.
சூரஜ்பண் போன்ற வரலாற்று அறிஞர்கள் இந்த அகழவாராய்ச்சியின் அடிப்படை நியதிகள் மீரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். ஆனால், அகழ்வாராய்ச்சி குழுவில் இருக்கும் ஏ .கே .மிஸ்ரா ''நீதிமண்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும்போது, நியதிகள் பற்றி கவலைப்படத் தேவை இல்லை'' என்றார். ஆக, அயோத்தியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கையில், சர்ச்சைக்கு உரிய உரிய நிலம் குறித்த முடிவுகளுக்கு அந்த ஆராய்சியின் முடிவுகளை சாட்சி ஆக்கியது விணோதம்தான். 'நம்பிக்கை'யின் அடிப்படையிலான இந்த தீர்ப்பு... உண்மைகளுக்கும், வரலாற்று சான்றுகுக்கும், வரலாறு எழுதும் பாரம்பரியத்திற்கும் நேர்ந்த அவமானம்!'' என்றார் வரலாற்றாய
்வாளர் டி .என் .ஜா .
17-ம்,18-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு அயோத்தி இந்துக்களின் புணித தளமாக இருந்தது இல்லை .17-ம் நூற்றாண்டுக்கு முன்னால்,உ .பி முழுவதுமே கூட ஒரு ராமர் கோயில் கூட கட்டப்பட வில்லை .என்பதே வரலாற்றாய்வாளர்கள் சொல்வது .பாபர் மசூதியோ,1528-ம் ஆண்டு கட்டப்பட்டது .ஆணால், இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று அலகாபாத் உயர் நீதிமண்ற நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
1949-ல் அப்போது ஃபைசாபாத்தின் இணை ஆணையராகஇருந்தk.k.k.நாயர் rss அமைப்பின் உறுப்பினராக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
பாபர் மசூதியின் நடுப்பகுதியில் ராமர் சிலையை வைத்து வழிபட அவர் அணுமதி அளித்தார்.
அப்போது தொடங்கிய பிரச்சினை,
அதன் பின் அரசியல் ஆதாயங்களுக்காக பா .ஜா .கா- வினரால் பெரிதாக்கப்பட்டு, இன்று வரையிலும் சிக்கல் நீடிக்கிறது .!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்யப்பட்ட வழக்கில்
கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டாப் ஆலம் மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ''சர்ச்சைக்கு உரிய நிலத்தை பிரிக்கும்படி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியது விந்தையாக இருக்கிறது.
'' என்று கூறி தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
''உச்ச நீதிமன்றத்திற்கு வேறு எந்தத்தேர்வுமே கிடையாது.
எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும்.
ஒருவேலை,
தீர்ப்பு எதிராகப் போனால்,
இந்த நாடு வகுப்பு வண்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது''
என்று மிரட்டுகிறார் ராம்விலாஸ் வேதாந்தி.
இதற்கிடையேயும் உச்ச நீதிமன்றம்,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தை குட்டி இருப்பதால்,
இருதுத்தீர்ப்புக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்குறது!.
Thanks: ananda vikatan.
25-5_11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக