விக்கிலீக்ஸ்: அணு ஒப்பந்தமும் அத்வானியின் ரெட்டை வேடமும்! மார்ச் 19,2011 ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் பாரதிய ஜனதா கட்சி இருந்து வருவதாக, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக கேபிளில் பகிரப்பட்டிருப்பது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மே 13-ம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக். அப்போது, 'பிஜேபி ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது,' என்று தன்னிடம் அத்வானி கூறியதாக, அதே நாளில் பீட்டர் பர்லீக் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார். "எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் காணப்பட்ட பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானி, பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா- இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்,' என அந்தக் கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொன்று புறமொன்று... அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பிஜேபி நிலைப்பாட்டின் தன்மையை2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது. 'மும்பையில் 2005 டிச.26 மற்றும் 27-ல் நடந்த பிஜேபி தேசிய செயற்க்ழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, அமெரிக்காவின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிஜேபி தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி சாரி, வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்,' என அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது. மேலும் கேபிள்கள்...
vikadan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக