தொழுகையை நிலைநாட்டுவீராக!தொழுகை வெட்ககேடான காரியங்களை விட்டும்,தீமையை விட்டும் தடுக்கும்.அல்லாஹ்வை நினைப்பதே மிகபெரியது.நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
அல்குரான்29-45.
குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது?என்று(நல்லோர்)விசாரிப்பார்கள்.'நங்கள் தொலுவோரகவும்,ஏழைகளுக்கு உணவளிப்போரகவும் இருக்கவில்லை 'எனக்(குற்றவாளிகள்)கூறுவர்கள்.
அல்குரான்74;40,41,42,43,44
(கடன் வாங்கிய)அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்கவேண்டும்.நீங்கள் அறிந்துகொண்டால் அதை தர்மமாக ஆக்கிவிடுவது உங்களுக்கு சிறந்தது.
அல்குரான்2;280
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்குஉதாரணம்ஒரு தானியம்.அதுஏழுகதிர்களைமுளைக்க
செய்கிறது.ஒவ்வொருகதிரிலும்நூறு தானியங்கள்
உள்ளன.தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பலமடங்காக கொடுக்கிறான்.அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன்
திருக்குரான்2;261
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களை செலவிட்டு,பின்னர் செலவிட்டதை சொல்லிகாட்டமலும்,தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது.அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் கவலையும் படமாட்டார்கள்.
அல்குரான்2;262
நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் அது உங்களுக்கே.அல்லாஹ்வின் திருப்தியை பெறவே செலவிடுகிறீர்கள்.நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்.நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
அல்குரான்2;272
தனக்காக மக்கள் எழுந்துநிற்க வேண்டும் யார் விரும்புகிறாரோ அவர்தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக்கொள்கிறார் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
திர்மிதி2769
உலகில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை.ஆயினும் அவர்கள் எங்களை நோக்கிவரும் போது நாங்கள் அவருக்காக எழ மாட்டோம்.இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்; என்பதே இதற்கு காரணம்.
அனஸ் ரலி
அகமத்12068
நபிகள் நாயகத்தின் தலைசிறந்த பத்து தோழர்களில் அப்துர்ரஹ்மான் என்ற செல்வந்தரும் இருந்தார்.ஒருநாள் நபியவர்கள் அவரிடம்;என்ன விசேஷம் நறுமணம் பூசியுள்ளேர்களே!என்று கேட்டார்கள், அதற்கு அவர் நேற்று எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறினர்.அப்படியானால் ஒரு ஆட்டைஅறுத்து விருந்து வைப்பீராக!
என கூறினார்கள்.
புகாரி2048
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக