புதன், 18 டிசம்பர், 2013
நபிகள் நாயகத்தின் ஒட்டகத்தை ஒரு கிராம வாசியின் ஒட்டகம் பந்தயத்தில் முந்தி சென்று விட்டது .இது முஸ்லிம்களுக்கு இடையே மன கவலையை ஏற்படுத்தியது. இதை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ''இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதை தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கை ஆகும் என்று கூறினார்கள்.
புகாரி 2872.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு கடன் கொடுத்த ஒருவர் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டார்.நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரை தாக்க முயன்றனர்.அப்போது நாயகம் ஸல் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்!ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு கடுமையாக பேசும் உரிமையுள்ளது'' என கூறினார்கள்.
புகாரி 2306.
அழகிய முறையில் கடனை திருப்பி செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்.
முகம்மது நபி ஸல் அலை
புகாரி2306.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி நாயகத்தின் போர்வையை தோலில் காயமா ஏற்படும் அளவிற்கு இழுத்து ''உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்தில் ஏதேனும் எனக்கு தருமாறு உத்தரவிடுவீரக!என கூறினார்.அவரை நோக்கி திரும்பிய நாயகம் ஸல் அலை அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.
புகாரி3149.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெரிய தந்தை அபுதாலிப் மரணிக்கும் வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதனால் நாயகம் ஸல் அவர்கள் பெரிதும் கவலைபட்டர்கள். அப்போது ''நீர் நினைத்தவரை உம்மால் நேர் வழியில் செலுத்த இயலாது.தான் நாடியவரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவான்'' என்ற வசனம் (28;56)அருளப்பட்டது.
புகாரி3884.
நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன்.அப்போது பின்னல் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்கு கேட்கிறது.தாய்க்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காக தொழுகையை சுருக்கமாக முடித்துகொள்கிறேன்.என்று கூறினார்கள்.
புகாரி 707.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக