நபிகள் நாயகம் (ஸல்)அலை அவர்கள்ஜகாத் வரியை திரட்ட ஒருவரை அனுப்பினார்.நிதி திரட்டி வந்த அவர்,இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இது உங்களுக்கு உரியது என்றார். இதை கேட்டதும் நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் ''\இவர் தனது வீட்டிலோ தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்!இவருக்கு அன்பளிப்பு வழங்க படுகிறதா என்று பார்போம்' என்று கோபமாக கூறினார்கள்.
புகாரி2597.
நபி ஸல் அவர்களிடம் உங்களுக்கு ஒரு படுக்கை விரிப்பை தயாரித்து தருகிறோம் அது உங்கள் உடலை பாதுகாக்கும் என்று கேட்டோம்.அதற்கு அவர்கள்''எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு மரநிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்லகூடிய பயணியை போன்றது.பயணிக்கும் மரத்துக்கும் என்ன உறவோ அதை போன்றது தான் எனக்கும் இந்த உலகுக்கும் உள்ள தொடர்பு என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
அப்துல்லாஹ் ரலி
அகமத்3525.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஏழ்மை நிலையை பார்த்து நான் அழுதேன்.ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே!பாரசீக இத்தாலிய மன்னர்கள் எப்படி எப்படியோ வாழ்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
உமர் ரலி
புகாரி4913.
வீட்டில் நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு முன்னால் உறங்கிக்கொண்டு இருப்பேன், அவர்கள் தொழுகையில் சஜ்தா செய்யும் போது விரலால் என் காலை குத்துவார்கள். நான் காலை மடக்கி கொள்வேன்.அவர்கள் எழுந்து நின்றவுடன் நான் காலை நீடிகொள்வேன். இவ்வாறு நடந்ததற்கு காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது.
ஆயிஷா ரலி
புகாரி382.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக