30படி கோதுமைக்காக நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதனிடம் அடமானம் வைத்துஇருந்தார்கள்.அதை மீட்காமலேயே மரணித்தார்கள்''
ஆயிஷா ரலி
புகாரி2068.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் மரணிக்கும் போது தமது வெள்ளை கோவேறு கழுதை, தமது ஆயுதங்கள்,தர்மமாக வழங்கி சென்ற நிலம் ஆகியவற்றை தான் அவர்கள் விட்டு சென்றார்கள்.
புகாரி2739.
யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் ஜனாசா தொழுகை நடத்துவதற்காக நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களிடம் கொண்டு வரபட்டால், இவர் யாருக்கேனும் கடன் தரவேண்டிஉள்ளதா? என விசாரிப்பார்கள். கடனுக்காக சொத்து உள்ளதா? இல்லை என்றால் உங்கள் தோழருக்காக நீங்களே தொழுகை நடத்திகொல்லுங்கள். என்று கூறிவிடுவார்கள்.
புகாரி2297.
நபிகள் நாயகத்தின் பேரன் ஜகாத் நிதியில் இருந்து ஒரு பேரிச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார், இதை பார்த்த நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் அவரிடம் விரைந்து வந்து ''துப்பு துப்பு'' என கூறி துப்ப செய்தார்கள்.''நாம் ஜகாத் நிதியில் இருந்து சாப்பிட கூடாது என்று உமக்கு தெரியாதா? என்று கேட்டார்கள்.
புகாரி1485.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் தொழுகையை நடத்திவிட்டு வேகமாக வீட்டுக்கு சென்றுவிட்டு, பிறகு உடனே திரும்பி வந்தார்கள். ''நான் ஏன் அவாசரமாக சென்று வந்தேன் தெரியுமா? அரசு கருவூலத்திற்கு சொந்தமான ஒரு வெள்ளிகட்டி என் வீட்டில் இருந்தது அதை ஏழைகளுக்கு தர்மமாக வழங்கும்படி கூறி விட்டு வந்தேன்.
புகாரி 851.
எனது படுக்கையில் ஒரு பேரிச்சம்பழம் விழுந்து கிடப்பதை கண்டிருக்கிறேன். அது ஜகாத் நிதியை சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதை சாப்பிட்டு இருப்பேன்.
புகாரி2055.
நபிகள் நாயகத்தின் அள்பா என்ற ஒட்டகத்தை ஒரு போட்டியில் கிராமவாசியின் ஒட்டகம் முந்தி சென்று விட்டது,
இதனால் முஸ்லிம்களுக்கு மனக்கவலையை ஏற்படுத்தியது.
இதை அறிந்த நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் ''இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதை தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கை ஆகும்'' என்று கூறினார்கள்.
புகாரி2872.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு கடன் கொடுத்து இருந்த ஒருவர் கடுமையான முறையில் திட்டுவதை கண்ட அவரது தோழர்கள் அவரை தாக்க முயன்றனர். உடனே நாயகம் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(கடுமையாக) பேசும் உரிமை உள்ளது என்று கூறினார்கள்.
புகாரி2306.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துசென்று கொண்டு இருக்கும் போது ஒரு கிராமவாசி,அவரது மேலாடையை(தோள் பகுதியில் காயம் ஏற்படும் அளவிற்கு) வேகமாக இழுத்து ''உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்கு தருமாறு உத்தரவிடுவீராக''என்று கேட்டார். அவரை நோக்கி திரும்பிய நபிகள் அவர்கள் சிரித்தார்கள்.அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணைஇட்டார்கள்.
புகாரி 3149.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக