புதன், 27 நவம்பர், 2013


30படி கோதுமைக்காக நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதனிடம் அடமானம் வைத்துஇருந்தார்கள்.அதை மீட்காமலேயே மரணித்தார்கள்''
ஆயிஷா ரலி
புகாரி2068.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் மரணிக்கும் போது தமது வெள்ளை கோவேறு கழுதை, தமது ஆயுதங்கள்,தர்மமாக வழங்கி சென்ற நிலம் ஆகியவற்றை தான் அவர்கள் விட்டு சென்றார்கள்.
புகாரி2739.
யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் ஜனாசா தொழுகை நடத்துவதற்காக நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களிடம் கொண்டு வரபட்டால், இவர் யாருக்கேனும் கடன் தரவேண்டிஉள்ளதா? என விசாரிப்பார்கள். கடனுக்காக சொத்து உள்ளதா? இல்லை என்றால் உங்கள் தோழருக்காக நீங்களே தொழுகை நடத்திகொல்லுங்கள். என்று கூறிவிடுவார்கள்.
புகாரி2297.
நபிகள் நாயகத்தின் பேரன் ஜகாத் நிதியில் இருந்து ஒரு பேரிச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார்,  இதை பார்த்த நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் அவரிடம் விரைந்து வந்து ''துப்பு துப்பு'' என கூறி துப்ப செய்தார்கள்.''நாம் ஜகாத் நிதியில் இருந்து சாப்பிட கூடாது என்று உமக்கு தெரியாதா? என்று கேட்டார்கள்.
புகாரி1485.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் தொழுகையை நடத்திவிட்டு வேகமாக வீட்டுக்கு சென்றுவிட்டு, பிறகு உடனே திரும்பி வந்தார்கள். ''நான் ஏன் அவாசரமாக சென்று வந்தேன் தெரியுமா? அரசு கருவூலத்திற்கு சொந்தமான ஒரு வெள்ளிகட்டி என் வீட்டில் இருந்தது அதை ஏழைகளுக்கு தர்மமாக வழங்கும்படி கூறி விட்டு வந்தேன்.
புகாரி 851.
எனது படுக்கையில் ஒரு பேரிச்சம்பழம் விழுந்து கிடப்பதை கண்டிருக்கிறேன். அது ஜகாத் நிதியை சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதை சாப்பிட்டு இருப்பேன்.
புகாரி2055.
நபிகள் நாயகத்தின் அள்பா என்ற ஒட்டகத்தை ஒரு போட்டியில் கிராமவாசியின் ஒட்டகம் முந்தி சென்று விட்டது,
இதனால் முஸ்லிம்களுக்கு மனக்கவலையை ஏற்படுத்தியது.
இதை அறிந்த நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் ''இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதை தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கை ஆகும்'' என்று கூறினார்கள்.
புகாரி2872.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு கடன் கொடுத்து இருந்த ஒருவர் கடுமையான முறையில் திட்டுவதை கண்ட அவரது தோழர்கள் அவரை தாக்க முயன்றனர். உடனே நாயகம் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(கடுமையாக) பேசும் உரிமை உள்ளது என்று கூறினார்கள்.
புகாரி2306.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துசென்று கொண்டு இருக்கும் போது ஒரு கிராமவாசி,அவரது மேலாடையை(தோள் பகுதியில் காயம் ஏற்படும் அளவிற்கு) வேகமாக இழுத்து ''உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்கு தருமாறு உத்தரவிடுவீராக''என்று கேட்டார். அவரை நோக்கி திரும்பிய நபிகள் அவர்கள் சிரித்தார்கள்.அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணைஇட்டார்கள்.
புகாரி 3149.

சனி, 23 நவம்பர், 2013


நபிகள் நாயகம் (ஸல்)அலை அவர்கள்ஜகாத் வரியை திரட்ட ஒருவரை அனுப்பினார்.நிதி திரட்டி வந்த அவர்,இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இது உங்களுக்கு உரியது என்றார். இதை கேட்டதும் நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் ''\இவர் தனது வீட்டிலோ தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்!இவருக்கு அன்பளிப்பு வழங்க படுகிறதா என்று பார்போம்' என்று கோபமாக கூறினார்கள்.
புகாரி2597.
நபி ஸல் அவர்களிடம் உங்களுக்கு ஒரு படுக்கை விரிப்பை தயாரித்து தருகிறோம் அது உங்கள் உடலை பாதுகாக்கும் என்று கேட்டோம்.அதற்கு அவர்கள்''எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு மரநிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்லகூடிய பயணியை போன்றது.பயணிக்கும் மரத்துக்கும் என்ன உறவோ அதை போன்றது தான் எனக்கும் இந்த உலகுக்கும் உள்ள தொடர்பு என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
அப்துல்லாஹ் ரலி
அகமத்3525.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஏழ்மை நிலையை பார்த்து நான் அழுதேன்.ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே!பாரசீக இத்தாலிய மன்னர்கள் எப்படி எப்படியோ வாழ்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
உமர் ரலி
புகாரி4913.
வீட்டில் நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு முன்னால் உறங்கிக்கொண்டு இருப்பேன், அவர்கள் தொழுகையில் சஜ்தா செய்யும் போது விரலால் என் காலை குத்துவார்கள். நான் காலை மடக்கி கொள்வேன்.அவர்கள் எழுந்து நின்றவுடன் நான் காலை நீடிகொள்வேன். இவ்வாறு நடந்ததற்கு காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது.
ஆயிஷா ரலி
புகாரி382.

வெள்ளி, 22 நவம்பர், 2013

Fwd: பெண்கள் பயான்



---------- Forwarded message ----------
From: ahmed ibrahim <aahmedibu@gmail.com>
Date: 2013/11/22
Subject: பெண்கள் பயான்
To: unarvunet <unarvunet@gmail.com>


தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் 18-11-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
தென் சென்னையை சேர்ந்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிறப்புறையற்றினார்கள். பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

Fwd: கிளை செயற்குழு



---------- Forwarded message ----------
From: ahmed ibrahim <aahmedibu@gmail.com>
Date: 2013/11/22
Subject: கிளை செயற்குழு
To: unarvunet <unarvunet@gmail.com>


தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் 22-11-13 வெள்ளிகிழமை அன்று கிளை செயற்குழு மாவட்ட தலைவர் கோபி சாதிக்,செயலாளர் ப்சலுல்பாஷா ஆகியோர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.மேலும் ஜனவரி 28 சிறை நிறப்பு போராட்டம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.