தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன என்று இவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சில பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது. ﺔﻤﻳﺰﺧ ﻦﺑﺍ ﺢﻴﺤﺻ - ﺓﻼﺼﻟﺍ ﺏﺎﺘﻛ ﺢﺒﺼﻟﺍ ﻥﺍﺫﺃ ﻲﻓ ﺐﻳﻮﺜﺘﻟﺍ ﺏﺎﺑ - ﺚﻳﺪﺣ 378 : ﺎﻧ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻥﺎﻤﺜﻋ ﻲﻠﺠﻌﻟﺍ ، ﺎﻧ ﻮﺑﺃ ﺔﻣﺎﺳﺃ ، ﻦﻋ ﻦﺑﺍ ﻑﻮﻋ ، ﻦﻋ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻦﻳﺮﻴﺳ ، ﻦﻋ ﺲﻧﺃ ﻝﺎﻗ : " ﻦﻣ ﺔﻨﺴﻟﺍ ﺍﺫﺇ ﻝﺎﻗ ﻥﺫﺆﻤﻟﺍ ﻲﻓ ﻥﺍﺫﺃ ﺮﺠﻔﻟﺍ : ﻲﺣ ﻰﻠﻋ ﺡﻼﻔﻟﺍ ﻝﺎﻗ : ﺓﻼﺼﻟﺍ ﻡﻮﻨﻟﺍ ﻦﻣ ﺮﻴﺧ " அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும். நூல் : சஹீஹு இப்னி குஸைமா (378) இந்த ஹதீஸ் அனஸ் (ரலி முஹம்மது பின் சீரீன் இப்னு அவ்ஃப் அபூ உசாமா முஹம்மது பின் உஸ்மான் ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதே செய்தி சுனனுத் தாரகுத்னீ என்ற நூலிலும் ஆதாரப்பூர்வமாக
பதிவுசெய்யப்பட்டுள்ளது. ﻲﻨﻄﻗﺭﺍﺪﻟﺍ ﻦﻨﺳ - ﺓﻼﺼﻟﺍ ﺏﺎﺘﻛ ﺏﺎﺑ ﺮﻛﺫ ﺔﻣﺎﻗﻹﺍ ﻑﻼﺘﺧﺍﻭ ﺕﺎﻳﺍﻭﺮﻟﺍ ﺎﻬﻴﻓ - ﺚﻳﺪﺣ 810 : ﺎﻨﺛﺪﺣ ﻦﻴﺴﺤﻟﺍ ﻦﺑ ﻞﻴﻋﺎﻤﺳﺇ , ﺎﻨﺛ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻥﺎﻤﺜﻋ ﻦﺑ ﺔﻣﺍﺮﻛ , ﺎﻨﺛ ﻮﺑﺃ ﺔﻣﺎﺳﺃ , ﺎﻨﺛ ﻦﺑﺍ ﻥﻮﻋ , ﻦﻋ ﺪﻤﺤﻣ , ﻦﻋ ﺲﻧﺃ , ﻝﺎﻗ : " ﻦﻣ ﺔﻨﺴﻟﺍ ﺍﺫﺇ ﻝﺎﻗ ﻥﺫﺆﻤﻟﺍ ﻲﻓ ﻥﺍﺫﺃ ﺮﺠﻔﻟﺍ : ﻲﺣ ﻰﻠﻋ ﺡﻼﻔﻟﺍ , ﻝﺎﻗ : ﺓﻼﺼﻟﺍ ﺮﻴﺧ ﻦﻣ ﻡﻮﻨﻟﺍ ﺓﻼﺼﻟﺍ ﺮﻴﺧ ﻦﻣ ﻡﻮﻨﻟﺍ ﻦﻴﺗﺮﻣ , ﻪﻠﻟﺍ ﺮﺒﻛﺃ ﻪﻠﻟﺍ ﻪﻠﻟﺍ ﻻﺇ ﻪﻟﺇ ﻻ ﺮﺒﻛﺃ " * அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூறுவது நபிவழியாகும். நூல் : தாரகுத்னீ (810) எனவே ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
Onlinepj.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக