சனி, 28 ஜனவரி, 2012

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் பிப்14 ஆர்பாட்டத்திற்காக ் ஆட்டோக்களில் விளம்பரம் செய்யப்பட்டது.

Ahmedibrahim

Feb14 suvar ad

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் பிப்14 ஆர்பாட்டத்திற்காக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

Ahmedibrahim

வியாழன், 26 ஜனவரி, 2012

Daava

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் தாவா பணியின் போது சத்தியமங்களத்தை சார்ந்த செந்தில்குமார் மற்றும் சீவாசன் ஆகிய மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்து திருக்குராண்கள் வழங்கப்பட்ட

செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடலாமா?

பதில் ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதைப் பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள். ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪﻴِﻌَﺳ ُﻦْﺑ ٍﺮْﻴَﻔُﻋ َﻝﺎَﻗ ﻲِﻨَﺛَّﺪَﺣ ُﺚْﻴَّﻠﻟﺍ َﻝﺎَﻗ ﻲِﻨَﺛَّﺪَﺣ ٌﻞْﻴَﻘُﻋ ْﻦَﻋ ِﻦْﺑﺍ ٍﺏﺎَﻬِﺷ ْﻦَﻋ َﺓَﺰْﻤَﺣ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ َﺮَﻤُﻋ َّﻥَﺃ َﻦْﺑﺍ َﺮَﻤُﻋ َﻝﺎَﻗ ُﺖْﻌِﻤَﺳ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ﺎَﻨْﻴَﺑ ﺎَﻧَﺃ ٌﻢِﺋﺎَﻧ ُﺖﻴِﺗُﺃ ِﺡَﺪَﻘِﺑ ٍﻦَﺒَﻟ ُﺖْﺑِﺮَﺸَﻓ ﻰَّﺘَﺣ ﻲِّﻧِﺇ ﻯَﺭَﺄَﻟ َّﻱِّﺮﻟﺍ ُﺝُﺮْﺨَﻳ ﻲِﻓ ﻱِﺭﺎَﻔْﻇَﺃ َّﻢُﺛ ُﺖْﻴَﻄْﻋَﺃ ﻲِﻠْﻀَﻓ َﺮَﻤُﻋ َﻦْﺑ ﺍﻮُﻟﺎَﻗ ِﺏﺎَّﻄَﺨْﻟﺍ ﺎَﻤَﻓ ﺎَﻳ ُﻪَﺘْﻟَّﻭَﺃ ِﻪَّﻠﻟﺍ َﻝﻮُﺳَﺭ ﻱﺭﺎﺨﺒﻟﺍ ﻩﺍﻭﺭ َﻢْﻠِﻌْﻟﺍ َﻝﺎَﻗ இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக்கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள். நூல் புகாரி (82) இது நபியவர்களின் கனவில் நடந்த சம்பவமாக இருந்தாலும் இதில்
கூறப்பட்டவை மார்க்கமாகும். நபிமார்களின் கனவுகள் இறைச் செய்தியாகும். அதுமட்டுமல்ல நடைமுறையில்
எது ஆகுமானதோ அதைத்தான் நபிமார்கள் கனவிலும் காண்பார்கள். நபியவர்கள் தாம் அருந்தி போக இருந்த மிச்சத்தை இப்னு உமர் (ரலி)
அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
இதிலிருந்து ஒருவர் மீதம் வைத்த உணவை மற்றொருவர் சாப்பிடுவதில்
தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியவர்களி்ல் தாம் அருந்தி மீதமிருந்ததை நபித்தோழர்களுக்கு
வழங்கியுள்ளார்கள். 2352 ﺎَﻨَﺛَّﺪَﺣ ﻮُﺑَﺃ ِﻥﺎَﻤَﻴْﻟﺍ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﺐْﻴَﻌُﺷ ْﻦَﻋ ِّﻱِﺮْﻫُّﺰﻟﺍ َﻝﺎَﻗ ﻲِﻨَﺛَّﺪَﺣ ُﺲَﻧَﺃ ُﻦْﺑ ٍﻚِﻟﺎَﻣ َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ ﺎَﻬَّﻧَﺃ ْﺖَﺒِﻠُﺣ ِﻝﻮُﺳَﺮِﻟ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ٌﺓﺎَﺷ ٌﻦِﺟﺍَﺩ َﻲِﻫَﻭ ﻲِﻓ ِﺭﺍَﺩ ِﺲَﻧَﺃ ِﻦْﺑ ٍﻚِﻟﺎَﻣ َﺐﻴِﺷَﻭ ﺎَﻬُﻨَﺒَﻟ ٍﺀﺎَﻤِﺑ ْﻦِﻣ ِﺮْﺌِﺒْﻟﺍ ﻲِﺘَّﻟﺍ ﻲِﻓ ِﺭﺍَﺩ ٍﺲَﻧَﺃ ﻰَﻄْﻋَﺄَﻓ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﺡَﺪَﻘْﻟﺍ َﺏِﺮَﺸَﻓ ُﻪْﻨِﻣ ﻰَّﺘَﺣ ﺍَﺫِﺇ َﻉَﺰَﻧ َﺡَﺪَﻘْﻟﺍ ْﻦِﻣ ِﻪﻴِﻓ ﻰَﻠَﻋَﻭ ِﻩِﺭﺎَﺴَﻳ ﻮُﺑَﺃ ٍﺮْﻜَﺑ ْﻦَﻋَﻭ ِﻪِﻨﻴِﻤَﻳ ٌّﻲِﺑﺍَﺮْﻋَﺃ َﻝﺎَﻘَﻓ ُﺮَﻤُﻋ َﻑﺎَﺧَﻭ ُﻪَﻴِﻄْﻌُﻳ ْﻥَﺃ َّﻲِﺑﺍَﺮْﻋَﺄْﻟﺍ ﺎَﺑَﺃ ِﻂْﻋَﺃ ٍﺮْﻜَﺑ ﺎَﻳ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ َﻙَﺪْﻨِﻋ ُﻩﺎَﻄْﻋَﺄَﻓ َّﻲِﺑﺍَﺮْﻋَﺄْﻟﺍ ﻱِﺬَّﻟﺍ ﻰَﻠَﻋ ِﻪِﻨﻴِﻤَﻳ َّﻢُﺛ َﻝﺎَﻗ َﻦَﻤْﻳَﺄْﻟﺍ َﻦَﻤْﻳَﺄْﻟﺎَﻓ ﻩﺍﻭﺭ ﻱﺭﺎﺨﺒﻟﺍ சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள்.
அப்போது அவர்களுடைய வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்து விட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?
என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்தப் பால்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள். நூல் புகாரி (2352) 453 ﺎَﻨَﺛَّﺪَﺣ ﻮُﺑَﺃ ِﺮْﻜَﺑ ُﻦْﺑ ﻲِﺑَﺃ َﺔَﺒْﻴَﺷ ُﺮْﻴَﻫُﺯَﻭ ُﻦْﺑ ٍﺏْﺮَﺣ ﺎَﻟﺎَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٌﻊﻴِﻛَﻭ ْﻦَﻋ ٍﺮَﻌْﺴِﻣ َﻥﺎَﻴْﻔُﺳَﻭ ْﻦَﻋ ِﻡﺍَﺪْﻘِﻤْﻟﺍ ِﻦْﺑ ٍﺢْﻳَﺮُﺷ ْﻦَﻋ ِﻪﻴِﺑَﺃ ْﻦَﻋ َﺔَﺸِﺋﺎَﻋ ْﺖَﻟﺎَﻗ ُﺖْﻨُﻛ ُﺏَﺮْﺷَﺃ ﺎَﻧَﺃَﻭ ٌﺾِﺋﺎَﺣ َّﻢُﺛ ُﻪُﻟِﻭﺎَﻧُﺃ َّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ُﻊَﻀَﻴَﻓ ُﻩﺎَﻓ ﻰَﻠَﻋ ِﻊِﺿْﻮَﻣ َّﻲِﻓ ُﺏَﺮْﺸَﻴَﻓ ُﻕَّﺮَﻌَﺗَﺃَﻭ َﻕْﺮَﻌْﻟﺍ ﺎَﻧَﺃَﻭ ٌﺾِﺋﺎَﺣ َّﻢُﺛ ُﻪُﻟِﻭﺎَﻧُﺃ َّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ُﻊَﻀَﻴَﻓ ُﻩﺎَﻓ ﻰَﻠَﻋ ِﻊِﺿْﻮَﻣ َّﻲِﻓ ْﻢَﻟَﻭ ْﺮُﻛْﺬَﻳ ٌﺮْﻴَﻫُﺯ ُﺏَﺮْﺸَﻴَﻓ ﻩﺍﻭﺭ ﻢﻠﺴﻣ ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். நூல் முஸ்லிம் (505) மேற்கண்ட நபியவர்களின் செயல்பாடுகளிலிருந்து ஒருவர்
மீதம் வைத்ததை மற்றொருவர் சாப்பிடுவதில்
தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். இது மனம் ஒப்புவது சம்மந்தமான பிரச்சனையாகும்.
ஒருவரது மனம் ஒப்பினால் இவ்வாறு செய்து கொள்ளலாம். ஒப்பாவிட்டால் விட்டு விடலாம். சமுதாயத்தில் கணவன் மனைவியரிடையே இந்த விஷயத்தில் அனைவருக்கும் மனம் ஒப்புவதை நாம் கான்கிறோம். மற்றவர்கள் விஷயத்தில் அவ்வளவாக மனம் ஒப்புவதில்லை. ஒருவரிடம் உள்ள அசுத்தம் மற்றும் பொருத்தமான ஏனைய காரணங்களினால் ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் வெறுத்தால் அதைக் குறை கூற மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.

செல்போனில் படம் பிடிக்கலாமா?

தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது மார்க்கத்தில் அனுமதி இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள
காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது தவறல்ல. வீடியோ கேம்ராவில் படம் பிடிப்பதற்கு உரிய சட்டம் செல்போன் மூலம் படம்பிடிப்பதற்கும்
பொருந்தும். இது குறித்து நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற நூலில் பின்வருமாறு நாம் விளக்கியுள்ளோம். டி.வி., வீடியோ டி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில்
சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. காணப்படுவது,
பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள். நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை. கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்? நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும்.
வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது. டி.வி.யும் இது போன்றது தான். நாம்
எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும்.
என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன்.
உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில்
எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது. மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது.
சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது. அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது. ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான். கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட
விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம். ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை. வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப
நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும். கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற
நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக
எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை. கடைசியாக ஒரு போதனை. பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன. ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத
நிகழ்ச்சிகளுக்காகக்
காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள். இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும்
போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா?
என்று பலமுறை யோசிக்க வேண்டும். நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற
நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை
கொள்ளாமலிருப்பார்களா?
இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும்,
செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள்.
தகுதியில்லாதவர்களிடம்
இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து
வாங்கியதாகவே அமையும்.

திங்கள், 23 ஜனவரி, 2012

ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா?

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன என்று இவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சில பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது. ﺔﻤﻳﺰﺧ ﻦﺑﺍ ﺢﻴﺤﺻ - ﺓﻼﺼﻟﺍ ﺏﺎﺘﻛ ﺢﺒﺼﻟﺍ ﻥﺍﺫﺃ ﻲﻓ ﺐﻳﻮﺜﺘﻟﺍ ﺏﺎﺑ - ﺚﻳﺪﺣ 378 : ﺎﻧ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻥﺎﻤﺜﻋ ﻲﻠﺠﻌﻟﺍ ، ﺎﻧ ﻮﺑﺃ ﺔﻣﺎﺳﺃ ، ﻦﻋ ﻦﺑﺍ ﻑﻮﻋ ، ﻦﻋ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻦﻳﺮﻴﺳ ، ﻦﻋ ﺲﻧﺃ ﻝﺎﻗ : " ﻦﻣ ﺔﻨﺴﻟﺍ ﺍﺫﺇ ﻝﺎﻗ ﻥﺫﺆﻤﻟﺍ ﻲﻓ ﻥﺍﺫﺃ ﺮﺠﻔﻟﺍ : ﻲﺣ ﻰﻠﻋ ﺡﻼﻔﻟﺍ ﻝﺎﻗ : ﺓﻼﺼﻟﺍ ﻡﻮﻨﻟﺍ ﻦﻣ ﺮﻴﺧ " அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும். நூல் : சஹீஹு இப்னி குஸைமா (378) இந்த ஹதீஸ் அனஸ் (ரலி முஹம்மது பின் சீரீன் இப்னு அவ்ஃப் அபூ உசாமா முஹம்மது பின் உஸ்மான் ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதே செய்தி சுனனுத் தாரகுத்னீ என்ற நூலிலும் ஆதாரப்பூர்வமாக
பதிவுசெய்யப்பட்டுள்ளது. ﻲﻨﻄﻗﺭﺍﺪﻟﺍ ﻦﻨﺳ - ﺓﻼﺼﻟﺍ ﺏﺎﺘﻛ ﺏﺎﺑ ﺮﻛﺫ ﺔﻣﺎﻗﻹﺍ ﻑﻼﺘﺧﺍﻭ ﺕﺎﻳﺍﻭﺮﻟﺍ ﺎﻬﻴﻓ - ﺚﻳﺪﺣ 810 : ﺎﻨﺛﺪﺣ ﻦﻴﺴﺤﻟﺍ ﻦﺑ ﻞﻴﻋﺎﻤﺳﺇ , ﺎﻨﺛ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻥﺎﻤﺜﻋ ﻦﺑ ﺔﻣﺍﺮﻛ , ﺎﻨﺛ ﻮﺑﺃ ﺔﻣﺎﺳﺃ , ﺎﻨﺛ ﻦﺑﺍ ﻥﻮﻋ , ﻦﻋ ﺪﻤﺤﻣ , ﻦﻋ ﺲﻧﺃ , ﻝﺎﻗ : " ﻦﻣ ﺔﻨﺴﻟﺍ ﺍﺫﺇ ﻝﺎﻗ ﻥﺫﺆﻤﻟﺍ ﻲﻓ ﻥﺍﺫﺃ ﺮﺠﻔﻟﺍ : ﻲﺣ ﻰﻠﻋ ﺡﻼﻔﻟﺍ , ﻝﺎﻗ : ﺓﻼﺼﻟﺍ ﺮﻴﺧ ﻦﻣ ﻡﻮﻨﻟﺍ ﺓﻼﺼﻟﺍ ﺮﻴﺧ ﻦﻣ ﻡﻮﻨﻟﺍ ﻦﻴﺗﺮﻣ , ﻪﻠﻟﺍ ﺮﺒﻛﺃ ﻪﻠﻟﺍ ﻪﻠﻟﺍ ﻻﺇ ﻪﻟﺇ ﻻ ﺮﺒﻛﺃ " * அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூறுவது நபிவழியாகும். நூல் : தாரகுத்னீ (810) எனவே ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
Onlinepj.

ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா?

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு சரியான இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சில பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது. ﺔﻤﻳﺰﺧ ﻦﺑﺍ ﺢﻴﺤﺻ - ﺓﻼﺼﻟﺍ ﺏﺎﺘﻛ ﺢﺒﺼﻟﺍ ﻥﺍﺫﺃ ﻲﻓ ﺐﻳﻮﺜﺘﻟﺍ ﺏﺎﺑ - ﺚﻳﺪﺣ 378 : ﺎﻧ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻥﺎﻤﺜﻋ ﻲﻠﺠﻌﻟﺍ ، ﺎﻧ ﻮﺑﺃ ﺔﻣﺎﺳﺃ ، ﻦﻋ ﻦﺑﺍ ﻑﻮﻋ ، ﻦﻋ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻦﻳﺮﻴﺳ ، ﻦﻋ ﺲﻧﺃ ﻝﺎﻗ : " ﻦﻣ ﺔﻨﺴﻟﺍ ﺍﺫﺇ ﻝﺎﻗ ﻥﺫﺆﻤﻟﺍ ﻲﻓ ﻥﺍﺫﺃ ﺮﺠﻔﻟﺍ : ﻲﺣ ﻰﻠﻋ ﺡﻼﻔﻟﺍ ﻝﺎﻗ : ﺓﻼﺼﻟﺍ ﻡﻮﻨﻟﺍ ﻦﻣ ﺮﻴﺧ " அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும். நூல் : சஹீஹு இப்னி குஸைமா (378) இந்த ஹதீஸ் அனஸ் (ரலி முஹம்மது பின் சீரீன் இப்னு அவ்ஃப் அபூ உசாமா முஹம்மது பின் உஸ்மான் ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதே செய்தி சுனனுத் தாரகுத்னீ என்ற நூலிலும் ஆதாரப்பூர்வமாக
பதிவுசெய்யப்பட்டுள்ளது. ﻲﻨﻄﻗﺭﺍﺪﻟﺍ ﻦﻨﺳ - ﺓﻼﺼﻟﺍ ﺏﺎﺘﻛ ﺏﺎﺑ ﺮﻛﺫ ﺔﻣﺎﻗﻹﺍ ﻑﻼﺘﺧﺍﻭ ﺕﺎﻳﺍﻭﺮﻟﺍ ﺎﻬﻴﻓ - ﺚﻳﺪﺣ 810 : ﺎﻨﺛﺪﺣ ﻦﻴﺴﺤﻟﺍ ﻦﺑ ﻞﻴﻋﺎﻤﺳﺇ , ﺎﻨﺛ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻥﺎﻤﺜﻋ ﻦﺑ ﺔﻣﺍﺮﻛ , ﺎﻨﺛ ﻮﺑﺃ ﺔﻣﺎﺳﺃ , ﺎﻨﺛ ﻦﺑﺍ ﻥﻮﻋ , ﻦﻋ ﺪﻤﺤﻣ , ﻦﻋ ﺲﻧﺃ , ﻝﺎﻗ : " ﻦﻣ ﺔﻨﺴﻟﺍ ﺍﺫﺇ ﻝﺎﻗ ﻥﺫﺆﻤﻟﺍ ﻲﻓ ﻥﺍﺫﺃ ﺮﺠﻔﻟﺍ : ﻲﺣ ﻰﻠﻋ ﺡﻼﻔﻟﺍ , ﻝﺎﻗ : ﺓﻼﺼﻟﺍ ﺮﻴﺧ ﻦﻣ ﻡﻮﻨﻟﺍ ﺓﻼﺼﻟﺍ ﺮﻴﺧ ﻦﻣ ﻡﻮﻨﻟﺍ ﻦﻴﺗﺮﻣ , ﻪﻠﻟﺍ ﺮﺒﻛﺃ ﻪﻠﻟﺍ ﻪﻠﻟﺍ ﻻﺇ ﻪﻟﺇ ﻻ ﺮﺒﻛﺃ " * அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூறுவது நபிவழியாகும். நூல் : தாரகுத்னீ (810) எனவே ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
Onlinepj

புதன், 18 ஜனவரி, 2012

கத்னா விருந்து கொடுக்க இஸ்லாத்தில் அனுமதியுண்டா ? அவ்வாறு கொடுக்கப்படும் விருந்தை உண்ணலாமா?

நகம் வெட்டுவது, அக்குள் முடிகளைக் களைவது, மர்மஸ்தானத்தின் முடிகளை நீக்குவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற செயல்களில் ஒன்று தான் கத்னா (விருத்தசேதனம்) செய்வது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ) நூல் : புகாரி 5889 நகம் வெட்டுவதற்கு ஒப்பான ஒன்றாகத்தான் நபியவர்கள் கத்னா செய்வதைக்
குறிப்பிட்டுள்ளார்கள். நகம் வெட்டுவதற்கோ அக்குள் முடிகளைக் களைவதற்கோ மீசையைக் கத்தரிப்பதற்கோ யாரும் எந்த விருந்தும் வைப்பது கிடையாது. அது போன்று தான் கத்னாவிற்கு என்று நபியவர்கள் எந்த விருந்தையும் நமக்குக் கற்றுத் தரவில்லை. இது நபியவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும். கத்னா செய்வது சுன்னத் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பேரர்களான ஹஸன், ஹுஸைன் ஆகியோருக்கு கத்னா செய்ததை விளம்பரம் செய்ததில்லை. யாருக்கும் சொல்லவும் இல்லை. அழைக்கவும் இல்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால் எந்த ஆண்டு எந்த மாதம் எந்தக் கிழமையில் அது நடத்தப்பட்ட்து என்று ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். நபிகள் நாயகம் ஸல் அவர்லளின் நரைமுடி எத்தனை என்பதை எல்லாம் கவனித்து சமுதாயத்துக்கிச் சொன்ன நபித்தோழர்கள் ஹஸன் ஹுஸைன் ஆகியோரின் கத்னா எப்போது நடந்தது என்று சொல்லவில்லை என்பதே அது விளம்பரபடுத்தாமல் தான் நடந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான அனாச்சாரங்களைப் புறக்கணிப்பது
அவசியமானதாகும். உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 70

கடமையான குளிப்பை நிர்வாணமாக குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா?

ஒருவர் மற்றவரின் பார்வை படும்படி குளிக்கும் போது நிர்வாணமாகக் குளிப்பது அறவே தடுக்கப்பட்டதாகும் 3497 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ ِﺪَّﻤَﺤُﻣ ِﻦْﺑ ٍﻞْﻴَﻔُﻧ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٌﺮْﻴَﻫُﺯ ِﻚِﻠَﻤْﻟﺍ ِﺪْﺒَﻋ ْﻦَﻋ ِّﻲِﻣَﺯْﺮَﻌْﻟﺍ َﻥﺎَﻤْﻴَﻠُﺳ ﻲِﺑَﺃ ِﻦْﺑ ْﻦَﻋ ٍﺀﺎَﻄَﻋ ْﻦَﻋ ﻰَﻠْﻌَﻳ َّﻥَﺃ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﻯَﺃَﺭ ﺎًﻠُﺟَﺭ ُﻞِﺴَﺘْﻐَﻳ ِﺯﺍَﺮَﺒْﻟﺎِﺑ ﺎَﻠِﺑ ٍﺭﺍَﺯِﺇ َﺪَﻌَﺼَﻓ َﺮَﺒْﻨِﻤْﻟﺍ َﺪِﻤَﺤَﻓ َﻪَّﻠﻟﺍ ﻰَﻨْﺛَﺃَﻭ ِﻪْﻴَﻠَﻋ َّﻢُﺛ َﻝﺎَﻗ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َّﻥِﺇ َﻪَّﻠﻟﺍ َّﺰَﻋ َّﻞَﺟَﻭ ٌّﻲِﻴَﺣ ٌﺮﻴِّﺘِﺳ ُّﺐِﺤُﻳ َﺀﺎَﻴَﺤْﻟﺍ َﺮْﺘَّﺴﻟﺍَﻭ ﺍَﺫِﺈَﻓ َﻞَﺴَﺘْﻏﺍ ْﻢُﻛُﺪَﺣَﺃ ْﺮِﺘَﺘْﺴَﻴْﻠَﻓ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ َﺪَﻤْﺣَﺃ ِﻦْﺑ ﻲِﺑَﺃ ٍﻒَﻠَﺧ ٍﺵﺎَّﻴَﻋ ُﻦْﺑ ِﺮْﻜَﺑ ﻮُﺑَﺃ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٍﺮِﻣﺎَﻋ ُﻦْﺑ ُﺩَﻮْﺳَﺄْﻟﺍ ﺎَﻨَﺛَّﺪَﺣ ْﻦَﻋ ِﺪْﺒَﻋ ِﻦْﺑ ِﻚِﻠَﻤْﻟﺍ ﻲِﺑَﺃ ْﻦَﻋ َﻥﺎَﻤْﻴَﻠُﺳ ْﻦَﻋ ٍﺀﺎَﻄَﻋ َﻥﺍَﻮْﻔَﺻ ﻰَﻠْﻌَﻳ ِﻦْﺑ ِﻪﻴِﺑَﺃ ْﻦَﻋ ِّﻲِﺒَّﻨﻟﺍ ْﻦَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﺍَﺬَﻬِﺑ ِﺚﻳِﺪَﺤْﻟﺍ َﻝﺎَﻗ ﻮُﺑَﺃ ﺩُﻭﺍَﺩ ُﻝَّﻭَﺄْﻟﺍ ﺩﻭﺍﺩﻮﺑﺃ ﻩﺍﻭﺭ ُّﻢَﺗَﺃ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் வெட்ட வெளியில் கீழாடை இல்லாமல் குளிப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பிறகு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக் கூடியவனும் (தனக்கு) திரையேற்படுத்திக் கொள்பவனும் ஆவான். அவன் வெட்கத்தையும் திரையிட்டுக் கொள்வதையும் விரும்புகின்றான். உங்களில் ஒருவர் குளித்தால் அவர் திரையிட்டுக் கொள்ளட்டும் அறிவிப்பவர் யஃலா பின் உமைய்யா (ரலி) நூல் அபூதாவூத் (3497) மேலும் ஒருவர் தனியாக குளியலறையில் குளிக்கும் போதும் சரி அல்லது தனிமையில் இருக்கும் போதும் சரி தன்னுடைய அந்தரங்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது இறையச்சத்தின் அடையாளமாகும். பின்வரும் ஹதீஸிலிருந்து இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 2693 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ ٍﺭﺎَّﺸَﺑ ﺎَﻨَﺛَّﺪَﺣ ﻰَﻴْﺤَﻳ ُﻦْﺑ ٍﺪﻴِﻌَﺳ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺰْﻬَﺑ ُﻦْﺑ ٍﻢﻴِﻜَﺣ ﻲِﻨَﺛَّﺪَﺣ ﻲِﺑَﺃ ْﻦَﻋ ﻱِّﺪَﺟ َﻝﺎَﻗ ُﺖْﻠُﻗ ﺎَﻳ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﺎَﻨُﺗﺍَﺭْﻮَﻋ ﺎَﻣ ﻲِﺗْﺄَﻧ ﺎَﻬْﻨِﻣ ﺎَﻣَﻭ ُﺭَﺬَﻧ ْﻆَﻔْﺣﺍ َﻝﺎَﻗ َﻚَﺗَﺭْﻮَﻋ ﺎَّﻟِﺇ َﻚِﺘَﺟْﻭَﺯ ْﻦِﻣ ْﻭَﺃ ﺎَﻣ ْﺖَﻜَﻠَﻣ َﻚُﻨﻴِﻤَﻳ َﻝﺎَﻘَﻓ ُﻞُﺟَّﺮﻟﺍ ُﻥﻮُﻜَﻳ َﻊَﻣ ِﻞُﺟَّﺮﻟﺍ َﻝﺎَﻗ ْﻥِﺇ َﺖْﻌَﻄَﺘْﺳﺍ ْﻥَﺃ ﺎَﻟ ﺎَﻫﺍَﺮَﻳ ٌﺪَﺣَﺃ ْﻞَﻌْﻓﺎَﻓ ُﺖْﻠُﻗ ُﻞُﺟَّﺮﻟﺍَﻭ ُﻥﻮُﻜَﻳ ﺎًﻴِﻟﺎَﺧ َﻝﺎَﻗ ُﻪَّﻠﻟﺎَﻓ ُﻪْﻨِﻣ ﺎَﻴْﺤَﺘْﺴُﻳ ْﻥَﺃ ُّﻖَﺣَﺃ ٌﺚﻳِﺪَﺣ ﺍَﺬَﻫ ﻰَﺴﻴِﻋ ﻮُﺑَﺃ َﻝﺎَﻗ ٌﻦَﺴَﺣ ُّﺪَﺟَﻭ ٍﺰْﻬَﺑ ُﻪُﻤْﺳﺍ ُﺔَﻳِﻭﺎَﻌُﻣ ُﻦْﺑ َﺓَﺪْﻴَﺣ ُّﻱِﺮْﻴَﺸُﻘْﻟﺍ ْﺪَﻗَﻭ ﻯَﻭَﺭ ُّﻱِﺮْﻳَﺮُﺠْﻟﺍ ْﻦَﻋ ِﻢﻴِﻜَﺣ ِﻦْﺑ ﻱﺪﻣﺮﺘﻟﺍ ﻩﺍﻭﺭ ٍﺰْﻬَﺑ ُﺪِﻟﺍَﻭ َﻮُﻫَﻭ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள். "ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். "ஒருவர் தனியாக இருக்கும் போது ?'' என்று நான் கேட்டதற்கு "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் '' என்று சொன்னார்கள் . அ
mu'aviya bin haida ral.
Tirmidi2693.

மூன்றுபேர் ஜமாஅத்தாக தொழும் போது எவ்வாறு அணிவகுக்க் வேண்டும்?

யூசுஃப் அமானுல்லாஹ் பதில் இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்பற்றித் தொழுதால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது. 539 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﻡﺎَﺸِﻫ ُﻦْﺑ ٍﺭﺎَّﻤَﻋ ُﻥﺎَﻤْﻴَﻠُﺳَﻭ ُﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ُّﻲِﻘْﺸَﻣِّﺪﻟﺍ ﻰَﻴْﺤَﻳَﻭ ُﻦْﺑ ِﻞْﻀَﻔْﻟﺍ ُّﻲِﻧﺎَﺘْﺴِﺠِّﺴﻟﺍ ﺍﻮُﻟﺎَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٌﻢِﺗﺎَﺣ ﻲِﻨْﻌَﻳ َﻦْﺑﺍ َﻞﻴِﻌَﻤْﺳِﺇ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺏﻮُﻘْﻌَﻳ ُﻦْﺑ ٍﺪِﻫﺎَﺠُﻣ ﻮُﺑَﺃ َﺓَﺭْﺰَﺣ ْﻦَﻋ َﺓَﺩﺎَﺒُﻋ ِﺪﻴِﻟَﻮْﻟﺍ ِﻦْﺑ ِﻦْﺑ ِﻦْﺑ َﺓَﺩﺎَﺒُﻋ َﻝﺎَﻗ ِﺖِﻣﺎَّﺼﻟﺍ ﺎَﻨْﻴَﺗَﺃ ﺍًﺮِﺑﺎَﺟ ﻲِﻨْﻌَﻳ َﻦْﺑﺍ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ َﻝﺎَﻗ ُﺕْﺮِﺳ َﻊَﻣ ِّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﻲِﻓ ٍﺓَﻭْﺰَﻏ َﻡﺎَﻘَﻓ ﻲِّﻠَﺼُﻳ ْﺖَﻧﺎَﻛَﻭ َّﻲَﻠَﻋ ٌﺓَﺩْﺮُﺑ ُﺖْﺒَﻫَﺫ ُﻒِﻟﺎَﺧُﺃ َﻦْﻴَﺑ ﺎَﻬْﻴَﻓَﺮَﻃ ﻲِﻟ ْﻎُﻠْﺒَﺗ ْﻢَﻠَﻓ ﺎَﻬُﺘْﺴَّﻜَﻨَﻓ ُﺏِﺫﺎَﺑَﺫ ﺎَﻬَﻟ ْﺖَﻧﺎَﻛَﻭ َّﻢُﺛ ُﺖْﻔَﻟﺎَﺧ َﻦْﻴَﺑ ﺎَﻬْﻴَﻓَﺮَﻃ َّﻢُﺛ ُﺖْﺼَﻗﺍَﻮَﺗ ﺎَﻬْﻴَﻠَﻋ ﺎَﻟ ُﻂُﻘْﺴَﺗ َّﻢُﺛ ُﺖْﺌِﺟ ﻰَّﺘَﺣ ُﺖْﻤُﻗ ْﻦَﻋ ِﺭﺎَﺴَﻳ ِﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﺬَﺧَﺄَﻓ ﻱِﺪَﻴِﺑ ﻲِﻧَﺭﺍَﺩَﺄَﻓ ﻰَّﺘَﺣ ﻲِﻨَﻣﺎَﻗَﺃ ْﻦَﻋ ِﻪِﻨﻴِﻤَﻳ َﺀﺎَﺠَﻓ ُﻦْﺑﺍ ٍﺮْﺨَﺻ ﻰَّﺘَﺣ َﻡﺎَﻗ ْﻦَﻋ ِﻩِﺭﺎَﺴَﻳ ِﻪْﻳَﺪَﻴِﺑ ﺎَﻧَﺬَﺧَﺄَﻓ ﺎًﻌﻴِﻤَﺟ ﺎَﻨَﻣﺎَﻗَﺃ ﻰَّﺘَﺣ ُﻪَﻔْﻠَﺧ َﻝﺎَﻗ َﻞَﻌَﺟَﻭ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﻲِﻨُﻘُﻣْﺮَﻳ ﺎَﻧَﺃَﻭ ﺎَﻟ ُﺮُﻌْﺷَﺃ َّﻢُﺛ ُﺖْﻨِﻄَﻓ ِﻪِﺑ َﺭﺎَﺷَﺄَﻓ َّﻲَﻟِﺇ ْﻥَﺃ َﺭِﺰَّﺗَﺃ ﺎَﻬِﺑ ﺎَّﻤَﻠَﻓ َﻍَﺮَﻓ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ﺎَﻳ ُﺮِﺑﺎَﺟ َﻝﺎَﻗ ُﺖْﻠُﻗ َﻚْﻴَّﺒَﻟ ﺎَﻳ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ َﻝﺎَﻗ ﺍَﺫِﺇ َﻥﺎَﻛ ﺎًﻌِﺳﺍَﻭ ْﻒِﻟﺎَﺨَﻓ َﻦْﻴَﺑ ِﻪْﻴَﻓَﺮَﻃ ﺍَﺫِﺇَﻭ َﻥﺎَﻛ ﺎًﻘِّﻴَﺿ ُﻩْﺩُﺪْﺷﺎَﻓ ﻰَﻠَﻋ
ﺩﻭﺍﺩ ﻮﺑﺃ ﻩﺍﻭﺭ َﻙِﻮْﻘِﺣ ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் ஒருபோருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.
பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப்
பிடித்து எங்களை அவர்களுக்குப்
பின்னால் நிற்க வைத்தார்கள்.
நூல் : அபூதாவுத் (539) முஸ்லிம் (5328)