வியாழன், 19 ஜூலை, 2012
2012 ramalan time pudukkottai dt.
Fri 1 20/7 4:46 6:01 12:22 3:44 6:41 7:57 Sat 2 21/7 4:46 6:01 12:22 3:44 6:41 7:57 Sun 3 22/7 4:47 6:01 12:22 3:44 6:41 7:57 Mon 4 23/7 4:47 6:02 12:22 3:43 6:41 7:56 Tue 5 24/7 4:47 6:02 12:22 3:43 6:41 7:56 Wed 6 25/7 4:48 6:02 12:22 3:43 6:40 7:56 Thu 7 26/7 4:48 6:02 12:22 3:43 6:40 7:56 Fri 8 27/7 4:48 6:02 12:22 3:42 6:40 7:55 Sat 9 28/7 4:49 6:03 12:22 3:41 6:40 7:55 Sun 10 29/7 4:49 6:03 12:22 3:41 6:40 7:54 Mon 11 30/7 4:49 6:03 12:22 3:41 6:39 7:54 Tue 12 31/7 4:50 6:03 12:22 3:40 6:39 7:54 Wed 13 1/8 4:50 6:03 12:21 3:40 6:39 7:53 Thu 14 2/8 4:50 6:03 12:21 3:39 6:38 7:53 Fri 15 3/8 4:50 6:03 12:21 3:38 6:38 7:52 Sat 16 4/8 4:51 6:04 12:21 3:38 6:38 7:52 Sun 17 5/8 4:51 6:04 12:21 3:37 6:37 7:51 Mon 18 6/8 4:51 6:04 12:21 3:37 6:37 7:51 Tue 19 7/8 4:51 6:04 12:21 3:36 6:37 7:50 Wed 20 8/8 4:52 6:04 12:21 3:35 6:36 7:50 Thu 21 9/8 4:52 6:04 12:21 3:35 6:36 7:50 Fri 22 10/8 4:52 6:04 12:21 3:35 6:36 7:49 Sat 23 11/8 4:52 6:04 12:20 3:33 6:35 7:48 Sun 24 12/8 4:52 6:04 12:20 3:32 6:35 7:48 Mon 25 13/8 4:53 6:04 12:20 3:32 6:34 7:47 Tue 26 14/8 4:53 6:05 12:20 3:31 6:34 7:47 Wed 27 15/8 4:53 6:05 12:20 3:30 6:34 7:46 Thu 28 16/8 4:53 6:05 12:19 3:29 6:33 7:46 Fri 29 17/8 4:53 6:05 12:19 3:28 6:33 7:45 Sat 30 18/8 4:54 6:05 12:19 3:27 6:32 7:44
ஞாயிறு, 8 ஜூலை, 2012
ரமளான் மாதத்தின் சிறப்புகள்
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் "ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956) "ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்
வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்
வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள்
திறக்கப்படுகின்றன,
ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்
காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம்
வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர்
சுவர்க்கவாதியா? அல்லது ரமலான்
மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச்
செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற
சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின்
கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து,
ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச்
செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால்
கிடைக்கும் நன்மைகளை விட
பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில்
கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக
சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது)
அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால்
ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன"
என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது.
மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக்
கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது. "ஷைத்தான்கள் விலங்கிடப்
படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள்
வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய
முடியாது, ஷைத்தான்களின்
செயல்களை முறியடிக்கக்கூடிய
வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள்
அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல!
ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான்
மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க
வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்
காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான
நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர்
பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ
அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில்
ஷைத்தானின் வேலைகளும் இருக்க
வாய்ப்பு உண்டு என்பதைத்
தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்)
அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக்
கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936)
இக்கருத்தை உறுதி செய்கிறது. கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக்
கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.
இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.
"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும்
பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி
வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது.
எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்:
முஸ்லிம் (2119) கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின்
காரணத்தால் நாம் செய்த முந்தைய
சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ்
மன்னிக்கின்றான். யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும்
வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்
படுகின்றது. யார் ரமாலனில்
நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புகாரீ (1901), முஸ்லிம் (1393) உம்ரா செய்தால் ஹஜ் நன்மை ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த
நன்மையை பெற்றுத் தரும். "ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ்
(செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரீ (1782) முஸ்லிம் (2408) சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல்
மூலம்
அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும்
நுழைய முடியாது. "சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும்
ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில்
அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்.
அவர்களைத் தவிர வேறு எவரும் அதன்
வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள்
எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும்
அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள்
நுழைந்ததும் அவ்வாசல்கள்
அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக
வேறு எவரும் நுழைய மாட்டார்கள்"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ
(1896), முஸ்லிம் (2121) அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் "நோன்பு நரகத்திலிருந்து காக்கும்
கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம்
அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச்
சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1894) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்
போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்
போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1904) இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள்
மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள்
மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன்
நடத்துவான் என்பது பொருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும்
இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம்
மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச்
சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர்
ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள்
தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள்
தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள்
கிடைக்கும். மகத்துவமிக்க இரவில் இதை நாம்
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம்
சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி,
நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ்
நமக்கு அருள்புரிவானாக!Tntj.net
Ahmedibrahim
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956) "ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்
வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்
வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) ரமலான் மாதம் வந்து விட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள்
திறக்கப்படுகின்றன,
ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்
காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம்
வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர்
சுவர்க்கவாதியா? அல்லது ரமலான்
மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச்
செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற
சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின்
கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால்
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து,
ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச்
செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால்
கிடைக்கும் நன்மைகளை விட
பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில்
கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக
சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது)
அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால்
ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன"
என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது.
மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக்
கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது. "ஷைத்தான்கள் விலங்கிடப்
படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள்
வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய
முடியாது, ஷைத்தான்களின்
செயல்களை முறியடிக்கக்கூடிய
வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள்
அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல!
ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான்
மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க
வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்
காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான
நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர்
பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ
அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில்
ஷைத்தானின் வேலைகளும் இருக்க
வாய்ப்பு உண்டு என்பதைத்
தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்)
அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக்
கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936)
இக்கருத்தை உறுதி செய்கிறது. கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக்
கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.
இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.
"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும்
பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி
வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது.
எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்:
முஸ்லிம் (2119) கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின்
காரணத்தால் நாம் செய்த முந்தைய
சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ்
மன்னிக்கின்றான். யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும்
வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்
படுகின்றது. யார் ரமாலனில்
நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புகாரீ (1901), முஸ்லிம் (1393) உம்ரா செய்தால் ஹஜ் நன்மை ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த
நன்மையை பெற்றுத் தரும். "ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ்
(செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரீ (1782) முஸ்லிம் (2408) சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல்
மூலம்
அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும்
நுழைய முடியாது. "சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும்
ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில்
அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்.
அவர்களைத் தவிர வேறு எவரும் அதன்
வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள்
எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும்
அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள்
நுழைந்ததும் அவ்வாசல்கள்
அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக
வேறு எவரும் நுழைய மாட்டார்கள்"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ
(1896), முஸ்லிம் (2121) அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் "நோன்பு நரகத்திலிருந்து காக்கும்
கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம்
அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச்
சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1894) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்
போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்
போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்:
புகாரீ (1904) இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள்
மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள்
மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன்
நடத்துவான் என்பது பொருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும்
இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம்
மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச்
சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர்
ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள்
தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள்
தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள்
கிடைக்கும். மகத்துவமிக்க இரவில் இதை நாம்
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம்
சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி,
நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ்
நமக்கு அருள்புரிவானாக!Tntj.net
Ahmedibrahim
பெருநாள் தொழுகை
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்
ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத்
தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில்
தொழுமாறு நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள்
தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். "மற்ற பள்ளிகளில் தொழுவதை விட
மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000
மடங்கு நன்மை அதிகம்" (புகாரீ 1190)
என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள்
தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல்
திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத்
தெளிவு படுத்தியுள்ளார்கள்.
எனவே இரு பெருநாள் தொழுகைகளையும்
திடலில் தான் தொழ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும்,
ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச்
செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச்
செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612 பெருநாள் தொழுகையில் பெண்கள் பெருநாள் தொழுகையில் பெண்கள்
கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும்
திடலுக்கு வர வேண்டும். அவர்கள்
தொழுகையைத் தவிர மற்ற நல்ல
காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும். இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப்
பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப்
பெண்களையும் (தொழும் திடலுக்கு)
அனுப்புமாறும், அப்பெண்கள்
வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள்
தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில்
கலந்து கொள்ளுமாறும்,
தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள்
ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள்
கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர்,
"அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும்
அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்
என்ன செய்வது?" என்றார். அதற்கு,
"அவளுடைய தோழி தனது (உபரியான)
மேலாடையை இவளுக்கு அணியக்
கொடுக்கட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616 ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல் பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச்
செல்லும் போது ஒரு வழியில்
சென்று வேறு வழியாகத்
திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள்
(போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ
986 தொழுகைக்கு முன் சாப்பிடுதல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர்
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச்
செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப்
பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்)
அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953 நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்)
அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட
மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில்
(குர்பானி பிராணியை) அறுக்கும்
வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426 முன் பின் சுன்னத்துகள் இல்லை இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின்
சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள்
இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும்,
பின்னரும் எந்தத் தொழுகையையும்
தொழுததில்லை. நபி (ஸல்) அவர்கள்
பெருநாளன்று (திடலுக்குச்)
சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர்.
அதற்கு முன்னும், பின்னும் எதையும்
தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616 பாங்கு இகாமத் இல்லை இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு,
இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும்
இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல;
இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்)
அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி),
நூல்: முஸ்லிம் 1610 மிம்பர் இல்லை வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம்
மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல்
பெருநாள் தொழுகைக்கு மிம்பரில்
நின்று உரையாற்றக் கூடாது. தரையில்
நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும்.
இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான்
பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன்
செய்தபோது.
"மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம்
செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர்.
இதற்கு முன்னர்
இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…"
என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265,
அஹ்மத் 10651 நபி (ஸல்) அவர்கள்
பெருநாளன்று ஒரேயொரு உரையை
நிகழ்த்தினார்கள்
என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்
உள்ளன. இரண்டு குத்பாக்கள்
நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்
அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள்
அன்று (திடலுக்குச் செல்வதற்காக)
வெளியேறினார்கள்.
மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில்
நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)
னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும் இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப்
பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம்
தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில்
இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல
இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும்.
திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும்
மகத்துவமும் உள்ளது. பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு)
புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள
கன்னிப் பெண்களையும் மாதவிடாய்
ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய
வேண்டும் எனவும்
கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.
ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர்
கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன்
அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின்
பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள்
எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615 அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர்
ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்)
அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத்
தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச்
செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில்
கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல
வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான
செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில்
தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும்
நினைப்பீராக! கவனமற்றவராக
ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)Tntj.net
Ahmedibrahim
ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத்
தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில்
தொழுமாறு நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள்
தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். "மற்ற பள்ளிகளில் தொழுவதை விட
மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000
மடங்கு நன்மை அதிகம்" (புகாரீ 1190)
என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள்
தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல்
திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத்
தெளிவு படுத்தியுள்ளார்கள்.
எனவே இரு பெருநாள் தொழுகைகளையும்
திடலில் தான் தொழ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும்,
ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச்
செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச்
செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612 பெருநாள் தொழுகையில் பெண்கள் பெருநாள் தொழுகையில் பெண்கள்
கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும்
திடலுக்கு வர வேண்டும். அவர்கள்
தொழுகையைத் தவிர மற்ற நல்ல
காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும். இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப்
பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப்
பெண்களையும் (தொழும் திடலுக்கு)
அனுப்புமாறும், அப்பெண்கள்
வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள்
தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில்
கலந்து கொள்ளுமாறும்,
தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள்
ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள்
கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர்,
"அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும்
அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்
என்ன செய்வது?" என்றார். அதற்கு,
"அவளுடைய தோழி தனது (உபரியான)
மேலாடையை இவளுக்கு அணியக்
கொடுக்கட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616 ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல் பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச்
செல்லும் போது ஒரு வழியில்
சென்று வேறு வழியாகத்
திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள்
(போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ
986 தொழுகைக்கு முன் சாப்பிடுதல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர்
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச்
செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப்
பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்)
அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953 நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்)
அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட
மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில்
(குர்பானி பிராணியை) அறுக்கும்
வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426 முன் பின் சுன்னத்துகள் இல்லை இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின்
சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள்
இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும்,
பின்னரும் எந்தத் தொழுகையையும்
தொழுததில்லை. நபி (ஸல்) அவர்கள்
பெருநாளன்று (திடலுக்குச்)
சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர்.
அதற்கு முன்னும், பின்னும் எதையும்
தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616 பாங்கு இகாமத் இல்லை இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு,
இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும்
இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல;
இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்)
அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி),
நூல்: முஸ்லிம் 1610 மிம்பர் இல்லை வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம்
மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல்
பெருநாள் தொழுகைக்கு மிம்பரில்
நின்று உரையாற்றக் கூடாது. தரையில்
நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும்.
இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான்
பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன்
செய்தபோது.
"மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம்
செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர்.
இதற்கு முன்னர்
இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…"
என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265,
அஹ்மத் 10651 நபி (ஸல்) அவர்கள்
பெருநாளன்று ஒரேயொரு உரையை
நிகழ்த்தினார்கள்
என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்
உள்ளன. இரண்டு குத்பாக்கள்
நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்
அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள்
அன்று (திடலுக்குச் செல்வதற்காக)
வெளியேறினார்கள்.
மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில்
நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)
னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும் இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப்
பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம்
தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில்
இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல
இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும்.
திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும்
மகத்துவமும் உள்ளது. பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு)
புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள
கன்னிப் பெண்களையும் மாதவிடாய்
ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய
வேண்டும் எனவும்
கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.
ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர்
கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன்
அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின்
பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள்
எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615 அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர்
ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்)
அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத்
தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச்
செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில்
கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல
வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான
செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில்
தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும்
நினைப்பீராக! கவனமற்றவராக
ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)Tntj.net
Ahmedibrahim
லைலதுல் கத்ர்
ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்க இரவில் இதை நாம்
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல்
கத்ரு இரவில்
நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்:
புகாரி (35) லைலத்துல் கத்ரு எந்த நாள்? லைலதுல் கத்ரு இரவில்
இவ்வளவு சிறப்பை இறைவன்
வைத்திருந்தாலும் அது எந்த
இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட
யாருக்கும் தெரியாது. நபி (ஸல்)
அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக
மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள்
லைலதுல் கத்ரு இரவைப்
பற்றி அறிவிப்பதற்காக
தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.
அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.
"லைலதுல் கத்ரு இரவு பற்றி நான்
உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன்.
அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள்
சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.
உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும்
உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான்
மாதத்தின் இருபத்து ஏழு,
இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய
இரவுகளில் அதனைப் பெற
முயற்சி செய்யுங்கள்" என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615) நபி (ஸல்)
அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ்
தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட
இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த
மனிதனும் கூற முடியாது. எனினும்
லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய
ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள
ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்:
புகாரி 2017, முஸ்லிம் 1997 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச்
சொல்லும் போது, "அது ரமலான் மாதத்தில்
தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில்
கடைசிப் பத்தில் தேடுங்கள்.
அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று
அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி
ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29)
இருக்கும்" என்று சொல்லி விட்டு, "யார்
அதில் ஈமானோடும்
நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும்"
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700) மேற்கூறிய ஹதீஸ்கள்
ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர்,
ரமலான் மாதத்தில் கடைசிப்
பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான்
இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப்
பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்
தான் இருக்கும்
என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம்
பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத
பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான்
என்று முடிவு செய்து பெரிய விழாவாகக்
கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில்
ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது,
இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்:
அபூதாவூத் (1178) இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக
வைத்து சிலர் லைலத்துல் கத்ர்
இரவு 27வது இரவு தான்
என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம்
27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால்
இதற்கு மாற்றமாக நாம் முன்னர்
குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர்
இரவு என்பது நபி (ஸல்)
அவர்களுக்கே மறக்கடிக்கப்
பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின்
ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள்
என்று நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27
என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும்
வந்துள்ளது. அவற்றை பாருங்கள். ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான
லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள்
நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) , நூல்: அஹ்மத் (15466) இதைப் போன்று 21, 23, 25
என்று மூன்று இரவுகளை மட்டும்
குறிப்பிட்டும் வந்துள்ளது.
"ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்
லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல்
கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில்,
இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2021 இதைப் போன்று 23, 29
இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும்
குறிப்பிட்டும் வந்துள்ளது.
"லைலதுல் கத்ரு இரவு கடைசிப்
பத்து நாட்களில் உள்ளது.
அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2022 இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன்
சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம்
ஷாஃபீ அவர்கள் தெளிவான
விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள்
கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், "நபியவர்கள் கேட்கப்படும்
கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம்
உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல்
கத்ரைத் தேடலாமா?' என்று கேட்கும்
போது அந்த இரவில் தேடுங்கள்.
என்று பதிலளித்திருப்பார்கள்" என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722) அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில்
லைலத்துல் கத்ரை தேடலாமா?
என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்)
அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்'
என்று கூறியிருப்பார்கள்.
இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம்,
23வது இரவில் தேடுங்கள்'
என்று கூறியிருப்பார்கள்.
இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப்
பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்திருப்பார்கள்.
எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள்
பற்றியும் ஹதீஸ்களில் இடம்
பெற்று இருக்கிறது. இந்தக்
கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.Tntg.net
Ahmedibrahim
அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால்
என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம்
மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,
ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும்
இறங்குகின்றனர். ஸலாம்!
இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்
97:1-5) முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல்
கத்ரு இரவில்
நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்:
புகாரி (35) லைலத்துல் கத்ரு எந்த நாள்? லைலதுல் கத்ரு இரவில்
இவ்வளவு சிறப்பை இறைவன்
வைத்திருந்தாலும் அது எந்த
இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட
யாருக்கும் தெரியாது. நபி (ஸல்)
அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக
மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள்
லைலதுல் கத்ரு இரவைப்
பற்றி அறிவிப்பதற்காக
தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.
அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.
"லைலதுல் கத்ரு இரவு பற்றி நான்
உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன்.
அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள்
சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.
உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும்
உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான்
மாதத்தின் இருபத்து ஏழு,
இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய
இரவுகளில் அதனைப் பெற
முயற்சி செய்யுங்கள்" என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615) நபி (ஸல்)
அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ்
தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட
இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த
மனிதனும் கூற முடியாது. எனினும்
லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய
ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள
ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்:
புகாரி 2017, முஸ்லிம் 1997 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச்
சொல்லும் போது, "அது ரமலான் மாதத்தில்
தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில்
கடைசிப் பத்தில் தேடுங்கள்.
அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று
அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி
ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29)
இருக்கும்" என்று சொல்லி விட்டு, "யார்
அதில் ஈமானோடும்
நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும்"
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700) மேற்கூறிய ஹதீஸ்கள்
ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர்,
ரமலான் மாதத்தில் கடைசிப்
பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான்
இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப்
பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்
தான் இருக்கும்
என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம்
பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத
பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான்
என்று முடிவு செய்து பெரிய விழாவாகக்
கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில்
ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது,
இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்:
அபூதாவூத் (1178) இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக
வைத்து சிலர் லைலத்துல் கத்ர்
இரவு 27வது இரவு தான்
என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம்
27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால்
இதற்கு மாற்றமாக நாம் முன்னர்
குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர்
இரவு என்பது நபி (ஸல்)
அவர்களுக்கே மறக்கடிக்கப்
பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின்
ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள்
என்று நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27
என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும்
வந்துள்ளது. அவற்றை பாருங்கள். ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான
லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள்
நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) , நூல்: அஹ்மத் (15466) இதைப் போன்று 21, 23, 25
என்று மூன்று இரவுகளை மட்டும்
குறிப்பிட்டும் வந்துள்ளது.
"ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்
லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல்
கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில்,
இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2021 இதைப் போன்று 23, 29
இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும்
குறிப்பிட்டும் வந்துள்ளது.
"லைலதுல் கத்ரு இரவு கடைசிப்
பத்து நாட்களில் உள்ளது.
அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
புகாரி 2022 இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன்
சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம்
ஷாஃபீ அவர்கள் தெளிவான
விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள்
கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், "நபியவர்கள் கேட்கப்படும்
கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம்
உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல்
கத்ரைத் தேடலாமா?' என்று கேட்கும்
போது அந்த இரவில் தேடுங்கள்.
என்று பதிலளித்திருப்பார்கள்" என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722) அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில்
லைலத்துல் கத்ரை தேடலாமா?
என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்)
அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்'
என்று கூறியிருப்பார்கள்.
இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம்,
23வது இரவில் தேடுங்கள்'
என்று கூறியிருப்பார்கள்.
இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப்
பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்திருப்பார்கள்.
எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள்
பற்றியும் ஹதீஸ்களில் இடம்
பெற்று இருக்கிறது. இந்தக்
கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.Tntg.net
Ahmedibrahim
இரவில் தொழும் தொழுகை.
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும்
சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத்
தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும்
தொழுகையாகும். "ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த
நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம்
மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும்.
கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த
தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157 இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல
பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல்
லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல்
(இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத்
தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்
தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத்
தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ்
என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர்
நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. இரவுத்
தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ
வேண்டும். ஒருவர் இரவுத்
தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால்
ஒற்றைப்
படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத்
தொழுகையைப் பற்றிக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத்
தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ
வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத்
தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்)
தொழுதவற்றை அது ஒற்றையாக
ஆக்கி விடும்" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்:
புகாரீ 990 இரவுத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர்
நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும்
தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத்
தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர்
தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள்
தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்
1340 ரக்அத்களின் எண்ணிக்கை 8+3 ரக்அத்கள் "ரமலானில் நபி (ஸல்) அவர்களின்
தொழுகை எவ்வாறு இருந்தது?"
என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன்.
அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள்
ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும்
பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும்
நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும்
கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள்
தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வித்ருத்
தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?"
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் "ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம்
உறங்குவதில்லை" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ
1147, முஸ்லிம் 1344 12+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்:
புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402, 10+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில்
ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள்.
தொழுது முடித்த பின்
(தம்மை அழைப்பதற்காக)
தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம்
சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்)
வந்ததும் (எழுந்து) சுருக்கமாக
இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்)
தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள்
தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள்
வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த
ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர
வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341 4+5 ரக்அத்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் : எனது சிறிய
தாயாரும் நபி (ஸல்) அவர்களின்
மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ்
(ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள்
தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள்
(பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப்
பின்னர்
தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள்
தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர்
எழுந்து "சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?" அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச்
சொல்லி விசாரித்து விட்டு மீண்டும்
தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும்
(அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப்
போய் நின்று கொண்டேன்.
உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்)
ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின்
முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும்
தொழுது விட்டு அவர்களின்
குறட்டை ஒலியை நான்
கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள் . பிறது (சுபுஹத்)
தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் :
புகாரி (117) 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத்
தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில்
கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும்
உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341) 9 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத்
இரண்டு ரக்அத்கள் தவிர
பதினொரு ரக்அத்கள், (சில சமயம்)
ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 7 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத்
இரண்டு ரக்அத்கள் தவிர
பதினொரு ரக்அத்கள், (சில சமயம்)
ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
5,3, 1 ரக்அத்கள் "வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார்
நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர்
தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர்
மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார்
நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்:
நஸயீ 1692, அபூதாவூத் 1212,
இப்னுமாஜா 1180
tntj.net
Ahmedibrahim
சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத்
தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும்
தொழுகையாகும். "ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த
நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம்
மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும்.
கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த
தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157 இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல
பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல்
லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல்
(இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத்
தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்
தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத்
தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ்
என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர்
நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. இரவுத்
தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ
வேண்டும். ஒருவர் இரவுத்
தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால்
ஒற்றைப்
படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத்
தொழுகையைப் பற்றிக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத்
தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ
வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத்
தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்)
தொழுதவற்றை அது ஒற்றையாக
ஆக்கி விடும்" என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்:
புகாரீ 990 இரவுத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர்
நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும்
தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத்
தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர்
தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள்
தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்
1340 ரக்அத்களின் எண்ணிக்கை 8+3 ரக்அத்கள் "ரமலானில் நபி (ஸல்) அவர்களின்
தொழுகை எவ்வாறு இருந்தது?"
என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன்.
அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள்
ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும்
பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும்
நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும்
கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள்
தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வித்ருத்
தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?"
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் "ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம்
உறங்குவதில்லை" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ
1147, முஸ்லிம் 1344 12+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்:
புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402, 10+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில்
ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள்.
தொழுது முடித்த பின்
(தம்மை அழைப்பதற்காக)
தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம்
சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்)
வந்ததும் (எழுந்து) சுருக்கமாக
இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்)
தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள்
தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள்
வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த
ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர
வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341 4+5 ரக்அத்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் : எனது சிறிய
தாயாரும் நபி (ஸல்) அவர்களின்
மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ்
(ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள்
தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள்
(பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப்
பின்னர்
தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள்
தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர்
எழுந்து "சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?" அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச்
சொல்லி விசாரித்து விட்டு மீண்டும்
தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும்
(அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப்
போய் நின்று கொண்டேன்.
உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்)
ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின்
முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும்
தொழுது விட்டு அவர்களின்
குறட்டை ஒலியை நான்
கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள் . பிறது (சுபுஹத்)
தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் :
புகாரி (117) 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில்
பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத்
தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில்
கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும்
உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341) 9 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத்
இரண்டு ரக்அத்கள் தவிர
பதினொரு ரக்அத்கள், (சில சமயம்)
ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 7 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத்
இரண்டு ரக்அத்கள் தவிர
பதினொரு ரக்அத்கள், (சில சமயம்)
ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
5,3, 1 ரக்அத்கள் "வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார்
நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர்
தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர்
மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார்
நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்:
நஸயீ 1692, அபூதாவூத் 1212,
இப்னுமாஜா 1180
tntj.net
Ahmedibrahim
இஃதிகாப
இஃதிகாப் என்ற
அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற
பொருளாகும். இஸ்லாமிய வழக்கில்
பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத்
தங்குவதற்கு இஃதிகாஃப்
என்று சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின்
கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப்
இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும்
இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக
இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில்
அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும்,
வேறு எண்ணங்களுக்கு இடம்
கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக்
கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும்
நபித் தோழர்களும் இஃதிகாப்
இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின்
813 செய்தி ஆதாரமாக உள்ளது. இஃதிகாபின் ஆரம்பம் இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள்
காலை சுப்ஹுத்
தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும்
இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க
நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு
இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச்
செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007) ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத்
தேடுமாறு நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.
எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப்
இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம்
நாள் பஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த
இரவு அவர்களுக்குத் தவறிப்
போயிருக்கும். 20 ஆம் நாள்
தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள்
என்று விளங்குவதே பொருத்தமாக
இருக்கும். இஃதிகாபின் முடிவு நேரம் இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல்
முடிந்தால் அன்றைய மஃக்ரிபில்
(அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்)
இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால்
அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம். அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் ரமலான் மாதத்தின்
நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில்
இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம்
இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம்
இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்:
புகாரி 2018) நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப்
இருக்கும் போது இருபதாம்
இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம்
இரவு துவங்கியதும் போவார்கள் என்ற
செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில்
இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30
இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம்
துவங்கும் இரவில் வீடு திரும்பலாம்
என்பதை அறியலாம். பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான்
வீடு திரும்ப வேண்டுமென சிலர்
கூறினாலும் அதற்கு நபிமொழிகளில்
ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா? நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப்
பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான்
அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன்
என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
(சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால்
வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும்
போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும்
குறிப்பானது என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க
நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும்
இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின்
கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின்
கூடாரம் எனப் பல கூடாரங்களைக்
கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?"
என்று கேட்டு விட்டு இஃதிகாஃப்
இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால்
மாதம் பத்து நாட்கள் இஃதிகாப்
இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ (2034) "நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற
கேள்வியும், நபி (ஸல்) அவர்கள்
தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை
விட்டதும் இவ்வாறு கூடாரங்கள்
அமைப்பதில் அவர்களுக்கு இருந்த
அதிருப்தியைக் காட்டுகின்றது. மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும்
மற்றவர்கள் கூடாரம் அமைக்கக்
கூடாது என்பதை விளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத்
தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய
போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள்.
அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது…
(புகாரீ 2041) நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும்
இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில்
வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள்.
காலைத்
தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்)
அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்)
அவர்களுக்குரியது,
இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி)
அவர்களுக்குரியது.
மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி)
அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி)
அவர்களுக்குரியது. இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள்
அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும்
கூடராங்களை அமைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும்
மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க
வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே!
எனவே நபித்தோழர்கள்
கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும்
நபி (ஸல்) அவர்கள்
நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை
என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள்
தேவையில்லை. இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள் பள்ளிவாசலில் இருக்கும்
போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்
கூடாது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்
போது மனைவியருடன் கூடாதீர்கள்!
இது அல்லாஹ்வின் வரம்புகள்.
எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை)
அஞ்சுவதற்காக அல்லாஹ்
தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187) தேவையில்லாமல்
பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்
போது தமது தலையை வீட்டிலிருக்கும் என்
பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால்
தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்:
புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில்
செல்லக் கூடாது என்பதையும் அவசியத்
தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப்
இருக்கலாம் என்பதற்குப் பின்வரும்
செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்
போது அவர்களின் மனைவியரில் ஒருவரும்
இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ
(309) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின்
மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும்
இஃதிகாஃப் இருந்ததாக நாம்
அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை. நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப்
இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக
பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க
வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள்
இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான்
அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப்
இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக
அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில்
மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
Tntj.net
Ahmedibrahim
அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற
பொருளாகும். இஸ்லாமிய வழக்கில்
பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத்
தங்குவதற்கு இஃதிகாஃப்
என்று சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின்
கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப்
இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும்
இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக
இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில்
அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும்,
வேறு எண்ணங்களுக்கு இடம்
கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக்
கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும்
நபித் தோழர்களும் இஃதிகாப்
இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின்
813 செய்தி ஆதாரமாக உள்ளது. இஃதிகாபின் ஆரம்பம் இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள்
காலை சுப்ஹுத்
தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும்
இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க
நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு
இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச்
செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007) ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத்
தேடுமாறு நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.
எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப்
இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம்
நாள் பஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த
இரவு அவர்களுக்குத் தவறிப்
போயிருக்கும். 20 ஆம் நாள்
தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள்
என்று விளங்குவதே பொருத்தமாக
இருக்கும். இஃதிகாபின் முடிவு நேரம் இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல்
முடிந்தால் அன்றைய மஃக்ரிபில்
(அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்)
இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால்
அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம். அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் ரமலான் மாதத்தின்
நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில்
இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம்
இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம்
இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்:
புகாரி 2018) நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப்
இருக்கும் போது இருபதாம்
இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம்
இரவு துவங்கியதும் போவார்கள் என்ற
செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில்
இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30
இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம்
துவங்கும் இரவில் வீடு திரும்பலாம்
என்பதை அறியலாம். பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான்
வீடு திரும்ப வேண்டுமென சிலர்
கூறினாலும் அதற்கு நபிமொழிகளில்
ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா? நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப்
பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான்
அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன்
என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
(சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால்
வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும்
போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும்
குறிப்பானது என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க
நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும்
இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின்
கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின்
கூடாரம் எனப் பல கூடாரங்களைக்
கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?"
என்று கேட்டு விட்டு இஃதிகாஃப்
இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால்
மாதம் பத்து நாட்கள் இஃதிகாப்
இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ (2034) "நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற
கேள்வியும், நபி (ஸல்) அவர்கள்
தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை
விட்டதும் இவ்வாறு கூடாரங்கள்
அமைப்பதில் அவர்களுக்கு இருந்த
அதிருப்தியைக் காட்டுகின்றது. மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும்
மற்றவர்கள் கூடாரம் அமைக்கக்
கூடாது என்பதை விளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத்
தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய
போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள்.
அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது…
(புகாரீ 2041) நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும்
இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில்
வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள்.
காலைத்
தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்)
அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்)
அவர்களுக்குரியது,
இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி)
அவர்களுக்குரியது.
மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி)
அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி)
அவர்களுக்குரியது. இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள்
அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும்
கூடராங்களை அமைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும்
மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க
வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே!
எனவே நபித்தோழர்கள்
கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும்
நபி (ஸல்) அவர்கள்
நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை
என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள்
தேவையில்லை. இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள் பள்ளிவாசலில் இருக்கும்
போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்
கூடாது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்
போது மனைவியருடன் கூடாதீர்கள்!
இது அல்லாஹ்வின் வரம்புகள்.
எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை)
அஞ்சுவதற்காக அல்லாஹ்
தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187) தேவையில்லாமல்
பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்
போது தமது தலையை வீட்டிலிருக்கும் என்
பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால்
தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்:
புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில்
செல்லக் கூடாது என்பதையும் அவசியத்
தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப்
இருக்கலாம் என்பதற்குப் பின்வரும்
செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்
போது அவர்களின் மனைவியரில் ஒருவரும்
இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ
(309) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின்
மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும்
இஃதிகாஃப் இருந்ததாக நாம்
அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை. நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப்
இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக
பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க
வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள்
இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான்
அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப்
இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக
அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில்
மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
Tntj.net
Ahmedibrahim
ஃபித்ர
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற
வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள்,
பெண்கள், அடிமைகள், சிறுவர்கள்
மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண்,
பெண், பெரியவர் மற்றும் சிறுவர்
மீது நோன்புப் பெருநாள் தர்மமாக
ஒரு ஸாவு கோதுமை,
அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்:
புகாரி 1503 ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள
அனைவருக்காகவும் இந்தத்
தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக்
கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள்
இருந்தால் தலைக்கு இரண்டரைக்
கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக்
கிலோ அரிசியை வழங்க வேண்டும்.
இதுவே ஃபித்ரா எனப்படுகிறது. ஃபித்ராவின் நோக்கம் இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும்
இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான
காரியங்களை விட்டும் நோன் பாளியைத்
தூய்மைப்படுத்தவும்,
ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் :
அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட
தவறுகளுக்குப் பரிகாரமாக
இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த
நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத
சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின்
சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த
நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம் மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச்
செல்வதற்கு முன்னால்
ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள்
தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள்
தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க
வேண்டும் என்று சில சகோதரர்கள்
கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள்
தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும்
என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள
இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால்
கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும்
கொடுக்கலாம் எனவும் இந்த
ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம். பெருநாள் தொழுகைக்கு முன்
என்பதை இரண்டு விதமாகவும்
புரிந்து கொள்ள இடமிருந்தாலும்
வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது,
"பெருநாள் தொழுகைக்குப் பின்னர்
கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில
நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்" என்ற
கருத்தே சரியானது என்பது
உறுதியாகிறது. ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும்
பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
என்னை நியமித்திருந்தார்கள்.
அப்போது ஷைத்தான்
வந்து அதிலிருந்து எடுக்கலானான்.
உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்" என்று நான்
கூறினேன். அதற்கு அவன் "எனக்குக்
குடும்பம் உள்ளது. எனக்குக் கடும்
தேவை உள்ளது" எனக் கூறினான். அவனை நான்
விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?"
என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே!
அவன் வறுமையை முறையிட்டதால்
இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்"
என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம்
வருவான்" என்று கூறினார்கள். நான்
அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும்
வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப்
பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம்
கொண்டு போகப் போகி றேன்" என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது.
இனி வர மாட்டேன்" என்று அவன் கூறினான்.
அவனை நான் விட்டு விட்டேன். காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்
சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?"
என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான்.
இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக்
கூறினேன். "அவன் உன்னிடம் பொய்
சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ்
புகாரியில் வகாலத் என்ற பாடத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய
எண்களில் கூறப்பட்டுள்ளது. "இந்த ஹதீஸில்
ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான்
ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது.
இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத்
திரட்டுவதையே குறிக்கிறது.
ஃபித்ராவை குறிக்கவில்லை" என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில்
மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல.
அன்றாடம் திரட்டப்பட்டுக்
கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்'
என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும். இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும்
ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன்,
ஆண், பெண் அனைவர் மீதும்
ஒரு ஸாவு பேரிச்சம் பழம்
அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற
ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒவ்வொருவருக்கும்
ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்
தினார்கள்" என்பது ஃபித்ராவைத் தான்
குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத்
என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத்
வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட
ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது. எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம்
திரட்டப்பட்டது என்பதற்கும்
இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.
திரட்டும்
பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு
முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது. ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட
பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில்
இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான்
(அல்லது கெட்ட மனிதன்)
வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில
நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத்
திரட்டலாம் என்பது தெரிகிறது. நபித் தோழர்கள் நோன்புப்
பெரு நாளைக்கு ஒருநாள்
அல்லது இரண்டு நாட்களுக்கு முன்
ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர்
என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்
போதே நடந்ததை இது குறிக்கும் என்றால்
இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப்
பின்னர் நபித் தோழர்கள்
இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி)
அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக
இது அமையும். எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில
நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத்
திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன்
கடைசி நேரம் உள்ளது
tntj.net
Ahmedibrahim
வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள்,
பெண்கள், அடிமைகள், சிறுவர்கள்
மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண்,
பெண், பெரியவர் மற்றும் சிறுவர்
மீது நோன்புப் பெருநாள் தர்மமாக
ஒரு ஸாவு கோதுமை,
அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்:
புகாரி 1503 ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள
அனைவருக்காகவும் இந்தத்
தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக்
கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள்
இருந்தால் தலைக்கு இரண்டரைக்
கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக்
கிலோ அரிசியை வழங்க வேண்டும்.
இதுவே ஃபித்ரா எனப்படுகிறது. ஃபித்ராவின் நோக்கம் இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும்
இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான
காரியங்களை விட்டும் நோன் பாளியைத்
தூய்மைப்படுத்தவும்,
ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் :
அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட
தவறுகளுக்குப் பரிகாரமாக
இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த
நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத
சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின்
சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த
நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம் மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச்
செல்வதற்கு முன்னால்
ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள்
தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள்
தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க
வேண்டும் என்று சில சகோதரர்கள்
கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள்
தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும்
என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள
இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால்
கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும்
கொடுக்கலாம் எனவும் இந்த
ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம். பெருநாள் தொழுகைக்கு முன்
என்பதை இரண்டு விதமாகவும்
புரிந்து கொள்ள இடமிருந்தாலும்
வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது,
"பெருநாள் தொழுகைக்குப் பின்னர்
கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில
நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்" என்ற
கருத்தே சரியானது என்பது
உறுதியாகிறது. ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும்
பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
என்னை நியமித்திருந்தார்கள்.
அப்போது ஷைத்தான்
வந்து அதிலிருந்து எடுக்கலானான்.
உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்" என்று நான்
கூறினேன். அதற்கு அவன் "எனக்குக்
குடும்பம் உள்ளது. எனக்குக் கடும்
தேவை உள்ளது" எனக் கூறினான். அவனை நான்
விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?"
என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே!
அவன் வறுமையை முறையிட்டதால்
இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்"
என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம்
வருவான்" என்று கூறினார்கள். நான்
அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும்
வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப்
பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம்
கொண்டு போகப் போகி றேன்" என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது.
இனி வர மாட்டேன்" என்று அவன் கூறினான்.
அவனை நான் விட்டு விட்டேன். காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்
சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?"
என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான்.
இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக்
கூறினேன். "அவன் உன்னிடம் பொய்
சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்"
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ்
புகாரியில் வகாலத் என்ற பாடத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய
எண்களில் கூறப்பட்டுள்ளது. "இந்த ஹதீஸில்
ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான்
ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது.
இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத்
திரட்டுவதையே குறிக்கிறது.
ஃபித்ராவை குறிக்கவில்லை" என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில்
மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல.
அன்றாடம் திரட்டப்பட்டுக்
கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்'
என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும். இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும்
ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன்,
ஆண், பெண் அனைவர் மீதும்
ஒரு ஸாவு பேரிச்சம் பழம்
அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற
ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒவ்வொருவருக்கும்
ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்
தினார்கள்" என்பது ஃபித்ராவைத் தான்
குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத்
என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத்
வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட
ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது. எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம்
திரட்டப்பட்டது என்பதற்கும்
இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.
திரட்டும்
பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு
முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது. ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட
பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில்
இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான்
(அல்லது கெட்ட மனிதன்)
வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில
நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத்
திரட்டலாம் என்பது தெரிகிறது. நபித் தோழர்கள் நோன்புப்
பெரு நாளைக்கு ஒருநாள்
அல்லது இரண்டு நாட்களுக்கு முன்
ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர்
என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்
போதே நடந்ததை இது குறிக்கும் என்றால்
இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப்
பின்னர் நபித் தோழர்கள்
இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி)
அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக
இது அமையும். எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில
நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத்
திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன்
கடைசி நேரம் உள்ளது
tntj.net
Ahmedibrahim
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)