இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது வணக்க வழிபாடு தொடர்புடைய விஷயமாகும். பாங்கு சொல்வது சிறந்த நல்லறமாக மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. 609 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ َﻝﺎَﻗ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ِﻦْﺑ ﻲِﺑَﺃ َﺔَﻌَﺼْﻌَﺻ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َّﻢُﺛ ِّﻲِﻧِﺯﺎَﻤْﻟﺍ ْﻦَﻋ ِﻪﻴِﺑَﺃ ُﻪَّﻧَﺃ ُﻩَﺮَﺒْﺧَﺃ َّﻥَﺃ ﺎَﺑَﺃ ٍﺪﻴِﻌَﺳ َّﻱِﺭْﺪُﺨْﻟﺍ ُّﺐِﺤُﺗ َﻙﺍَﺭَﺃ ﻲِّﻧِﺇ ُﻪَﻟ َﻝﺎَﻗ ﻲِﻓ َﺖْﻨُﻛ ﺍَﺫِﺈَﻓ َﺔَﻳِﺩﺎَﺒْﻟﺍَﻭ َﻢَﻨَﻐْﻟﺍ َﻚِﻤَﻨَﻏ ْﻭَﺃ َﺖْﻧَّﺫَﺄَﻓ َﻚِﺘَﻳِﺩﺎَﺑ ْﻊَﻓْﺭﺎَﻓ ِﺓﺎَﻠَّﺼﻟﺎِﺑ ِﺀﺍَﺪِّﻨﻟﺎِﺑ َﻚَﺗْﻮَﺻ ﺎَﻟ ُﻪَّﻧِﺈَﻓ ُﻊَﻤْﺴَﻳ ﻯَﺪَﻣ ِﺕْﻮَﺻ ِﻥِّﺫَﺆُﻤْﻟﺍ ﺎَﻟَﻭ ٌّﻦِﺟ ٌﺲْﻧِﺇ ﺎَﻟَﻭ ٌﺀْﻲَﺷ َﺪِﻬَﺷ ﺎَّﻟِﺇ ُﻪَﻟ َﻡْﻮَﻳ ِﺔَﻣﺎَﻴِﻘْﻟﺍ َﻝﺎَﻗ ﻮُﺑَﺃ ٍﺪﻴِﻌَﺳ ُﻪُﺘْﻌِﻤَﺳ ْﻦِﻣ ِﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻱﺭﺎﺨﺒﻟﺍ ﻩﺍﻭﺭ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "ஆட்டையும் பாலை வனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் "ஆட்டை மேய்த்துக் கொண்டோ' அல்லது "பாலைவனத்திலோ' இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலி க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன'' என்று கூறிவிட்டு , "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி (819) 615 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ َﻝﺎَﻗ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٌﻚِﻟﺎَﻣ ْﻦَﻋ ٍّﻲَﻤُﺳ ﻰَﻟْﻮَﻣ ﻲِﺑَﺃ ٍﺮْﻜَﺑ ْﻦَﻋ ﻲِﺑَﺃ ٍﺢِﻟﺎَﺻ ْﻦَﻋ ﻲِﺑَﺃ َﺓَﺮْﻳَﺮُﻫ َّﻥَﺃ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ْﻮَﻟ ُﻢَﻠْﻌَﻳ ُﺱﺎَّﻨﻟﺍ ﺎَﻣ ﻲِﻓ ِﺀﺍَﺪِّﻨﻟﺍ ِّﻒَّﺼﻟﺍَﻭ ِﻝَّﻭَﺄْﻟﺍ َّﻢُﺛ ْﻢَﻟ ﺍﻭُﺪِﺠَﻳ ﺎَّﻟِﺇ ْﻥَﺃ ﺍﻮُﻤِﻬَﺘْﺴَﻳ ِﻪْﻴَﻠَﻋ ﺍﻮُﻤَﻬَﺘْﺳﺎَﻟ ْﻮَﻟَﻭ َﻥﻮُﻤَﻠْﻌَﻳ ﺎَﻣ ﻲِﻓ ِﺮﻴِﺠْﻬَّﺘﻟﺍ ﺍﻮُﻘَﺒَﺘْﺳﺎَﻟ ِﻪْﻴَﻟِﺇ ْﻮَﻟَﻭ َﻥﻮُﻤَﻠْﻌَﻳ ﺎَﻣ ﻲِﻓ ِﺔَﻤَﺘَﻌْﻟﺍ ِﺢْﺒُّﺼﻟﺍَﻭ ﺎَﻤُﻫْﻮَﺗَﺄَﻟ ْﻮَﻟَﻭ ﺍًﻮْﺒَﺣ ﻩﺍﻭﺭ ﻱﺭﺎﺨﺒﻟﺍ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின்
அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து) விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (615) 580 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﻦْﺑ ٍﺮْﻴَﻤُﻧ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺓَﺪْﺒَﻋ ْﻦَﻋ َﺔَﺤْﻠَﻃ ِﻦْﺑ ﻰَﻴْﺤَﻳ ْﻦَﻋ ِﻪِّﻤَﻋ َﻝﺎَﻗ ُﺖْﻨُﻛ َﺪْﻨِﻋ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ ِﻦْﺑ ﻲِﺑَﺃ َﻥﺎَﻴْﻔُﺳ ُﻩَﺀﺎَﺠَﻓ ُﻥِّﺫَﺆُﻤْﻟﺍ ُﻩﻮُﻋْﺪَﻳ ﻰَﻟِﺇ ِﺓﺎَﻠَّﺼﻟﺍ َﻝﺎَﻘَﻓ ُﺔَﻳِﻭﺎَﻌُﻣ َﻥﻮُﻧِّﺫَﺆُﻤْﻟﺍ ُﻝﻮُﻘَﻳ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ َﻝﻮُﺳَﺭ ُﺖْﻌِﻤَﺳ ُﻝَﻮْﻃَﺃ ِﺱﺎَّﻨﻟﺍ ﺎًﻗﺎَﻨْﻋَﺃ َﻡْﻮَﻳ ِﺔَﻣﺎَﻴِﻘْﻟﺍ ﻭ ِﻪﻴِﻨَﺛَّﺪَﺣ ُﻖَﺤْﺳِﺇ ُﻦْﺑ ٍﺭﻮُﺼْﻨَﻣ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ٍﺮِﻣﺎَﻋ ﻮُﺑَﺃ ُﻥﺎَﻴْﻔُﺳ ﺎَﻨَﺛَّﺪَﺣ َﺔَﺤْﻠَﻃ ْﻦَﻋ ﻰَﻴْﺤَﻳ ِﻦْﺑ ْﻦَﻋ ﻰَﺴﻴِﻋ ِﻦْﺑ َﺔَﺤْﻠَﻃ َﻝﺎَﻗ ُﺖْﻌِﻤَﺳ َﺔَﻳِﻭﺎَﻌُﻣ ُﻝﻮُﻘَﻳ َﻝﺎَﻗ ﻢﻠﺴﻣ ﻩﺍﻭﺭ ِﻪِﻠْﺜِﻤِﺑ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ُﻝﻮُﺳَﺭ ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் கூறுகிறார் : (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம் (631) நல்லறங்களைப் பொறுத்தவரை மனிதன் அவற்றை ச் செய்தால் தான் அதன் நன்மைகளை அடைய முடியும். நவீன கருவிகளைப் பயன்படுத்தி பாங்கு சப்தத்தை ஒளிரவிட்டால் நாம் பாங்கு சொன்னவராக முடியாது. இவ்வாறு செய்யும் போது பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்புகளை நம்மால் அடைய முடியாது. எனவே நாம் பாங்கு சொன்னால் தான் பாங்கிற்குரிய சிறப்புகள் நமக்கு கிடைக்கும். இந்த நல்லறத்தை மனிதர்களில் ஒருவரே செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லிருந்து விளங்கிக்கொள்ள முடியும். 819 ﺎَﻨَﺛَّﺪَﺣ ﻮُﺑَﺃ ِﻥﺎَﻤْﻌُّﻨﻟﺍ َﻝﺎَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺩﺎَّﻤَﺣ ُﻦْﺑ ٍﺪْﻳَﺯ ْﻦَﻋ َﺏﻮُّﻳَﺃ ْﻦَﻋ ْﻢُﻜُﺌِّﺒَﻧُﺃ ﺎَﻟَﺃ ِﻪِﺑﺎَﺤْﺻَﺄِﻟ َﻝﺎَﻗ ِﺙِﺮْﻳَﻮُﺤْﻟﺍ َﻦْﺑ َﻚِﻟﺎَﻣ َّﻥَﺃ َﺔَﺑﺎَﻠِﻗ ﻲِﺑَﺃ َﺓﺎَﻠَﺻ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ِﻝﻮُﺳَﺭ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ِﺮْﻴَﻏ ﻲِﻓ َﻙﺍَﺫَﻭ َﻝﺎَﻗ ِﻦﻴِﺣ َﻡﺎَﻘَﻓ ٍﺓﺎَﻠَﺻ َﺮَّﺒَﻜَﻓ َﻊَﻛَﺭ َّﻢُﺛ ُﻪَﺳْﺃَﺭ َﻊَﻓَﺭ َّﻢُﺛ َّﻢُﺛ ًﺔَّﻴَﻨُﻫ َﻡﺎَﻘَﻓ َﺪَﺠَﺳ َّﻢُﺛ َﻊَﻓَﺭ ُﻪَﺳْﺃَﺭ ًﺔَّﻴَﻨُﻫ ﻰَّﻠَﺼَﻓ َﺓﺎَﻠَﺻ ﻭِﺮْﻤَﻋ ِﻦْﺑ َﺔَﻤِﻠَﺳ ﺎَﻨِﺨْﻴَﺷ ﺍَﺬَﻫ َﻝﺎَﻗ ُﺏﻮُّﻳَﺃ َﻥﺎَﻛ ُﻞَﻌْﻔَﻳ ﺎًﺌْﻴَﺷ ْﻢَﻟ ْﻢُﻫَﺭَﺃ ُﻪَﻧﻮُﻠَﻌْﻔَﻳ َﻥﺎَﻛ ُﺪُﻌْﻘَﻳ ﻲِﻓ ِﺔَﺜِﻟﺎَّﺜﻟﺍ ِﺔَﻌِﺑﺍَّﺮﻟﺍَﻭ َﻝﺎَﻗ ﺎَﻨْﻴَﺗَﺄَﻓ َّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﺎَﻨْﻤَﻗَﺄَﻓ ُﻩَﺪْﻨِﻋ َﻝﺎَﻘَﻓ ْﻮَﻟ ْﻢُﺘْﻌَﺟَﺭ ﻰَﻟِﺇ ْﻢُﻜﻴِﻠْﻫَﺃ ﺍﻮُّﻠَﺻ َﺓﺎَﻠَﺻ ﻲِﻓ ﺍَﺬَﻛ ﺍَﺬَﻛ ِﻦﻴِﺣ َﺓﺎَﻠَﺻ ﺍﻮُّﻠَﺻ ﻲِﻓ ﺍَﺬَﻛ ﺍَﺬَﻛ ِﻦﻴِﺣ ﺍَﺫِﺈَﻓ ْﻥِّﺫَﺆُﻴْﻠَﻓ ُﺓﺎَﻠَّﺼﻟﺍ ْﺕَﺮَﻀَﺣ ﻩﺍﻭﺭ ْﻢُﻛُﺮَﺒْﻛَﺃ ْﻢُﻜَّﻣُﺆَﻴْﻟَﻭ ْﻢُﻛُﺪَﺣَﺃ ﻱﺭﺎﺨﺒﻟﺍ மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : (இளைஞர்களான) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார்கள். நூல் : புகாரி (819) எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆடியோவை பாடவிடுவதின் மூலம் பாங்கு சொல்வது கூடாது. மனிதர்களில்
யாராவது ஒருவரே பாங்கு சொல்ல வேண்டும். மேலும் விபரத்துக்கு பார்க்க பதிவு செய்யப்பட்ட பாங்கு பாங்காக ஆகுமா 09.05.2012. 12:23
Online pj
Ahmedibrahim
வெள்ளி, 15 ஜூன், 2012
பெண்கள் பாங்கு சொல்லலாமா?
பாங்கில் இரண்டு வகை உள்ளது. மக்களை பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காக சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை. தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் ஆண்களுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம். மற்றவர்களை அழைப்பதற்காக பாங்கு சொல்வது ஆண்களை முந்துவதில் அடங்கும். எனவே இது போன்ற பாங்குகளை சொல்லக் கூடாது. ஒரு பள்ளியில் சொல்லப்பட்ட பாங்கு கேட்காத போதும் மக்கள் வசிக்காத பகுதியில் தொழும் போதும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த வகையான பாங்கை அதாவது தனக்காக சொல்லிக் கொள்ளும் பாங்கை பெண்கள் சொல்ல்லாம். சொல்ல வேண்டும். நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரி (2848) யாரையும் அழைக்கும் நோக்கம் இல்லாமல் பயணத்தில் இருக்கும் போதும் பாங்கு சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ﻭِﺮْﻤَﻋ ْﻦَﻋ ٍﺐْﻫَﻭ ُﻦْﺑﺍ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٍﻑﻭُﺮْﻌَﻣ ُﻦْﺑ ُﻥﻭُﺭﺎَﻫ ﺎَﻨَﺛَّﺪَﺣ1017 ِﻦْﺑ ِﺙِﺭﺎَﺤْﻟﺍ َّﻥَﺃ ﺎَﺑَﺃ َﺔَﻧﺎَّﺸُﻋ َّﻱِﺮِﻓﺎَﻌَﻤْﻟﺍ ُﻪَﺛَّﺪَﺣ ْﻦَﻋ َﺔَﺒْﻘُﻋ ِﻦْﺑ ٍﺮِﻣﺎَﻋ َﻝﻮُﺳَﺭ ُﺖْﻌِﻤَﺳ َﻝﺎَﻗ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ُﻝﻮُﻘَﻳ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﺐَﺠْﻌَﻳ ْﻢُﻜُّﺑَﺭ ْﻦِﻣ ﻲِﻋﺍَﺭ ٍﻢَﻨَﻏ ﻲِﻓ ِﺱْﺃَﺭ ٍﺔَّﻴِﻈَﺷ ٍﻞَﺒَﺠِﺑ ُﻥِّﺫَﺆُﻳ ِﺓﺎَﻠَّﺼﻟﺎِﺑ ﻲِّﻠَﺼُﻳَﻭ ُﻝﻮُﻘَﻴَﻓ ُﻪَّﻠﻟﺍ َّﺰَﻋ َّﻞَﺟَﻭ ﺍﻭُﺮُﻈْﻧﺍ ﻰَﻟِﺇ ﻱِﺪْﺒَﻋ ﺍَﺬَﻫ ُﻥِّﺫَﺆُﻳ ُﻢﻴِﻘُﻳَﻭ َﺓﺎَﻠَّﺼﻟﺍ ُﻑﺎَﺨَﻳ ﻲِّﻨِﻣ ْﺪَﻗ ُﺕْﺮَﻔَﻏ ﻱِﺪْﺒَﻌِﻟ ﺩﻭﺍﺩ ﻮﺑﺃ ﻩﺍﻭﺭ َﺔَّﻨَﺠْﻟﺍ ُﻪُﺘْﻠَﺧْﺩَﺃَﻭ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். "பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான். அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் : அபூதாவூத் (1017) தன்னந்தனியாக இருப்பவன் கூட பாங்கு சொன்னால் அதை இறைவன் விரும்புகிறான் என்பதால் நாம் தனியாக தொழுதாலும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த நன்மையை ஆண்களும் அடைந்து கொள்ளலாம். பெண்களும் அடைந்து கொள்ளலாம் பெண்கள் தனித்து தொழும் போதும் அல்லது பெண்களுக்கு பெண்கள் ஜமாஅத் நடத்தும் போதும் தமக்காக பாங்கு சொல்லலாம். மேலும் விபரத்துக்கு பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/
thaniyaka_thozuthal_bangu_avasiyama/
Online pj
Ahmedibrahim
thaniyaka_thozuthal_bangu_avasiyama/
Online pj
Ahmedibrahim
இறைவணைக் காண முடியுமா?
மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று (மூஸாவை நோக்கி) நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழுப்பினோம். (அல்குர்ஆன் 2:55, 56) மூஸா (அலை) அவர்களது காலத்து இஸ்ரவேலர்களின் விபரீதமான கோரிக்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு இறைவன் இங்கே நினைவுபடுத்துகின்றான். இதை 4:153 வசனத்திலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான். நபி (ஸல்) காலத்து இஸ்ரவேலர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக இவ்வசனங்கள் அருளப்பட்டிருந்தாலும்
இதனுள்ளே அடங்கி இருக்கின்ற மற்றொரு பிரச்சனையைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. ''இறைவனைக் காண முடியுமா?'' என்பதே அந்தப் பிரச்சனையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேரடியாகப் பார்த்தார்கள் என்றும் சில பெரியார்கள், மகான்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்றும் பலர் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது. திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் ஆராயும் போது இம்மையில் எவருமே இறைவனைக் கண்டதில்லை, காணவும் முடியாது. மறுமையில் நல்லடியார்கள் மட்டும் இறைவனைக் காண்பார்கள் என்ற முடிவுக்கே நாம் வர முடிகின்றது. அதற்குரிய சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் திகழ்கிறது. ''இறைவனைக் காண முடியாது'' என்பதை இவ்வசனங்கள் நேரடியாகக் கூறவில்லை என்று சில பேர் வாதம் புரியக்கூடும். குறிப்பிட்ட சிலர் காண முடியாமல் இருந்துள்ளனர் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் கேட்ட விதம் சரியில்லாமலிருந்தால் கூட அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் வாதிடக் கூடும். இந்த
வசனங்களிலிருந்து இவ்வாறு கருதுவதற்கு
இடம் இருந்தாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை வேறு பல வசனங்கள் அறிவிக்கின்றன. நாம் குறித்த காலத்தில் மூஸா (அலை) அவர்கள் வந்த போது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூஸா, 'இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன் 'மூஸாவே! நீர் ஒருக்காலும் என்னைப் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரு. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம்.' என்று கூறினான். அவருடைய இறைவன் (மூஸாவுக்கு தெரியாமல்) மலைக்குத் தன்னைக் காட்டிய போது அதை நொருக்கி துாளாக்கி விட்டான். (இதைக் கண்ட அதிர்ச்சியில்) மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் 'நீ பரிசுத்தமானவன்' உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் விசுவாசம் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார். (அல்குர்ஆன் 7:143) இறைவனை எவரும் காண முடியாது என்பதை இந்த வசனம் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கிறது. மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்கள் இறைவனின் பேச்சைத் தம் காதுகளால் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியவில்லை என்றால் பெரியார்கள், மகான்கள் பார்த்திருக்கிறார்கள்
என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணரலாம். பார்க்க முடியாமல் போவதன் காரணமும் இங்கே இறைவனால் கூறப்படுகின்றது. இறைவனைக் காணுகின்ற வல்லமை, அவனது காட்சியைத் தாங்கும் வலிமை எவருக்கும் இல்லை என்பதே அந்தக் காரணம். உறுதி மிக்க மலைக்கு தன்னை இறைவன் காண்பித்து, அவனது காட்சி மலையில் பட்டதும் துாள்துாளாக நொறுங்கியதையும் காண்பித்து இதனையே இறைவன் விளக்குகின்றான். இறைவனது எந்தப் படைப்பும் அவனது காட்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது. பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான். (அல்குர்ஆன் 6:103) அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதிபெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய)
துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை. (அல்குர்ஆன் 42:51) இந்த வசனங்களும் எவருமே இறைவனை நேரில் கண்டது கிடையாது. காணவும் முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவித்து விடுகின்றன. நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட
செய்தியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதை கூறுகின்றன. ஆனால் மிஃராஜில் நடந்தது என்னவென்பதை தவறாகவே பலரும் விளங்கியுள்ளனர். அங்கே இறைவனுடன் உரையாடல் மட்டும் தான் நடந்தது. நபி (ஸல்) இறைவனைக் கண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ''உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்?'' என விடையளித்தார்கள் என்று அபுதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) இறைவனைக் கண்டதில்லை என்பதையும், அவர்கள் இறைவனைக் கண்டார்கள் என்ற கருத்துடையோரின் ஆதாரங்கள் தவறானவை என்பதையும் பின்வரும் ஹதீஸும் விளக்குகிறது. நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அருகே சாய்ந்தவனாக அதமர்ந்திருந்தேன். அவர்கள் ''அபூ ஆயிஷாவே! மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோஅவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார்' என்றார்கள். 'அவை யாவை?'' என்று நான் கேட்டேன். 'முஹம்மது (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்கள் என யார் கூறிகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்று (முதல் விசயத்தைக்) கூறினார்கள். சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து கொண்டு (மூமின்களின் அன்னையே!
அவசரப்படாதீர்கள்! நிதானமாகக் கூறுங்கள்!
தெளிவான அடிவானத்தில் நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அவனைக் கண்டார். (81:23) என்றும் மற்றுமொரு தடவையும் அவனை அவர் கண்டார் (53:13) என்றும் அல்லாஹ் கூறவில்லையா?'' எனக் கேட்டேன். அதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ''இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் முதல் முதலில் கேட்டவள் நான் தான்'' அப்படிக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள்'' அது ஜிப்ரீல்
(அலை) அவர்களைப் பற்றியதாகும். அவர்கள் எந்த வடிவில் படைக்கப்பட்டார்களோ அதே வடிவில் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடங்களை நிரப்பியவராக அந்த இரண்டு தடவைகள் தான் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன்! என்று கூறினார்கள். மேலும் தொடர்ந்து ''பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனே பார்வைகளை அடைகிறான். (6:103) என்று இறைவன் கூறுவதையும் அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான்
விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களான) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை (42:51) என்று இறைவன் கூறுவதையும் நீ கேள்விப்பட்டதில்லையா? எனவும் ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று எவராவது கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவராவார். 'துாதரே! உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக! நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது துாதை எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! (5:67) என்று அல்லாஹ் கூறுகிறான். என்றார்கள். நாளை நடப்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவிப்பார்கள் என்று எவரேனும் கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவராவார். அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள் (27.65) என்று அல்லாஹ் கூறுகிறான். என்று மூன்று விசயங்களையும் விளக்கினார்கள். (முஸ்லிம்) இந்த ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் இறைவனை நேருக்கு நேர் கண்டதில்லை என்பதையும் எவராலும் காணமுடியாது என்பதையும் அறியலாம். 'நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு தடவை பார்த்துள்ளார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக திர்மிதீயில் இடம் பெறும் செய்தியினடிப்படையில் அவர்கள் இறைவனைப் பார்த்ததாகச் சிலர் கூறுவர். பல காரணங்களால் இது ஏற்கமுடியாத வாதமாகும். இறைவனை எவரும் காண முடியாது என்று வந்துள்ள வசனங்களுக்கும், நபியவர்களே தான் இறைவனைப் பார்த்தது கிடையாது என்று கூறுவதற்கும் இது முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தச் செய்தி ஏற்க முடியாததாகும். இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெறும் போது 'இறைவனை உள்ளத்தால் (கண்களால் அல்ல) இரண்டு தடவை பார்த்தார்கள்.' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக இடம் பெற்றுள்ளது. இதையே முதல் ஹதீஸுக்கும் விளக்கமாக நாம் கொள்ள வேண்டும், இவ்வாறு பொருள் கொள்ளும் போது மேற்கண்ட வசனங்களுக்கு முரண்படாத வகையில் அமைந்து விடுகின்றது. இறைவனை எவரும் பார்த்ததில்லை. பார்க்க முடியாது. அந்த வல்லமை எந்தப் பார்வைக்கும் கிடையாது என்றாலும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவனது காட்சியைத் தாங்கும் வல்லமையை இறைவன் அப்போது அளிப்பான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது. அன்றைய தினத்தில் (மறுமையில்) சில முகங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். தம் இறைவனைப் பார்த்து கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:23) ''முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனை நீங்கள் மறுமையில் காண்பீர்கள்'' என்று நபி (ஸல்) கூறியதாக ஏராளமான ஹதீஸ்கள் முஸ்லிம், திர்மிதீ மற்றும் பல நுால்களில் இடம் பெற்றுள்ளன. மறுமையில் மாத்திரம் இறைவனைக் காணமுடியும் என்பதற்கு இவை சான்றுகளாக
உள்ளன. இந்த மறுமைத் தரிசனம் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இறைவனை மறுமையில் கூட சந்திக்கின்ற பாக்கியத்தை அடைய மாட்டார்கள். நல்லடியார்கள் மட்டுமே இந்தப் பேரின்பத்தை அடைவார்கள். அந்நாளில் அவர்கள் (இறை வசனங்களைப் பொய்யென மறுத்தவர்கள்) தம் இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15) யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணத்தையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமைநாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (அல்குர்ஆன் 3:77) இது போன்றவர்களைத் தவிர மற்ற நல்லடியார்கள் மறுமையில் இறைவனைக் காணுகின்ற பெரும் பேற்றினை அடைவார்கள். இறைவனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக நம்மவர்களை இறைவன் ஆக்கியருளட்டும்.
Online pj
Ahmedibrahim
இதனுள்ளே அடங்கி இருக்கின்ற மற்றொரு பிரச்சனையைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. ''இறைவனைக் காண முடியுமா?'' என்பதே அந்தப் பிரச்சனையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேரடியாகப் பார்த்தார்கள் என்றும் சில பெரியார்கள், மகான்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்றும் பலர் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது. திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் ஆராயும் போது இம்மையில் எவருமே இறைவனைக் கண்டதில்லை, காணவும் முடியாது. மறுமையில் நல்லடியார்கள் மட்டும் இறைவனைக் காண்பார்கள் என்ற முடிவுக்கே நாம் வர முடிகின்றது. அதற்குரிய சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் திகழ்கிறது. ''இறைவனைக் காண முடியாது'' என்பதை இவ்வசனங்கள் நேரடியாகக் கூறவில்லை என்று சில பேர் வாதம் புரியக்கூடும். குறிப்பிட்ட சிலர் காண முடியாமல் இருந்துள்ளனர் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் கேட்ட விதம் சரியில்லாமலிருந்தால் கூட அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் வாதிடக் கூடும். இந்த
வசனங்களிலிருந்து இவ்வாறு கருதுவதற்கு
இடம் இருந்தாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை வேறு பல வசனங்கள் அறிவிக்கின்றன. நாம் குறித்த காலத்தில் மூஸா (அலை) அவர்கள் வந்த போது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூஸா, 'இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன் 'மூஸாவே! நீர் ஒருக்காலும் என்னைப் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரு. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம்.' என்று கூறினான். அவருடைய இறைவன் (மூஸாவுக்கு தெரியாமல்) மலைக்குத் தன்னைக் காட்டிய போது அதை நொருக்கி துாளாக்கி விட்டான். (இதைக் கண்ட அதிர்ச்சியில்) மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் 'நீ பரிசுத்தமானவன்' உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் விசுவாசம் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார். (அல்குர்ஆன் 7:143) இறைவனை எவரும் காண முடியாது என்பதை இந்த வசனம் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கிறது. மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்கள் இறைவனின் பேச்சைத் தம் காதுகளால் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியவில்லை என்றால் பெரியார்கள், மகான்கள் பார்த்திருக்கிறார்கள்
என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணரலாம். பார்க்க முடியாமல் போவதன் காரணமும் இங்கே இறைவனால் கூறப்படுகின்றது. இறைவனைக் காணுகின்ற வல்லமை, அவனது காட்சியைத் தாங்கும் வலிமை எவருக்கும் இல்லை என்பதே அந்தக் காரணம். உறுதி மிக்க மலைக்கு தன்னை இறைவன் காண்பித்து, அவனது காட்சி மலையில் பட்டதும் துாள்துாளாக நொறுங்கியதையும் காண்பித்து இதனையே இறைவன் விளக்குகின்றான். இறைவனது எந்தப் படைப்பும் அவனது காட்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது. பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான். (அல்குர்ஆன் 6:103) அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதிபெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய)
துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை. (அல்குர்ஆன் 42:51) இந்த வசனங்களும் எவருமே இறைவனை நேரில் கண்டது கிடையாது. காணவும் முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவித்து விடுகின்றன. நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட
செய்தியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதை கூறுகின்றன. ஆனால் மிஃராஜில் நடந்தது என்னவென்பதை தவறாகவே பலரும் விளங்கியுள்ளனர். அங்கே இறைவனுடன் உரையாடல் மட்டும் தான் நடந்தது. நபி (ஸல்) இறைவனைக் கண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ''உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்?'' என விடையளித்தார்கள் என்று அபுதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) இறைவனைக் கண்டதில்லை என்பதையும், அவர்கள் இறைவனைக் கண்டார்கள் என்ற கருத்துடையோரின் ஆதாரங்கள் தவறானவை என்பதையும் பின்வரும் ஹதீஸும் விளக்குகிறது. நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அருகே சாய்ந்தவனாக அதமர்ந்திருந்தேன். அவர்கள் ''அபூ ஆயிஷாவே! மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோஅவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார்' என்றார்கள். 'அவை யாவை?'' என்று நான் கேட்டேன். 'முஹம்மது (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்கள் என யார் கூறிகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்று (முதல் விசயத்தைக்) கூறினார்கள். சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து கொண்டு (மூமின்களின் அன்னையே!
அவசரப்படாதீர்கள்! நிதானமாகக் கூறுங்கள்!
தெளிவான அடிவானத்தில் நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அவனைக் கண்டார். (81:23) என்றும் மற்றுமொரு தடவையும் அவனை அவர் கண்டார் (53:13) என்றும் அல்லாஹ் கூறவில்லையா?'' எனக் கேட்டேன். அதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ''இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் முதல் முதலில் கேட்டவள் நான் தான்'' அப்படிக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள்'' அது ஜிப்ரீல்
(அலை) அவர்களைப் பற்றியதாகும். அவர்கள் எந்த வடிவில் படைக்கப்பட்டார்களோ அதே வடிவில் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடங்களை நிரப்பியவராக அந்த இரண்டு தடவைகள் தான் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன்! என்று கூறினார்கள். மேலும் தொடர்ந்து ''பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனே பார்வைகளை அடைகிறான். (6:103) என்று இறைவன் கூறுவதையும் அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான்
விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களான) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை (42:51) என்று இறைவன் கூறுவதையும் நீ கேள்விப்பட்டதில்லையா? எனவும் ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று எவராவது கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவராவார். 'துாதரே! உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக! நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது துாதை எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! (5:67) என்று அல்லாஹ் கூறுகிறான். என்றார்கள். நாளை நடப்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவிப்பார்கள் என்று எவரேனும் கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவராவார். அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள் (27.65) என்று அல்லாஹ் கூறுகிறான். என்று மூன்று விசயங்களையும் விளக்கினார்கள். (முஸ்லிம்) இந்த ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் இறைவனை நேருக்கு நேர் கண்டதில்லை என்பதையும் எவராலும் காணமுடியாது என்பதையும் அறியலாம். 'நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு தடவை பார்த்துள்ளார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக திர்மிதீயில் இடம் பெறும் செய்தியினடிப்படையில் அவர்கள் இறைவனைப் பார்த்ததாகச் சிலர் கூறுவர். பல காரணங்களால் இது ஏற்கமுடியாத வாதமாகும். இறைவனை எவரும் காண முடியாது என்று வந்துள்ள வசனங்களுக்கும், நபியவர்களே தான் இறைவனைப் பார்த்தது கிடையாது என்று கூறுவதற்கும் இது முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தச் செய்தி ஏற்க முடியாததாகும். இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெறும் போது 'இறைவனை உள்ளத்தால் (கண்களால் அல்ல) இரண்டு தடவை பார்த்தார்கள்.' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக இடம் பெற்றுள்ளது. இதையே முதல் ஹதீஸுக்கும் விளக்கமாக நாம் கொள்ள வேண்டும், இவ்வாறு பொருள் கொள்ளும் போது மேற்கண்ட வசனங்களுக்கு முரண்படாத வகையில் அமைந்து விடுகின்றது. இறைவனை எவரும் பார்த்ததில்லை. பார்க்க முடியாது. அந்த வல்லமை எந்தப் பார்வைக்கும் கிடையாது என்றாலும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவனது காட்சியைத் தாங்கும் வல்லமையை இறைவன் அப்போது அளிப்பான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது. அன்றைய தினத்தில் (மறுமையில்) சில முகங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். தம் இறைவனைப் பார்த்து கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:23) ''முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனை நீங்கள் மறுமையில் காண்பீர்கள்'' என்று நபி (ஸல்) கூறியதாக ஏராளமான ஹதீஸ்கள் முஸ்லிம், திர்மிதீ மற்றும் பல நுால்களில் இடம் பெற்றுள்ளன. மறுமையில் மாத்திரம் இறைவனைக் காணமுடியும் என்பதற்கு இவை சான்றுகளாக
உள்ளன. இந்த மறுமைத் தரிசனம் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இறைவனை மறுமையில் கூட சந்திக்கின்ற பாக்கியத்தை அடைய மாட்டார்கள். நல்லடியார்கள் மட்டுமே இந்தப் பேரின்பத்தை அடைவார்கள். அந்நாளில் அவர்கள் (இறை வசனங்களைப் பொய்யென மறுத்தவர்கள்) தம் இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15) யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணத்தையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமைநாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (அல்குர்ஆன் 3:77) இது போன்றவர்களைத் தவிர மற்ற நல்லடியார்கள் மறுமையில் இறைவனைக் காணுகின்ற பெரும் பேற்றினை அடைவார்கள். இறைவனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக நம்மவர்களை இறைவன் ஆக்கியருளட்டும்.
Online pj
Ahmedibrahim
கண்கெட்ட பின்பு
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள். பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும் போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும். "(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித் தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர். (திருக்குர்ஆன்2:165-167) இந்த மூன்று வசனங்களும் விளக்கம் தேவைப்படாத அளவுக்கு மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில்அமைந்துள்ளன. முஃமின்களின் உள்ளங்கள் நடுங்கும் அளவுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் இவ்வசனத்தில்அடங்கியுள்ளன. தமிழக முஸ்லிம்களின் பெரும்பாலான நடவடிக்கைகளை நாம் கவனித்தால் இந்த வசனங்கள் குர்ஆனில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா ? அல்லது தெரிந்தே அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கிறார்களா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது! எனவே இவ்வசனங்கள் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர் என்று அல்லாஹ் கூறுவதை நம்மவர்களின் நடைமுறையோடு பொருத்திப் பார்ப்போம். நம்மவர்களில் எவரும் அல்லாஹ்வுக்குச் சமமாக அவ்லியாக்களை நேசிப்பதாகக் கூற மாட்டார்கள். வாயளவில் அவர்கள் இவ்வாறு கூறாவிட்டாலும் அவர்களின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வை விடஅதிகமான நேசம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை அறிய முடியும். அவர்களின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். பள்ளிவாசலில் ஒரு இமாம் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருப்பார். அதைச் சில நூறுபேர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தச் சொற்பொழிவின் போது அல்லாஹ் என்ற திருநாமத்தைப் பல தடவை அவர் குறிப்படுவார். கேட்பவர்களிடம் அந்தத் திருநாமம் எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை
. சொல்பவரிடம் கூட எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சில நேரங்களில் அப்துல்காதிர் ஜீலானி என்ற பெயரை அந்த இமாம் குறிப்பிடுவார். இந்தப் பெயரைக் கேட்பவரின் உள்ளங்கள் பூரிப்படைகின்றன. அவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அவர்களை அறியாமலே 'கத்தஸல்லாஹுஸிர்ரஹு' என்ற வார்த்தை அவர்களின் வாயிலிருந்து புறப்படுகின்றது. கேட்பவர்கள் மட்டுமின்றி சொல்லக்கூடிய இமாமும் அல்லாஹ் என்ற திருநாமத்துக்குக் கொடுக்காத அழுத்தத்தை அப்துல்காதிர் என்ற பெயருக்குக் கொடுப்பார். சர்வசாதாரணமாக இந்தச் சமுதாயத்தில் இதை நாம் காண முடிகின்றது. 'அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமை யை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.'
திருக்குர்ஆன்39:45 இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது போன்று இவர்கள் நடந்து கொள்ளக் காரணம் இவர்களின் உள்ளம் அல்லாஹ்வைவிட மற்றவர்களை அதிகம் மதிக்கிறது. அதிகம் நேசிக்கிறது என்பதுதான். அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கி இருக்கிறான் என்பதும், தினமும்
ஐந்துமுறை பள்ளிவாசலிலிருந்து அழைப்பு
விடப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அழைக்கப்பட்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருதைத் தவிர்க்கக்கூடியவன்
அழைக்கப்படாமலே தர்காவுக்கு ஓடுகிறான். தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு இவனது உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு வழங்கிய இடத்தைவிட அதிக இடம் இருக்கிறது என்பதைத் தவிர இதற்கு வேறுகாரணம் இருக்க முடியாது. துன்பங்கள்
ஏற்படும்போது அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டவர்கள் 'யாமுஹ்யித்தீனே!' என்று அழைப்பதும் இதே காரணத்தினால்தான். இறைவனை விட மற்றவர்கள் மீது அதிகநேசம் கொண்ட இத்தகையவர்கள் படுபயங்கரமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையும் இந்த வசனங்களில் இறைவன் பட்டியலிடுகிறான். 1) அவர்கள் அக்கிரமக்காரர்களாக இறைவனால் கருதப்படுவர்கள். 2) நன்மை பெறுவோம் என்ற நம்பிக்கையில் மண்விழுந்து அல்லாஹ்வின் வேதனையை அதுவும் கடுமையான வேதனையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 3) அன்றைய தினத்தில் எவரும் எதிர்க்கேள்வி கேட்க இயலாமல் நிற்பார்கள். எல்லா வல்லமையும் அவனுக்கு மட்டுமே அன்றைய தினம் இருக்கப் போவதையும் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்கள். 4) இதைவிட முக்கியமான அம்சம், இவர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்த இந்த நல்லடியார்கள் இவர்களைக் கைகழுவி விடுவார்கள். காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கிடையே யாதொரு உறவும் அன்றைய தினம் இருக்காது. 5) அவர்கள் செய்து வந்த ஏனைய நல்லறங்கள் யாவும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்க மாட்டா. அவை அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக ஆகிவிடும். 6) இதனால் நரகத்தில் நுழைந்த அவர்கள் என்றென்றும் அதிலேயே தங்கி விடுவார்கள். ஒரு போதும் நரகிலிருந்து வெளியேற இயலாது. இப்படி ஆறுவகையான இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. மறுமையை நம்பக்கூடிய மக்களுக்கு இது கடுமையான எச்சரிக்கையாகும். இதில் கடைசி மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டும். எந்தப் பெரியார்களை இவர்கள் பெரிதும் நம்பி இந்த அக்கிரமம் புரிந்தார்களோ அந்தப் பெரியார்களே கைகழுவி விடுவார்கள் என்பதைப் பல இடங்களில் இறைவன் விரிவாகவும் விளக்குகின்றான். 'மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!| என நீர்தான் மக்களுக்குக் கூறினீரா?' என்றுஅல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீதூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர் பதிலளிப்பார். 'நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!| என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீகைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.' திருக்குர்ஆன்5:116,117 ஈஸா நபியவர்களைப் பெரிதும் நம்பியிருந்தவர்கள் மறுமையில் ஈஸா நபியால் கை விடப்படுவார்கள் என்று இங்கே இறைவன்கூறுகிறான். கிரித்தவர்கள் அடையும் இதேநிலையைத் தான்
இறைவனைவிட மற்றவர்களை நேசிப்பவர்கள் அடைவார்கள் என்றால் அது எவ்வளவு கடுமையான குற்றம் என்பது விளங்கவரும். 'நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். திருக்குர்ஆன்35:14 'உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம்படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பிரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்)
முறிந்து விட்டன' (என்று கூறப்படும்) திருக்குர்ஆன்6:94 10:28வசனத்திலும் இந்தக் கருத்தைக் காணலாம். ஈஸா நபி போன்ற மிகப் பெரிய நல்லடியார்களேயானாலும்
இத்தகையவர்களைக் கைவிட்டு விடுவார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசித்தவர்கள் எவ்வளவுதான் நல்லாறங்களை நிறைவேற்றினாலும் அந்த நல்லறங்களில் எதையுமே இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவற்றுக்கு எந்தக்கூலியும் அவனால் வழங்கப்பட மாட்டாது எனவும் இறைவன் கூறுகிறான். 'நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர்.' திருக்குர்ஆன்39:65 'அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.' திருக்குர்ஆன்6:88 இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசிப்பதும் பச்சையான இணைவைத்தல் தான் என்பதும் இணைவைப்பதால் ஏற்படும் விளைவுகள் இதனாலும் ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. இவ்வாறு நடந்து கொண்டவர்கள் நரகிற்குச் சென்று விட்டு ஏதோ ஒரு சமயத்தில் சுவர்க்கத்தை அடைய முடியுமாஎன்றால் நிச்சயமாக முடியாது. அவர்கள் நரகைவிட்டு வெளியேற மாட்டார்கள் என்று தெளிவாக இங்கே குறிப்பிடுகிறான் இறைவன். 'அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ்கூறினார். திருக்குர்ஆன்5:72 'தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.' திருக்குர்ஆன் 4:48 இறைவனின் மன்னிப்பை அறவே பெறமுடியாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் திகழ்வார்கள் என்று இந்த வசனங்களும் தெளிவாக விளக்குகின்றன. மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் இந்த அக்கிரமத்திலிருந்து நாம் விடுபடுவோமாக!
Online pj
Ahmedibrahim
. சொல்பவரிடம் கூட எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சில நேரங்களில் அப்துல்காதிர் ஜீலானி என்ற பெயரை அந்த இமாம் குறிப்பிடுவார். இந்தப் பெயரைக் கேட்பவரின் உள்ளங்கள் பூரிப்படைகின்றன. அவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அவர்களை அறியாமலே 'கத்தஸல்லாஹுஸிர்ரஹு' என்ற வார்த்தை அவர்களின் வாயிலிருந்து புறப்படுகின்றது. கேட்பவர்கள் மட்டுமின்றி சொல்லக்கூடிய இமாமும் அல்லாஹ் என்ற திருநாமத்துக்குக் கொடுக்காத அழுத்தத்தை அப்துல்காதிர் என்ற பெயருக்குக் கொடுப்பார். சர்வசாதாரணமாக இந்தச் சமுதாயத்தில் இதை நாம் காண முடிகின்றது. 'அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமை யை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.'
திருக்குர்ஆன்39:45 இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது போன்று இவர்கள் நடந்து கொள்ளக் காரணம் இவர்களின் உள்ளம் அல்லாஹ்வைவிட மற்றவர்களை அதிகம் மதிக்கிறது. அதிகம் நேசிக்கிறது என்பதுதான். அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கி இருக்கிறான் என்பதும், தினமும்
ஐந்துமுறை பள்ளிவாசலிலிருந்து அழைப்பு
விடப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அழைக்கப்பட்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருதைத் தவிர்க்கக்கூடியவன்
அழைக்கப்படாமலே தர்காவுக்கு ஓடுகிறான். தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு இவனது உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு வழங்கிய இடத்தைவிட அதிக இடம் இருக்கிறது என்பதைத் தவிர இதற்கு வேறுகாரணம் இருக்க முடியாது. துன்பங்கள்
ஏற்படும்போது அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டவர்கள் 'யாமுஹ்யித்தீனே!' என்று அழைப்பதும் இதே காரணத்தினால்தான். இறைவனை விட மற்றவர்கள் மீது அதிகநேசம் கொண்ட இத்தகையவர்கள் படுபயங்கரமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையும் இந்த வசனங்களில் இறைவன் பட்டியலிடுகிறான். 1) அவர்கள் அக்கிரமக்காரர்களாக இறைவனால் கருதப்படுவர்கள். 2) நன்மை பெறுவோம் என்ற நம்பிக்கையில் மண்விழுந்து அல்லாஹ்வின் வேதனையை அதுவும் கடுமையான வேதனையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 3) அன்றைய தினத்தில் எவரும் எதிர்க்கேள்வி கேட்க இயலாமல் நிற்பார்கள். எல்லா வல்லமையும் அவனுக்கு மட்டுமே அன்றைய தினம் இருக்கப் போவதையும் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்கள். 4) இதைவிட முக்கியமான அம்சம், இவர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்த இந்த நல்லடியார்கள் இவர்களைக் கைகழுவி விடுவார்கள். காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கிடையே யாதொரு உறவும் அன்றைய தினம் இருக்காது. 5) அவர்கள் செய்து வந்த ஏனைய நல்லறங்கள் யாவும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்க மாட்டா. அவை அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக ஆகிவிடும். 6) இதனால் நரகத்தில் நுழைந்த அவர்கள் என்றென்றும் அதிலேயே தங்கி விடுவார்கள். ஒரு போதும் நரகிலிருந்து வெளியேற இயலாது. இப்படி ஆறுவகையான இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. மறுமையை நம்பக்கூடிய மக்களுக்கு இது கடுமையான எச்சரிக்கையாகும். இதில் கடைசி மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டும். எந்தப் பெரியார்களை இவர்கள் பெரிதும் நம்பி இந்த அக்கிரமம் புரிந்தார்களோ அந்தப் பெரியார்களே கைகழுவி விடுவார்கள் என்பதைப் பல இடங்களில் இறைவன் விரிவாகவும் விளக்குகின்றான். 'மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!| என நீர்தான் மக்களுக்குக் கூறினீரா?' என்றுஅல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீதூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர் பதிலளிப்பார். 'நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!| என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீகைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.' திருக்குர்ஆன்5:116,117 ஈஸா நபியவர்களைப் பெரிதும் நம்பியிருந்தவர்கள் மறுமையில் ஈஸா நபியால் கை விடப்படுவார்கள் என்று இங்கே இறைவன்கூறுகிறான். கிரித்தவர்கள் அடையும் இதேநிலையைத் தான்
இறைவனைவிட மற்றவர்களை நேசிப்பவர்கள் அடைவார்கள் என்றால் அது எவ்வளவு கடுமையான குற்றம் என்பது விளங்கவரும். 'நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். திருக்குர்ஆன்35:14 'உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம்படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பிரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்)
முறிந்து விட்டன' (என்று கூறப்படும்) திருக்குர்ஆன்6:94 10:28வசனத்திலும் இந்தக் கருத்தைக் காணலாம். ஈஸா நபி போன்ற மிகப் பெரிய நல்லடியார்களேயானாலும்
இத்தகையவர்களைக் கைவிட்டு விடுவார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசித்தவர்கள் எவ்வளவுதான் நல்லாறங்களை நிறைவேற்றினாலும் அந்த நல்லறங்களில் எதையுமே இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவற்றுக்கு எந்தக்கூலியும் அவனால் வழங்கப்பட மாட்டாது எனவும் இறைவன் கூறுகிறான். 'நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர்.' திருக்குர்ஆன்39:65 'அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.' திருக்குர்ஆன்6:88 இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசிப்பதும் பச்சையான இணைவைத்தல் தான் என்பதும் இணைவைப்பதால் ஏற்படும் விளைவுகள் இதனாலும் ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. இவ்வாறு நடந்து கொண்டவர்கள் நரகிற்குச் சென்று விட்டு ஏதோ ஒரு சமயத்தில் சுவர்க்கத்தை அடைய முடியுமாஎன்றால் நிச்சயமாக முடியாது. அவர்கள் நரகைவிட்டு வெளியேற மாட்டார்கள் என்று தெளிவாக இங்கே குறிப்பிடுகிறான் இறைவன். 'அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ்கூறினார். திருக்குர்ஆன்5:72 'தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.' திருக்குர்ஆன் 4:48 இறைவனின் மன்னிப்பை அறவே பெறமுடியாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் திகழ்வார்கள் என்று இந்த வசனங்களும் தெளிவாக விளக்குகின்றன. மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் இந்த அக்கிரமத்திலிருந்து நாம் விடுபடுவோமாக!
Online pj
Ahmedibrahim
கணவனின் சொத்தில் மனைவிக்கு எவ்வளவ?
கணவன் மரணிக்கும் போது அந்தக் கணவனுக்கு பிள்ளை இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு கிடைக்கும். அந்தக் கணவனுக்கு பிள்ளை இல்லாவிட்டால் கணவனின் சொத்தில் நான்கில் ஒன்று கிடைக்கும். யார் சொத்துக்கு உரியவர்ரோ அவருக்கு பிள்ளை இருப்பதைப் பொருத்து தான் பாகங்கள் வித்தியாசப்படும்.
சொத்துக்கு உரிமையாளராக இல்லாத அவரது மனைவிக்கு வேறு கணவன் மூலம் பிள்ளை இருந்தாலோ இல்லாவிட்டாலோ அதனால்
எந்த மாற்றமும் ஏற்படாது. உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். திருக்குர் ஆன் 4:12
Online pj
Ahmedibrahim
சொத்துக்கு உரிமையாளராக இல்லாத அவரது மனைவிக்கு வேறு கணவன் மூலம் பிள்ளை இருந்தாலோ இல்லாவிட்டாலோ அதனால்
எந்த மாற்றமும் ஏற்படாது. உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். திருக்குர் ஆன் 4:12
Online pj
Ahmedibrahim
ராசியில்லாத வீடுகள் உண்டா?
இஸ்லாத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னின்ன நாட்களில் இன்னின்னது நடக்கும் என்று தீர்மானம் செய்துள்ளான். ஒவ்வொரு நபருக்கும் இறைவன் விதித்திருக்கும் இந்த விதியை நாள் பார்ப்பதன் மூலமும் மாற்ற முடியாது. வேறு வீடு மாறுவதன் மூலமும் விதியில் எந்த மாறுதலும் ஏற்படாது. இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. திருக்குர்ஆன் 57 : :22 இவளைத் திருமணம் செய்தது முதல் இந்த வீட்டை வாங்கியது முதல் எனக்கு தரித்திரம் பிடித்து ஆட்டுகிறது; ஒரே கஷ்டமாக உள்ளது என்று புலம்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதனால் தான் இது வந்தது என்று கூறுவதானால் ஒன்று அதற்கு அறிவுப் பூர்வமான காரணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அல்லாஹ்வோ அவனது தூதரோ அப்படிச் சொல்லி இருக்க வேண்டும். இவ்விரு காரணங்கள் இல்லாமல் ஒரு விளைவை ஒரு காரணத்துடன் தொடர்பு படுத்தினால் மறைவான ஞானத்துக்கு நாம் உரிமை கொண்டாடியவர்களாக ஆவோம். ஒருவன் விஷம் குடித்து இறந்து விட்டால் அவன் விஷம் குடித்த்தால் இறந்தான் என்று சொல்ல முடியும். ஏனெனில் விஷத்தில் உயிரைப்பறிக்கும்
தன்மை உள்ளது என்பதை நாம் நிரூபிக்க முடியும். ஆனால் பூணை குறுக்கே போனதால் நான் போன காரியம் நடக்கவில்லை என்று கூறுவதாக இருந்தால் அதை லாஜிக்காகவோ அறிவியல் பூர்வமாகவோ நிரூபிக்க வேண்டும். அல்லது அனைத்தையும் படைத்த அல்லாஹ் அதைச் சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் காரணம் கற்பித்தால் அது பொய்யாகவும் மூட நம்பிக்கையாகவும் அமைந்து விடும். இந்த அடிப்படையில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டு வந்ததால் ஒருவனுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறுவதானால் அதற்கு அறிவியல் நிரூபணம் இருக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு மாறிய பின்னர் நமக்கு துன்பம் வந்தால் கூட அத்துன்பத்துக்கு வீடுதான் காரணம் என்று கூறுவதாக இருந்தாலும் அதற்கு நிரூபணம் இருக்க வேண்டும். இதற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்க்கும் போது சில ஹதீஸ்கள் கிடைக்கின்றன. ﺎﻨﺛﺪﺣ ﻮﺑﺃ ﻥﺎﻤﻴﻟﺍ ﺎﻧﺮﺒﺧﺃ ﺐﻴﻌﺷ ﻦﻋ ﻱﺮﻫﺰﻟﺍ ﻝﺎﻗ ﻲﻧﺮﺒﺧﺃ ﻢﻟﺎﺳ ﻦﺑ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻥﺃ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻦﺑ ﺮﻤﻋ ﻲﺿﺭ ﻪﻠﻟﺍ ﺎﻤﻬﻨﻋ ﻡﺆﺸﻟﺍ ﺎﻤﻧﺇ ﻝﻮﻘﻳ ﻢﻠﺳﻭ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻲﺒﻨﻟﺍ ﺖﻌﻤﺳ ﻝﺎﻗ ﺭﺍﺪﻟﺍﻭ ﺓﺃﺮﻤﻟﺍﻭ ﺱﺮﻔﻟﺍ ﻲﻓ ﺔﺛﻼﺛ ﻲﻓ குதிரை, பெண், வீடு ஆகியவற்றில் பீடை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 2858, 5093 புகாரி 5094, 5753 ஆகிய ஹதீஸ்களிலும் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று விஷயங்களில் மட்டும் பீடை சகுனம் உண்டு என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இம்மூன்று மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு பெறுகின்றது என்று
சில அறிஞர்கள் கூறி இதை நியாயப்படுத்தியும் எழுதி உள்ளனர். ஆனால் இது குறித்த ஹதீஸ்களை ஆய்வு செய்த ஹதீஸ் துறை அறிஞர்கள் இந்தச் செய்தி ஏற்கத்தக்கதல்ல என்று தக்க காரணங்களுடன் விளக்கியுள்ளனர். இந்த ஹதீஸ் வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு அதே புகாரியில் அதே இப்னு உமர் (ரலி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ﺎﻨﺛﺪﺣ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻝﺎﻬﻨﻣ ﺎﻨﺛﺪﺣ ﺪﻳﺰﻳ ﻦﺑ ﻊﻳﺭﺯ ﺎﻨﺛﺪﺣ ﺮﻤﻋ ﻦﺑ ﺪﻤﺤﻣ ﻲﻧﻼﻘﺴﻌﻟﺍ ﻦﻋ ﻪﻴﺑﺃ ﻦﻋ ﻦﺑﺍ ﺮﻤﻋ ﻝﺎﻗ ﺍﻭﺮﻛﺫ ﻡﺆﺸﻟﺍ ﺪﻨﻋ ﻲﺒﻨﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻝﺎﻘﻓ ﻰﻠﺻ ﻲﺒﻨﻟﺍ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻥﺇ ﻥﺎﻛ ﻡﺆﺸﻟﺍ ﻲﻓ ﺀﻲﺷ ﻲﻔﻓ ﺭﺍﺪﻟﺍ
ﺱﺮﻔﻟﺍﻭ ﺓﺃﺮﻤﻟﺍﻭ சகுனம் என்று ஒன்று இருக்குமானால் அது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் தான் இருக்க முடியும் என்று நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 5094 சகுனம் என ஒன்று இருக்குமானால் இந்த மூன்றில் தான் இருக்க முடியும் என்ற வாசகம் சகுனம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளை இடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். இதன் கருத்து யாரும் யாருக்கும் சஜ்தா செய்யக் கூடாது என்பது தான். அது போல் உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3469, 3689 இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். அது போல் சகுனம் என்று இருக்குமானால் மேற்கண்ட மூன்றில் தான் இருக்க முடியும் என்பது சகுனம் இல்லை என்ற கருத்தை தருகிறது. ஆனால் முதலில் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் மேற்கண்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாக சொல்கிறது. இரண்டுமே ஒரே அற்விப்பாளரைக் கொண்டு அறிவிக்கப்படுவதால் குர்ஆனின் கருத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டாம் அறிவிப்பை ஏற்று முதலாம் அறிவிப்பை நபிகள் சொன்னது அல்ல எனக் கூறி நிராகரித்து விடலாம். அல்லது இரண்டும் முரண்படுவதால் இரண்டையும் நாம் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். வேறு ஆதாரங்கள் மூலம் எதிலும் சகுனம் இல்லை என்று பொதுவாக கூறும் ஹதீஸ்கள் அடிப்படையில் இம்மூன்றிலும் சகுனம் இல்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும். முரண்பட்ட இரண்டையும் நாம் தள்ளி விட்டாலும் குர்அனுக்கு நெருக்கமான அறிவிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டாலும் இம்முன்றிலும் சகுனம் இல்லை என்ற கருத்து நிரூபணமாகி விடும். இது குறித்து ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த விளக்கத்தையும் நாம் கூடுதல் தகவலாக அறிந்து கொள்ளலாம். இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்
) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண்
கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்) நூல் : அஹ்மத் (24894) மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும் http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/
islathil_jathakam_parkalama/
online pj
Ahmedibrahim
தன்மை உள்ளது என்பதை நாம் நிரூபிக்க முடியும். ஆனால் பூணை குறுக்கே போனதால் நான் போன காரியம் நடக்கவில்லை என்று கூறுவதாக இருந்தால் அதை லாஜிக்காகவோ அறிவியல் பூர்வமாகவோ நிரூபிக்க வேண்டும். அல்லது அனைத்தையும் படைத்த அல்லாஹ் அதைச் சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் காரணம் கற்பித்தால் அது பொய்யாகவும் மூட நம்பிக்கையாகவும் அமைந்து விடும். இந்த அடிப்படையில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டு வந்ததால் ஒருவனுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறுவதானால் அதற்கு அறிவியல் நிரூபணம் இருக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு மாறிய பின்னர் நமக்கு துன்பம் வந்தால் கூட அத்துன்பத்துக்கு வீடுதான் காரணம் என்று கூறுவதாக இருந்தாலும் அதற்கு நிரூபணம் இருக்க வேண்டும். இதற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்க்கும் போது சில ஹதீஸ்கள் கிடைக்கின்றன. ﺎﻨﺛﺪﺣ ﻮﺑﺃ ﻥﺎﻤﻴﻟﺍ ﺎﻧﺮﺒﺧﺃ ﺐﻴﻌﺷ ﻦﻋ ﻱﺮﻫﺰﻟﺍ ﻝﺎﻗ ﻲﻧﺮﺒﺧﺃ ﻢﻟﺎﺳ ﻦﺑ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻥﺃ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻦﺑ ﺮﻤﻋ ﻲﺿﺭ ﻪﻠﻟﺍ ﺎﻤﻬﻨﻋ ﻡﺆﺸﻟﺍ ﺎﻤﻧﺇ ﻝﻮﻘﻳ ﻢﻠﺳﻭ ﻪﻴﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻲﺒﻨﻟﺍ ﺖﻌﻤﺳ ﻝﺎﻗ ﺭﺍﺪﻟﺍﻭ ﺓﺃﺮﻤﻟﺍﻭ ﺱﺮﻔﻟﺍ ﻲﻓ ﺔﺛﻼﺛ ﻲﻓ குதிரை, பெண், வீடு ஆகியவற்றில் பீடை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 2858, 5093 புகாரி 5094, 5753 ஆகிய ஹதீஸ்களிலும் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று விஷயங்களில் மட்டும் பீடை சகுனம் உண்டு என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இம்மூன்று மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு பெறுகின்றது என்று
சில அறிஞர்கள் கூறி இதை நியாயப்படுத்தியும் எழுதி உள்ளனர். ஆனால் இது குறித்த ஹதீஸ்களை ஆய்வு செய்த ஹதீஸ் துறை அறிஞர்கள் இந்தச் செய்தி ஏற்கத்தக்கதல்ல என்று தக்க காரணங்களுடன் விளக்கியுள்ளனர். இந்த ஹதீஸ் வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு அதே புகாரியில் அதே இப்னு உமர் (ரலி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ﺎﻨﺛﺪﺣ ﺪﻤﺤﻣ ﻦﺑ ﻝﺎﻬﻨﻣ ﺎﻨﺛﺪﺣ ﺪﻳﺰﻳ ﻦﺑ ﻊﻳﺭﺯ ﺎﻨﺛﺪﺣ ﺮﻤﻋ ﻦﺑ ﺪﻤﺤﻣ ﻲﻧﻼﻘﺴﻌﻟﺍ ﻦﻋ ﻪﻴﺑﺃ ﻦﻋ ﻦﺑﺍ ﺮﻤﻋ ﻝﺎﻗ ﺍﻭﺮﻛﺫ ﻡﺆﺸﻟﺍ ﺪﻨﻋ ﻲﺒﻨﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻝﺎﻘﻓ ﻰﻠﺻ ﻲﺒﻨﻟﺍ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻥﺇ ﻥﺎﻛ ﻡﺆﺸﻟﺍ ﻲﻓ ﺀﻲﺷ ﻲﻔﻓ ﺭﺍﺪﻟﺍ
ﺱﺮﻔﻟﺍﻭ ﺓﺃﺮﻤﻟﺍﻭ சகுனம் என்று ஒன்று இருக்குமானால் அது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் தான் இருக்க முடியும் என்று நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 5094 சகுனம் என ஒன்று இருக்குமானால் இந்த மூன்றில் தான் இருக்க முடியும் என்ற வாசகம் சகுனம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளை இடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். இதன் கருத்து யாரும் யாருக்கும் சஜ்தா செய்யக் கூடாது என்பது தான். அது போல் உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3469, 3689 இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். அது போல் சகுனம் என்று இருக்குமானால் மேற்கண்ட மூன்றில் தான் இருக்க முடியும் என்பது சகுனம் இல்லை என்ற கருத்தை தருகிறது. ஆனால் முதலில் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் மேற்கண்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாக சொல்கிறது. இரண்டுமே ஒரே அற்விப்பாளரைக் கொண்டு அறிவிக்கப்படுவதால் குர்ஆனின் கருத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டாம் அறிவிப்பை ஏற்று முதலாம் அறிவிப்பை நபிகள் சொன்னது அல்ல எனக் கூறி நிராகரித்து விடலாம். அல்லது இரண்டும் முரண்படுவதால் இரண்டையும் நாம் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். வேறு ஆதாரங்கள் மூலம் எதிலும் சகுனம் இல்லை என்று பொதுவாக கூறும் ஹதீஸ்கள் அடிப்படையில் இம்மூன்றிலும் சகுனம் இல்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும். முரண்பட்ட இரண்டையும் நாம் தள்ளி விட்டாலும் குர்அனுக்கு நெருக்கமான அறிவிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டாலும் இம்முன்றிலும் சகுனம் இல்லை என்ற கருத்து நிரூபணமாகி விடும். இது குறித்து ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த விளக்கத்தையும் நாம் கூடுதல் தகவலாக அறிந்து கொள்ளலாம். இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்
) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண்
கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்) நூல் : அஹ்மத் (24894) மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும் http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/
islathil_jathakam_parkalama/
online pj
Ahmedibrahim
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)