ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?

மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி வருகிறது .ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு முஸ்லிம் தன் கரத்தினாலே அழி ப்பான் என்று கியாமத்து நாளின் அடையாளமாக கூறப்பட்டுள்ளது .இது உன்மையா? உங்கள் ஜாமத்தும் மொபைல் மூலமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்பி வருகிறது. சப்ரோஸ் பதில் முஸ்லிம் தன் கரத்தாலே குர்ஆனை அழிக்கும் போது கியாமத் நாள் வரும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியையும் நம்மால் ஹதீஸ் நூற்களில் காண முடியவில்லை. இப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இருந்தால் கூட இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் இதன் கருத்து குர்ஆனுக்கு முரண்படுகின்றது. இந்தக்
குர்ஆனை கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் இறைவன் முழுமையாகப்
பாதுகாத்துள்ளான். ஏட்டில் பதியப்பட்ட குர்ஆனை கையால் அழிப்பதால் குர்ஆனை இந்த உலகத்திலிருந்து அகற்றிவிட முடியாது. ْﻞَﺑ ﻲِﻓ ٌﺕﺎَﻨِّﻴَﺑ ٌﺕﺎَﻳﺁ َﻮُﻫ َﻢْﻠِﻌْﻟﺍ ﺍﻮُﺗﻭُﺃ َﻦﻳِﺬَّﻟﺍ ِﺭﻭُﺪُﺻ 29(49) َﻥﻮُﻤِﻟﺎَّﻈﻟﺍ ﺎَّﻟِﺇ ﺎَﻨِﺗﺎَﻳﺂِﺑ ُﺪَﺤْﺠَﻳ ﺎَﻣَﻭ மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். அல்குர்ஆன் (29 : 49) மேலும் இந்தக் குர்ஆனை பாதுகாப்பதாக இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான். இறைவனுடைய
பாதுகாப்பை மீறி யாரும் குர்ஆனை அழிக்க முடியாது. 15(9) َﻥﻮُﻈِﻓﺎَﺤَﻟ ُﻪَﻟ ﺎَّﻧِﺇَﻭ َﺮْﻛِّﺬﻟﺍ ﺎَﻨْﻟَّﺰَﻧ ُﻦْﺤَﻧ ﺎَّﻧِﺇ நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன் (15 : 9) குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாதவர்களே இவ்வாறு தவறான
தீர்ப்புகளை வழங்குகின்றனர். குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? ஆகிய விபரங்களை அறிந்து கொண்டால் தான் இது பற்றி சரியான முடிவை எடுக்க முடியும். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது. குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இன்றைக்கு நவீன காலத்தில் குறுந்தகடுகளிலும்
கணிணியிலும்
செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகின்றது. குர்ஆன் பதியப்பட்டு விட்டதால் இந்த நவீன சாதனங்களுக்கு மகத்துவம் வந்துவிடுகிறது என்று யாரும் கருத மாட்டோம். குர்ஆன் என்பது மக்களுக்குப் பயன்படுகின்ற
நல்லுபதேசமாகும்.
நல்லுபதேசத்தை மதிப்பதாக இருந்தால் அதை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். பிறருக்கு அதைப் பரப்ப வேண்டும்.
நல்லுபதேசங்களை மதிப்பதற்கு இதைத்
தவிர்த்து வேறு வழி இல்லை. ஒருவர் குர்ஆனை செல்ஃபோனில் பதியவைத்து அதை அழிக்காமல் வைத்திருந்தால் அவர் குர்ஆனை பதிய வைத்துக் கொண்டார் என்று கூறலாமே தவிர இதனால் அவர் குர்ஆனை மதித்தவராகிவிட மாட்டார். இதே போன்று தன்னுடைய தேவைக்காக குர்ஆன் பதியப்பட்ட ஃபைலை ஒருவர் சாதனத்திலிருந்து அகற்றினால் அவர்
குர்ஆனை இழிவுபடுத்தியவராக மாட்டார். நவீன சாதனங்களில் குர்ஆனைப் பதிய வைப்பதும் பதியப்பட்ட ஃபைலை அழிப்பதும் நம்முடைய சொந்த
வசதிக்காகவே செய்கிறோம். குர்ஆனுக்கு மரியாதை செலுத்துதல் என்றோ அவமதித்தல் என்றோ இதை யாரும் செய்வதில்லை. ஒரு பொருள் நமக்குத் தேவைப்பட்டால் வைத்துக் கொள்வோம். தேவைப்படாவிட்டால் அழித்து விடுவோம். குர்ஆனில் தேவையானது தேவையற்றது என்று பிரிக்க்க் கூடாது. ஆனால் குர்ஆன் பதியப்பட்ட பொருள் நமக்குத் தேவைப்படலாம். தேவைப்படாமலும் போகலாம். உஸ்மான் (ரலி) அவர்கள் தேவையற்ற குர்ஆன் பிரதிகளை எரித்ததும் இந்த அடிப்படையில் தான். அச்சடிக்கப்பட்ட
எத்தனையோ குர்ஆன் பிரதிகள் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இந்தப்
பிரதிகளை அழிக்கக்கூடாது. பாதுகாக்க வேண்டும் என்று சவூதி அறிஞர்கள் கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அது நடைமுறைக்கு சாதியமில்லாத
கூற்றாகவே இருக்கும். எனவே மெஸ்ஸேஜ்கள் மூலம் குர்ஆன் வசனங்களை டைப் செய்து மக்களுக்குப் பரப்புவது தவறில்லை. இவ்வாறு அனுப்பப்பட்ட மெஸ்ஸேஜ்களைப்
படித்துவிட்டு அதை நீக்குவதும் தவறில்லை. கீழ்க்காணும் பதிலையும் வாசிக்கவும் http://onlinepj.com/kelvi_pathil/
naveena_pirasanaikal/quran_ring_tone/

SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?

மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி வருகிறது .ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு முஸ்லிம் தன் கரத்தினாலே அழி ப்பான் என்று கியாமத்து நாளின் அடையாளமாக கூறப்பட்டுள்ளது .இது உன்மையா? உங்கள் ஜாமத்தும் மொபைல் மூலமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்பி வருகிறது. சப்ரோஸ் பதில் முஸ்லிம் தன் கரத்தாலே குர்ஆனை அழிக்கும் போது கியாமத் நாள் வரும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியையும் நம்மால் ஹதீஸ் நூற்களில் காண முடியவில்லை. இப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இருந்தால் கூட இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் இதன் கருத்து குர்ஆனுக்கு முரண்படுகின்றது. இந்தக்
குர்ஆனை கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் இறைவன் முழுமையாகப்
பாதுகாத்துள்ளான். ஏட்டில் பதியப்பட்ட குர்ஆனை கையால் அழிப்பதால் குர்ஆனை இந்த உலகத்திலிருந்து அகற்றிவிட முடியாது. ْﻞَﺑ ﻲِﻓ ٌﺕﺎَﻨِّﻴَﺑ ٌﺕﺎَﻳﺁ َﻮُﻫ َﻢْﻠِﻌْﻟﺍ ﺍﻮُﺗﻭُﺃ َﻦﻳِﺬَّﻟﺍ ِﺭﻭُﺪُﺻ 29(49) َﻥﻮُﻤِﻟﺎَّﻈﻟﺍ ﺎَّﻟِﺇ ﺎَﻨِﺗﺎَﻳﺂِﺑ ُﺪَﺤْﺠَﻳ ﺎَﻣَﻭ மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். அல்குர்ஆன் (29 : 49) மேலும் இந்தக் குர்ஆனை பாதுகாப்பதாக இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான். இறைவனுடைய
பாதுகாப்பை மீறி யாரும் குர்ஆனை அழிக்க முடியாது. 15(9) َﻥﻮُﻈِﻓﺎَﺤَﻟ ُﻪَﻟ ﺎَّﻧِﺇَﻭ َﺮْﻛِّﺬﻟﺍ ﺎَﻨْﻟَّﺰَﻧ ُﻦْﺤَﻧ ﺎَّﻧِﺇ நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன் (15 : 9) குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாதவர்களே இவ்வாறு தவறான
தீர்ப்புகளை வழங்குகின்றனர். குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? ஆகிய விபரங்களை அறிந்து கொண்டால் தான் இது பற்றி சரியான முடிவை எடுக்க முடியும். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது. குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இன்றைக்கு நவீன காலத்தில் குறுந்தகடுகளிலும்
கணிணியிலும்
செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகின்றது. குர்ஆன் பதியப்பட்டு விட்டதால் இந்த நவீன சாதனங்களுக்கு மகத்துவம் வந்துவிடுகிறது என்று யாரும் கருத மாட்டோம். குர்ஆன் என்பது மக்களுக்குப் பயன்படுகின்ற
நல்லுபதேசமாகும்.
நல்லுபதேசத்தை மதிப்பதாக இருந்தால் அதை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். பிறருக்கு அதைப் பரப்ப வேண்டும்.
நல்லுபதேசங்களை மதிப்பதற்கு இதைத்
தவிர்த்து வேறு வழி இல்லை. ஒருவர் குர்ஆனை செல்ஃபோனில் பதியவைத்து அதை அழிக்காமல் வைத்திருந்தால் அவர் குர்ஆனை பதிய வைத்துக் கொண்டார் என்று கூறலாமே தவிர இதனால் அவர் குர்ஆனை மதித்தவராகிவிட மாட்டார். இதே போன்று தன்னுடைய தேவைக்காக குர்ஆன் பதியப்பட்ட ஃபைலை ஒருவர் சாதனத்திலிருந்து அகற்றினால் அவர்
குர்ஆனை இழிவுபடுத்தியவராக மாட்டார். நவீன சாதனங்களில் குர்ஆனைப் பதிய வைப்பதும் பதியப்பட்ட ஃபைலை அழிப்பதும் நம்முடைய சொந்த
வசதிக்காகவே செய்கிறோம். குர்ஆனுக்கு மரியாதை செலுத்துதல் என்றோ அவமதித்தல் என்றோ இதை யாரும் செய்வதில்லை. ஒரு பொருள் நமக்குத் தேவைப்பட்டால் வைத்துக் கொள்வோம். தேவைப்படாவிட்டால் அழித்து விடுவோம். குர்ஆனில் தேவையானது தேவையற்றது என்று பிரிக்க்க் கூடாது. ஆனால் குர்ஆன் பதியப்பட்ட பொருள் நமக்குத் தேவைப்படலாம். தேவைப்படாமலும் போகலாம். உஸ்மான் (ரலி) அவர்கள் தேவையற்ற குர்ஆன் பிரதிகளை எரித்ததும் இந்த அடிப்படையில் தான். அச்சடிக்கப்பட்ட
எத்தனையோ குர்ஆன் பிரதிகள் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இந்தப்
பிரதிகளை அழிக்கக்கூடாது. பாதுகாக்க வேண்டும் என்று சவூதி அறிஞர்கள் கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அது நடைமுறைக்கு சாதியமில்லாத
கூற்றாகவே இருக்கும். எனவே மெஸ்ஸேஜ்கள் மூலம் குர்ஆன் வசனங்களை டைப் செய்து மக்களுக்குப் பரப்புவது தவறில்லை. இவ்வாறு அனுப்பப்பட்ட மெஸ்ஸேஜ்களைப்
படித்துவிட்டு அதை நீக்குவதும் தவறில்லை. கீழ்க்காணும் பதிலையும் வாசிக்கவும் http://onlinepj.com/kelvi_pathil/
naveena_pirasanaikal/quran_ring_tone/

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?

சஹாபாக்களைப்
பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே! முஹம்மது இஹ்ஸாஸ் மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் குறைவினால் ஏற்பட்டதாகும். இதில் உண்மையும் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லை. திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும் திருக்குர்ஆனின் அற்புதநடை தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம் தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக்
கொண்டு சென்றார்கள். நபித்தோழர்கள் தான் அடுத்த தலைமுறையினருக்கு
திருக்குர்ஆனைக்
கொண்டு சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்? நீதி மன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதி மன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா? நீதிமன்ற உத்தரவை இவர் தான் என்னிடம் கோண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்;
எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படி கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா? உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும் உங்கள் வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை. குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கொண்டு வந்து தந்திருந்தும் நபித்தோழர்கள் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்கிறீர்களே அதுவாவது உண்மையா? கேள்வி கேட்கும் உங்களுக்கும் எனக்கும் நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நம்க்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா? நமக்கு முந்தின தலைமுறையும் நபீயிடம் நேரடியாக்க் கேட்டு நம்க்கு சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம்
கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா? இதையே இன்னும் தீவிரமாக சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் ஐதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள்
என்று எப்படி அறிந்து கொண்டோம்?
அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள். இப்படியெல்லாம் கூர்மையாக சிந்தித்தால் உங்கள் வாதம் பொருளற்றது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். இது போன்ற வாதங்களுக்கு பதிலாக நாம் பல ஆண்டுகளுக்கு முன்னா எழுதிய கருத்து வேறு தகவல் வேறு என்ற ஆய்வுக்கட்டுரை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும். நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோரின் தவறான வாதங்களுக்குப் பதில் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும்
என்ற நூலை வாசிக்கவும்.

ஹிப்னாட்டிசம் உண்மையா?

ஹிப்னாடிஸம் (hypnotism) என்றால் என்ன ?அது ஒருவிதமான கலையா? அல்லது அனைவராலும் இயலுமான காரியமா? அடுத்தவருடைய சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்வது சரியா? சாந்து மக்பூல் கான் பதில்: ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் நோக்குவர்மம்
என்று பெயரிட்டுள்ளனர். ஹிப்னாடிசம் மூலம் நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில்
பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தனது முன்னால் இருக்கும்
ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் கற்பனை தானே தவிர உண்மையல்ல. இவ்வாறு செய்ய முடியும் என்று எந்த ஒரு விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. கியாமத் நாள்
வரை முயற்சி செய்தாலும் நிச்சயமாக இதனை நிரூபிக்க முடியாது என்பதை உலகத்திற்கு சவாலாகவே நாம் சொல்லிக் கொள்ளலாம். ஹிப்னாட்டிசம் மூலம் என்னை வசப்படுத்திக் காட்டுங்கள் என்று பலரிடம் நாம் அறைகூவல் விட்டுள்ளோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் நம்பியவர்களுக்குத் தான் இது பலிக்கும்; நம்பாதவர்களை ஹிப்னாட்டிசம் செய்ய முடியாது என்பது தான் அவர்களின் ஒரே பதிலாக உள்ளது. எல்லா பிராடுபேர்வழிகளும்(?) இதையே தான் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ஹிப்னாட்டிசம் குறித்த பல நூல்களை நாம் வாசித்த போது அதில் எந்த விஞ்ஞான உண்மையோ ஏற்கத்தக்க எந்த லாஜிக்கோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஹிப்னாட்டிசம் செயவதாக சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கு மனநோய்க்கான
சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடிகிறது. எந்த ஒரு ஹிப்னாட்டிச நிபுணர் (?) முன்வந்தாலும் அவர் முன்னிலையில்
அது ஒரு பித்தலாட்டம் என்று நாம் நிரூபித்துக் காட்ட்த் தயாராக இருக்கிறோம். மார்க்க அடிப்படையிலும் இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு
இணைகற்பிக்கும் குற்றமாகும். எவ்வித புறச் சாதனங்களும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்குப்
பாதிப்பு ஏற்படுத்துதல் என்பது இறைவனுக்குரிய ஆற்றலாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியவே முடியாது. 'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ
வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.
ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை நாம் அறிவோம். எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வகையிலேனும் இறைவனின் நிலையில் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான இணை வைத்தலாகும். அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதுமாகும்.
அல்லாஹ்
ஒரு மனிதனை ஊனமாக்கவோ, கை கால்களை முடக்கவோ, படுத்த படுக்கையில்
கிடத்தவோ நினைத்தால் அந்த மனிதன் மீது எந்த சாதனத்தையும் செலுத்தாமல்,
எப்படி இது நடந்தது யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் செய்து முடிப்பான். இது போல் மனிதர்களும் செய்வார்கள்
என்று நம்புவது அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக்கு முரணானதாகும். ஹிப்னாடிசம் என்பதைப் பற்றியும் இப்படித் தான் நம்புகின்றனர். ஹிப்னாடிசம் செய்பவன் தன்னுடைய பார்வையினாலேயே ஒருவனுடைய கை கால்களை முடக்குவானாம். அவனைத் தொடாமல், அவன் மீது எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தாமல் இதைச் செய்து விடுவாராம். ஒருவனது உள்ளத்தில் உள்ள இரகசியங்களை எல்லாம் ஹிப்னாட்டிசம் மூலம் அறிந்து கொள்வானாம். ஹிப்னாட்டிசம் மூலம் ஆட்டிப்படைப்பானாம். இப்படி நம்பும் போது இறைவனைப் போன்ற ஆற்றல் உள்ளவன் என்று ஆகிவிடும். நம்முடைய உள்ளங்களும் அல்லாஹ்வுடைய கையில்தான் உள்ளது. உள்ளங்களை மாற்றுகின்ற ஆற்றல் மனிதனுக்குக் கிடையாது. எந்த ஒரு மனிதனும் இறைவனைப் போன்று நம்முடைய சிந்தனையில்
மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. உள்ளங்களில் உள்ளதை அறிபவன் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட தகுதிகளில் ஒன்றாகும். ஹிப்னாட்டிச பேர்வழிகள் தாங்களும் அந்த இறைத்தனமையில் கூட்டாளிகாக காட்டிக் கொள்கின்றனர். 3:119, 3:154, 5:7, 8:43, 11:5, 27:74, 28:69, 29:10, 31:23, 35:38, 39:7, 40:19, 42:24, 57:6, 64:4, 67:13, ஆகிய வசன்ங்கள் உள்ளங்களில் உள்ளதை அறிந்து கொள்வது இறைவனுக்கு மட்டுமே உள்ள தனித்தகுதி என்று கூறுகின்றன,
. இவ்வளவு வசன்ங்களையும் மறுத்து விட்டுத்தான் ஹிப்னாட்டிசத்தை நம்ப முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின்
இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்''
என்று கூறி விட்டு, "இறைவா! உள்ளங்களைத்
திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத்
திருப்புவாயாக!''
என்று பிரார்த்தித்தார்கள் அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் முஸ்லிம் (5161) எனவே மார்க்கத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒன்றாக ஹிப்னாடிசம் என்பதை ஒருவன் நம்பினால் அது இணைவைப்பில் சேர்த்துவிடும். ஒரு மனிதனிடம் பக்குவமாக பேசி அவனது வாயில் இருந்து சில செய்திகளைப் பிடுங்கலாம் என்பதைத் தவிர ஹிப்னாட்டிசம்
பற்றி சொல்லப்படும் அனைத்தும் பொய்யானவை. இதில் கடுகளவும் நமக்கு சந்தேகம் இல்லை.

அடிமை இல்லாத காலத்தில் என்ன
செய்வது?

அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது? கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்ப்புக் கூறியதாக ஸஹீஹ் புகாரியில் ,5758 ,5759 ,5760 7317 ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. முக்கிய கருத்தை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். பிழைகளுக்குப்
பிராயச்சித்தமாக அடிமை விடுதலை குறிப்பிடப்பட்ட இடங்களில் அல்லது நோன்பு அல்லது ஏழைகளுக்கு உணவு என்று பகரம் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ்களில் அவ்வாறில்லை. அடிமை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அடிமைகள் இல்லாத காலத்தில் அல்லது ஒருவரிடம் அடிமை இல்லாத போது ,அல்லது அடிமை ஒருவனை விலை கொடுத்து வாங்க வசதியில்லாத ஒருவர் என்று பார்க்கும் போது இது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பது தெளிவு .எனவே ,கீழ் வரும் வினாக்கள் எழுகின்றன: கேள்வி :1 இந்த ஹதீஸ்களுடன் சேர்த்து வாசித்து விளக்கம் பெறப் போதுமான குர்ஆன் வசனமோ அல்லது மற்றும் ஹதீஸ்களோ உள்ளனவா? கேள்வி :2 அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம் என்ன? P.G.M.M. ளாஃபிர் புளுகஹதென்னை ,அக்குறணை, இலங்கை பதில்: வயிற்றில் உள்ள குழந்தையைக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வேறு பரிகாரத்தையும் கூறியுள்ளனர். அடிமை இல்லாத காலத்திலும் அடிமைகள் இருக்கும் காலத்திலும் அந்த நட்ட ஈட்டையும் கொடுக்கலாம். அந்தப் பரிகாரம் இது தான்: ﺎﻧﺮﺒﺧﺃ ﺏﻮﻘﻌﻳ ﻦﺑ ﻢﻴﻫﺍﺮﺑﺇ ﻢﻴﻫﺍﺮﺑﺇﻭ ﻦﺑ ﺲﻧﻮﻳ ﻦﺑ ﺪﻤﺤﻣ ﻻﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﺪﻴﺒﻋ ﻪﻠﻟﺍ ﻦﺑ ﻰﺳﻮﻣ ﻝﺎﻗ ﺎﻨﺛﺪﺣ ﻒﺳﻮﻳ ﻦﺑ ﺐﻴﻬﺻ ﻦﻋ ﺪﺒﻋ ﻪﻠﻟﺍ ﻦﺑ ﺓﺪﻳﺮﺑ ﻦﻋ ﻪﻴﺑﺃ ﻥﺃ ﺓﺃﺮﻣﺍ ﺖﻓﺬﺣ ﺓﺃﺮﻣﺍ ﺖﻄﻘﺳﺄﻓ ﻞﻌﺠﻓ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻲﻓ ﺎﻫﺪﻟﻭ ﻦﻴﺴﻤﺧ ﺓﺎﺷ ﻰﻬﻧﻭ ﺬﺌﻣﻮﻳ
ﻢﻴﻌﻧ ﻮﺑﺃ ﻪﻠﺳﺭﺃ ﻑﺬﺨﻟﺍ ﻦﻋ Nasayi 4731 ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின்
கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்டஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : நஸாயீ

சனி, 11 பிப்ரவரி, 2012

Samudaya seidigal

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் த த ஜ கிளையின் 4/2/12 அன்று மாவட்ட பேச்சாளர் ஜப்பார் தலைமையில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கோபி சாதிக் பிப்14 ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பிலும். ஹாலிக் அவர்கள பெற்றோர் நலம் என்ற தலைப்பிலும் உரையாற்றனார்கள். இருதியாக ஜப்பார் அவர்கள் நன்றியுறையாற்றினார். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

Ahmedibrahim